Jump to content

முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய தனித்தீவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி )

கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய சூனியப் பிரதேசமான தீவு ஒன்றை தெரிவுசெய்ய கொவிட் -19 செயலணிக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.

அதேநேரம் நல்லடக்க வழிமுறைகள் உள்ளடங்கிய வழிகாட்டி அறிக்கையை  இந்த வாரம் இறுதிக்குள் வெளியிடவும் சுகாதார பணியகம் தீர்மானித்துள்ளது.

கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களில் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கக்கோரி தொடர்ச்சியாக முஸ்லிம் தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில் சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தேசிய அழுத்தங்கள் காரணமாக தற்போது உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

எனினும் நல்லடக்கம் செய்ய முன்னர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும், பொது இடங்களில் அல்லது பொது மயானங்களில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க முடியுமா என்பது குறித்து கொவிட் -19 செயலணிக் கூட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சுகாதார தரப்பின் தீர்மானம் என்ன என்பது குறித்து பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத்திடம் வினவிய பொது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய தனித்தீவு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய சூனியப் பிரதேசமான தீவு ஒன்றை தெரிவுசெய்ய கொவிட் -19 செயலணிக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.

நிச்சயம் வடபகுதியில் இருக்கும் ஒரு தீவாகத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நிச்சயம் வடபகுதியில் இருக்கும் ஒரு தீவாகத்தான் இருக்கும்.

ஆம்... எப்படியும், தமிழ்ப் பகுதிகளில்தான் கைவைப்பார்கள்.

அப்படி புதைப்பதில்... என்ன தவறு? என்று, 
நியாயம் பிளக்கவும் நாலு தமிழ்ச் சனம் இருக்குது.  😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

ஆம்... எப்படியும், தமிழ்ப் பகுதிகளில்தான் கைவைப்பார்கள்.

அப்படி புதைப்பதில்... என்ன தவறு? என்று, 
நியாயம் பிளக்கவும் நாலு தமிழ்ச் சனம் இருக்குது.  😡

முஸ்லிம்களைப் புதைப்பதை...மனிதாபிமான ரீதியில் அனுமதித்தாலும்...புதைக்கப் பட்டவர் ஒரு சமைய முக்கியத்தராக இருந்தால்...அந்த இடத்தில் ஒரு மசூதி கட்டுவதும் அவர்களது மத வழக்கம்!

கட்டாயமாகத் தமிழர் வாழும் தீவாக இருந்தால்....சாட்டியில் புதைப்பது தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்!

அங்கே....எற்கனவே ஒரு பள்ளி வாசலும் இருக்கின்றது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

முஸ்லிம்களைப் புதைப்பதை...மனிதாபிமான ரீதியில் அனுமதித்தாலும்...புதைக்கப் பட்டவர் ஒரு சமைய முக்கியத்தராக இருந்தால்...அந்த இடத்தில் ஒரு மசூதி கட்டுவதும் அவர்களது மத வழக்கம்!

கட்டாயமாகத் தமிழர் வாழும் தீவாக இருந்தால்....சாட்டியில் புதைப்பது தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்!

அங்கே....எற்கனவே ஒரு பள்ளி வாசலும் இருக்கின்றது...!

புங்கையூரான்.... இவங்கள் பயங்கர கில்லாடிகள்.
காத்தான்குடியிலை  இறந்தவனையும்.... தமிழ்ப் பகுதிகளில் கொண்டு வந்து புதைத்து,
தமிழரின் நிலத்தையே...  இடுகாடு ஆக்கி விடுவார்கள்.
அதனால்... தமிழன், உசாராக இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம்

கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களுடன் அனுமதிகள் வழங்கப்பட்டவுடன் சுகாதார அதிகாரிகள் அந்த இடத்தை முறையாக அறிவிப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, இந்த இடத்தை அடையாளம் கண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.இலங்கையில் கொரோனா வைரஸால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் இணங்காணப்பட்ட இடமொன்றில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/கொரோனா-வைரஸ்-தொற்றினால்-2/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம்

முஸ்லீம்கள்.... தானே, சடலங்களை எரிக்கக் கூடாது புதைக்க வேண்டும் என்று அடாத்தாக நின்றவர்கள்.

