Jump to content

புகையிலையும் மச்சக் (மச்சம், மாமிசம்) கடையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புகையிலையும் மச்சக் (மச்சம், மாமிசம்) கடையும்

புகையிலையும் மச்சக் (மச்சம், மாமிசம்) கடையும்

  — வேதநாயகம் தபேந்திரன் — 

”புங்குடுதீவானுக்கு புகையிலை வித்தகதையாகப் போயிட்டுது …” இது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கைத் தமிழ்பேசும் பரப்பில்  பிரபலமான பழமொழி. 

உண்மையான பழமொழி சொல்மாற்றம் அடைந்து திரிபடைந்து விட்டது. 

புங்குடுதீவானுக்கு இலை விற்ற கதையாகிப் போனது என்பது தான் உண்மையான பழமொழி. அதனைப் பிற்காலத்தில் புகையிலையையும் சேர்த்துப் புதுப் பழமொழியாக்கி உலாவவிட்டு விட்டார்கள். 

புங்குடுதீவு வர்த்தகர்கள் புகையிலைக் கடைகளை வைத்திருந்ததாகப் பெருமளவில் அறியப்படவில்லை. அது போலப் புகையிலைத் தரகிலும் ஈடுபட்டதாகவும் அறியப்படவில்லை. 

அன்றும் சரி, இன்றும் சரி புங்குடுதீவு வர்த்தகர்களது சோற்றுக் கடைகளில் வாழையிலை போட்டுத்தான் சோறு கறிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள். 

அதற்குத் தரமான வாழையிலைகளைத் தெரிவு செய்வதில் இவர்கள் வல்லவர்கள். 

சில வாழையிலை வியாபாரிகள் அல்லது விவசாயிகள் வாழையிலைக் கட்டின் முன்பகுதியிலும், பின் பகுதியிலும் தரமான வாழையிலைகளை வைப்பார்கள். நடுவில் பழுத்த, கிழிந்த தரம் குறைந்த வாழையிலைகளை வைத்து ஏமாற்றி விற்க முனைவார்கள். 

ஆனாலும் இவர்கள் வாழையிலைக் கட்டைப் பார்த்த உடனேயே இலைகளின் தரத்தை மதிப்பிட்டு உள்ளதைக் கூறும் வல்லமை உடையவர்கள். அதனால் இலையென அவர்கள் பேச்சுவழக்கில் அழைக்கும் வாழையிலையை ஏமாற்றி விற்கமுடியாது. 

“இதனால் தான் புங்குடுதீவானுக்கு இலைவிற்ற கதையாகிப் போனதென்ற” சொற்தொடரே புங்குடுதீவானுக்கு புகையிலை விற்ற கதையாகிப் போனது எனத் திரிபடைந்து விட்டது. 

அதனைச் சோடித்து புங்குடுதீவு வியாபாரி ஒருவருக்குப் புகையிலை விற்ற ஒருவர் அவரிடம் காசை வாங்க முடியாமல் ஊர்ஊராகத் திரிந்து அப்படியே கதிர்காமத்திற்கும் போனதாக இட்டுக்கட்டிய கதை ஒன்று உண்டு. 

12 கிராம சேவகர் பிரிவுள்ள புங்குடுதீவுமக்களில் பெரும்பாலானோர் வர்த்தகர்கள். நிலவளம் குறைந்த அவர்களது மண்ணில் விவசாயத்தை முழுவதுமாக நம்பிச் சீவிக்க முடியாது.  

ஒரு பகுதி மக்கள் கடற்றொழிலில் ஈடுபட்டார்கள். சிறு தொகையானோர் உத்தியோகம். ஏனைய பெரும்பான்மையானோர் வர்த்தகர்களாக நாடு முழுவதும் இருந்தார்கள். 

