Jump to content

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த முழுமையான வழிகாட்டல் வெளியானது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Best ways for disposal of bodies of COVID victims

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த முழுமையான வழிகாட்டல் வெளியானது!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய சிறப்பு வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படும்போது பின்பற்றப்படவேண்டிய காரணிகள் குறித்து சுகாதார அமைச்சு இதன்போது தெளிவுபடுத்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனையை முன்னெடுத்தல் மற்றும் கொரோனா சடலங்களை அகற்றுதல் ஆகியன குறித்த வழிகாட்டலில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சடலத்தை அடக்கம் செய்யும் இடம் வரை கொண்டு செல்வது குறித்தும், அதனை அடக்கம் செய்வது தொடர்பிலும், சுகாதார அமைச்சினால் மற்றுமொரு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை விடுவிக்க அனுமதி கிடைத்த 24 மணி நேரத்துக்குள் அதனை எரிக்க அல்லது புதைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சடலம் உறவினர்களிடம் வழங்கப்படக்கூடாது எனவும், சடலங்களை வைப்பதற்கான பெட்டி உறவினர்களால் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நபர் உயிரிழக்கும் வைத்தியசாலை அல்லது சிகிச்சை மத்திய நிலையத்தினால் வழங்கப்படும் வசதிகளுக்கு அமைய, இறுதிச் சடங்குகளில் இரண்டு மத குருமார் கலந்து கொள்ள முடியும் எனவும், அதிகபட்சமாக ஐந்து உறவினர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறுதிச் சடங்குகளின் போது மத நிகழ்வுகள் 10 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும், குறித்த சுகாதார வழிகாட்டல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பொலிஸ் ஆகியோரின் பாதுகாப்புடன், அதனை எரிக்கும் அல்லது புதைக்கும் இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலம் எரிக்கப்படும் பட்சத்தில், உறவினரின் வேண்டுகோளுக்கு அமைய, உயிரிழந்தவரின் சாம்பலை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒன்றரை மீற்றர் முதல் மூன்று மீற்றருக்கு இடைப்பட்ட ஆழத்தில் குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கு உறவினர்கள் விரும்பும் பட்சத்தில், உரிய வைத்தியசாலை அல்லது சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான உரிய எழுத்துமூல அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் மாத்திரமே, சடலத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரணைதீவு வரை, தினமும் காலை 5.30 இற்கு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, இரண்டு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதுடன், அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்படுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கொரோனா-தொற்றினால்-உயிரி-2/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.