அவர்கள், தங்கள் பகுதியில் இடம் கொடுக்கலாமே.

சிங்களவனுக்கும் தெரிவு செய்ய வேறு பகுதிகள் கிடைக்கவில்லையா....

தமிழனை... சீண்டிப் பார்ப்பதே இவர்கள் வேலையாகி விட்டது. 

எங்களுடைய அரசியல்வாதிகள்... சோத்து மாடுகள் மாதிரி இருந்தால், இது தான் நடக்கும். 😡

Link to comment
Share on other sites

34 minutes ago, தமிழ் சிறி said:

முஸ்லீம்கள்.... தானே, சடலங்களை எரிக்கக் கூடாது புதைக்க வேண்டும் என்று அடாத்தாக நின்றவர்கள்.

அவர்கள், தங்கள் பகுதியில் இடம் கொடுக்கலாமே.

சிங்களவனுக்கும் தெரிவு செய்ய வேறு பகுதிகள் கிடைக்கவில்லையா....

தமிழனை... சீண்டிப் பார்ப்பதே இவர்கள் வேலையாகி விட்டது. 

எங்களுடைய அரசியல்வாதிகள்... சோத்து மாடுகள் மாதிரி இருந்தால், இது தான் நடக்கும். 😡

உதைத்தான் சொல்லுகின்றது ஒரே கல்லில் மூன்று மாங்காய்( இந்தியா, தமிழர், முஸ்லிங்கள்) விழுத்துவது என்று. சிங்களவன் பலே கில்லாடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

முஸ்லீம்கள்.... தானே, சடலங்களை எரிக்கக் கூடாது புதைக்க வேண்டும் என்று அடாத்தாக நின்றவர்கள்.

அவர்கள், தங்கள் பகுதியில் இடம் கொடுக்கலாமே.

சிங்களவனுக்கும் தெரிவு செய்ய வேறு பகுதிகள் கிடைக்கவில்லையா....

தமிழனை... சீண்டிப் பார்ப்பதே இவர்கள் வேலையாகி விட்டது. 

எங்களுடைய அரசியல்வாதிகள்... சோத்து மாடுகள் மாதிரி இருந்தால், இது தான் நடக்கும். 😡

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை எரித்துதான் ஆகவேண்டும் புதைக்க முடியாது என்று சிங்களவன் அடாத்தாக நின்றபோது,

இல்லை இல்லை அடக்கம் பண்ணதான் வேண்டும் என்று முஸ்லீம்களுக்கு ஆதரவாக தமிழ் அரசியல்வாதிகள்  குரல் கொடுத்திருக்கிறார்கள், ஊர்வலம் போயிருக்கிறார்கள் அதனால்தான் சமீபத்தில் தமிழர்கள் நடத்திய ஒரு சில போராட்டங்களுக்கு முஸ்லீம்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தனர.

அவர்கள் உடலை புதைக்கதான் வேண்டுமென்று குரல் கொடுத்த நம் அரசியல் வாதிகள், நமது பகுதியில் புதைக்ககூடாது என்று இனிமேல் எந்த மூஞ்சிய வைச்சுகொண்டு அரசை கேட்பது ?

சிங்களவன் அதி புத்திசாலி தமிழர்களும் முஸ்லீம்களும் ஒன்று சேர்ந்து அவனுக்கெதிராக ஒரு விஷயத்தில் அழுத்தம் கொடுக்க நினைக்கும்போது , சாதுரியமாக அவர்கள் பக்கமே அந்த பிரச்சனையை திருப்பி விட்டிருக்கிறான்.

சிறுபான்மை உணர்வுகளை மதிக்கும் நல்லவனாக சர்வதேசத்துக்கு தன்னை நல்லவனா காட்டியதாகவும் ஆச்சு,தனது இனத்திற்கும் அவர்களது பகுதிக்கும் பாதிப்பு ஏதும் வராதபடி உள்ளூர் முஸ்லீம்களுக்கு தீர்வு கொடுத்ததும் ஆச்சு.

