Jump to content

ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி


Recommended Posts

ராசுக்குட்டி வொட்காவை மறந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பட்சி சொல்கிறது. 

எதுக்கும் சிறுநீர் றிசல்ட் வரட்டும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்குள் நிறையவிடையங்களுக்காக நான் தான் அதிகம் சங்கடபபடுவது... ஆனால் இப்போ வேலை என்று வெளிக்கிட்டதும் நிறைய விடையங்களை சாதரணமாக எடுத்துக கொண்டு காலத்தை நகர்த்த வேண்டிய சூழ்நிலை கைதி ஆகி விட்டேன்... கொஞ்சம் தடுமாறினாலும் வேலைக்கு ஆப்பு வைத்து விடுவார்கள்.🤔

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தொடர்கின்றோம்....."ராசுக்குட்டியின் மனைவி மறுமணம் செய்கிறாவா இல்லையா" இதுதான் இப்ப எனது பிரச்சினை.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு அங்கங்கே பிரச்சினை. இவருக்கு அங்கேயே பிரச்சினை. 

எனக்கு தெரிந்த அண்ணர் ஒருத்தர் கொலண்டில் இருக்கிறார். அவர்களுக்கும் இப்படி இதோ ஆள் முடிஞ்சுது என்று இங்கிருந்து எல்லாம் எல்லோரும் ஓடிப்போனார்கள். 10 வருசமாச்சு. அந்நாள் இப்பவும் அந்த மாதிரி இருக்கு.

தொடருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அவ்வளவு தான் ராசுக்குட்டி ஆடிப் போயிட்டார். அவர் மனக் கண் முன் மனைவியும் பிள்ளைகளும் பரதேசி கோலத்தில் நிற்பது போலவும்,

அப்பாக்களுக்கு தான் இறக்கப் போகிறேன் என்பதை விட குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திடுமே என்று தான் கவலைப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

ராசுக்குட்டிக்கு வந்த சோதனை!!!!    Infection ஆக இருக்கும் அல்லது எதுவும் இல்லை என்பார்கள். 
 
அற்ககோலை கொஞ்ச நாளைக்கு  விடுங்கள். செவ்விளநீர் குடியுங்கள். எல்லாம் சரியாகி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசுக்குட்டிக்கு நல்ல ரிசல்ட் வர வேண்டுமென மனதார வேண்டுகிறேன். தொடருங்கள் நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 நிமிடங்களில் அதன் ரிசல்ட்ஸ் வந்தது.  

 

தொடருங்கோ   

Link to comment
Share on other sites

பின்னூட்டம் இட்டும் பச்சைப் புள்ளிகள் தந்தும் ஊக்குவிக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

ராசுக்குட்டி பட்டபாடு நாலு ஐந்து பந்திகளில் அடக்க முடியாது. இன்னும் வரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

மனக் கண் முன் மனைவியும் பிள்ளைகளும் பரதேசி கோலத்தில் நிற்பது போலவும், ஹீமோ தெரபி எடுத்து தலை முடி எல்லாம் உதிர்ந்து வயக்கெட்டுப் போய் தான் படுக்கையில் கிடப்பது போலவும், நண்பர்கள் எல்லாம் கண் ஓரத்தில் கண்ணீர் வழிய தான் வளர்த்தப்பட்டு இருக்கும் பெட்டியை சுற்றி ஒரு வட்டம் போட்டு நடப்பது போலவும் காட்சிகள் வழியத் தொடங்கி விட்டன ராசுக்குட்டிக்கு. 

இது தான் பல குடும்பஸ்தர்களிடம் இருக்கும் பெரிய பயம். சாதுவாக தோள் மூட்டில் அல்லது இடப்பக்கம் ஏதாவது சுளுக்கு ,வலிகள்,நோவுகள் வந்தால் சிந்தனைகள் மனைவி பிள்ளைகளை நோக்கியே இருக்கும். கற்பனைகள் யமலோகம் வரைக்கும் சென்று விடும். மரணம் என்பது மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால்  கடமைகள் முடிந்த பின் மரணத்தை நான் வரவேற்பேன்.

ஒரு சிறிய செய்தி. பீற்றூட் கறி சாப்பிட்டவர்கள் ஐயோ யூரினிலை இரத்தம் என அலறியடித்துக்கொண்டு அவசர சிகிச்சை நிலையங்களுக்கு  ஓடியவர்களும் உண்டு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இது தான் பல குடும்பஸ்தர்களிடம் இருக்கும் பெரிய பயம். சாதுவாக தோள் மூட்டில் அல்லது இடப்பக்கம் ஏதாவது சுளுக்கு ,வலிகள்,நோவுகள் வந்தால் சிந்தனைகள் மனைவி பிள்ளைகளை நோக்கியே இருக்கும். கற்பனைகள் யமலோகம் வரைக்கும் சென்று விடும். மரணம் என்பது மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால்  கடமைகள் முடிந்த பின் மரணத்தை நான் வரவேற்பேன்.