அசைவ உணவுச் சோற்றுக் கடைகளுக்குப் புங்குடுதீவு மக்கள் பிரபலமானவர்கள். மிகவும் சுவையாகவும் காரமாகவும் சமைப்பார்கள். அதனால் இவர்களது சோற்றுக் கடைகளுக்கு நிறைந்த வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். (இலங்கையில் அசைவக் கடைகளை மச்சக் கடைகள் என்றே குறிப்பார்கள். உண்மையில் அங்கு மச்சமும்(மீன் உணவு) மாமிசமும் (இறைச்சி வகை) சேர்ந்தே கிடைக்கும். ஆனாலும் அவற்றை பொதுவாக மச்சக் கடை என்றே இலங்கையர் அழைப்பது வழக்கம்.) 

B329EF04-8EC8-448F-BEC1-87D4BDC517DC.jpe

கொழும்பில் கூடப் பாருங்கள் எத்தனை சோற்றுக் கடைகள் இருந்தாலும் புங்குடுதீவு ஆட்களின் சோற்றுக் கடைகளுக்கெனத் தனியான வாடிக்கையாளர் கூட்டமொன்று இருக்கும்.  

அது போல யாழ்ப்பாண நகரிலும் புங்குடிதீவு வர்த்தகர்களின் சோற்றுக் கடைகளுக்கெனத் தனி மதிப்பு உள்ளது. 

மச்சச் சாப்பாட்டுக் கடைகள் என்றால் புங்குடுதீவுதான். அவர்களது கைப்பக்குவத்தில் மீன் உட்பட்ட கடலுணவுகள், இறைச்சி வகைகள் தனியானதொரு சுவையாக வரும். எனக்கும் பலமுறை சாப்பிட்ட அனுபவம் உள்ளது. 

ஆரம்பத்தில் வர்த்தக சமூகமாக இருந்த புங்குடுதீவு மக்கள் பின்னாளில் கல்வி, கலை, கைத்தொழில் யாவற்றிலும் சிறந்து விளங்கியவர்களாக உருவாகினார்கள். 

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனின் மனைவி மதிவதனி புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஏரம்பு ஆசிரியரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தென்னிந்தியாவின் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் பிரித்தானியர்கள் ஆட்சிக்காலத்தில் தென்னிலங்கையில் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள். அப்போது யாழ்ப்பாணத்தின் தீவகப் பிரதேசங்களிலிருந்து அவர்களது கடைகளுக்கு வேலைக்குப் போனார்கள். 

பின்னாளில் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் தமது மனைவி பிள்ளைகளுடன் வாழ இந்தியாவுக்குத் திரும்பிய போது, நம்பிக்கையடிப்படையில் வியாபார நிலையங்களை கடையில் நின்ற விசுவாசம் மிக்க தொழிலாளிகளிடம் கொடுத்தார்கள்.  

அதனால் காலப் போக்கில் தீவக மக்கள் பெரும் வர்த்தகர் சமூகமாக உருவெடுத்தார்கள்.  

1977, 1983 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கெதிராகச் சிங்களக் காடையர்களின் இன வன்முறைகளுக்கு முன்னரான காலப் பகுதிகளில் யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேச வர்த்தகர்கள் நாடெங்கும் கொடி கட்டிப் பறந்தார்கள்.  

1983 யூலை வன்முறைகள் யாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.  

இதனால் வளர்ந்த நாடுகளை நோக்கி ஏனையோரைப் போலப் புலம்பெயர்ந்தார்கள். அங்கும் வர்த்தக நிலையங்களைத் திறந்து தாயகத்தில் கிடைத்த அனைத்துப் பொருள்களையும் யாவரும் வாங்கக் கூடிய நிலைமையை உருவாக்கினார்கள். 

இன்றும் புலம்பெயர் தேசங்களில் தீவகமக்கள் பெரும் வர்த்தக சமூகமாக உருவாகி உள்ளனர். 

