Jump to content

பிரேரணையை நிறைவேற்றினாலும் எம்மை எதுவும் செய்ய முடியாது! - மஹிந்த இறுமாப்பு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரேரணையை நிறைவேற்றினாலும் எம்மை எதுவும் செய்ய முடியாது! - மஹிந்த இறுமாப்பு.!

Screenshot-2021-03-01-07-49-54-430-com-a

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் எத்தனை பிரேரணைகளையும் கொண்டுவரலாம். அவை நிறைவேறினால் என்ன, நிறைவேறாவிட்டால் என்ன? அதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எமது அரசின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டில் நாம் மாற்றம் எதையும் செய்யவேமாட்டோம்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வு நடைபெற்று வருகின்றது. இலங்கை தொடர்பான புதிய பிரேரணை விவகாரமும் சூடுபிடித்துள்ளது. வாக்குரிமையுள்ள 10 நாடுகள் மட்டும் இதுவரை இலங்கைக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் எத்தனை பிரேரணைகளையும் கொண்டுவரலாம். அவை நிறைவேறினால் என்ன, நிறைவேறா விட்டால் என்ன எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இம்முறை பிரேரணையைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் எமது நட்பு நாடுகள் உறுதியாக உள்ளன. இறுதியில் என்ன நடந்தாலும் எமது அரசின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டில் நாம் மாற்றம் எதையும் செய்யவே மாட்டோம். எமது புதிய அரசு பதவியேற்ற கையுடன் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கொள்கை விளக்க உரையில் அரசின் நிலைப்பாடுகளை தெளிவாக வெளியுலகத்துக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சரும் தற்போது ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாட்டை எடுத்தியம்பியுள்ளார். எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மிரட்டல்களுக்கும், அவருக்கு ஆதரவாக இருக்கும் சில நாடுகளின் கூட்டிணைவால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கும் நாம் அஞ்சவும் மாட்டோம்; அடிபணியவும் மாட்டோம்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2021/03/01/23140/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வெளியில் இறுமாப்பு தோற்றம் இருந்தாலும், இலங்கைத்  தீவு அதன் முக்கிய சர்வதேச அரசியல், பொருளாதார  தொடர்புகள், சார்பு காரணிகள் (வர்த்தகம், கடன்) போன்றவற்றுக்கு முழுமையாக மேற்கு-ஹிந்தியை கூட்டணிக்கு கட்டுண்டு இருக்க தேவை இல்லை என்பது இதன் சமிக்ஞை ஆகும்.

மங்கள சமரவீர பொய்யே சொல்கிறார் என்று, அதாவது UNHRC சொன்ன நல்லிணக்கம் என்பதற்கு எண்ணமுள்ள அரசியல் ஆவல் (intentional political will) இல்லை என்றும், UNHRC சொன்ன நல்லிணக்கம் என்பதை  புதைப்பதற்கான   எண்ணமுள்ள அரசியல் ஆவல் (intentional political will) மட்டும் தான் மகளை சமரவீர கூட வைத்து இருந்தார் என்றும் அப்போதே சொல்லியது.

இதை தெரிந்தும் விட்டுக்கொடுத்து, மேற்கு, சர்வதேச சமுக கூட்டு, கிந்தியாவின் ஆசியுடன். சுமந்திரன் போன்றோர் உள்ளூர்  ஆதரவை காட்டியும், அனல், சுமந்திரன் கையில் அப்போது ஒன்றும் பெரிதாக  இருக்கவில்லை. கிந்தியாவே, முழுமையாக செல்வாக்கு செலுத்தியது.     

முன்பு சொல்லியது, தேயிலை வர்த்தகம் சிங்களம், இப்பொது பெரும்பாலும் சீன சந்தைக்கு மாற்றி  விட்டது.

ரணில், மைத்திரியின் நல்லாட்சி 2015 இல் இருந்து வாங்கிய காலமே, இந்த ஏற்பாடுகளை செய்வதற்கு, நல்லிணக்கம் என்ற பெயரில்.     
      
சிங்களம், ஒரு படி மேலேயே நிற்கிறது, பூகோள அரசியல், பொருளாதார நிலையில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேயிலை வர்த்தகம், வட்டிக்கு கழிக்கப்படும் அதுவும் யுவானில்...

மேலும், சிங்களத்தின் இந்த நிலையே எமக்கு நல்லது. இலங்கை மீது விதிக்கப்படும் எந்த தடையும் மீறி சீனா பாதுகாக்கும். வீட்டோ அதிகாரத்தினை கூட பாவிக்கும்.

ஆனால், ஒரே ஒரு விசயமே, சிங்களத்தினை தடுமாற செய்யும். அதுவே தமிழர்களின் சுஜ நிர்ணய உரிமை குறித்த முடிவு, இதனை சீனாவோ, சிங்களமோ தடுக்க முடியாது.

அதுவே, இந்தியாவுக்கும், மேற்குக்கும், தமிழருக்கும் உள்ள இறுதி வாய்ப்பு. 

கிழக்கு தீமோர் விசயத்தில், இந்தோனேசியாவுக்கும், கோசோவா விசயத்தில் சேர்பியாவுக்கும், தென் சூடான் விசயத்தில் சூடானுக்கும், எரித்திரியா விசயத்தில் எத்தியோப்பியாவுக்கும் இதுவே நிகழ்ந்தது வரலாறு.

கனடாவின் கியூபெக் மாகாணமும், பிரித்தானியாவின், ஸ்காட்லாந்து நாடும், சுஜநிர்ணய உரிமை தேர்தல் நடாத்த கோரியபோது, மறுக்காமல் நடாத்த வேண்டிய நிலைமை உருவானதும், இந்த யாருமே மறுக்க முடியாத உரிமைதான்.