இனிமேல் எமது பகுதியில் புதைக்ககூடாது என்று தமிழர்கள் போராடினால் அது முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் ஒரு  பிரச்சனையாகதான் உருவெடுக்கும். சிங்களம் ஆவலுடன் எதிர்பார்ப்பதும் அதைதான்.

இந்திய ராணுவத்துடனான மோதல்களின்போது முஸ்லீம்களின்மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களால்  விடுதலை புலிகள் அமைப்பில் சேர்ந்து சில நூறு முஸ்லீம் இளைஞர்கள் போராடினார்கள், இந்திய ராணுவம் போனதும் முஸ்லீம் போராளிகளுக்கென்று தனி முகாம்கூட புலிகளால் ஒதுக்கபட்டிருந்தது,

இலங்கை ராணுவத்துடன் மீண்டும் மோதல் வந்ததும் அத்தனைபேரும் ஆயுதங்களுடன் இலங்கை ராணுவத்திடம் போய் சேர்ந்தார்கள்.

அதன்பின் மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளில் எம்மினத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு முன்னணி வகித்தவர்களும் அவர்களே என்பது வரலாறு.

எத்துணை பரிவு காட்டினாலும் முஸ்லிம்கள் தமது தேவை முடிந்தவுடன் தமிழர்களை சிங்களவனுடன் சேர்ந்து காலுக்கு அடியில் போட்டு மிதிப்பார்கள் என்பதை எமது கடந்தகால அரசியல் தலைமகளும் ஆயுத போராட்ட தலமையும் அனுபவித்திருக்கிறது.

இனிவரும் தலைமகளும் அனுபவிக்கும். அதன் ஒரு அம்சமே இந்த இரணை தீவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானம்: மேலும் 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்

(எம்.மனோசித்ரா)
கொவிட்-19 வைரஸ்  தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை  அடக்கம் செய்யக்கூடிய மேலும் 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இரணைத்தீவில் அடக்கம் செய்வதை ஆரம்பித்தாலும், புத்தளம், ஓட்டமாவடி மற்றும் மன்னார் உள்ளிட்ட 6 பகுதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ddddddddddddd.jpg

இரணைத்தீவில் அடக்கம் செய்வது தொடர்பில் ஏதேனும் சிக்கல் நிலை ஏற்பட்டால் ஏனைய இடங்களில் அடக்கம் செய்வது தொடர்பில் தற்போது ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் நீர் நிலைகளில் பிரச்சினைகள் ஏற்படாத பகுதிகளை தெரிவு செய்யுமாறு முஸ்லிம் சமூகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சடலங்களை அங்கு கொண்டு செல்லல் மற்றும் சுகாதார பாதுகாப்புடன் அடக்கம் செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதார தரப்பினரால் தெளிவுபடுத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார தரப்பினரால் தெளிவுபடுத்தப்படும். குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவான வழிகாட்டல்கள் அது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் என்றார்.

இதன் போது , 'இந்த பகுதியில் சுமார் 200 மக்கள் வாழ்கின்றனர். கொழும்பில் உள்ளதைப் போன்று குழாய் நீர் வசதி அந்த பகுதிகளில் இல்லை. அங்குள்ள மக்கள் நிலத்தடி நீரையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறான விடயங்கள் கொவிட் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அந்த பகுதிகளில் அடக்கம் செய்வதில் தாக்கம் செலுத்துமல்லவா ? ' என்று கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய , 'இவ்விடயம் தொடர்பில் கொவிட் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான விடயத்தை ஆராயும் நிபுணர்கள் குழுவிற்கு கொண்டு செல்வதாகவும், அக்குழுவே இதுதொடர்பாக விரிவான முறையில் ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும்.' என்றும் தெரிவித்தார்.

கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானம்: மேலும் 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரணைத்தீவுக்கு ஹக்கீம் அதிரடி பதில்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, இரணைத்தீவில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த அறிவிப்பு தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

 

அந்தப் பதிவில்…

 

"உடல்(ஜனாஸா)களை இரணைத்தீவுக்கு அப்புறப்படுத்த எத்தனிக்கின்றனர்.  தவறான கதைகளைப் புனைந்துரைத்து, நெடுகிலும் அவர்கள் செய்வதே சரி என்று நிரூபிக்கவே விரும்புகின்றனர். நம்பிக்கை இழந்து , அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள சமூகத்தை துன்புறுத்துவதில் அவர்கள் அடையும்  இன்பத்திற்கு அளவே இல்லை. பரிதாபகரமான இனவெறி தலைவிரித்தாடுகின்றது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tamilmirror Online || இரணைத்தீவுக்கு ஹக்கீம் அதிரடி பதில்

’குப்பியாவத்த மயானத்தில் ஜனாஸாக்களை அடக்கலாம்’

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இடங்களைத் தேடி அலைய வேண்டாமெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தெமட்டகொட- குப்பியாவத்த மயானத்தைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். 

'கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பிலான இழுபறி தொடருமாயின், அதற்கான முழுப்பொறுப்பையும் சுகாதார சேவைகள் பணிப்பாளரே ஏற்கவேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார். 


'கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யலாமென, வர்த்தமானியைத் திருத்தி, சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ளார். எனினும், உரிய இடமில்லையெனக் கூறி, சுகாதார பணிப்பாளர், காலத்தைக் கடத்தி வருகின்றார்' என்றும் மரிக்கார் எம்.பி குற்றஞ்சாட்டினார். 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,  
சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பிலான பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கை, பேராசிரியை ஜெனிபர் பெரேராவால் டிசெம்பர் 28ஆம் திகதி, சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. அதனடிப்படையில், உரிய இடத்தைத் தேடாமல், கடந்த இரண்டு மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எனவும் கேள்வியெழுப்பினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவால் தெமட்டகொட- குப்பியாவத்த மயானம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அங்கு 2.5 அடி ஆழத்திலேயே   நிலக்கீழ் நீர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த மயானம், மருதானை பள்ளிவாசலுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்த அவர், ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக, அந்த மயானத்தை வழங்க விருப்பம் தெரிவித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளருக்குக் கடிதமும்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார். 

பேராசிரியை ஜெனிபர் பெரேராவின் அறிக்கையை, இரண்டு மாதங்களாக, மறைத்து வைத்தவர்கள், சடலங்களைப் பலவந்தமாகப் புதைத்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்த அவர், அடக்கம் செய்யும் விவகாரத்தில் இழுபறி தொடர்ந்தால், அதற்கான முழுப்பொறுப்பும் சுகாதார பணிப்பாளரையே சாரும் என்றார். 

Tamilmirror Online || ’குப்பியாவத்த மயானத்தில் ஜனாஸாக்களை அடக்கலாம்’

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சடலங்களை இரணைதீவில் அடக்க எதிர்ப்பு; நாளை போராட்டம்!

கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடலை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்ய அரசாங்கம் முயற்சித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நாளை (3) போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அத்தோடு இந்த தீர்மானம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இரணைதீவு அருட்தந்தை மடுத்தீன் அடிகளார் தெரிவித்துள்ளார். மேலும்,

முஸ்லிம் சகோதரர்களால் பல்வேறு பகுதிகள் முன்மொழியப்பட்டபோதும் அவற்றை தவிர்த்து, பல இன்னல்கள் மற்றும் பல கட்ட போராட்டங்களின் பின்னர் 2017 ஆம் ஆண்டு மீள் குடியேறிய குறித்த பகுதியை தெரிவு செய்தமை கவலையளிக்கின்றது.

அதே நேரத்தில் இரணைதீவு பகுதியானது நீரேந்து பிரதேசமாக காணப்படுவதனால் கொரோனா தொற்றுள்ள உடல்களை புதைப்பதனால் நீர் ஊடாக தொற்று பரவ வாய்புள்ளது.

அண்மைக் காலமாகவே இரணை தீவு மக்கள் குடியேறி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் இம்முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதிலை.

தற்போது 165 குடும்பங்கள் அட்டை பண்ணைகளை அமைத்து அங்கு வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியுள்ள நிலையில் நாளை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம் என்றும் முறிப்பிட்டார்.

இதேவேளை அப்பகுதியில் கடற்படையால் தோண்டப்பட்ட குழி மக்களினால் மூடப்பட்டுள்ளது.

