Jump to content

இரணைதீவில் இரு இடங்களில் மக்கள் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"கொரோனா" தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து நேற்றைய தினம் புதன்கிழமை  இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணைதீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வியாழக்கிழமை  இரணைதீவு பகுதியில் இரண்டு இடங்களின் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

p1.jpg

 

 

இரணைதீவு பிரதான இறங்கு துரை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள்  தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

p3.jpg

 

நேற்றைய தினம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பட்ட தரப்பினர்க்கு இரணை தீவு மக்களால் நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்ட போதிலும் இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்படவோ அல்லது இரணை  தீவு பகுதியிலே மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படாத நிலையில் மக்கள் இன்றைய தினம் மேற்படி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

 

p2.jpg

 

அதே நேரத்தில் இரணை தீவு பகுதிக்கு செல்லும் மக்களிடன் கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும் தீவு பகுதியில் வசிக்கும் மக்கள் தீவுக்கு செல்வதற்கு முன் அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்து செல்ல வேண்டும் என பணிக்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இரணைதீவில் இரு இடங்களில் மக்கள் போராட்டம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரணைதீவில் ஜனாசா புதைப்பு – தமிழ் முஸ்லிம் மக்களிடையே உருவாகிவரும் ஐக்கியத்தை உடைக்கும் சூழ்ச்சி

 
1-39-696x377.jpg
 20 Views
இரணைதீவில் ஜனாசா புதைப்பு  முயற்சி தமிழ் முஸ்லிம் மக்களிடையே உருவாகிவரும் ஐக்கியத்தை உடைக்கும் பேரினவாத ஆளும் வர்க்க சூழ்ச்சி என குற்றம் சுமத்தியுள்ளது சி.கா.செந்திவேல்.
 

மேலும் முஸ்லிம் மக்களைப் பழிவாங்கி இழிவுபடுத்தி ஒடுக்கும் அரசாங்கத்தின் மற்றொரு தீர்மானமே கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவில் கொரோனாவினால் இறந்த முஸ்லிம் ஜனாசாக்களைப் புதைக்கும்  முட்டாள்தனமான முடிவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இது போரினால் தொழில்களை இழந்து இடம்பெயர்ந்து கடும் பாதிப்படைந்த சிறிய நிலப்பரப்புடைய இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார தொழில் முயற்சிகள், இயல்பு வாழ்வு என்பனவற்றுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் அச்சுறுத்தலாகும்.

அத்துடன் இஸ்லாமிய மக்கள் எவரும் வசிக்காத இரணைதீவில் கொரோனாவால் இறந்த இஸ்லாமிய மக்களின் ஜனசாக்களைப் புதைக்கும் முயற்சி தமிழ் முஸ்லிம் மக்களிடையே உருவாகிவரும் புரிந்துணர்வு, ஐக்கியத்தை உடைக்கும் பேரினவாத ஆளும் வர்க்கச் சூழ்ச்சியுமாகும்.

எனவே இத்தகைய அடாத்தான செயற்பாடுகளை விடுத்து அரசாங்கம், இஸ்லாமிய மக்களின் விருப்பத்தை மதித்து அவர்களின் மையவாடிகளில் போதிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து ஜனாசா அடக்கத்தை மேற்கொள்ளவேண்டும். இரணைதீவு மக்களோடும் தமிழ் முஸ்லிம் மக்களோடும் இணைந்து  ‘இரணைதீவைப் புதைகுழியாக்காதே’ எனும் மக்கள் இயக்கத்திற்கு எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி (NDMLP) முழு ஆதரவையும் வழங்குகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரணைதீவில் உடல்கள் அடக்கம் – இஸ்லாமிய அமைப்புகள் அதிருப்தி 

 
1-23-696x521.jpg
 32 Views
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வது குறித்த அரசாங்கத்தின் முடிவு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இஸ்லாமிய அமைப்புகள் இது குறித்து சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளிற்கு கடிதங்களை அனுப்பவுள்ளன.
 
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு இது குறித்த கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்லாமிய நிலையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
 
உடல்களை அடக்கம் செய்வதற்கு கௌரவமான இடமொன்றை ஒதுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என இஸ்லாமிய நிலையம் வேண்டுகோள் விடுக்கவுள்ளது.
 
உலக முஸ்லீம் காங்கிரசின் உறுப்பினரான இஸ்லாமிய நிலையம் உலக அமைப்புகளிற்கு இந்த விவகாரம் குறித்த தனது கரிசனையை முன்வைக்கவுள்ளதுடன் ஜெனீவாவில் உள்ள உலக முஸ்லீம் காங்கிரசின் அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவு குறித்துகடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ள முஸ்லீம் அதிகாரிகள் நாட்டின் வேறு பகுதிகளில் பொருத்தமான இடங்களை ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரணைதீவு கெடுபிடிகளை சுமுகமாக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெடுபிடிகளை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.

 

daklas.jpg

 

இன்று(05.02.2021) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், இரணைதீவிற்கு பொது மக்கள் சென்று வருவதற்கு கடற்படையினரினால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுத்தப்படுவதாக சுடடிக்காட்டப்பட்டது.

இதுதொடர்பாக கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், இரணைதீவில் பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை அமைப்பது எனவும், அதன்பின்னர் தேவையற்ற கெடுபிடிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்படாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொறோனா காரணமாக இஸ்லாமிய சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடம் இல்லையென ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ள நிலையில், இன்றைய ஒருங்கிணைப்புக் குழுவிலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இரணைதீவு கெடுபிடிகளை சுமுகமாக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை | Virakesari.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.