ஒரு சிறிய செய்தி. பீற்றூட் கறி சாப்பிட்டவர்கள் ஐயோ யூரினிலை இரத்தம் என அலறியடித்துக்கொண்டு அவசர சிகிச்சை நிலையங்களுக்கு  ஓடியவர்களும் உண்டு.

நான்பீற்றூட் சாப்பிட்டாலும் இப்படி வரலாம் என்று சொல்ல நினைத்தேன் தாத்தா.. பின் ஏன் என்று விட்டுட்டேன்.போக போக பார்க்கலாம்.. 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

பகுதி 2:

 

சிறு நீர் தொற்று என்று தான் முடிவு வரும், டொக்டர் அன்ரி பயோடிக் பத்து தருவார், அதை தவறாமல் எடுப்பன், பார்மசியில் மருந்து தரும் போது வார இறுதியில் பிரண்டி அடிச்சால் அன்ரி பயோடிக் பிரச்சனை கொடுக்குமா என்றும் கேட்க வேண்டும், பத்து நாட்களில் எல்லாம் சரியாகி விடும், மீண்டும் கும்மாளம் அடிக்கலாம் என்று மனக்கணக்குகள் நிறைய போட்டு கொண்டு "ரிசட்ல் என்ன டொக்டர்" என்று ராசுக்குட்டி கேட்டார்.

"ஒரு தொற்றும் இல்லை... எல்லாம் கிளியராக இருக்கு" என்று டொக்டர் கொஞ்சம் யோசனையுடன் சொல்ல ராசுக்குட்டி மீண்டும் சுருண்டு போனார். தொற்று என்றால் சிம்பிளா எல்லாம் முடிஞ்சிடும், பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை என்று நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணமும் தவிடு பொடியாகி விட்டது.

ஒருவேளை உந்த கிளினிக்கில் உடனே செக் பண்ணி சொல்வது பிழையாகுமோ தெரியாது என்று விட்டு, "அப்ப ஏன் டொக்டர் அப்படி வந்தது " என்று கேட்க," எதுக்கும் ஒருக்கால்  இதற்கென்று இருக்கும் ஒரு Lab இற்கு போய் Urinalysis எனும் இன்னும் கொஞ்சம் ஆழமான செக்கப் ஒன்று செய்து பார்ப்பம் சொல்லி ஒரு சீட்டில் எழுதி தர அடுத்த நாளே காலைமை எழும்பி lab இற்கு ஓடிப் போய் - 12 மணித்தியாலம் எதுவும் சாப்பிடாமல் போய்- எடுத்து கொடுக்க, ரிசல்ட்ஸ் வர நாலு நாளாகும். கொரனா காலம் என்பதால் இன்னும் கொஞ்ச நாட்கள் கூட எடுக்கும் என்று சொல்லி அனுப்பி விட்டனர்.

ராசுக்குட்டி தான் ஒரு பெரிய இரும்பு மனிசன், எதுக்கும் கலங்காதவன் என்ற ஒரு பில்டப்பை மனிசிக்கும், பிள்ளைகளுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும்  கட்டி வைத்திருந்தவர். (ஆனாலும் மனிசிக்கு தெரியும் இது இரும்பு மனிசன் இல்லை, எல்லாம் சும்மா வெறும் பில்டப்பு  என்று, ஆனாலும் நம்பினமாதிரி பாவனை செய்வதை உண்மை என்று தான் ராசுக்குட்டி நம்பிக் கொண்டு இருந்தவர்.). தான் இப்படி வருத்தத்துக்கு பயந்ததை வெளியே காட்டினால் தான் கட்டின பில்டப்பு உடைந்து விடும் என்று "இது எல்லாம் எனக்கு ஜுஜுப்பி என்ற மாதிரி முகத்தை வைச்சுக் கொண்டு நடந்து திரிந்தாலும் முகம் என்னவோ பேயறைந்த மாதிரி இருந்ததை மனிசி கவனிக்க தவறவில்லை.

இதில வேற "உங்களுக்கு ஒன்றும் இல்லை....சும்மா உந்த கூகிளை பார்த்து பயப்பட வேண்டாம் " என்று மனிசி சொல்லி தன்  பாட்டுக்கு சந்தோசமாக இருந்ததை பார்த்து ராசுக்குட்டிக்கு விசர் ஏறிக் கொண்டு இருந்தது. 