சடலங்களை இரணைதீவில் அடக்க எதிர்ப்பு; நாளை போராட்டம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

ஆம்... எப்படியும், தமிழ்ப் பகுதிகளில்தான் கைவைப்பார்கள்.

முஸ்லிம்கள் சடலங்களை எரிக்கக் கூடாது புதைக்க வேண்டும் என்று அடாத்தாக நின்ற போது முஸ்லிம் இனத்தின் காலாச்சாரம் சடலங்களை புதைப்பது அது கொரோனாவால் இறந்தால் கூட அனுமதிக்கபட வேண்டும் என்றவர்கள் தமிழர்கள். கொரோனாவால் இறந்தவர்கள் உடல்கள் புதைக்கபடுவதனால் ஏனையோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞான விளக்கமும்  கூட்டமைப்பும் தமிழ் அரசியல்வாதிகளும் கொடுத்தனர். சிவாஜிலிங்கம்  உடனடியாக  ஜனாஸா எரிப்புத்திட்டத்தை கைவிடவேண்டும். இல்லை என்றால் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் தமிழ்க் கட்சிகளும் இணைந்து முஸ்லிம் நாடுகளிடம் முறையிடுவதோடு எமது மத உரிமைகள் மீறப்படுகின்றன  என்று போராடுவோம் என்றார். p2p யில் சடலங்களை புதைக்க வேண்டும் என்ற கோசத்தை வைப்பதற்காக முஸ்லிம் இனத்தவர்கள் கலந்து கொண்டனர். முஸ்லிம்கள் சடலங்களை அடக்கம் செய்வதற்கு நல்லுரை விருப்பபட்டால் கூட தமிழர்கள் கொடுக்க தான் வேண்டும்.😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது  சுத்த விதண்டாவாதம். இறந்தவரின் உடலை அடக்கம் செய்வது குறித்த மதக்கொள்கை. அதை மதிக்க வேண்டியது அரசின் கடமை. அதை வைத்து விதண்டாவாதம் செய்வதும், அரசியல் செய்வதும், தமது சட்டங்களை திணிப்பதுவும் அரசு. மற்றவரின் பறிக்கப்படும் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அதை வைத்து காரியம் சாதிப்பதும், காய் நகர்த்துவதும், தள்ளி நிற்பதும்  சுயநலம். தொடரும் காலங்களில் தமிழரும் முஸ்லிம்களும் ஒன்று சேர்வதை  தடுக்கும் யுக்தி கையாளப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

ஆம்... எப்படியும், தமிழ்ப் பகுதிகளில்தான் கைவைப்பார்கள்.

அப்படி புதைப்பதில்... என்ன தவறு? என்று, 
நியாயம் பிளக்கவும் நாலு தமிழ்ச் சனம் இருக்குது.  😡

இனவாத சிங்களம் தங்கள் நலனுக்காக எதையும் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரணைதீவில் கடற்படையினர் தோண்டிய குழியை இன்று மூடினர் அப்பகுதி மக்கள்.!

Screenshot-2021-03-03-09-19-43-341-com-a 

இரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக கடற்படையினர் தோண்டிய குழியை அங்குள்ள மக்கள் இணைந்து இன்று மூடினர்.

கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவை அரசு தெரிவு செய்துள்ளமைக்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளும் கூட இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தினர் அரசின் இந்த முடிவுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர்.

கொரோனாவால் மரணிப்போரின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானம் அரசின் இனவெறிச் செயல் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் விமர்சித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்தினரை அரசாங்கம் துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்ய அரசு ஏடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது.

இது தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைப் பிரிக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி - இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவுப் பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://aruvi.com/article/tam/2021/03/02/23219/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கும் ரெலோ கட்சிக்கும் தொடர்பு இல்லை | தினகரன்

ஜனாசா நல்லடக்க விடயத்தில் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனம் ஏற்புடையதல்ல- ரெலோ

ஜனாசா நல்லடக்கம் குறித்து முஸ்லிம் தலைவர்களுடன் பேசியே  தீர்மானிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடு ஏற்புடையதல்ல என்றும் ரெலோ கண்டனம் வெளியிட்டுள்ளது.