அப்படி ஒரு நிலைமை உருவானால், சிங்களவன் எவ்வளவுதான் கெஞ்சினாலும், தமிழ் பேசும் இனம், ஒட்டு மொத்தமாக, சிங்களத்தினை நிராகரிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

அப்படி ஒரு நிலைமை உருவானால், சிங்களவன் எவ்வளவுதான் கெஞ்சினாலும், தமிழ் பேசும் இனம், ஒட்டு மொத்தமாக, சிங்களத்தினை நிராகரிக்கும்.

அவனை காப்பதற்கு இருக்கிறார்கள் தமிழ் அரசியல் தரகர்கள். இவனது இந்த தெனாவெட்டுக்கு ஐ. நா. இலங்கை மீது நடவடிக்கை எடுக்க காட்டிய கால தாமதம்,   நம்ம அரசியல் தரகர்களின் முண்டு கொடுப்பே காரணம். அவனுக்கு குளிர் விட்டுப்போச்சு  இந்த முடிவை  வைத்துக்கொண்டு குழு அமைக்கிறேன், விசாரணை செய்கிறேன், நல்லிணக்கத்தை உருவாக்குகிறேன் என்று காலத்தை  இழுத்தடித்து, எல்லோரையும்  ஏமாற்றியது தான் கண்ட பலன்.   நம்ம அரசியற் தலைவர்கள் ஓடியோடி வெளிநாட்டுத்தூதுவர்களை சந்தித்து, சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கியும், சில முடிவுகள் அவர்களையும் மீறி ஐ. நாவில்  எடுக்கப்பட்டு விட்டதால், இப்போ தாங்கள் நல்ல பிள்ளைக்கு நடிக்க, ஒப்புக்கு சப்பாக சில குற்றச்சாட்டுகளை அரசு மீது  அடுக்கிக்கொண்டும்,  தன்னை விட்டு விடையங்கள் கைமீறி போய்விடாமல் இருப்பதற்காக  எல்லாவற்றுக்குள்ளும்  மூக்கை நுழைத்துக்கொண்டும்,  கருத்துக்களை சொல்லிக்கொண்டும்  நடிக்கும் கூட்டமும் உண்டு. இவர்ளை இனங்கண்டு வெளியேற்றும் வரை  விடிவு என்பது தமிழருக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, satan said:

அவனை காப்பதற்கு இருக்கிறார்கள் தமிழ் அரசியல் தரகர்கள். இவனது இந்த தெனாவெட்டுக்கு ஐ. நா. இலங்கை மீது நடவடிக்கை எடுக்க காட்டிய கால தாமதம்,   நம்ம அரசியல் தரகர்களின் முண்டு கொடுப்பே காரணம். அவனுக்கு குளிர் விட்டுப்போச்சு  இந்த முடிவை  வைத்துக்கொண்டு குழு அமைக்கிறேன், விசாரணை செய்கிறேன், நல்லிணக்கத்தை உருவாக்குகிறேன் என்று காலத்தை  இழுத்தடித்து, எல்லோரையும்  ஏமாற்றியது தான் கண்ட பலன்.   நம்ம அரசியற் தலைவர்கள் ஓடியோடி வெளிநாட்டுத்தூதுவர்களை சந்தித்து, சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கியும், சில முடிவுகள் அவர்களையும் மீறி ஐ. நாவில்  எடுக்கப்பட்டு விட்டதால், இப்போ தாங்கள் நல்ல பிள்ளைக்கு நடிக்க, ஒப்புக்கு சப்பாக சில குற்றச்சாட்டுகளை அரசு மீது  அடுக்கிக்கொண்டும்,  தன்னை விட்டு விடையங்கள் கைமீறி போய்விடாமல் இருப்பதற்காக  எல்லாவற்றுக்குள்ளும்  மூக்கை நுழைத்துக்கொண்டும்,  கருத்துக்களை சொல்லிக்கொண்டும்  நடிக்கும் கூட்டமும் உண்டு. இவர்ளை இனங்கண்டு வெளியேற்றும் வரை  விடிவு என்பது தமிழருக்கு இல்லை.

ஒன்று நடக்க வேண்டும் என்றால், அனைத்துமே அமைந்து வரும்.

பலருக்கு தெரியாத ஒன்று. 1600ம் ஆண்டில் உருவான, இங்கிலாந்தின் கிழக்கிந்திய கொம்பனி இந்தியாவினை உருவாக்கி இருந்தாலும், அது இந்திய துணைக்கண்டத்தில் காலூன்ற காரணம், 1661ம் ஆண்டில், பெரிதாக அழகில்லாத, பற்கள் துருத்திய போர்த்துக்கேய இளவரசியை, இங்கிலாந்து இரண்டாம் சார்ள்ஸ் மன்னர் கலியாணம் கட்ட கொடுக்கப்பட்ட சீதனம், இன்று பாம்பே நகரம் அமைந்த பகுதி.

கோவுடன் சேர்த்து போர்த்துக்கேயர் பிடித்து வைத்திருந்தனர். 

நோகாமல் நொங்கு துண்ணுறது இதுதான்.

அதனை வைத்தே, இந்திய துணைக்கண்டத்தில் உறுதியான காலூன்றினர். அதுதான், அமைந்து வருவது என்பது.  

****

மன்னருக்கு வைப்பு எக்கசக்கம். வெளியாலை 13 - 17 பிள்ளையள் பிறந்தாலும், போர்த்துக்கேய, பட்டத்து ராணிக்கு ஒன்றுமே பிறக்கவில்லை ஆததால், அவரது தம்பியார் மன்னரானார்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.