அடுத்த எட்டு நாட்களிலும், ஒவ்வொரு நாளும் கூகிளை நோண்டுவதும் அதில் சொல்லப்பட்டு இருக்கும் அறிகுறிகள் எல்லாம் தனக்கும் இருக்கு என்று கற்பனை பண்ணுவதும், குடும்ப வைத்தியருக்கு போன் அடிப்பதுமாக இருந்தார்.

இரண்டு வகையானவர்கள் உள்ளனர். ஒன்று வைத்தியர் சொல்லுவதைக் கேட்டு பயப்படுகின்றவர்கள். மற்றது, வைத்தியரையே பயப்பட வைப்பவர்கள். இதில் ராசுக்குட்டி இரண்டாம் வகை என்று இவ்வளத்தையும் வாசிக்கும் உங்களுக்கும் புரிந்து இருக்கும். அறப்படிச்ச குணம் உள்ளவர்ளுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் ஒரு வகையில் பாவம் செய்வதர்கள் போலும்.

சரியாக எட்டாவது நாள், குடும்ப வைத்தியர் தொலைபேசியில் அழைத்து Urinalysis சிலும் ஒன்றும் வரவில்லை...எல்லாம் சரியாக இருக்குது என்று சொல்ல, "இனி என்ன செய்வது டொக்டர்... ஏன் அப்ப அண்டைக்கு இரத்தம் வந்தது " என்று குடல் உடைந்து கேட்க வைத்தியரும் "ஒரு ஸ்பெசலிஸ்ட் இடம் உன்னை அனுப்புறன், அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாக டெஸ்ட் செய்யச் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார். அப்பொயிண்ட்மெண்ட் உடனே கிடைக்குமா டொக்டர் என்று கேட்க.. "இல்லை நாளேடுக்கும்... உன்னை மாதிரி கனக்க பேர் காத்திருப்பர் என்பதால் மூன்று மாதமாவது எடுக்கும்" என்று சொல்ல ராசுக்குட்டி மனசுக்குள் போட்ட சின்ன அலறலை அவர் கவனிக்கவில்லை.

உந்த கனடவில் எல்லாத்துக்கு லைனில் தான் நிற்க வேண்டும். ஜஸ்ரின் ருடோவாக இருந்தாலும் சரி, ராசுக்குட்டியாக இருந்தாலும் சரி, வரிசையில் தான் நிற்க வேண்டும். ஊரில் என்றால் காசு கூடக் கொடுத்து உடனே எல்லா பரிசோசதனைகளையும் செய்து பார்க்கலாம்...ஆனால் கனடாவில் நாளெடுக்கும். ராசுக்குட்டியின் நேரம் கொரனா காலமாக வந்து சேர்ந்ததால் காத்திருப்பு நீளுமோ என்று பயந்து போயிருக்கும் போது மூன்றாம் நாளே ஸ்பெசலிஸ்ட் இடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 

"முதலில் அல்ரா சவுண்ட் எடுத்துப் பார்ப்பம். சிறு நீரகத்தில் கல் என்றால் அது காட்டிக் கொடுக்கும். அனேகமாக உனக்கு அதுதான் பிரச்சனை என்று சந்தேகின்றேன் என்று கூறி மூன்று நாட்களில் அல்றா சவுண்ட் இற்கு அனுப்பி வைத்தார்.

இக்காலப்பகுதியில் கொரனா கூத்துக்காட்டிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு Lab உம் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்து இருந்தனர். ராசுக்குட்டி மூன்றாம் நாள் உள்ளே போகும் போது அங்கிருந்தவர்கள் உடல் முழுதும் மூடிய ஆடையுடன் இருந்ததை பார்த்து லைட்டாக பயந்து விட்டார். அந்தப் பயத்தில் அரண்டு இருந்தவர். அவர்கள் அவரை மேலாடையை மட்டும் கழட்டி படுங்கோ என்று சொல்லியதை சரியாக காதில் வாங்காமல், முழு ஆடைகளையும் களைந்து விட்டு படுத்துக் கிடக்க, வந்த நேர்ஸ் தன் தலையில் அடித்து, உன்னை கீழே கழட்ட சொல்லவில்லையே என்று அலுத்துக் கொண்டு கீழாடையை போடச் சொன்னார்.

பாவம் மனுசி ஆர் முகத்தில் அன்று முழிச்சதோ தெரியவில்லை.

