Jump to content

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.!

Screenshot-2021-02-28-19-35-21-225-com-a 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பலில் கப்பலின் கப்டன் வல்வெட்டித்துறையில் இன்று காலமானார்.

1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி புலம்பெயர் தேசத்திலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதி கிட்டுவும் 09 போராளிகளும் தாயகம் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தியக் கடற்படை சுற்றிவளைத்து அவர்களை கைது செய்ய முற்பட்டது.

அதன் போது போராளிகள் கப்பலை தகர்த்து தங்கள் உயிர்களை அழித்தனர்.

சம்பவத்தின் போது கப்பலின் கப்டனை கடலில் குதிக்குமாறு போராளிகள் கேட்டுக்கொண்டதால் அவர் கடலில் குதித்த நிலையில் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

பின்னர் இந்திய சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவித்த அவர் இலங்கை திரும்பி வல்வெட்டித்துறையில் வசித்து வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://aruvi.com/article/tam/2021/02/28/23126/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான நேரத்தில் மிகவும் துணிச்சலாக செயற்பட்ட கப்டனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்குப் புகழ் வணக்கம்.

May be an image of one or more people, people standing and military uniform

M.V அகத் கப்பல் கப்டன்.வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்களுக்கு தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் இறுதி யாத்திரையும் இறுதி அஞ்சலியும்.

No photo description available.

May be an image of one or more people and people standing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையவதாக...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் போராட்ட முன்னோடிகளால் அழைக்கப்பட்ட கப்டன் ஜெயச்சந்திரன் காலமானார்!

‘செவன் பிங்கர்’ என்று ஈழப் போராட்ட முன்னோடிகளால் அழைக்கப்பட்ட கப்டன் ஜெயச்சந்திரன் இன்று காலமாகி விட்டார்.

தலைவரின் தூரநோக்கு சிந்தனைக்கும் / தேசக் கட்டுமானத்திற்கும் ஒரு வாழும் சாட்சியமாக இருந்தவர்.

எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் சில போராளிகளுக்கு ‘மாவீரர்’ கவுரவம் கிடைப்பதில்லை. அது தெரிந்தே அவர்கள் வெடித்தார்கள்.

அதுபோல் மக்கள் தொகுதியிலிருந்து போராட்ட பங்களிப்பின் காரணமாக பலருக்கு நாட்டுப்பற்றாளர், மாமனிதர் போன்ற கவுரவங்கள் வழங்கப்படும் மரபிருந்தது.
ஆனால் விதிவிலக்காக போராளிகள் அல்லாமல் பெரும் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் புரிந்த சிலருக்கு எந்த அங்கீகாரத்தையும் வெளிப்படையாக வழங்குவதில்லை. காரணம் போராட்ட இரகசியம் பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் தியாகமும், உழைப்பும் வரலாற்றில் மறைக்கப்பட்டு விடும்.

அப்படியான ஒரு வரலாற்றுக்குச் சொந்தக்காரர்தான் கப்டன் ஜெயச்சந்திரன் அண்ணா.

‘எதோ புலிகள் போராடினார்கள், வீழ்ந்தார்கள்’ என்று தட்டையாக – ஒற்றையாகத்தான் பலர் போராட்டத்தை புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதன் பின்னிருந்த உழைப்பும், தியாகமும் கற்பனைக்கு அப்பாற்பட்டது. மயிர் கூச்செறியக் கூடியது. உலகில் இது போன்ற வரலாறு இதுவரை எந்தப் போராட்டத்திற்கும் இருந்ததில்லை – இனியும் இருக்கப் போவதுமில்லை.

அண்மையில் மறைந்த வாசு நேரு அண்ணா , கப்டன் பிறைசூடி தற்போது கப்டன் ஜெயச்சந்திரன் என்று போராட்டத்தை முன்னகர்த்திய இரகசிய ஆளுமைகள் பலர் தொடர்ச்சியாகச் சாவடைந்து வருவது நெஞ்சை அறுத்துப் போடுகிறது.

