Jump to content

அரசியலில் இருந்து விலகிய சசிகலா: தி.மு.க-வுக்கு லாபமா... நஷ்டமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா கொடுத்திருக்கும் அறிக்கையிலும், பொது எதிரியான தி.மு.க.வை வீழ்த்த ஒற்றுமையாக இருக்குமாறு குறிப்பிட்டிருக்கிறார். இதன் அர்த்தம், அ.ம.மு.க. தொண்டர்களும், முக்குலத்தோரும் அ.தி.மு.க-வுக்கே வாக்களியுங்கள் என்றுதான் பொருள் கொள்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலின்போது எதிர்பார்க்காத பல தரமான சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. கடந்தாண்டு இறுதியில் ரஜினி அரசியலில் அடியெடுத்து வைக்காமலேயே, விலகிச்சென்றார். இந்தாண்டு மார்ச்சில் சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இது ஒருபக்கம் அ.தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் இடி என்றாலும், தி.மு.க.வுக்கு இது இடி செய்தியா... இல்லை, கொண்டாடித்தீர்க்கும் வெடி செய்தியா?

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
 
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

இதுகுறித்து தி.மு.க.வினரிடம் பேசுகையில், “தனியாகவோ, சேர்ந்தோ, எங்களை எதிர்த்துப் போட்டியிட்டாலும் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. அத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 30 சதவிகித வாக்குகளையும், தி.மு.க. கூட்டணி 52 சதவிகித வாக்குகளை பெற்றது. அ.ம.மு.க. தனித்துப் போட்டியிட்டு 5.5 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஒருவேளை 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் ஒன்றாக இணைந்தாலும் கூட 35 சதவிகிதமாக சற்று உயரும். ஆனால், தி.மு.க.வின் 52 சதவிகித வாக்குகளில் இருந்து இறக்கம் கண்டிப்பாக இருக்காது.

சசிகலா-ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி
 
சசிகலா-ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒன்றாக இருந்த சமயத்தில் முக்குலத்தோர் லாபியில் இயங்கிவந்த அ.தி.மு.க., எடப்பாடியார் முதல்வரானதும் கவுண்டர் டாமினண்டுக்கு போய்விட்டது. ஏற்கனவே, தலையில் கைவைத்து ஆசீர்வதித்த மோடி, சசிகலாவை சிறையில் அடைத்து சோதனை கொடுத்தார் என்பதில் முக்குலத்தோர் சமூகம் பா.ஜ.க. மீதும், அ.தி.மு.க. மீதும் கோபத்தில் உள்ளது. தற்போது அதே இருவர் சேர்ந்து விடுதலையான சசிகலாவை ஒதுங்க வைத்துவிட்டதால், இன்னும் அதிக கோபத்தில் இருக்கின்றது முக்குலத்தோர் சமூகம். இது தேர்தலில் எதிரொலிக்கும் வகையில் எந்த ஒரு முக்குலத்தோரும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆட்சி இல்லையென்றாலும், கட்சியாவது நம்மிடம் கிடைக்க வேண்டும் என எண்ணத்தில் தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள்!” என்றார்கள்.

தி.மு.க. சீனியர் நிர்வாகி ஒருவர் நம்மிடம், “சசிகலா விடுதலையாகி வந்ததில் தி.மு.க.தான் குஷியாக இருந்தது. அ.தி.மு.க. ஒருபக்கம் கூட்டணி போட்டு போட்டியிடும், அ.ம.மு.க. ஒருபக்கம் சிறு கட்சிகளை இணைத்துக்கொண்டு போட்டியிடும், இடையில் சசிகலா புகுந்து தான் தான் உண்மையான அ.தி.மு.க. என பிரசாரம் மேற்கொள்வார், இதனால் டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், அ.தி.மு.க.வின் வாக்குகள் மிகப்பெரிய அளவுக்கு பிரியும், இதன்மூலம் எளிதாக ஜெயித்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், என்ன விலை கொடுத்தேனும் எங்களை ஆட்சியமைக்க விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் பா.ஜ.க., சசிகலாவுக்கு நெருக்கடி கொடுத்து ஒதுங்க வைத்துவிட்டது.

சசிகலா கொடுத்திருக்கும் அறிக்கையிலும், பொது எதிரியான தி.மு.க.வை வீழ்த்த ஒற்றுமையாக இருக்குமாறு குறிப்பிட்டிருக்கிறார். இதன் அர்த்தம், அ.ம.மு.க. தொண்டர்களும், முக்குலத்தோரும் அ.தி.மு.க-வுக்கே வாக்களியுங்கள் என்றுதான் பொருள் கொள்கிறது. திகரனுக்கு வாக்களிக்கச் சொல்லாமல், அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கச் சொல்லும்போதே சசி எந்தளவு நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் என்பது புரிகிறது. இதனால் ஓட்டு பிரியாமல் அ.தி.மு.க.வுக்கு விழுந்துவிட்டால், தி.மு.க.வுக்கு கொஞ்சம் சறுக்கல் ஏற்படத்தான் செய்யும்” என்றார்.

அரசியலில் இருந்து விலகிய சசிகலா: தி.மு.க-வுக்கு லாபமா... நஷ்டமா? | will Sasikala's decision benefit DMK? - Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

ஏற்கனவே, தலையில் கைவைத்து ஆசீர்வதித்த மோடி, சசிகலாவை சிறையில் அடைத்து சோதனை கொடுத்தார் என்பதில் முக்குலத்தோர் சமூகம் பா.ஜ.க. மீதும், அ.தி.மு.க. மீதும் கோபத்தில் உள்ளது. தற்போது அதே இருவர் சேர்ந்து விடுதலையான சசிகலாவை ஒதுங்க வைத்துவிட்டதால், இன்னும் அதிக கோபத்தில் இருக்கின்றது முக்குலத்தோர் சமூகம்.

இதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் எவ்வளவு சாதி வெறி உள்ளது என்பது தெரிகிறது.
சாதி பார்பதை society என்று கவுரபெயர் கொடுத்து விட்டார்களே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.