தென்னிந்தியத் தமிழர்களில் பழைய தலைமுறையினர் மச்சச் சாப்பாட்டுக் கடைக்கு மிலிட்டரி ஹோட்டல் என்றொரு பெயர் வைத்துள்ளனர். 

இன்றும் கூட மிலிட்டரி ஹோட்டல் என அழைக்கும் முறை உள்ளது. 

இரண்டாம் உலகப் போர் நடந்த 1939 முதல் 1945 வரையான காலப்பகுதியில் இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் ஆயிரக்கணக்கில் அந்நிய நாட்டுப்படைகளை இந்தியாவின் பாதுகாப்புக்கென அழைத்து வந்தார்கள். 

வந்தவர்களுக்குச் சாப்பாடு கொடுப்பதற்கெனக் கடைகளைத் தேடினால் யாவும் மரக்கறிச் சாப்பாட்டுக் கடைகள் தான். மரக்கறிச் சாப்பாடுபடை வீரர்களுக்கு ஒத்துவரவில்லை. 

அதனால் படைவீரர்களுக்கு உணவு வழங்குவதற்கென அசைவ (மச்சம் மாமிசம்) சாப்பாட்டு ஹோட்டல்களை பிரித்தானிய அரசாங்கம் திறந்தது. மிலிட்டரி எனப்படும் படைவீரர்கள் சாப்பிட்ட ஹோட்டல்களை பொதுமக்கள் மிலிட்டரி ஹோட்டல் என அழைத்தார்கள். 

எமது நாட்டில் போர் நடந்த காலத்தில் பம்பலப்பிட்டியில் தென்னிந்திய வர்த்தகர் வேலு மிலிட்டரி ஹோட்டல் என்ற பெயரில் சாப்பாட்டுக் கடையொன்றைத் திறந்தார். 

வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்தையார் பெயரில் உணவுக் கடை திறந்துள்ளார்களென சிங்களப் பேரினவாதிகள் கூப்பாடு போட்டனர். அதனால் கடை மூடப்பட்டது. 

மரக்கறிச் சாப்பாட்டுக் கடையென்றால் நயினாதீவு வர்த்தகர்களுக்கெனத் தனித்துவமான ஒரு பெயர் உள்ளது. 

நயினாதீவு மக்களும் சரி, சாப்பாட்டுக்கடை வர்த்தகர்களும் சரி மரக்கறிச் சாப்பாடுகளை அறுசுவையாகச் சமைப்பதில் வல்லவர்கள். நயினை நாகபூசணி அம்மன் கோயில் அன்னதானச் சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு அது புரியும். 

229D59D7-40C9-476D-B731-45B7D7ECEC7E.jpe

நயினாதீவு 3 கிராம சேவகர் பிரிவுகளை உடைய பழந்தமிழ் கிராமம். இங்கு ஒரு காலத்தில் தமிழ் பௌத்தர்கள் இருந்தார்கள். நாகபூசணி அம்மன் கோயில் காரணமாக இந்தக் கிராமம் சைவ உணவில் பிரசித்தி பெற்ற கிராமமாக உள்ளது. 

இங்குள்ள மக்கள் கல்வியில் உயரிய சாதனைகளைப் படைத்துள்ளனர். இவர்கள் அளவு எண்ணிக்கையில் கல்விமான்கள் இலங்கையிலேயே இல்லையெனலாம். 

தீவக மக்களின் தனித்துவமான பண்பாடுகள் சாதனைகளைப் பற்றிச்சொல்லிக் கொண்டே போகலாம். 
 

 

https://arangamnews.com/?p=3938

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 புங்குடுதீவு மக்களின் விருந்தோம்பல் பற்றி சிறப்பான பதிவு..... நன்றி கிருபன்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்.ஒவ்வொரு தடை தான் மக்களை எழுச்சி கொள்ள செய்கிறது.இதில் இமாலாய வெற்றி பெற்ற மண்ணின் மைந்தர்களுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.