Jump to content

காவலூர்க் கனவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தமே வீசும்

நன்றி அக்கா

மண்ணை கண்முன் கொண்டு வந்ததற்கு.

Edited by விசுகு
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணைக் கவரும், அழகிய படமும்..
அருமையான கவிதையும்....
ரசித்தேன்... கண்மணி அக்கா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavallur Kanmani said:

காவலூர்க் கனவினைக்
  கண்களில் சுமக்கும்
கண்மணிகள் வாழ்வில்
  வசந்தமே வீசும்

அந்த காவலூர்காரன் நானும் அந்த காற்றோடும் மண்ணோடும் என் கனவும் பேசியது நினைவிருக்கு.என் கண் முன்னே என் ஊரை கண்டது போல் கவிதை சொல்லியது.மகிழ்ச்சி வாழ்த்துகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavallur Kanmani said:

மாலைச் சூரியன்
  மறைந்திடும் வேளை
மஞ்சள் குளித்திடும்
  கடல் மகள் நாணம்
கண்டு களித்திட
  காளையர் கூடும்

இதைத் தான் ....பொன் மாலைப் பொழுது...என்று கூறுவார்கள் போலும்....காவலூரின் கண்மணி..!

எனக்கென்னவோ....அணைக்கட்டிலிருக்கும்...கண்ணா மரமாக இருக்கத் தான்...ஆசை...!

பொன் மாலைப் பொழுதுகளை மட்டுமல்ல,,,,,,,,,அதி காலைப் பொழுதுகளையும் தரிசித்த படியே....வேர் தடவும் மீன்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளலாம்...! கவிதைக்கு நன்றி...!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு மண்வாசனை கவிதை.

ஒரு சில நாட்களுக்கு முன் யூரியூப்பில் ஊர்காவத்துறை,கரம்பொன் போன்ற இடங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அற்புதமான இடங்கள்.
இவற்றையெல்லாம் இழந்து கொண்டு வருகின்றோமோ என்ற ஆதங்கம் நெஞ்சை வருடுகின்றது.
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


தாயக கனவுகள்   எல்லாம் நனவாக்க வேண்டுமென்று தான் ஆசை . அது நிராசையாக போய்விடக்கூடாது , என்றுதான் எல்லோருக்கும் ஆசை ..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

வசந்தமே வீசும்

நன்றி அக்கா

மண்ணை கண்முன் கொண்டு வந்ததற்கு.

எங்கு நாம் வாழ்ந்தாலும் நாம் உருண்டு பிரண்டு ஓடி ஆடிய மண்ணின் நினைவை மறக்க முடியுமா? கருத்துக்கு நன்றிகள் விசுகு

1 hour ago, uthayakumar said:

அந்த காவலூர்காரன் நானும் அந்த காற்றோடும் மண்ணோடும் என் கனவும் பேசியது நினைவிருக்கு.என் கண் முன்னே என் ஊரை கண்டது போல் கவிதை சொல்லியது.மகிழ்ச்சி வாழ்த்துகள்.

ஓ நீங்களும் காவலூரா? எம் கனவுகளிலும் கண்முன் விரியும் காவலூரின் நினைவுகள் கவிஎழுத வைத்தது. கருத்துக்கு நன்றிகள் உதயகுமார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, புங்கையூரன் said:

இதைத் தான் ....பொன் மாலைப் பொழுது...என்று கூறுவார்கள் போலும்....காவலூரின் கண்மணி..!

எனக்கென்னவோ....அணைக்கட்டிலிருக்கும்...கண்ணா மரமாக இருக்கத் தான்...ஆசை...!

பொன் மாலைப் பொழுதுகளை மட்டுமல்ல,,,,,,,,,அதி காலைப் பொழுதுகளையும் தரிசித்த படியே....வேர் தடவும் மீன்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளலாம்...! கவிதைக்கு நன்றி...!

அந்த அழகிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் அழகிய அலையோசையையும் நாம் வாழும் காலம் வரை மறக்கமுடியுமா? கருத்துக்கு நன்றிகள் புங்கையூரன்

26 minutes ago, குமாரசாமி said:

நல்லதொரு மண்வாசனை கவிதை.

ஒரு சில நாட்களுக்கு முன் யூரியூப்பில் ஊர்காவத்துறை,கரம்பொன் போன்ற இடங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அற்புதமான இடங்கள்.
இவற்றையெல்லாம் இழந்து கொண்டு வருகின்றோமோ என்ற ஆதங்கம் நெஞ்சை வருடுகின்றது.
 

சென்ற வருடம் போய் மீண்டும் சில நாட்களாவது இவற்றை அனுபவிக்கலாம் என்ற நாம் கட்டிய மனக்கோட்டைகளெல்லாம் கொரோனாவால் இடிந்து தரைமட்டமாகி விட்டது. இழந்து கொண்டு வருகிறோம் என நினைக்கவே வலிக்கிறது. நன்றிகள் குமாரசாமி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிலாமதி said:


தாயக கனவுகள்   எல்லாம் நனவாக்க வேண்டுமென்று தான் ஆசை . அது நிராசையாக போய்விடக்கூடாது , என்றுதான் எல்லோருக்கும் ஆசை ..