அத்துடன், முஸ்லிம் மக்களினுடைய ஜனாசா நல்லடக்கம் பற்றிய விடயத்தைத் தொடர்ந்தும் சர்ச்சைக்குரியதாகவே அரசாங்கம் ஆக்கிவருவது கண்டனத்துக்குரியது என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ரெலோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனாசா விடயத்தில் முஸ்லிம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது போல பாசாங்கு காட்டி அதைத் தொடர்ந்தும் நிறைவேற்றாது கேள்விக்குறியாக வைத்திருக்கின்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அரசாங்கம் தாங்கள் நினைத்த இடங்களில் தங்கள் வசதிக்கு ஏற்ப முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முற்படுவது அடிப்படை மனித உரிமை மீறிய செயலாகும். இரணைதீவிலே நல்லடக்கம் செய்ய முற்படுவதும் இதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

மாறாக முஸ்லிம் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி  ஜனாஸாக்களை எங்கு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எட்டுவதே அந்த மக்களுடைய கோரிக்கையை கௌரவமான முறையில் நிறைவேற்றுவதாக அமையும்.

ஏற்கனவே, மன்னாரில் நல்லடக்கம் செய்ய முற்பட்டு அது வெற்றியளிக்காமல் போன நிலைமையிலே மீண்டும் இரணைதீவைத் தெரிந்தெடுத்திருப்பது இன முறுகலை தோற்றுவிக்கின்ற நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம். மேலும், இந்த முடிவு சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் அசெளகரியங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.

ஒரு முஸ்லிம் இறந்து 24 மணித்தியாலங்களுக்கு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களுடைய பிரதான கோரிக்கையாக அமைந்திருக்கிறது. பொது இடங்களைத் தெரிந்தெடுத்து அங்கு நல்லடக்கம் செய்ய முற்படுகின்ற போது, நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் இழுத்தடிப்பை ஏற்படுத்துவதோடு அந்தக் குடும்பங்கள் குறித்த இடங்களுக்குச் சென்று தமது முறையைப் பின்பற்றுவது இலகுவான காரியமாக இருக்கப்போவதில்லை.

இப்படியான, இழுத்தடிப்பு செய்வதையும் மற்றவர் கலாசார முறைகளை அரசாங்கமே தீர்மானிப்பதையும் தவிர்த்து, குறித்த இனத் தலைவர்களோடு பேச்சுவார்த்தையை நடத்தி நாடு முழுவதும் ஜனாஸா நல்லடகத்துக்கான பொது விதிமுறையைக் கையாள்வதன் மூலமே இதற்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதோடு அந்த மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமையும்.

தவிர, இப்படியான நடவடிக்கைகளால் முடிவுகள் எட்டப்படாது. ஆகவே, அரசாங்கம் பாசாங்கு செய்வதைவிட சரியான தீர்வினை முஸ்லிம் தலைவர்களுடன் கலந்தாலோசித்து முன்னெடுப்பதே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கொடுக்கும். இதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்.

http://athavannews.com/ஜனாசா-நல்லடக்க-விடயத்தில/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட் உடல்களை இரணைதீவில் புதைக்கும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

BattinewsMarch 3, 2021
 
IMG20210303093021-800x425.jpg


கொரானா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று காலை 09 மணியளவில் இரணைமாதாநகர் இறங்குதுறையில் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

இரணைதீவு மக்களும் கிராம மட்ட மைப்புக்கள் மற்றும் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரும்  இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் பங்கு தந்தையர்களும், சிவில் அமைப்புக்களும் கலந்து கொண்டனர்

கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவு பகுதியை தெரிவு செய்துள்ளதாக நேற்றைய தினம் அமைச்சரவை பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

இந்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்ற நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு அறிவித்தல் ஏதுமின்றி இரகசியமாக சென்ற குழு அதற்கான சிபாரிசினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று மேற்கண்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு பூர்வீக குடிகளாக இருந்த மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு இறுதியில் வட மாகாண ஆளுனர் மற்றும் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மகஜர்களும் அனுப்பி வைத்துள்ளனர்.
 

http://www.battinews.com/2021/03/blog-post_4.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த உடல்களை புதைக்க எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவில் போராட்டம்: ஊடகங்களுக்கு தடை

கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து இன்றைய தினம் புதன் கிழமை காலை 9 மணியளவில் இரணை மாதா நகர் பகுதியின் பங்குதந்தை மடுத்தீன் பத்தினாதர் அடிகளார் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.