- தொடரும்;


 

  • Like 8
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி இரண்டு ஏற்கனவே  உள்ளதை மாத்தி எழுதி உள்ளதை போல் ஒரு நெருடல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நிழலி said:

 அவர்கள் அவரை மேலாடையை மட்டும் கழட்டி படுங்கோ என்று சொல்லியதை சரியாக காதில் வாங்காமல், முழு ஆடைகளையும் களைந்து விட்டு படுத்துக் கிடக்க, வந்த நேர்ஸ் தன் தலையில் அடித்து, உன்னை கீழே கழட்ட சொல்லவில்லையே என்று அலுத்துக் கொண்டு கீழாடையை போடச் சொன்னார்.

பாவம் மனுசி ஆர் முகத்தில் அன்று முழிச்சதோ தெரியவில்லை.

ராசுக் குட்டிக்கு... தன்ரை, தம்பியை... ஊர் முழுக்க காட்ட வேண்டும் என்று, ஆசை வந்திட்டுது போலை கிடக்கு. 😁

பாவம்... நேர்ஸ்.... அதைப் பார்த்து  சரியாய் பயந்து போயிருக்கும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக ஒன்றில் போட்டுக் கொள்வது அல்லது கழட்டுவது இது இரண்டும் கண்டிப்பாக இவரது எழுத்துகளில் எப்போதும் வந்து விடும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

பாவம் மனுசி ஆர் முகத்தில் அன்று முழிச்சதோ தெரியவில்லை.

நேர்ஸ் (மனசுக்குள் இத்துணூண்டை வச்சுக்கொண்டு இவன் பண்ணுற அலப்பறை இருக்கே)😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அவர்கள் அவரை மேலாடையை மட்டும் கழட்டி படுங்கோ என்று சொல்லியதை சரியாக காதில் வாங்காமல், முழு ஆடைகளையும் களைந்து விட்டு படுத்துக் கிடக்க, வந்த நேர்ஸ் தன் தலையில் அடித்து, உன்னை கீழே கழட்ட சொல்லவில்லையே என்று அலுத்துக் கொண்டு கீழாடையை போடச் சொன்னார்.

பாவம் மனுசி ஆர் முகத்தில் அன்று முழிச்சதோ தெரியவில்லை.

- தொடரும்;


 

இது கொஞ்சம் ஓவர், இப்படி நடத்திருக்க வாய்ப்பில்லை😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டுக்கிளி ராசுக்குட்டிக்கு கதைக்கா.. பஞ்சம் நல்ல இலகுவான எழுத்து நடை. கொஞ்சம் எழுத்துப பார்த்து பொறாமையாகவும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ராசுக் குட்டிக்கு... தன்ரை, தம்பியை... ஊர் முழுக்க காட்ட வேண்டும் என்று, ஆசை வந்திட்டுது போலை கிடக்கு. 😁

பாவம்... நேர்ஸ்.... அதைப் பார்த்து  சரியாய் பயந்து போயிருக்கும். 🤣

சிறிதம்பி! உந்தவிசயத்திலை ஈழப்பிரியனையும்  என்னையும் கேட்டால் இன்னும் கனக்க சொல்லுவம். ஏனெண்டால் நாங்கள்  கடவுளையே பாத்திட்டு வந்த ஆக்கள்.
தம்பிக்கு பக்கத்தாலை  ஓட்டை போட்டு கடவுளின் அழகையே பார்தவர்கள்.😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இக்காலப்பகுதியில் கொரனா கூத்துக்காட்டிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு Lab உம் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்து இருந்தனர். ராசுக்குட்டி மூன்றாம் நாள் உள்ளே போகும் போது அங்கிருந்தவர்கள் உடல் முழுதும் மூடிய ஆடையுடன் இருந்ததை பார்த்து லைட்டாக பயந்து விட்டார். அந்தப் பயத்தில் அரண்டு இருந்தவர். அவர்கள் அவரை மேலாடையை மட்டும் கழட்டி படுங்கோ என்று சொல்லியதை சரியாக காதில் வாங்காமல், முழு ஆடைகளையும் களைந்து விட்டு படுத்துக் கிடக்க, வந்த நேர்ஸ் தன் தலையில் அடித்து, உன்னை கீழே கழட்ட சொல்லவில்லையே என்று அலுத்துக் கொண்டு கீழாடையை போடச் சொன்னார்.

எந்த வைத்தியசாலை என்றாலும் பின் பூட்டுள்ள மாற்று உடை கொடுத்தே போட்டிருக்கும் உடுப்பைக் கழட்டச் சொல்வார்கள்.ராசுக்குட்டி சொல்ல முதலே கழட்டிப் போட்டுது.
 

