Jump to content

டிஷா ரவி: இந்திய அரசின் சுற்றுச்சூழல் கொள்கைகளை எதிர்த்த இளைய காலநிலைச் செயற்பாட்டாளர் – தமிழில் ஜெயந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டிஷா ரவி: இந்திய அரசின் சுற்றுச்சூழல் கொள்கைகளை எதிர்த்த இளைய காலநிலைச் செயற்பாட்டாளர் – தமிழில் ஜெயந்திரன்

 
1053.jpg
 2 Views

பெங்களூரின் வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினார்கள். மாணவர்களுடனும் மனித உரிமை ஆர்வலர்களுடனும் இணைந்து அந்த நகரத்தில் வாழும் மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். “விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது கிளர்ச்சியாகாது” “அநீதி சட்டபூர்வமாக்கப்படும் போது அதனை எதிர்ப்பது எமது கடமை” போன்ற சுலோகங்களைத் தாங்கிய அட்டைகளை அவர்கள் வைத்திருந்தார்கள். முகத்தில் புன்சிரிப்புடன் காணப்பட்ட 22 வயது நிரம்பிய டிஷா ரவியின் (Disha Ravi) படத்தை அவர்களில் பெரும்பாலானோர் தூக்கி வைத்திருந்தார்கள்.

618eb75a-a346-4b0e-9fe8-27e04d29d9ba.jpe

சுற்றுச்சூழல் விடயங்கள் தொடர்பாக பெங்களூர் நகரத்தில் மிகவும் துடிப்பாகச் செயற்பட்டு வருகின்ற ஆர்வலர்கள் நடுவில், கடந்த மூன்று வருடங்களாக மிகவும் அறியப்பட்ட ஒருவராகவே டிஷா இருந்திருக்கிறார். ஆனால் தம்மை எதிர்ப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குகின்ற ஓர் அரசு அவரைக் கைதுசெய்திருக்கிறது.

இரு வாரங்களுக்கு முன்னர், சனிக்கிழமை, தனது தாயாருடன் டிஷா வதியும்  இல்லத்திலே வைத்து அவர் கைதுசெய்யப்பட்டு, விமானத்திலே டெல்கிக்குக் கொண்டுசெல்லப்பட்டு, கிளர்ச்சி செய்ததாகவும் அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, எந்தவித சட்டத்தரணிகளின் உதவியையும் நாட முடியாத வகையில் டெல்கி காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டார்.

“இந்திய அரசு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மேல் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது என்பது மட்டுமன்றி மிகத் தெளிவான, கவலையைத் தரவல்ல ஓர் அணுகுமுறையை இங்கே தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது” என்று பெங்களூரை வதிவிடமாகக் கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலரான லியோ சல்தானா தெரிவித்தார். “சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பை நிர்மூலமாக்கி அதனை முற்று முழுதாக அழித்து விடுவதே இவர்களது நோக்கமாகும்” என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் விவசாயிகளினால் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக சுற்றுச் சூழல் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்கள் மேலதிக தகவல்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதை விளக்குகின்ற ஓர் ஆவணம் (‘toolkit’ document) தொடர்பாகவே டிஷா குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் சதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காவல்துறை கூறியிருக்கிறது.

தங்கள் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கின்றவர்களாக தனியார் நிறுவனங்கள் மாறிவிடும் ஆபத்து தமக்கு ஏற்பட்டிருக்கிறது என்ற காரணத்தினால் விவசாயிகள் தொடர்பாக அரசு புதிதாக இயற்றியிருக்கும் மூன்று சட்டங்களையும் அரசு மீளப்பெற வேண்டும் எனக்கோரி, கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்கி நகரத்தைச் சுற்றிக் கூடாரமிட்டிருக்கின்றார்கள். பல விவசாயிகளின் பேரப்பிள்ளையாக விளங்குகின்ற டிஷா, இந்த விவசாயிகளின் கோரிக்கைக்கு தனது உளப்பூர்வமான ஆதரவை வழங்கியிருக்கிறார்.

731f0f3e-cb14-4ea8-9b94-dafb5bf3873e.jpe

சுற்றுச்சூழல் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் டிஷா ஒன்றும் புதியவரல்லர். ‘பூகோளம் வெப்பமடையும்’ பிரச்சினை உரிய முறையில் கையாளப்படாததை எதிர்த்து,  பாடசாலையைப் புறக்கணிக்கின்ற, உலகம் பூராவும் வாழ்கின்ற பல மில்லியன் கணக்கிலான பாடசாலை மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘எதிர்காலத் துக்கான வெள்ளிக்கிழமை’ (Fridays for Future) என்று அழைக்கப்படுகின்ற அமைப்பைத் தாபித்த, சுவீ டன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலரான கிரேற்றா துன்பேர்க் (Greta Thunberg) என்பவரின் செயற்பாடுகளால் தூண்டப்பட்டு, கிரேற்றாவுடன் இணைந்து, டிஷா அந்த அமைப்பின் இந்திய நாட்டுக்கான கிளையை தாபித்து, நாடுபூராவும் வேலை நிறுத்தங்களை ஒழு ங்கு செய்து வந்திருந்தார்.