போராட்டத்தின் ஒரு கால கட்ட சாட்சியங்கள் இவர்கள்.

இந்தியா ஒரு நம்பகமான சக்தி இல்லை என்பதை முன்னுணர்ந்து தமிழகத்திற்கும் தமிழீழத்திற்குமான வழங்கல் எந்நேரமும் தடைப்படலாம் என்பதைக் கணித்தது மட்டுமல்ல, மக்களுக்கு தாம் ஒரு சுமையாக இருக்கக்கூடாது என்பதுடன் தமிழீழம் பொருண்மியத்தில் தன்னிறைவு அடைவதென்றால் உள்ளூர் உற்பத்திகளை மட்டும் நம்பியிருக்க முடியாது என்பதை உணர்ந்து அனைத்துலக ரீதியில் ஒரு வர்த்தக வலயத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்துத் தலைவர் தொடங்கியதுதான் கடல் வணிகம்.

அதற்காக களமிறங்கிய கப்டன் ஜெயச்சந்திரன் பின்பு அனைத்துலகப் பரப்பில் ஆயுத தளபாட வழங்கலையும் வெற்றிகரமாகச் செய்தார்.

இவரது அணி அனைத்துலகக் கடற்பரப்பில் வைத்து ஒருமுறை ஆயுத தளபாடங்கள் கைமாற்றிய கதை நான் எந்த கொலிவூட் திரைப்படத்திலும் பார்க்காத மயிர்க்கூச்செறியும் சாகசங்களைக் கொண்டது.

பின்னாளில் மூத்த தளபதி கிட்டு ஐரோப்பாவில் இருந்து தாயகம் திரும்ப வேண்டி வந்த்ததால் அவரைப் பத்திரமாக அழைத்து வரும் பொறுப்பை தலைவர் கப்டன் ஜெயச்சந்திரன் அவர்களிடம்தான் ஒப்படைத்தார்.

கிட்டண்ணாவை அழைத்துவரும் பயணத்தில் இந்தியக் கடற்படையிடம் சிக்கி புலிகள் வீரச்சாவடைய இவரையும் இவரது அணியையும் இந்தியக் கடற்படை கைது செய்து நீண்டகால சிறைவாசத்தின் பின் விடுவித்தது.

அந்த சித்திரவதைகளின் காரணமாக நோய்வாய்ப்பட்டு இன்று எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் ‘செவன் பிங்கர்’ என்கிற கப்டன் ஜெயச்சந்திரன்.

சமூக வலைத்தளங்கள் போராட்ட வரலாறுகளை அழிக்கின்றன, உலக பயங்கரவாத அரசுகள் ஒன்றிணைந்து புலிகளை குற்றவாளிகளாக்கத் துடிக்கின்றன, அதற்கேற்ப எமக்குள்ளேயே உள்ள கனவான் அரசியல் செய்பவர்கள் போராட்டத்திற்கு பயங்கரவாத சாயம் பூசத் தலைப்படுகிறார்கள், போராட்ட நியாயத்தைப் புரிந்து கொண்டவர்கள் சிலர் கூட குழு அரசியலுக்குள் சிக்குப்பட்டு தனிமனித வெறுப்பின் காரணமாக வரலாற்றை மறைக்க முற்படும் ஒரு விபரீத சூழலில் கப்டன் ஜெயச்சந்திரன் போன்றோரின் இழப்பு எம்மை நிலைகுலையச் செய்கிறது.

 

கப்டன் ஜெயச்சந்திரன் அண்ணா போன்ற எண்ணற்ற தியாகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி என்பது சரியான வரலாற்றைப் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு தெளிவான பாதையை அடையாளம் காட்டுவதேயாகும்.

அன்னாருக்குப் புகழ் வணக்கம்.
6D9CCCF2-10D9-40DE-B43E-CECE424F140F.jpe

C8AF58D1-38E9-4726-9501-2DFD9CF076C7.jpe


 

https://www.meenagam.com/ஈழப்-போராட்ட-முன்னோடிகளா/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.