Jump to content

நாம் பெற்ற பிள்ளைகள் பற்றி??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கைக்குழுந்தைகளாக  எம்  பிள்ளைகள் எம்  கையில்  தவளத்தொடங்குவதாலோ என்னவோ

அவர்களை என்றும் அவ்வாறே  நாம் கணக்கிடுகின்றோமா??

அவர்களுக்கான  படிப்பு  சார்ந்து

அல்லது  அவர்களின் வயது  சார்ந்து 

அல்லது  எமது  கல்வி அல்லது  கேட்டறிந்த அனுபவங்களை அவர்கள்  மேல்  செலுத்துவது சார்ந்து

அதை நாமும்  அவர்களும் எவ்வாறு  கிரகிக்கக்கூடும்  என்று  நாம்  எந்தளவுக்கு கரிசனை  கொள்கின்றோம்

அதிலும் உடலின் சில  அந்தரங்க  உறுப்புக்கள்  அல்லது  உடலுறவு  சார்ந்து

எமக்கும்  அவர்களுக்குமிடையிலான உணர்தல் எந்தளவில்??

அநேகமான  பெற்றோர் பிள்ளைகளின்  முன்

முத்தங்கள் சில்மிசங்களை கூட தவிர்த்தல் என்பது  பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக உள்ளநிலையில்

அதற்கு மேல் எதைப்பேசமுடிகிறது???

ஆனால்  பிள்ளைகளுடன் நண்பர்களாக  பழகும்  போது 

அவர்களிடமிருந்து வரும் சில  விடயங்கள்

எம்  அனுபவங்களை 

அவர்கள் பற்றிய எமது அளவுகோளை  

பொய்யாக்கி 

நம்மையே தாண்டிய அவர்களின் கல்விமுறை  மற்றும் கூச்சமற்ற தெளிவு

எம்மை தலைகுனிய  செய்து  விடும்

ஒர் இனச்சேர்க்கை  சார்ந்து

வயது கூடியவர்களை  திருமணம் செய்வது சார்ந்து

கூடி  வாழ்தல் சார்ந்து

தனியே  வாழ்தல்  சார்ந்து.......

அவர்களது  பார்வையும்  கல்வியும் பக்குவமும்

எமது பார்வையும் கல்வியும் அனுபவங்களும் ஒட்டாத  தண்டவாளங்களின்  நிலை  தான்.

அந்தவகையில் என் பிள்ளைகளிடம்  ஆரம்பத்திலிருந்தே நண்பனாக  பழகுபவன் என்றரீதியில் 

இப்படியான  நிலை எனக்கும் ஏற்படுவதுண்டு

எனது  மகளது பிறந்த நாள் அன்று  அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது

அவள் சாதாரணமாக  சொன்னாள்

அப்பா என்னை  அம்மாவிடம் தை  முதலாம் திகதி (வருடப்பிறப்பன்று)  நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்

அதனால் தான் நான் புரட்டாதி  ஒன்றில் பிறந்தேன்  என.

எனக்கு உடம்பெல்லாம் குறுகி  விட்டது

ஏனெனில் இதை  சொல்லும்போது அவளுக்கு அன்று  தான் 12 வயது.

முற்றும்.

Edited by விசுகு
  • Like 9
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

ஏனெனில் இதை  சொல்லும்போது அவளுக்கு அன்று  தான் 12 வயது.

ஒரு காலத்தில் மணப்பெண்ணை கணவனுடன் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி முதலிரவுக்கு அனுப்பினார்கள்.
எண்ணிப் பார்க்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

கைக்குழுந்தைகளாக  எம்  பிள்ளைகள் எம்  கையில்  தவளத்தொடங்குவதாலோ என்னவோ

அவர்களை என்றும் அவ்வாறே  நாம் கணக்கிடுகின்றோமா??

அவர்களுக்கான  படிப்பு  சார்ந்து

அல்லது  அவர்களின் வயது  சார்ந்து 

அல்லது  எமது  கல்வி அல்லது  கேட்டறிந்த அனுபவங்களை அவர்கள்  மேல்  செலுத்துவது சார்ந்து

அதை நாமும்  அவர்களும் எவ்வாறு  கிரகிக்கக்கூடும்  என்று  நாம்  எந்தளவுக்கு கரிசனை  கொள்கின்றோம்

அதிலும் உடலின் சில  அந்தரங்க  உறுப்புக்கள்  அல்லது  உடலுறவு  சார்ந்து

எமக்கும்  அவர்களுக்குமிடையிலான உணர்தல் எந்தளவில்??

அநேகமான  பெற்றோர் பிள்ளைகளின்  முன்

முத்தங்கள் சில்மிசங்களை கூட தவிர்த்தல் என்பது  பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக உள்ளநிலையில்

அதற்கு மேல் எதைப்பேசமுடிகிறது???

