Jump to content

ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரரானார் பொல்லார்ட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரரானார் பொல்லார்ட்

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு : 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணித் தலைவர் கிரான் பொல்லார்ட் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

EvmRsRwXMAEfZce.jpg

அதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் சூப்பர் ஸ்டாரான சகலதுறை ஆட்டக்காரர் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.

இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் 132 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி துடுப்பெடுத்தாடி வந்தபோது, ஆறாவது ஓவருக்காக அகில தனஞ்சய பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.

அந்த ஓவரை எதிர்கொண்ட பொல்லார்ட் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை விளாசித் தள்ளி இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இதனால் டி-20 கிரிக்கெட் அரங்கில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேனாக திகழந்த முன்னாள் இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யுவராஜ் சிங்குடன் பொல்லார்ட் இணைந்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், தென்னாபிரிக்காவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ் தான் இந்த சாதனையை முதலில் பெற்றார்.

அதன்படி 2007 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை கிப்ஸ் நிகழ்த்திக் காட்டினார்.

அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச டி-20 உலகக் கிண்ணத்தின் தொடக்கப் பதிப்பில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சை எதிர்கொண்டு, ஒரு ஓவரில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை விளாசித் தள்ளி டி-20 கிரிக்கெட் அரங்கில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

EvmxhhnWgAAi56C.jpg

https://www.virakesari.lk/article/101536

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலாட்டின் முர‌ட்டுத‌ன‌மான‌ அடியை  இப்ப‌ தான் யூடுப்பில் பார்த்தேன் கிருப‌ன் பெரிய‌ப்பா என்ன‌ அடி ?

ஜ‌பிஎல் அனியான‌ மும்பாய் இவ‌னை 11வ‌ருட‌மாய் வைத்து இருக்கின‌ம் ?

அடிக்க‌ தொட‌ங்கினா அடிச்சுட்டே இருப்பான் , 

மைதான‌த்தில் அதிக‌ம் கோவ‌ப் ப‌டும் வீர‌ர்க‌ளில் போலாட்டும் ஒருத‌ர் ?

வெஸ்சீன்டீஸ் அனிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ ந‌ல்ல‌ க‌ப்ட‌ன் இல்லை சாமி தான் சிற‌ந்த‌ க‌ப்ட‌ன் ?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

போலாட்டின் முர‌ட்டுத‌ன‌மான‌ அடியை  இப்ப‌ தான் யூடுப்பில் பார்த்தேன் கிருப‌ன் பெரிய‌ப்பா என்ன‌ அடி ?

அடி அந்த மாதிரி பட்டையைக் கிளப்பின அடி! அதைப் பார்த்துக் துள்ளிக் குதிக்கும் கறுப்பு அழகிகளை மைதானத்தில் காணவில்லை என்பதுதான் குறை😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அடி அந்த மாதிரி பட்டையைக் கிளப்பின அடி! அதைப் பார்த்துக் துள்ளிக் குதிக்கும் கறுப்பு அழகிகளை மைதானத்தில் காணவில்லை என்பதுதான் குறை😜

இதில் அழ‌கிய‌லின் ஆட்ட‌த்தை காண‌ முடியா விட்டாலும் , இனி தொட‌ங்க‌ இருக்கும் ஜ‌பிஎல்ல‌ அழ‌கிக‌ளின் ஆட்ட‌த்தை க‌ண்டு ர‌சிக்க‌லாம் கிருப‌ன் பெரிய‌ப்பா ஹா ஹா 😁😀

நான் ஜ‌பிஎல்ல‌ பெரிசா பார்ப்ப‌து இல்லை , த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடும் போது பார்ப்பேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அடி அந்த மாதிரி பட்டையைக் கிளப்பின அடி! அதைப் பார்த்துக் துள்ளிக் குதிக்கும் கறுப்பு அழகிகளை மைதானத்தில் காணவில்லை என்பதுதான் குறை😜

ஐபிஎல் போட்டிக்கான அட்டவணைகளை இப்போதிருந்தே தொடங்குங்கள் கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு செய்தியை பார்த்து யூரியூப்பில் அந்த 6*6ஐ பார்த்தேன். இதே ஆட்டத்தில் 36 ஓட்டங்கள் கொடுத்த தனஞ்சய அடுத்தடுத்து மூவரை ஆட்டம் இழக்க செய்து ஹட்ரிக் எடுத்துள்ளார்.

Link to comment
Share on other sites

1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

இங்கு செய்தியை பார்த்து யூரியூப்பில் அந்த 6*6ஐ பார்த்தேன். இதே ஆட்டத்தில் 36 ஓட்டங்கள் கொடுத்த தனஞ்சய அடுத்தடுத்து மூவரை ஆட்டம் இழக்க செய்து ஹட்ரிக் எடுத்துள்ளார்.

ஆம். தனஞ்சயனும் கெத்தாய் வந்து பந்தை போட்டார். ஆனால் விளாசல் மன்னனிடம் அது வாய்க்கவில்லை.  காலுக்கு நேராக வீசப்பட்ட ( கப்டனின் அறிவுரையின் படி) பந்தை கூட 6 க்கு திருப்பி விட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.