IMG_9061.jpg
IMG_9064.jpg

குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் மெசிடோ நிறுவனத்தினர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அரசாங்கத்தின் தீர்மனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததுடன் அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதற்கான  மகஜரும்  வாசிக்கப்பட்டது.

IMG_9065.jpg
IMG_9066.jpg

குறித்த போராட்டத்தின் பின்னர் இரணை மாதா நகர் பகுதியில் இருந்து படகு மூலம் இரணை தீவுக்கு பொது மக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்ற போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

IMG_9067.jpg
IMG_9068.jpg

அதனை தொடர்ந்து போராட்ட குழுவினரால் பூநகரி பிரதேச செயலாளர் ,யாழ் மறைமாவட்ட ஆயர் ,யாழ் மனித உரிமை ஆணைகுழு காரியாலங்களுக்குரிய மகஜர் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.

IMG_9070.jpg
IMG_9071.jpg
 

 

https://www.virakesari.lk/article/101483

 

Link to comment
Share on other sites

கொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர்

 

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/iranaitivu-1.jpg

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களது சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

மாகாண சபைகளின் பொதுச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண மற்றும் பிரதேச சுகாதார பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழு இந்த விடயம் குறித்து ஆராய்வதாக குறிப்பிட்டார்.

அவர்கள் அந்தந்த மாகாணங்களிலிருந்து கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களது சடலங்களை அடக்கம் செய்யப் பொருத்தமான இடத்தை தீர்மானிக்கும் வரை இந்த முடிவு தற்காலிகமாக இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டு, அதற்கான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடக்கம் செய்வதற்கான அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் ஏற்கப்படும் என்றும் சடலங்கள் கொழும்பு மற்றும் வெலிகந்த மருத்துவமனை போன்ற இரு இடங்களிலிருந்து தீவுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.

கொரோனாவால் உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு உறவினர்கள் இறுதி சடங்குகளுக்கு தீவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இறுதி சடங்குகள் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி  அல்லது பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

கொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர் | Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரணை தீவா ? இரணை மடுவா ? சாட்சியம் இல்லாத நிலையில் ஜனாசாக்களை என்ன செய்வார்கள் ?

Untitled.jpg

 

இரணை தீவுக்கும், இரணை மடுவுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை புரிவதில் சிலருக்கு

 

குழப்பமான நிலை உள்ளதனை சில பதிவுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

 

 

இரணை மடு என்பது கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தினை அண்டியுள்ள பகுதிகளாகும். சமாதான காலங்களில் பேச்சுவார்த்தைக்கு சென்று திரும்புகின்ற விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் போன்ற முக்கியஸ்தகர்கள் இந்த குளத்தில் “சீ ப்ளேன்” மூலமாக வந்திறங்கியதன் காரணமாகவும், இறுதி யுத்தத்தில் பாரிய தாக்குதல்கள் நடைபெற்ற இடம் என்பதனாலும் இரணமடு குளம் ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டது.

 

ஆனால் இரணை தீவு என்பது மன்னார் மாவட்டத்தின் நிருவாகத்தின்கீழ் வருகின்ற தீவுப்பகுதியாகும். இதற்கு தரைப்பாதைகள் கிடையாது. பல கிலோ மீட்டர் தூரம் படகின் மூலமாகவே இந்த தீவுக்கு செல்ல முடியும்.

 

அத்துடன் குறிப்பிட்ட இரண்டு பிரதேசங்களுக்கும் இடையில் பொதுவான ஒற்றுமைகள் காணப்படுகின்றது. அதாவது இன்னனும் விடுவிக்காமல் பொதுமக்களின் காணிகளை படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருகின்றனர். மேலும் இப்பிரதேசங்கள் ஈரலிப்பான நிலத்தினைக் கொண்டதாகும்.

