Jump to content

ஆபத்தான உணவாக இடியப்பங்கள்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தான உணவாக இடியப்பங்கள்.!

Idiyappam-3.jpg

இடியப்பம் இலங்கையில் பிரபலமாக விற்பனையாகும் அல்லது வீட்டில் செய்யப்படும், எம்மில் பெரும்பாலானோருக்குப் பிடித்த ஆரோக்கியமான காலை, மாலை உணவாகும்.

சுமார் இருபது வருடங்கள் முன் பிரம்பு மற்றும் பனையோலை தட்டுகளில் அவிக்கப்படும் இடியப்பம் உண்மையிலேயே ஓர் பாதுகாப்பான உணவாக இருந்தது.

ஆனால், தற்போது பிளாஸ்டிக் தட்டுகளின் வருகையுடன் அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

அண்மையில் கொழும்பில் உள்ள ஓர் சகோதர மொழி பொறியியலாளரான நண்பர் ஒருவர் இடியப்பம் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் உண்மையில் அதிர்ச்சி தரக்கூடியனவாக இருந்தன.

தினசரி மூன்று வேளை கூட இடியப்பம் விரும்பி உண்ணக்கூடிய அவரின் உறவினர் ஒருவருக்கு வந்த புற்றுநோய்க்கு, பிளாஸ்டிக் இடியப்ப தட்டுக்களும் ஓர் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் மட்டத்தில் கருத்து நிலவியதாக அவர் கூறினார்.

இதனை நிரூபிக்க இப்போது முடியாவிடினும், நிச்சயமாக நிராகரிக்க முடியாது. பிளாஸ்ட்டிக்கினை உயர் வெப்பத்தில் அவிக்கும் போது நிச்சயம் உடல் நலத்திற்கு தீங்கு தரும்.

ஆகவே இதனை ஓர் முன்கூட்டிய எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு பதில் பனையோலை மற்றும் பிரம்பு தட்டுகளுக்கு உடனே மாறுவோம்.

கற்பகம் பனம்பொருள் விற்பனை நிலையம் மற்றும் கைப்பணி பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இயற்கை மூலப்பொருட்களாலான இடியப்ப தட்டுக்களை வாங்கலாம்.

இதனால் நமது உள்ளூர் உற்பத்தியாளர்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மேலும் இடியப்பம் வாங்கும் நுகர்வோரும், அடுப்பிலிருந்து இறக்கிய சூடான இடியப்பங்களை உடனே பொலித்தீன் பைகளில் போட்டு பெற்றுக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வீட்டிலிருந்து பிளாஸ்டிக் அல்லாத பாத்திரங்களை அல்லது வாழை இலையை கொண்டு சென்று வாங்கலாம். சில தசாப்தங்கள் முன் இவ்வாறே நாம் வாங்கினோம்.

இடியப்பம் மட்டுமல்லாது,

சூடான பிட்டுக்கு, அதன் முழு நீளத்துக்கும் வாழை இலை போடாமல் நேரடியாக பொலித்தீன் தாளினால் (Lunch Sheets) சுற்றி விற்பனைக்கு வைப்பதையும், சூடான கறி, சாம்பார், சொதி போன்றவற்றை போலித்தீன் பைகளில் கட்டுவதை ஊக்குவிக்காதிருப்போம்.

பெருமளவில் சோறு மற்றும் பிரியாணி சமைப்போர், அரிசி வேகுவதற்கு வாழையிலைக்குப் பதில் பொலித்தீன் போட்டு மூடுவதை தவிர்ப்போம்.

அலுவலகம், பாடசாலை செல்வோருக்கு நேரடியாக பொலித்தீன் தாளில் (Lunch Sheets ) உணவு கட்டிக்கொடுப்பதை தவிர்த்து, வாழை, தாமரை இலை பயன்படுத்துவோம். முடியாவிடின் பிளாஸ்டிக் அல்லாத உணவுப் பெட்டிகளையும், வாகனங்களில், முச்சக்கர வண்டிகளில் செல்வோர் பீங்கான் கோப்பைகளில் சிரமம் பாராது உணவு கொண்டு செல்வோம்.

வாகனங்கள், Racing சைக்கிள், ஸ்கூட்டர், முச்சக்கர வண்டி வைத்திருப்போர், பிளாஸ்டிக் போத்தல்களில் குடிநீர் வைப்பதை முற்றிலும் தவிர்ப்போம். அவற்றுக்குப் பதில் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் அல்லாத வேறு பாதுகாப்பான போத்தல்களை பயன்படுத்துவோம்.