கனவுகள் நனவாகும் என்ற ஆசை மனம் நிறைய இருந்தாலும் காலம் நம்பிக்கையை பொய்யாக்கி விடுமோ என்ற பயமும் உள்ளது. கருத்துக்கு நன்றிகள் நிலாமதி.

Link to comment
Share on other sites

நேரில் பார்த்தறியாத காவலூரை கவிதை வாயிலாக காண வழி செய்த கண்மணி அக்காவுக்கு நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூர இருந்து பாக்கும் கடல்கோட்டை, அந்தோனியார் கல்லூரி இடைவேளைநேரத்தில் 'பாதையில்' காரைநகர் போய்வருவதும் ஒரு சுகம்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதையை வாசிக்க

எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது எனும் பாட்டு நினைவுக்கு வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நேரில் பார்த்தறியாத காவலூரை கவிதை வாயிலாக காண வழி செய்த கண்மணி அக்காவுக்கு நன்றி

 

நன்றிகள் நிழலி. முன்பென்றால் நயினாதீவுக்குப் போவதற்கு ஊர்காவற்றுறை துறைமுகத்தில் இருந்து பயணம் செய்வார்கள். இப்போது குறிகட்டுவானிலிருந்து செல்வதால் எமது ஊர் பலருக்குத் தெரியாமல் போய் விட்டது.

48 minutes ago, நந்தன் said:

தூர இருந்து பாக்கும் கடல்கோட்டை, அந்தோனியார் கல்லூரி இடைவேளைநேரத்தில் 'பாதையில்' காரைநகர் போய்வருவதும் ஒரு சுகம்

அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்றீர்களா? எல்லோரும் அயலவர்களாகத்தான் உள்ளீர்கள். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கள் கவிதையை வாசிக்க

எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது எனும் பாட்டு நினைவுக்கு வருகிறது.

கருத்துக்கு நன்றிகள் ஈழப்பிரியன்.  
அத்துடன் எனது கவிதைக்கு விருப்பிட்ட சபேஸ். நிலாமதி. நந்தன்.பெனி. தமிழினி.யாயினி. விசுகு.குமாரசாமி.புங்கையூரன்.சு.ப.சோமசுந்தரம்.நுணாவிலான்.நிழலி.ஈழப்பிரியன்அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2021 at 06:31, வாதவூரான் said:

சொந்த ஊர் வாசம் என்பது இறக்கும் வரை மறக்காது

எத்தனை வசதிவாய்ப்புக்களுடன் வாழ்ந்தாலும் நாம் பிறந்து வளர்ந்த அந்த மண்வாசனை எம்மை விட்டு அகலாது. படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் வாதவூரான்.
கவிதையை படித்து பச்சைப் புள்ளிகள் இட்ட மல்லிகை வாசம் கிருபன் மோகன் புலவர் அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2021 at 15:29, தமிழ் சிறி said:

கண்ணைக் கவரும், அழகிய படமும்..
அருமையான கவிதையும்....
ரசித்தேன்... கண்மணி அக்கா.

உங்கள் பதிவுக்கு கருத்தெழுத தவறி விட்டேன். மன்னிக்கவும். எங்கள் ஊருக்கே அழகு தருவது ஒல்லாந்தர் கட்டிய கடல்கோட்டை. சரித்திர சின்னங்களில் ஒன்றான இக் கடற்கோட்டை  பல ஆண்டுகள் இராணுவத்தளமாக மாறியது. இப்பொழுது உல்லாச விடுதியாக மாற்றியுள்ளனர். நன்றிகள் தமிழ்சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தக  தகிட... தக  தகிட...

இதே  தாள நடையோடு உங்கள் கவிதையை வாசித்து பூரித்துப் போனேன் அக்கா. :)

அழகுமலர் ஆட அபிநயங்கள் சூட இந்த பாடலின் தாளம், காலப் பிரமாணம் உங்கள் கவி வரிகளோடு ஒத்து வருகிறதே..👌

தமிழ் வார்த்தைகள் மிகவும் அருமை...
தொடர்ந்தும் எழுதுங்கள்.

Edited by Sasi_varnam
  • Like 1
Link to comment
Share on other sites

On 5/3/2021 at 20:59, Kavallur Kanmani said:

செம் பருத்திப் பூக்கள்
   வேலியில்; ஆடும்
செவ்வந்திப் பூக்களும்
  பொன் அள்ளித் தூவும்
அதி காலைச் சேவல்கள்
  அறை கூவிப் பாடும்

தினமும் காலையில் எழும்போது என் வீட்டிலேயே நான் காணும் இனிதான காட்சிகள்... கடல்கடந்து வந்ததால் நினைவில்மட்டும் உறங்கிய நிலையில், என்னை உலுக்கி எழுப்பி எனது ஊருக்கே கொண்டுசென்று மீண்டும் அதனைக் காணவைத்தது உங்கள் காவலூர்க் கனவுக் கவிதை. தொடர்ந்தும் நாங்கள் கவலை மறந்து மகிழ உங்கள் அழகிய கனவுகள் தொடரட்டும். 🙌     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Sasi_varnam said:

தக  தகிட... தக  தகிட...