 

இலங்கையில் வரட்சியான எத்தனையோ முஸ்லிம் பிரதேசங்கள் இருக்கத்தக்கதாக, ஈரலிப்பான தமிழர் பிரதேசத்தில், எங்கையோ வாழ்கின்ற முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்குவதற்கு தீர்மாநித்ததானது அரசாங்கத்தின் மனோநிலையையும், அறிவினையும் வெளி உலகம் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

 

அத்துடன் பாதைகள் இல்லாத இரணைதீவுக்கு ஜனாசாக்களை படகுகளில் அரச அதிகாரிகளினால் எடுத்துச் செல்லும்போது, மரணித்தவர்களின் உறவினர்களினால் அங்கு செல்லமுடியாத நிலை காணப்படும். அவ்வாறு செல்வதற்கு அனுமதித்தாலும் அது பாரிய சவால் நிறைந்ததாகவும், அதிக செலவுகளை ஏற்படுத்துவதாகவும் அமையும்.

 

இந்த நிலையில் எடுத்துச் செல்லப்படுகின்ற ஜனாஸாவை அடக்கம் செய்கின்றார்களா ? அல்லது வழமைபோன்று எரிக்கின்றார்களா ? என்பதனை அறிந்துகொள்வது பாரிய சவாலாக அமையும்.

 

எனவே இந்த விடையத்தில் அரசாங்கம் இதயசுத்தியுடன் செயல்படுவதென்றால், எந்த மாகாணத்தில் மரணிக்கின்றார்களோ அந்த மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களை அன்மித்த வரட்சியான பிரதேசங்களை தெரிவு செய்து அங்கே அடக்கம் செய்வதுதான் பொருத்தமானதாகும்.

 

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது  

https://www.madawalaenews.com/2021/03/blog-post_79.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிண்ணியாவிலும் சடலங்களை அடக்கம் செய்வதற்கான நிலம் அடையாளம் 

கொரோனாவினால் மரணமடைவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா மகரூப் கிராமம் (மாகாமாறு) என்ற பிரதேசத்தில் அமைந்திருக்கும் மையவாடியும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

IMG_1614957691252.jpg

இதில் திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இடத்தைப் பார்வையிடுவதற்காக இன்று (05) திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். பிரேமாநந் உள்ளிட்ட அடங்கிய குழுவினர் விஜயம் செய்திருந்தார்கள்.

இதில்  கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம். நிஹார், உறுப்பினர் நஸீர் உட்பட பலர் பங்கேற்றனர்.

கிண்ணியாவிலும் சடலங்களை அடக்கம் செய்வதற்கான நிலம் அடையாளம்  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அழிஞ்சாலும் உந்த பிரச்சனை முடியாது போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2021 at 23:36, colomban said:

இலங்கையில் வரட்சியான எத்தனையோ முஸ்லிம் பிரதேசங்கள் இருக்கத்தக்கதாக, ஈரலிப்பான தமிழர் பிரதேசத்தில், எங்கையோ வாழ்கின்ற முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்குவதற்கு தீர்மாநித்ததானது அரசாங்கத்தின் மனோநிலையையும், அறிவினையும் வெளி உலகம் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

இலங்கை; தான் அதிபுத்திசாலி என நிறுவ வெளிக்கிட்டு படு முட்டாள்ளென நிரூபித்துக்கொண்டு இருக்கிறது. தன் இனவாத போரை பயங்கரவாதமாக்கி உதவி பெற்றவர் தான் ஒரு நல்லிணக்க அரசு என்பதை நிரூபிப்பதற்கு பதிலாக இன முரண்பாட்டை வளர்த்து, சர்வதேச சமூகத்தை குற்றஞ்சாட்டி தன்னை நியாயவாதியாக காண்பிக்க வெளிக்கிட்டு மூக்குடைபட்டு நிற்பதுமல்லாமல், என்ன காரணத்தை கூறி ஜனாஸாக்களை எரிக்க வெளிக்கிட்டுதோ அதே காரணமான இடத்தில புதைக்க சொல்லுது. இதைத்தான் சொல்லுறது துப்புக்கெட்டவனுக்கு மூன்று இடத்தில என்று. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.