Jump to content

குளத்தைக் காணவில்லை எனப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு – திருக்கோவில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளத்தைக் காணவில்லை எனப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு – திருக்கோவில்

கிழக்கு மாகாணத்தில் குளத்தைக் காணவில்லை எனப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு, தாமரைக்குள கண்டத்திலுள்ள ‘காரப்புக்கேணி’ குளக்கட்டை நபரொருவர் பாரிய இயந்திரத்தைக் கொண்டு உடைத்து அழித்து குளத்தை மணல்கொண்டு நிரப்பி மூடியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சமபவம் தொடர்பில் தம்பிலுவில் கமநல சேவை நிலையத்தில் விவசாயிகள் முறையிட்டதையடுத்தே, குளக்கட்டை உடைத்த நபருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், பிரதேச செயலக அதிகாரிகள், கமநல சேவை நிலைய அதிகாரிகள் ஆகியோர் குறித்த குளம் இருந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.

அத்துடன் குறிப்பிட்ட இடத்தில் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடாதென பிரதேச செயலகத்தால் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.pearlonenews.com/குளத்தைக்-காணவில்லை-எனப்/?fbclid=IwAR0-K8Ft0Th5vIfH6hHNi1ZwElXq8b47pXZE3ukasjXfk03Gtf85WQMgO5I

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210304-084004.jpg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை... தமிழ்நாட்டில் தான், 

ஆறுகள், குளங்கள் காணாமல் போவதுண்டு. அந்த வியாதி... நம் நாட்டிலும் தொற்றி விட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிக்க தண்ணீர் இல்லாமல்  ஒரு காலம் வரும்.அப்போது தெரியும் குளங்கள் ஏரியின் அருமைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2016 இல் நான் ஊருக்கு போன போது கிணறு இருந்தது, ஆனால் துலா, கப்பி ஒன்றும் இல்லை, கம்பி வலையால் கிணறு மூடப் பட்டு கிடந்தது. ஒரு சின்ன தொட்டியும் பெரிய தொட்டியும் அதனோடு சேர்ந்த பத்தலும் கவனிப்பாரற்று வெடித்து கிடந்தது. சவர்க்காரம் போடுற கல் உறு மாறி காட்சி தந்தது. சிறு வயதில் நீச்சலடித்த தொட்டிகளும், கிணறு கலக்கி இறைக்க இறங்கும் படிகளில் கம்பிகள் இல்லை. இயந்திரங்கள் இல்லாத காலத்தில்  அரும் பாடுபட்டு பல தொழிலாளர்களால் வெறும் பிகான்களும், மண்வெட்டிகளும், பாறைகளை உடைக்க வெடி மருந்துகளும் பயன்படுத்தி  70 களில் தோண்டப்பட்ட கிணறும் அதனோடு சேர்ந்து கட்டிய ஆடுகல், துலா, தொட்டிகள், பத்தல், சவர்க்காரம் போடும் இடம், எலுமிச்சை, பலா, மா வாழை மரங்கள் செழிப்பாக இருக்க கட்டின சீமெந்து வாய்க்கால்கள் எல்லாம் உரு தெரியாமல் இருந்தன. மோட்டார் இயந்திரம் முன்பும் இருந்ததது, ஆனால் எல்லோரும் கிணத்தடியில்தான் குளிப்போம், மரங்களும் மண்ணும் குளிர்மையாக நின்றன. இப்போ குளியலறை, கக்கூஸ் எல்லாம் குசினிக்கு பக்கத்தில் வந்து விட்டது.

இப்படி பல கிணறுகள் கவனிப்பாரற்று கிடக்கின்றது. 
50 வயது கூட ஆகாத சிறந்த வசதிகளுடன் கட்டிய எமது  கிணற்றடியை பராமரிக்க முடியாத நாம், எப்படி மற்றைய நீர் நிலைகளை பாதுகாக்க போகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Ahasthiyan said:

இப்படி பல கிணறுகள் கவனிப்பாரற்று கிடக்கின்றது. 
50 வயது கூட ஆகாத சிறந்த வசதிகளுடன் கட்டிய எமது  கிணற்றடியை பராமரிக்க முடியாத நாம், எப்படி மற்றைய நீர் நிலைகளை பாதுகாக்க போகின்றோம்.

அண்மையில் ஊர்வல யூரியூப் வீடியோ ஒன்றை பார்த்திருந்தேன். கவலையை விட ஆத்திரமே மேலோங்கியது. ஒரு நன்னீர் பொது கிணற்றை என்னெல்லாமோ வீசி பாழாக்கி வைத்திருக்கின்றார்கள்.நாகரீகமெனும் போதையில் குழாய்க்கிணறுகளை வீட்டுக்கு வீடு அமைப்பதை மெச்சுகின்றார்கள்.குளங்களில் குளிப்பதை பட்டிக்காட்டுத்தனம் என நினைத்து  குளத்தை நிர்மாணிக்காமல் விடுகின்றார்கள். இதனால் நிலத்தடி நீர் பற்றாக்குறை வந்து விடுகின்றது.

அரசுகள் தூர் வார்தல்,வாய்க்கால் மூலம் மழைநீரை சேகரித்தல் என இப்படியான பலவற்றை முன்னெடுக்க வேண்டும். இது அங்கு நடைமுறைக்கு சாத்தியமில்லை.ஏனெனில் 60 வருடங்களுக்கு மேல் பல முக்கிய வீதிகளே சீரமைக்கப்படவில்லை. ஆனால் சீனன் போய் வரும்  குச்சொழுங்கைகளுக்கு காபெட் வீதி போட்டு விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மன்னர்களின் ஆட்சியே குளங்களை அமைப்பதுவும், அவற்றை விரிவாக்குவதிலும் தான் ஆரம்பித்தது! இப்போது எல்லாவற்றையும் மறந்து...இல்லாத இறைமைக்காகக் கூவுகின்றார்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.