இதே  தாள நடையோடு உங்கள் கவிதையை வாசித்து பூரித்துப் போனேன் அக்கா. :)

அழகுமலர் ஆட அபிநயங்கள் சூட இந்த பாடலின் தாளம், காலப் பிரமாணம் உங்கள் கவி வரிகளோடு ஒத்து வருகிறதே..👌

தமிழ் வார்த்தைகள் மிகவும் அருமை...
தொடர்ந்தும் எழுதுங்கள்.

இசை அமைப்பாளர் சசி வரிணன் என் கவிதையை ரசித்த விதம் கண்டு பூரித்துப் போனேன். உங்கள் அனைவரது ஊக்கமும் உற்சாகமும்தான் என்னை எழுத வைக்கிறது நன்றிகள் சசி.

4 minutes ago, Kavallur Kanmani said:
5 hours ago, Paanch said:

தினமும் காலையில் எழும்போது என் வீட்டிலேயே நான் காணும் இனிதான காட்சிகள்... கடல்கடந்து வந்ததால் நினைவில்மட்டும் உறங்கிய நிலையில், என்னை உலுக்கி எழுப்பி எனது ஊருக்கே கொண்டுசென்று மீண்டும் அதனைக் காணவைத்தது உங்கள் காவலூர்க் கனவுக் கவிதை. தொடர்ந்தும் நாங்கள் கவலை மறந்து மகிழ உங்கள் அழகிய கனவுகள் தொடரட்டும். 🙌     

 

இத்தனை ஆண்டுகள் எங்கெங்கோ வாழ்ந்தாலும் இரவில் கனவில் வருவது எம் ஊரும் அதன் நினைவுகளும்தானே. அந்த இயற்கை அழகும் எம் இளமை நினைவும் என்றும் தொடரும். கருத்துக்கு நன்றிகள் பாஞ்ச்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதையக்கா, ஊர் நினைவுகளை மீட்டிவிட்டது, ஊர் நினைவுகள் தினம் வந்து போகும், இறக்கும் வரை பசுமையாக இருக்கும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை ....50 வருடங்களுக்கு முதல் போன பொழுது இருந்த  நயினாதீவுக்கும் இரண்டு வருடங்களுக்கு முதல் போன நயினாதீவுக்கும் ....பல மாற்றங்கள்   ...எல்லோரும் கூறுவது போன்று பலவிடயங்களை இழந்து கொண்டு வருகிறோம்.... 

On 6/3/2021 at 06:59, Kavallur Kanmani said:

குயிலோசை காதிலே
  இன்னிசை பாடும்
அலையோசை காற்றோடு
  சுதிதாளம் போடும்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, உடையார் said:

நல்ல கவிதையக்கா, ஊர் நினைவுகளை மீட்டிவிட்டது, ஊர் நினைவுகள் தினம் வந்து போகும், இறக்கும் வரை பசுமையாக இருக்கும்

கருத்துக்கு நன்றிகள் உடையார். பசுமைநிறைந்த நினைவுகளை மீட்டியாவது மனத்திருப்தியடைவோம்.நனறிகள்

19 hours ago, putthan said:

அருமையான கவிதை ....50 வருடங்களுக்கு முதல் போன பொழுது இருந்த  நயினாதீவுக்கும் இரண்டு வருடங்களுக்கு முதல் போன நயினாதீவுக்கும் ....பல மாற்றங்கள்   ...எல்லோரும் கூறுவது போன்று பலவிடயங்களை இழந்து கொண்டு வருகிறோம்.... 

 

நாம் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை. அந்த அமைதியான அழகான இயற்கையுடன் கூடிய இயல்பான வாழ்வை மட்டுமல்ல நாம் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் இழந்தவர்களாய் ....கருத்துக்கு நன்றிகள் புத்தன்.

நாம் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை. அந்த அமைதியான அழகான இயற்கையுடன் கூடிய இயல்பான வாழ்வை மட்டுமல்ல நாம் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் இழந்தவர்களாய் ....கருத்துக்கு நன்றிகள் புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பான மண்மணம் வீசும் கவிதை......நான் nrtb யில் வேலை செய்த காலத்தில் காரைநகர் ஜெற்றியில்தான் டிப்போ இருந்தது.அப்போது புது டிப்போ கட்டப்படவில்லை. சிலதடவை அந்த கடற்கோட்டைக்கு சென்றிருக்கின்றேன். அந்நாட்கள் மறக்க முடியாதவை.கரம்பொன்னிலும் நிறைய உறவினர்கள் உள்ளார்கள். பாராட்டுக்கள் சகோதரி.......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.