15 minutes ago, குமாரசாமி said:

சிறிதம்பி! உந்தவிசயத்திலை ஈழப்பிரியனையும்  என்னையும் கேட்டால் இன்னும் கனக்க சொல்லுவம். ஏனெண்டால் நாங்கள்  கடவுளையே பாத்திட்டு வந்த ஆக்கள்.
தம்பிக்கு பக்கத்தாலை  ஓட்டை போட்டு கடவுளின் அழகையே பார்தவர்கள்.😁

சவரக்கத்தியுடன் வந்து நிற்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

எந்த வைத்தியசாலை என்றாலும் பின் பூட்டுள்ள மாற்று உடை கொடுத்தே போட்டிருக்கும் உடுப்பைக் கழட்டச் சொல்வார்கள்.ராசுக்குட்டி சொல்ல முதலே கழட்டிப் போட்டுது.
 

ஒரு ஆர்வக்கோளாறு தான் , ரிசல்ட்டுக்கு 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாதாரணனுக்குத் தலையிடி வந்தால்....ஒரு பனடோலோடை....அலுவல் முடிஞ்சிரும்!

ஒரு வைத்தியருக்குத் தலையிடி வந்தால்....அப்ப்டியிருக்குமோ அல்லது இப்படியிருக்குமோ எண்டு ..வாரக் கணக்கில  ஆய்வு ஓடும்!

ஊரில் ஒரு வயதானவர் குந்தியிருந்து சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்! ஒரு அரை மணித்தியாலமாய்..இருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவில்லை! அவருக்கு புறஸ்ரேற்  ஆக இருக்கலாம் என்பது என்பது அனுமானமாக இருந்தது!

அவரிடம் கேட்டேன்! தம்பி கொஞ்சம் சூடு போலக் கிடக்குது! பின்னேரன் கொஞ்சம் பனங் கள்ளடிக்க எல்லாம் சரியாகி விடும்!

ஏனோ இந்தக் கதையை வாசித்த போது...அந்த வயதானவர்....மீண்டும் நினைவில் வந்து போகின்றார்!

தொடருங்கள்,நிழலி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருல சலக்கடுப்பு , உச்சா ,போகும் எரியுது என்றால் கிழவிகள் சொல்லுவார்கள் போய் ஆத்துல நல்லா குளி மணிக்கணக்கில்  அதுக்க்கு பிறகு ஒன்றும் செய்யாது என்று  ஆனால் இப்ப ஒரு சின்ன வருத்தம் வந்தாலும் வரும் மரண பயத்தால் ஆயிரம் வைத்தியருட்ட காட்டி செக் பண்ண வேண்டி இருக்கும் அப்படி காட்டியும் திருப்தி என்பது மனதிற்கு வரவே வராது சிலரின் அனுபவத்தை வைத்து சொல்கிறேன் 

6 hours ago, நந்தன் said:

நேர்ஸ் (மனசுக்குள் இத்துணூண்டை வச்சுக்கொண்டு இவன் பண்ணுற அலப்பறை இருக்கே)😄

விபரமா எழுதுனா நாங்களும் தெரிஞ்சிக்குவமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நண்பருக்கு மூலம் தள்ளி வரும் வருத்தம். அவருக்கு அன்று ஏலாமல் போய் விட்டது. வைத்தியரிடம் போக வெட்கம்.அதனால் மனைவியிடம் உனக்கு வருத்தம் என்று சொல்லி மருந்து வாங்கி வா என்று அனுப்பிவிட்டார். அவாவும் இன்னொரு பிள்ளையை(பாஷை கதைப்பதற்கு) கூட்டிக்கொண்டு அங்கு போனார்.உள்ளே போனதும் வைத்தியர் (அவர் ஒரு பெண்) எல்லாம் விசாரித்து விட்டு "நீ பயப்பிடாதை, தேவையென்றால் ஒரு சின்ன சாத்திரசிகிச்சையில் குணமாக்கி விடலாம் என்று விளங்கப்படுத்தி விட்டு, இவவை பெட்டில் படுக்க சொல்லி விட்டு தன் கையில் கிளவ்சை போட்டுகொண்டு பிள்ளையை வெளியே போய் இருக்க சொன்னார். பிறகு அவர் பரிசோதித்து விட்டு அவர்களிடம் எல்லாம் சரியாகத்தான் இருக்கு மறுபடி இப்படி வந்தால் வாங்கோ என்று சொல்லி சில மருந்துகள் எழுதிக் கொடுத்து அனுப்பி விட்டார். அவர்கள் வீட்டுக்கு வந்து அன்றைய பெண்களின்  மீட்டிங்கில் சொல்லி சொல்லி சிரித்தார்கள்......!  😁

 

மேலும் ஒரு அனுபவம் பிறகு.....!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.