ஆனால்  பிள்ளைகளுடன் நண்பர்களாக  பழகும்  போது 

அவர்களிடமிருந்து வரும் சில  விடயங்கள்

எம்  அனுபவங்களை 

அவர்கள் பற்றிய எமது அளவுகோளை  

பொய்யாக்கி 

நம்மையே தாண்டிய அவர்களின் கல்விமுறை  மற்றும் கூச்சமற்ற தெளிவு

எம்மை தலைகுனிய  செய்து  விடும்

ஒர் இனச்சேர்க்கை  சார்ந்து

வயது கூடியவர்களை  திருமணம் செய்வது சார்ந்து

கூடி  வாழ்தல் சார்ந்து

 

இப்படியான  நிலை எனக்கும் ஏற்படுவதுண்டு

எனது  மகளது பிறந்த நாள் அன்று  அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது

அவள் சாதாரணமாக  சொன்னாள்

அப்பா என்னை  அம்மாவிடம் தை  முதலாம் திகதி (வருடப்பிறப்பன்று)  நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்

அதனால் தான் நான் புரட்டாதி  ஒன்றில் பிறந்தேன்  என.

எனக்கு உடம்பெல்லாம் குறுகி  விட்டது

ஏனெனில் இதை  சொல்லும்போது அவளுக்கு அன்று  தான் 12 வயது.

முற்றும்.

 

பிள்ளை உருவாக்குதல், கலவி,  பாலியல்  உறுப்புக்கள் என்பவற்றை எமது சமூகத்தில்  சிதம்பர ரகசியம் போல் வைத்திருக்கின்றார்கள். இங்கு பதின்ம வயது(Teen age) தொடங்க முன்னர் அவைகளைப்பற்றிய  விளக்கம் பாடசாலையில் கொடுப்பார்கள். 
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பெற்ற பிள்ளைகள் உண்மையிலேயே நல்ல முற்போக்கான சிந்தனைகளுடன் வளர்க்கப் படுகிறார்கள்.எங்களைப்போல் புறங்கூறுதல் வஞ்சனை பொருளாசை போன்ற தீய குணங்களற்றவர்களாகவும் சாதி சமயம் குலம் கோத்திரம் போன்றவற்றிற்கு மதிப்பு  கொடுக்காதவர்களாகவும் எதையும் துணிவுடன் நேருக்கு நேர் பேசக்கூடியவர்களாகவும்  பிள்ளைகள் வாழ்விற்காய் தம்மையே தியாகம் செய்த எம் பெற்றவர்களைப்போல் நாம் இருக்கக்கூடாது என  அறிவுரை கூறுபவர்களாகவும் சில சமயம் எமக்கு ஆசானாகவும் இருக்கிறார்கள். 
அவர்களது பார்வையும் பக்குவமும் பலமுறை எம்மை பிரமிக்க வைப்பதாய் இருக்கும். கனடாவில்
மூன்றாம் வகுப்பு சமயப் புத்தகத்திலேயே குழந்தை உருவாவது பிறப்பது குடும்ப உறவு போன்ற பாடங்களை பார்த்து திகைத்த காலம் ஒன்றுண்டு.
எமது காலத்தில் பெரியவர்கள் பேசுமிடத்தில்கூட எமக்கு இருக்க அனுமதி கிடைப்பதில்லை.
ஆனால் இன்றோ எமது பிள்ளைகள் வளரும் காலத்தில் எதைப்பற்றியும் வெளிப்படையாக பெற்றவர்களுடனும் சகோதரர்களுடனும் பேசுவதைப்பார்க்க வியப்பாயிருக்கும்.
அவர்களது சிந்தனைகளும் செயற்பாடுகளும் வித்தியாசமானவை. அதற்கேற்ப நாம் மாறினால்தான் எம்மால் சந்தோசமாக வாழமுடியும். அவர்களை எம்மைப்போல் மாற்ற முயற்சித்தால் எமது வாழ்க்கையின் சந்தோசங்களை இழக்கவேண்டி ஏற்படலாம். 
வளர்ந்த பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு விளங்கும். தலைப்பிற்கு நன்றிகள் விசுகு

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு ஏற்ற ஒரு பதிவு....!

நாங்களும் கால மாற்றங்களுடன் பயணிக்காதவிடத்துக்....காலம் நம்மை விட்டு விட்டு வெகு தூரம் பயணித்து விடும்...!

கூனிக் குறுக இங்கு எதுவுமே இல்லையே!

ஒரு வேளை  வருசப் பிறப்பு அண்டைக்குக் கொஞ்சம் ஆசாரமாக இருந்திருக்கலாமோ....என்னமோ?🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.