Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்து முதல்,முதல் கொட்டிப்பார்த்த.. வெண்பனித்தூறல் நான் பிறந்த மண்ணின்(ஈழம்) வாசனையே என்னுக்குள்  வந்து எழுத வைத்தது.

large.0-02-05-df2d1a167c5cf7dec181c6113df81fb4ebe8ef805fc4010651dc62289e378fc2_1c6da32f7cfbf5.jpg.f4a2409009a9b3df3e6b98e04febbe07.jpg

வெண்பனித்தூறல்..!

*****************

மார்கழி தொடங்கிவிட்டால் வானம்

மந்திரித்துக் கொட்டுமிந்த-வெண்மைநிற

தேங்காய்த் துருவலோ?

தேசமெல்லாம் பூத்திருக்கும்

மல்லிகையோ!முல்லையோ!

வெள்ளை நிற றோஜாவோ?

வெண்தாமரை இதழ்தானோ-ஏன்

கடல் களைத்து கரையொதுங்கும்

நுரையலையோ..

கண்சிமிட்டிக் கொட்டுகின்ற

விண்மீனோ..

 

வெட்டுக்களி எழுப்பும்

வெண்புளுதிப் படலமோ

வெற்றிலைக்கு போட்டுமெல்லும்

வெண்நிறத்துச் சுண்ணாம்போ

 

பாலாறு ஓடி தயிர்

படிந்து உறைந்ததுவோ

பருத்தி மரம் ஈன்ற

பஞ்சினத்துக் குஞ்சுகளோ

இலவம் காய் வெடித்ததுவோ

இளம் பெண்கள் புன் சிரிப்போ

முதுமை உலகத்து

மூதாட்டி நரை முடியோ

 

கொட்டிக் குவிந்துவிட்டால்

கோபுரமும் தெரியாது-பின்பு

பட்டக் குளிர் அடிக்கும்

பல நிறமும் உள் மறையும்-இப்போ

எல்லாம் ஒரே நிறம்

எங்கும் சமாதானம்

இது வேண்டும்,வேண்டும்.

 

அன்புடன்-பசுவூர்க்கோபி-

Edited by பசுவூர்க்கோபி
  • Like 11
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டிக் குவிந்துவிட்டால்

கோபுரமும் தெரியாது-பின்பு

பட்டக் குளிர் அடிக்கும்

பல நிறமும் உள் மறையும்-இப்போ

எல்லாம் ஒரே நிறம்

எங்கும் சமாதானம்

இது வேண்டும்,வேண்டும்.....!

 

நல்ல கவிதை வெண்பனிபோல் கொட்டி விட்டீர்கள் தொடருங்கள் கோபி.......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

பசுவின் பால்போல் வெண்மையும், இனிமையும் கொண்ட கவிதை. 🙌

 

"பட்டக் குளிர் அடிக்கும்

பல நிறமும் உள் மறையும்-இப்போ

எல்லாம் ஒரே நிறம்"

இந்த வரிகள் கொண்டுள்ள பொருள், பனித்தூறலை மட்டுமல்ல, கொரோனாவையும் கொண்டுவந்து கொள்முதல் செய்ய வைக்கிறதே.!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வெள்ளைப்பனிமலையின் மீது உலாவுவோம் அந்த மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்."  நாம் தமிழர் .  அழகிய உருவகங்கள் பாராட்டுக்கள் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பசுவூர்க்கோபி said:

வெட்டுக்களி எழுப்பும்

வெண்புளுதிப் படலமோ

வெற்றிலைக்கு போட்டுமெல்லும்

வெண்நிறத்துச் சுண்ணாம்போ

அருமையான கவிநடை..!

நீண்ட காலங்களின் பின்னர்  வெட்டுக் கழி நினைவுக்கு வந்தது..!

தொடரட்டும்....உங்கள் கவிச் சாரல்..! நன்றாக நனைந்திட ஆசை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

கொட்டிக் குவிந்துவிட்டால்

கோபுரமும் தெரியாது-பின்பு

பட்டக் குளிர் அடிக்கும்

பல நிறமும் உள் மறையும்-இப்போ

எல்லாம் ஒரே நிறம்

எங்கும் சமாதானம்

இது வேண்டும்,வேண்டும்.....!

 

நல்ல கவிதை வெண்பனிபோல் கொட்டி விட்டீர்கள் தொடருங்கள் கோபி.......!  👍

நன்றிகள்

18 hours ago, Paanch said:

பசுவின் பால்போல் வெண்மையும், இனிமையும் கொண்ட கவிதை. 🙌

 

"பட்டக் குளிர் அடிக்கும்

பல நிறமும் உள் மறையும்-இப்போ

எல்லாம் ஒரே நிறம்"

இந்த வரிகள் கொண்டுள்ள பொருள், பனித்தூறலை மட்டுமல்ல, கொரோனாவையும் கொண்டுவந்து கொள்முதல் செய்ய வைக்கிறதே.!

எனது கவிதை பற்றிய உங்களின் வார்த்தைகள் உற்சாகம் தருகின்றன  

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2021 at 21:57, நிலாமதி said:

"வெள்ளைப்பனிமலையின் மீது உலாவுவோம் அந்த மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்."  நாம் தமிழர் .  அழகிய உருவகங்கள் பாராட்டுக்கள் .

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரிக்கு வரி உவமானங்களை தாங்கி வந்த அருமையான கவிதை பாராட்டுக்கள் பசுவூர்கோபி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பனிக்கவிதை, பனியை தாங்கலாம், பனியுடன் வரும் காற்றுதான் ஊசி மாதிரி குத்தும், நன்றி அருமையான பனி கவிதைக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2021 at 02:44, Kavallur Kanmani said:

வரிக்கு வரி உவமானங்களை தாங்கி வந்த அருமையான கவிதை பாராட்டுக்கள் பசுவூர்கோபி

நன்றிகள் கவிதாஜினி அவர்களுக்கு.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.