தனது சொந்த வாழ்வில் காலநிலை மாற்றம் ஏற்படுத்துகின்ற தாக்கங்களை டிஷா ஏற்கனவே உணரத் தொடங்கியிருந்தார். தன்னைத் தனியாகவே வளர்த்தெடுத்த தனது தாயுடன் வதிகின்ற அந்தப் பட்டணத்து வீட்டில் (city house) மழை பெய்கின்ற ஒவ்வொரு தடவையும் வெள்ளம் ஏற்படுவதை டிஷா பார்த்திருக்கிறார். வருடாவருடம் இந்த நிலை இன்னும் மோசமாகிக் கொண்டு இருப்பதோடு இன்னும் சில ஆண்டுகளில் பெங்களூர் நகரமும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை விரைவில் சந்திக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தினால் தோற்றுவிக்கப்படுகின்ற வறட்சி, பயிர்கள் முறையாக வளர்ந்து பயன்கொடுக்கத் தவறுதல், வெள்ளம் ஏற்படுதல் போன்றவற்றினால் விவசாயத்தொழிலை  மேற்கொள்ளுகின்ற தனது பாட்டனார்கள், விவசாயத்தைத் தொடர்ந்து செய்ய முடியாது திண்டாடிக்கொண்டிருப்பதை டிஷா நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்.

“விவசாயிகளான எனது பாட்டனார்கள் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட விளைவுகளின் காரணமாக தமது தொழிலை மேற்கொள்ள முடியாது பட்ட துன்பங்களைப் பார்த்த பின்னர்தான் காலநிலை தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் என்னிலே ஏற்பட்டது” என்று 2019 மேற்கொள்ளப்பட்ட ஓர் நேர்காணலில் டிஷா குறிப்பிட்டிருந்தார். “எனது பிரதேசத்திலே காலநிலை தொடர்பான கல்வி எதுவும் இருக்காதபடியால் அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் உண்மையிலே காலநிலை மாற்றம் தொடர் பானவை என்பதை அப்போது நான் புரிந்திருக்கவில்லை.”

4500.jpg

சுற்றுச்சூழல் தொடர்பான வேலைநிறுத்தங்களை ஒழுங்கு செய்வதாக இருந்தாலென்ன, ஏரிகளைத் துப்புரவு செய்யும் செயற்பாடுகளாக இருந்தாலென்ன, மரம் நடுகைத் திட்டத்தை முன்னெடுப்பதாகவோ அல்லது காலநிலைச் செயற்பாடுகள் தொடர்பான செயலமர்வுகளை நடத்துவதாக இருந்தாலென்ன எல்லாவற்றிலுமே டிஷா தவறாது பங்குபற்றுவதை அவதானிக்கக் கூடியதாக விருந்தது. அப்படிப்பட்ட விடயங்கள் தொடர்பாக மிகவும் ஆழமான அறிவையும் தெளிவையும் டிஷா கொண்டிருந்தார். அவரது குடும்பத்துக்கு வேண்டிய வருமானத்துக்காக உழைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு மட்டுமே இருந்ததால், தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு உணவைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதை யும் அதனோடு ஓர் மனித உரிமை ஆர்வலராக உழைப்பதையும் அவர் சமாளித்து வந்தார்.

மிக மிகக் கடுமையாக உழைக்கின்ற ஒருவராகவும் சுற்றுச்சூழல் செயற்பாடுகளுக்கு தன்னை முற்றிலுமே அர்ப்பணித்துவிட்ட ஒருவராகவும் விளங்கிய டிஷா, தனது அர்ப்பணத்தின் காரணமாக தன்னையே உருக்கிப் பணியாற்றிக்கொண்டிருந்தார். “தனது செயற்பாடுகளின் காரண த்தினால் தனது  சொந்த நலன்களையே தியாகம் செய்து கொண்டிருந்த டிஷா தொடர்பாக நான் கவலை கொண்டிருந்தேன்” என்று பெங்களூரில் அவருடன் இணைந்து பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஓரு ஆர்வலர் தெரிவித்தார்.

FFF  இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பன்னாட்டு ஊடகங்கள் செய்திகளைத் தொகுத்து வழங்கும்போதெல்லாம், ஊடகவியலாளர்கள் டிஷாவைத் தவறாது நேர்காணல் செய்வது வழக்கம். இவ்வாறான நேர்காணல்களில் எல்லாம் மோடியைத் தலைமை அமைச்சராகக் கொண்ட அரசின் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சிப்பவராகவே டிஷா இருந்திருக்கிறார்.

