Jump to content

ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் அரசாங்கம் மும்முரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் அரசாங்கம் மும்முரம்

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கான தீவிர முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது. 

thinash_guna.JPG

இது தொடர்பாக பல்வேறு உறுப்பு நாடுகளுடனும் அரசாங்கம் தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதுடன், ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பல்வேறு உறுப்பு நாடுகளுக்கும் இது தொடர்பாக கடிதங்களை அனுப்பியுள்ள நிலையில், அமைச்சர் தினேஷ் குணவர்தன தொடர்ச்சியாக கொழும்பில் உள்ள மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரேசில், ஜப்பான், தென்கொரியா, மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்து மனித உரிமைப் பேரவையின்  இலங்கை மீதான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் போது முழுமையான ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

முக்கியமாக கடந்த 24ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற போது அதில் பல்வேறு நாடுகள் உரையாற்றியிருந்தன.

அதில் சில நாகள் இலங்கைக்கு ஆதரவாக உரையாற்றின. எனினும் ஜப்பான் நாட்டின் ஜெனிவாவிற்கான தூதுவர் இலங்கை தொடர்பாக உரையாற்றும் போது, 

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜப்பான் அந்த செயற்பாடுகளுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சிகளில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை தொடர்பான பிரேரணையை பிரித்தானியா, ஜேர்மன், கனடா, மாலாவி, வட மெசடோனியா மற்றும் மொண்டிநீக்ரோ ஆகிய 6 நாடுகள் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்திருக்கின்றன.

அந்த பிரேரணையில் 15 செயற்பாட்டு பந்திகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக இலங்கையானது பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டை நம்பகரமான முறையில் முழுமையான ஒரு பொறிமுறையின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பனவற்றை தொடர்ச்சியாக சுயாதீனமான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நாடைபெற்வுள்ளதுடன் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதற்கு ஆதரவு தெரிவிக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை அரசாங்கம் கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றது. இந்தியாவும் இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்கின்றது.

இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழஙக்குமாறு சீன வெளிவிவகார அமைச்சரிடம் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு சீனா இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்று சர்வதேச மேடைகளில் இலங்கையை முழுமையாக சீனா ஆதரிக்கும் என்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக இந்தப் பிரேரணையை தோற்கடிப்பதற்காக பல்வேறு இராஜதந்திர நகர்வுகளை பல மட்டங்களிலும் முன்னெடுத்து வருகின்றது. 

ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ஷ இது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இவ்வாறான இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்.

அதேபோன்று வெளிவிவகார அமைச்சகம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. அது மட்டுமன்றி வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை தூதரங்கங்களின் தூதுவர்களும் இது தொடர்பான பிரசார நடவடிக்கைகளிலும் ஆதரவு திரட்டும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

 

https://www.virakesari.lk/article/101605

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நிச்சயமாக இந்த இழுபறி போட்டி நடக்க வேண்டும்.

சொறி  சிங்களம் தோற்கவும் வேண்டும்.

கிந்தியாவின் கைகளை ஓரளவு கட்டுவதற்கு இதுவே இப்போதுள்ள வழி. 

நிச்சயமாக இந்த இழுபறி போட்டி நடக்க வேண்டும்.

வேறு திரியில் சொன்னதையும் இணைக்கிறேன்.

இப்பொது வரும் தீர்மானத்தில் கட்டுரை சொன்ன பூகோள அரசியல் இருந்தாலும், குறிப்பிட்ட எதிர்ப்பு சீனா இடம் இருந்தே தோன்றி இருக்கிறது.

ஏனெனில், தீர்மானத்தின் மூலம் சீனாவின் இலை மறை காயான அபிவிருத்தி எனும் போர்வையில், சீன இலங்கைத்தீவில் உள்ள பௌதிக வளங்கள் மற்றும் சேவைகளை கையகப்படுத்துவதை கண்காணிக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தல்காம் என்று சீன எண்ணுகிறது.

சொறி சிங்களத்திற்கு, unhrc நிகழ்ச்சி நிரலில் இருந்து முழுமையாக அகழவேண்டும் என்ற விபு இருந்தாலும், சொறி சிங்களத்தை சீன மிரட்டி வைத்து இருக்கிறது எந்தவொரு தீர்மானத்தையும்  ஏற்க கூடாது என்று.

அதற்காக, அண்மையில் சீனா GNSS spoofing (GNSS, வங்கி, நீர், மின், செல்லிடப் பேசி, தொலைபேசி, இணையம்   போன்ற சேவைகளில்  நேரத் துல்லியத்திற்கும், ஒருங்குமைக்கும் தேவை)   ஊடுருவி தாக்குதல்  செய்து, சொறி சிங்களத்தை மிரட்டி உள்ளது.

பூசிய வரைவில் இருக்கும், unhrc தடயங்களை சேகரிப்பதும், பாதுகாப்பதும் பிற்கால  நீதி தேடலுக்கு என்பது மிகவும் முக்கியமானது. அதாவது, UN, சொறி சிங்களத்தை பற்றி அலட்டாமல், இலங்கைத் தீவினுள் எந்த வழியாகவும் இறங்கலாம் என்பது.

இதனால், UNHRC இல் இருந்து சொறி சிங்களம் விலத்தவும் கூடும்.

முனைய தீர்மானங்களில், , எந்த நகர்வும், நடவடிக்கையும், சொறி சிங்களத்துக்கு தெரியப்படுத்தி, சொறி சிங்களத்தின் ஒப்புமையுடன் தான் செய்ய வேண்டும் என்று, ஹிந்தியா தீர்மானத்தை மாற்றி வைத்து இருந்தது.              

வெளியில் தமிழர் உரிமை, நிலப்புலப்பிரதேச ஒருமைப்பாடு ஒன்றை விட்டு மற்றொன்று ஆதரிக்க முடியாது என்று கதைக்கும் கிந்தியா   என்று கதைக்கும் கிந்தியா, சுளைக்கு வரும் போது என்ன செய்கிறது, இந்த முறை தீர்மானத்தில் தெரியும்.

Link to comment
Share on other sites

7 hours ago, Kadancha said:


GNSS spoofing (GNSS, வங்கி, நீர், மின், செல்லிடப் பேசி, தொலைபேசி, இணையம்   போன்ற சேவைகளில்  நேரத் துல்லியத்திற்கும், ஒருங்குமைக்கும் தேவை)   ஊடுருவி தாக்குதல்  

https://radionavlab.ae.utexas.edu/images/stories/files/papers/gnss_spoofing_detection.pdfhttps://radionavlab.ae.utexas.edu/images/stories/files/papers/gnss_spoofing_detection.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2021 at 17:46, கற்பகதரு said:

ஆம் நன்றி , இவை போன்ற பல ஆய்வுகளை அறிவேன்.

ஆனால், இவை ஆழமான துறை சார்ந்த  ஆய்வு என்பதால் இவற்றை இணைக்கமல், பொதுவான, மெழுந்தவாரியாக  முக்கியத்துவத்தை அறியும்படி சிறு குறிப்பு மட்டும்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.