இன்று நம் அறியாமை மற்றும் சோம்பேறித்தனத்தால், அதீத பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை மூலம் எம்மையையுமறியாது, கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலில் விஷமேற்றிக் கொண்டுவருகிறோம் என்பது நிச்சயமான உண்மை.

மாற்று வழிகளைத் தேடுவோம். தெரிந்தே ஆபத்தினுள் வீழ்வதை தவிர்ப்போம்.

இது நம் ஆரோக்கியமான வருங்காலச் சந்ததிகளுக்கும் மற்றும் நமக்குமாக.

https://puthusudar.lk/2021/03/01/ஆபத்தான-உணவாக-இடியப்பங்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையோ சொல்லி எதையோ வியாபாரம் பண்ணுகிறார்கள் அங்குள்ள  அரசியல்வாதிகள் அங்கு Asbestos னால்  உருவாகும் mesothelioma வகை  புற்றுநோய் கூடுதலாக காணப்படுகிறது காரணம் தரமற்ற விலைகுறைவான  கல்நார் எனப்படும்  சீமெந்து  கூரை வகைகள் ரஸ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள் .

இங்கெல்லாம் பழையகால கார்டனுக்குள் இருக்கும் கராச்  போன்றவைக்கு  வேய்ந்து உள்ளார்கள் அயலவர் ஒருத்தரின் கராச் அப்படியானது திருத்த வேலை செய்யும்போது அந்த Asbestos அகற்றுவதுக்கு கவுன்சிலிலிருந்து ஸ்பெஷல் குரூப் உடம்பை மூடியபடி விண்வெளி வீரர் போல் வந்து கழட்டி எடுத்துக்கொண்டு போனார்கள் காரணம் Asbestos லிருந்து வெளிக்கிடும் கதிரியக்கம் என்கிறார்கள் . ஆனால் ஊரில் மலிவு விலை Asbestos ஆல்  மலிவு புற்று நோய்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இட்லி தட்டில்கூட பிளாஸ்டிக் பையை வெட்டிப்போட்டு மாவை ஊற்றி அவிக்கிறார்கள். சொன்னால் வரும் பிரச்சினையை விட புற்றுநோய்  பரவாயில்லை என்று சில கணவன்மார் கடந்து போகிறார்கள்.....!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இட்லி தட்டில்கூட பிளாஸ்டிக் பையை வெட்டிப்போட்டு மாவை ஊற்றி அவிக்கிறார்கள். சொன்னால் வரும் பிரச்சினையை விட புற்றுநோய்  பரவாயில்லை என்று சில கணவன்மார் கடந்து போகிறார்கள்.....!  🤔

எனக்கு சுவியர்தான்... அப்படி கடந்து போயிருப்பாரோ என்று சந்தேகமாக இருக்குது. 🤣

Link to comment
Share on other sites

இதே போன்று, புலம்பெயர் நாடுகளில், குறிப்பாக கனடாவில் அவிக்கப்படும் இடியப்பமும் ஆரோக்கியமானதல்ல. குளிர் நாடு என்பதால் அவித்த இடியப்பம் விரைவாக காய்ந்து விடும். இதை தவிர்க்க பழைய பாவித்த எண்ணெய்யை விட்டு மாவை குழைக்கின்றனர். இடியப்பம் factory என்று அழைக்கப்படும்  பெரும் எண்ணிக்கையில் இடியப்பம் அவித்து ஏனைய சாப்பாட்டு கடைகளுக்கு வினியோகிக்கும் இடங்களில் இது மோசமாக நடக்கின்றது. மக்டொனால்ட்ஸ் போன்ற இடங்களில் இருந்து பெறப்படும் பாவித்த எண்ணெய்யைக் கூட சில இடங்களில் பயன்படுத்துகின்றனர் என அறிய முடிகின்றது.