“எதிர்காலத்துக்காக மட்டும் நாங்கள் போராடவில்லை. நிகழ்காலத்துக்காகவும் சேர்த்தே நாங்கள் போராடுகின்றோம்” என்று 2020ஆம் ஆண்டு அவர் காடியன் (Guardian) ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். “மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் நடுவில் இருந்து வருகின்ற எங்களைப் போன்றவர்கள், காலநிலை தொடர்பாக முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளின் போது மேற்கொள்ளப்படும் உரையாடல்களை மாற்றியமைத்து, அரசின் சிறு சிறு குழுக்களுக்காக அன்றி மக்களுக்கு நன்மை பயக்கின்ற மீட்சித் திட்டங்களுக்கு அவற்றை இட்டுச் செல்ல விரும்புகிறோம்.”

இந்தியாவின் Friday For Future அமைப்பு ஏற்கனவே டெல்கி காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தது. சுற்றுச்சூழல் தொடர்பான விதிமுறைகளை நீர்த்துப் போகச் செய்யக்கூடிய ஒரு சட்டத்தை 2020 இல் அரசு அமுலாக்கம் செய்ய இருந்த நேரத்தில் இந்தக் குழு அதனை எதிர்த்து இணையத் தளத்தில் ஓர் பரப்புரையை முன்னெடுத்த போது, டெல்கி காவல் துறையின் இணையக் குற்றப் பிரிவினால் அந்தக்குழுவின் இணையத்தளம் தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தது.

தனது குடும்பம் விவசாயத்துடன் பின்னிப்பிணைந்து இருப்பதன் காரணத்தினால் இந்திய நாட்டின் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து டிஷா முற்று முழுதாகத் தன்னை ஈடுபடுத்தி வந்திருக்கிறார். இதனைச் செய்ய வேண்டாம் என்று தாம் டிஷாவை எச்சரிக்கை செய்ததாக அவருடன் இணைந்து பணி புரிகின்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் தெரிவிக்கின்றார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பது, இப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள், அவர்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள், ஏன் அவர்கள் போராட்டங்கள் தொடர்பாக செய்திகளை வெளியிட்டவர்கள்மீதும் இரும்புக்கரம் கொண்டு அடக்குகின்ற அதிகாரிகளினதும் அரசினதும் அநாவசியமான கவனத்தை டிஷா மட்டில் ஈர்க்கும் என்பது உணரப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என்பவர்கள் ஏற்கனவே குற்றஞ் சாட்டப்பட்டிருந்தார்கள். அத்துடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்த முகாம்களைச் சுற்றி கொங்கிறீட்டினாலான தடைச்சுவர்கள், முட்கம்பி வேலிகள் போன்றவை காவல்துறையினால் போடப்பட்டிருந்தன. ஒரு பேரணியின் போது வன்முறையைத் தூண்டினார்கள் என்று குற்றஞ் சாட்டப்பட்ட விவசாயிகள் பயங்கரவாதச் சட்டங்கள் ஏவப்பட்டு ஆறு மாதங்களுக்கு அவர்களுக்குப் பிணை வழங்குவது தடைசெய்யப்பட்டிருக்கிறது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு தான் ஆதரவளிக்கின்றேன் என்ற செய்தியை சுற்றுச்
சூழல் ஆர்வலரான கிறேற்றா துன்பேர்க் டுவிற்றர் வலைத்தளம் மூலமாக வெளியிட்டபோது, பகிர்ந்துகொள்ளப்பட்ட ‘ரூல்கிற்’ என்ற ஆவணத்திலிருந்து தான் டிஷாவுக்குப் பிரச்சினைகள் ஆரம்பித்தன. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவளித்து உதவ விரும்புகிறவர்களுக்கு துணை செய்யும் முகமாக இந்த ‘ரூல்கிற்’ ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தது. பலவிதமான தகவல்களின் தொகுப்பாகவும், சமூக வலைத்தளங்களில் பயன்படுத்த வேண்டிய ஹாஸ்டாக்குகள், முன்னெடுக்கப்படக்கூடிய செயற்பாடுகள், பல்வேறு யோசனைகள்,தொடர்பு கொள்ளப்பட வேண்டியவர்கள் தொடர்பான தொடர்பு விபரங்கள் போன்றவை மேற்குறிப்பிட்ட‘ரூல்கிற்’ ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

டுவிற்றர் மூலமாக கிறேற்றா வெளியிட்ட செய்தி, அதனை வெளிநாடுகளின் தலையீடாகப் பார்த்தவர்களுக்கு கடுமையான கோபத்தைத் தோற்றுவித்திருந்ததுடன் அவரது முகத்தைத் தாங்கிய உருவப் பொம்மைகளும் அதனை எதிர்த்தவர்களி னால் எரியூட்டப்பட்டன.