வீட்டில் ஒரே அடியாக 30, 40 இடியப்பங்களை அவித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடுத்த நாளும் சாப்பிடும் வழக்கத்தை பல வருடங்களாக நான் கடைப்பிடித்து வருகின்றேன். மனிசி இடியப்பம் புளிய உதவிக்கு கூப்பிடும் போது ஓடிப்போய் வருடத்தில் ஒரு நாள் உதவினாலே போதும், மிச்ச நாட்களை சமாளிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

இதே போன்று, புலம்பெயர் நாடுகளில், குறிப்பாக கனடாவில் அவிக்கப்படும் இடியப்பமும் ஆரோக்கியமானதல்ல. குளிர் நாடு என்பதால் அவித்த இடியப்பம் விரைவாக காய்ந்து விடும். இதை தவிர்க்க பழைய பாவித்த எண்ணெய்யை விட்டு மாவை குழைக்கின்றனர். இடியப்பம் factory என்று அழைக்கப்படும்  பெரும் எண்ணிக்கையில் இடியப்பம் அவித்து ஏனைய சாப்பாட்டு கடைகளுக்கு வினியோகிக்கும் இடங்களில் இது மோசமாக நடக்கின்றது. மக்டொனால்ட்ஸ் போன்ற இடங்களில் இருந்து பெறப்படும் பாவித்த எண்ணெய்யைக் கூட சில இடங்களில் பயன்படுத்துகின்றனர் என அறிய முடிகின்றது.

இங்கு சைனீஸ் டேக் எவே கடைகளில் சைனீஸ் உணவு வாங்குவதில்லை அதேபோல் துருக்கி கெபாப் கடைகளில் துருக்கி பயலுகள் உணவு வாங்குவதில்லை அங்கு என்னமாதிரியோ தெரியலை ?  இந்த இரண்டு கூட்ட முதலாளிகளிடமும் ஏன் உங்கள் ஆட்கள் உங்கள் கடைகளில் உணவு வாங்குவதில்லை என்று கேட்டால் சிரித்து மழுப்பி கொண்டு நகருவினம் .அவர்களுக்கு அவர்களின் ஆட்கள் உணவு தரமில்லை  என்று தெரிகிறது. நாங்க  பசி தாங்கா  கூட்டம் பழைய எண்ணெய்  மறுபடியும் சூடாக்கி உணவாக எடுப்பது புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகளுக்கு வழி வகுக்கும் என்று தெரிந்தும்  இடியாப்பத்துக்கு வரிசையில் நிக்கிறம்.😀

நூடில்ஸ் பிழியும் மிசினை இடியப்பத்துக்கு என்று சிறு மாறுதலுடன் கனடாக்காரர்தான் இடியப்ப  மிசின்களை அறிமுகப்படுத்தியவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

அதேபோல் துருக்கி கெபாப் கடைகளில் துருக்கி பயலுகள் உணவு வாங்குவதில்லை

துருக்கி பயலுகள், அவர்களது கெபாப் கடைகளில்.... பண்டி இறைச்சி மலிவு என்று அதனையும் கலந்து விடுவதால் அங்கு வாங்குவதில்லை. 

நாமதான்... யானை இறைச்சியை கலந்தாலும் சாப்பிவோமெல்லோ... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

இட்லி தட்டில்கூட பிளாஸ்டிக் பையை வெட்டிப்போட்டு மாவை ஊற்றி அவிக்கிறார்கள். சொன்னால் வரும் பிரச்சினையை விட புற்றுநோய்  பரவாயில்லை என்று சில கணவன்மார் கடந்து போகிறார்கள்.....!  🤔

இஞ்சை பாருங்கோ சுவியர்! உலகத்திலை உந்த பிளஸ்ரிக் தண்ணி போத்திலை நிப்பாட்ட எல்லாம் சரி வரும் கண்டியளோ. கோலா தொடக்கம் தண்ணிப்போத்தில் வரைக்கும் ஒரே பிளஸ்ரிக். முதல்லை அதை நிப்பாட்ட வேணும்.

நான் ஊரிலையே பள்ளிக்கூடத்துக்கு வாழையிலை,தாமரை இலையிலைதான் சாப்பாடு கட்டிக்கொண்டு போறனான். அதாலை நான் பட்டிக்காட்டான். ஆனால் பிளாஸ்ரிக்ஸ் பொக்ஸ்லை சாப்பாடு கட்டிக்கொண்டு வாறவையள் ......அதை நான் இஞ்சை சொல்ல விரும்பேல்லை. காலத்தின்ரை கோலம் பனங்காட்டான் எண்டு நக்கலடிச்ச கூட்டத்தை பனையோலையிலை பின்னின பைகளை தூக்க வைச்சிருக்கிறான் ஆண்டவன்.🖕🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