அவ்வேளையில் கிறேற்றாவால் பகிரப்பட்ட அந்தக் குறிப்பிட்ட ஆவணத்தைக் காவல்துறை கையகப்படுத்தி, இந்தியாவுக்கு எதிராக பொருண்மிய, சமூக, பண்பாட்டு மற்றும் பிரதேச ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சதி முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்ற குற்றச் சாட்டுக்கு அந்த ஆவணம் ஒரு சான்று என வாதித்தார்கள். பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து மேற்குறிப்பிட்ட ஆவணத்தைத்தயாரித்தாகவும் மில்லியன் கணக்கில் தன்னைப் பின் தொடர்பவர்களுடன் கிறேற்றா அதனைப்பகிரத் தூணடியதாகவும் டிஷா மீதும் இன்னும் இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அக்குறிப்பிட்ட ஆவணத்தில் இரண்டு வரிகளை மட்டுமே தான் சரிசெய்ததாகவும் கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்தவிதமான எண்ணமும் தனக்கு இருக்கவில்லை என்றும் இரு வாரங்களுக்கு முன்னர் டிஷா நீதிமன்றத்தில் தெரிவித்தார். “விவசாயிகளுக்கு எனது ஆதரவை நான் வழங்கினேன். விவசாயிகளே எங்கள் எதிர்காலம் என்பதாலும் நாம் எல்லோரும் சாப்பிட வேண்டும் என்பதற்காகவுமே விவசாயிகளுக்கு நான் ஆதரவளித்தேன்” என்று  ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட முன்னர் டிஷா அழுதபடியே நீதி மன்றில் தெரிவித்தார்.

6c0a9cb4-5fbc-4db6-b062-3a3c0c7b7652.jpe

டிஷா கைதுசெய்யப்பட்ட வேளையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடுவில் அது அச்ச அலைகளைத் தோற்றுவித்தது. பயத்தின் காரணமாக அவருடன் இணைந்து பணியாற்றும் ஆர்வலர்கள் ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்குவதைத் தவிர்த்ததோடு அக்குழுவினால்  அதுவரை பயன்படுத்தப்பட்டு வந்து ‘வட்ஸ்அப்’(WhatsApp) குழுக்களும் அமைதிகாக்கத் தொடங்கின.

டிஷா கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. டிஷாவைத் தடுத்து வைத்திருக்கும் செயற்பாடு “மிகக் கொடுமையானது” என்பது மட்டுமன்றி “எந்தவித அவசியமும் இன்றி மேற்கொள்ளப்படும் ஒரு துன்புறுத்தலும் அச்சுறுத்தலும் ஆகும்” என்று முன்னாள் சுற்றுச் சூழல் அமைச்சரான ஜெய்ரான் றமேஷ் தெரிவித்தார். அதே வேளையில் 50 கல்வியியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் கூட்டாக வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையில், டெல்கி காவல்துறையின் செயற்பாடுகள் “சட்டவிரோத தன்மையைக் கொண்டவை” என்றும் அரசு இவ்விடயத்தில் “தேவைக்கதிகமாகச் செயற்பட்டிருக்கிறது” என்றும் குறிப் பிட்டிருக்கிறார்கள்.

டிஷா மேல் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக மேலதிகமான தகவல்களைத் தமக்கு வழங்குமாறு கேட்டு, பெண்களுக்கான டெல்கி ஆணையம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காவல்துறைக்கு ஒரு அறிவித்தலை அனுப்பியிருக்கிறது. “அபத்தமான நாடக அரங்காக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது” என்று முன்னாள் நிதியமைச்சர்  பா.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

குறிப்பு:

பெப்ரவரி 23 இல் டிஷா ரவி பிணையில் விடுதலை

வன்முறையாளர்களுக்கும் டிஷாவின் செயற்பாடுகளுக்கும் எந்தவிதமான தொடர்பையும் காணமுடியவில்லை என்பதைத் தெரிவித்து டிஷா ரவியை டெல்கி நீதிமன்று பெப்ரவரி 23ஆம் திகதி பிணையில் விடுதலை செய்திருக்கிறது. டிஷாவுக்கு எந்தவிதமான குற்றப்பின்னணியும் இல்லை என்பதைக் குறிப்பிட்டு இந்திய அரசியலமைப்பின் 19ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரத்துக்கான உரிமையையும் இன்னும் பல விடயங்களையும் கோடிட்டுக்காட்டி நீதியாளர் டிஷா ரவியைப் பிணையில் விடுதலை செய்திருக்கிறார்.

நன்றி: தகாடியன் (www.theguardian.com)

 

https://www.ilakku.org/?p=43679

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.