இதே போன்று, புலம்பெயர் நாடுகளில், குறிப்பாக கனடாவில் அவிக்கப்படும் இடியப்பமும் ஆரோக்கியமானதல்ல. குளிர் நாடு என்பதால் அவித்த இடியப்பம் விரைவாக காய்ந்து விடும். இதை தவிர்க்க பழைய பாவித்த எண்ணெய்யை விட்டு மாவை குழைக்கின்றனர். இடியப்பம் factory என்று அழைக்கப்படும்  பெரும் எண்ணிக்கையில் இடியப்பம் அவித்து ஏனைய சாப்பாட்டு கடைகளுக்கு வினியோகிக்கும் இடங்களில் இது மோசமாக நடக்கின்றது. மக்டொனால்ட்ஸ் போன்ற இடங்களில் இருந்து பெறப்படும் பாவித்த எண்ணெய்யைக் கூட சில இடங்களில் பயன்படுத்துகின்றனர் என அறிய முடிகின்றது.

வீட்டில் ஒரே அடியாக 30, 40 இடியப்பங்களை அவித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடுத்த நாளும் சாப்பிடும் வழக்கத்தை பல வருடங்களாக நான் கடைப்பிடித்து வருகின்றேன். மனிசி இடியப்பம் புளிய உதவிக்கு கூப்பிடும் போது ஓடிப்போய் வருடத்தில் ஒரு நாள் உதவினாலே போதும், மிச்ச நாட்களை சமாளிக்கலாம்.

இந்தச் செயல் மிகவும் கண்டிக்கப் பட  வேண்டியதாகும்!
அனேகமாக எமது மூத்த பிரஜைகள் வெள்ளி, செவ்வாய் போன்ற நாட் களில் இன்னும் சைவ உணவையே விரும்பி உண்ணுகின்றனர்!

இந்த இடியப்பங்களை அவர்கள் வாங்கிச் சாப்பிட்டால், அவர்கள், அவர்க்ளையறியாமலே....மாமிசத்தை உண்ணுகின்றார்கள்!
இது அவர்களது மத நம்பிக்கைகளுக்கு முரணானதாகும்...!

குற்றவாளி...மக்டொனால்ட்ஸ் அல்ல!

கடைகளை நடத்துகின்ற...எங்கள் தேவாங்குகள்  தான்.....!

இங்கு இவர்களை உள்ளே போடும் சட்டங்கள் இப்போது உண்டு...!

கலால் எண்டு சொல்லி....சும்மா இறைச்சியை வித்த கொஞ்சப் பேர் உள்ளுக்குள்ள இருக்கினம்!😖

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, suvy said:

இட்லி தட்டில்கூட பிளாஸ்டிக் பையை வெட்டிப்போட்டு மாவை ஊற்றி அவிக்கிறார்கள். சொன்னால் வரும் பிரச்சினையை விட புற்றுநோய்  பரவாயில்லை என்று சில கணவன்மார் கடந்து போகிறார்கள்.....!  🤔

Screenshot-2021-03-04-09-23-53-552-org-m

101 % உண்மை தோழர் .. பல்லை கடித்து சாப்பிட்டு போக வேண்டும்..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2021-03-04-09-23-53-552-org-m

101 % உண்மை தோழர் .. பல்லை கடித்து சாப்பிட்டு போக வேண்டும்..😢

நாங்கள் சிங்கம் போல கர்சித்துக் கொண்டு அம்மா தம்பி தங்கைகளை வெருட்டிக்கொண்டு திரிந்தோம்.கலியாணக் கட்டியபின் எப்படித்தான் அப்படியொரு பக்குவம் வருகுதோ தெரியவில்லை. காலில அடிவாங்கிய டாக் மாதிரி (நாய் என்று சொல்ல ஒரு மாதிரி இருக்கு) அனுங்கிக் கொண்டு திரிகிறம்.உங்கட நிலைமையையும் பார்க்க கொஞ்சம் ஆறுதலாய் இருக்கு......!  😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா? பிற்சேர்க்கை ஒலிப்பதிவை கேட்டேன், இதில் சிலாகிக்கபடுவது கிட்டதட்ட முழுவதும் ரஸ்யா போனவர்கள் பற்றியே. எனிலும் உக்ரேனுக்கும் இப்படி போவதாக இரெண்டு இடத்தில் சொல்லவும் படுகிறது.
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.