Jump to content

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், லசந்தா மகள், அகிம்ஸா எழுதிய. கொழும்பை நெளிய, வைத்துள்ள கடிதம். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், லசந்தா மகள், அகிம்ஸா எழுதிய. கொழும்பை நெளிய, வைத்துள்ள கடிதம்.

2007ம் ஆண்டு, இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர்களில் ஒருவரான எனது தந்தை லசந்தா விக்ரமதுங்கே, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்சே அரசாங்க நிதியில் 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த ஆயுத ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தினார்.

 அவதூறு குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு, எனது தந்தை தலைமை ஆசிரியராக இருந்த, சண்டே லீடரின் அச்சகம், நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பலால் தாக்கப்பட்டது. ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டனர், பத்திரிகைகளுக்கு தீ வைக்கப்பட்டது.

ஜனவரி 8, 2009 அன்று, ஊழல் நிறைந்த ஆயுத ஒப்பந்தம் குறித்து எனது தந்தை சாட்சியமளிக்க சில வாரங்களுக்கு முன்பு, இராணுவ உளவுத்துறை அதிகாரிகள், வேலைக்குச் சென்றபோது அவரை பதுங்கியிருந்து, கொலை செய்தனர்,

எனது குடும்பத்தினரைக் பிரித்தெறிந்து, என் ஆத்மாவில் ஒரு பெரும் துவாரம் உண்டாக்கியதுடன்,அதன் மூலம் இலங்கை முழுவதும் இருந்த பத்திரிகையாளர்களைப் பயமுறுத்தினர்.

நான் ராஜபக்சேவையே இதுக்கு பின்னால் இருந்தார் என்று சொல்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸில், நீதிமன்றில், என் தந்தையின் கொலையில் பங்கு வகித்ததற்காக நான், அவர் மேல் வழக்குத் தொடுத்தபோது இதை நான் தெளிவுபடுத்தினேன்.

இலங்கை ஜனாதிபதியாக அவர் தேர்வு செய்யப்பட்ட, நவம்பர் 2019 தேர்தல் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அளவிட முடியாத வேதனையையும், இலங்கை சிவில் சமூகத்தின் ஒழுங்கமைப்புக்கு பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

என் தந்தையின் கொலை குறித்து பிபிசி நிருபர் ராஜபக்சரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் கேள்வியைத் தவிர்த்து, சிரித்தபடி கடந்து சென்றார்.

கடந்த வாரம், யு.என். மனித உரிமைத் தலைவர் மைக்கேல் பேச்லெட் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து பெரும் அதிர்வு தரும் அறிக்கையை முன்வைத்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் தொடர்ச்சியாக தோல்வியுற்றதற்கு இலங்கையை பொறுப்புக்கூற வைக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

அடுத்த வாரங்களில், யு.என். மனித உரிமைகள் கவுன்சில் சாத்தியமான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கும்.

நவம்பர் 2005 இல் மஹிந்த ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் தனது சகோதரர் கோட்டபயாவை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பில் வைத்தார்.

ஒன்றாக, அவர்கள் இலங்கையில் சில மோசமான அட்டூழியக் குற்றங்களை நடாத்தினர், மேலும் அவர்களுக்கு எதிராக பேசுவதற்கு துணிந்த எந்த பத்திரிகையாளரையும் திட்டமிட்டு குறிவைத்தனர்.

2015 இல் தனது சகோதரரின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து சுருக்கமாக பதவியை இழந்த போதிலும், குற்றம் சாட்டப்பட்ட இந்த போர்க்குற்றவாளி - கோட்டபய ராஜபக்ச, இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கையில்  ஆவணப்படுத்தப்பட்டபடி, 2009 இல் எனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த மறைப்பு நாடகம், மிகச்சிறப்பாக இருந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கை, மரணத்திற்கான காரணம் குறித்த மருத்துவமனையின் கண்டுபிடிப்புகளுக்கு முரணாக இருந்தது.

புலனாய்வாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். சான்றுகள் வேண்டுமென்றே குளறுபடிக்குள்ளாகின. போலி சான்றுகளும் உருவாக்கப்பட்டன.

கொலை தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் என்று இரண்டு அப்பாவி பொதுமக்கள் கைதாகி பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர், அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. மற்றொருவர் கைது செய்யப்பட்டு காவலில் இறந்தார்.

எனது தந்தை கொல்லப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 8, 2015 அன்று, இலங்கையர்கள் ராஜபக்ஷ ஆட்சிக்கு வாக்களித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர், இது முந்தைய ஆட்சியின் கீழ் பல கொடுமைகளுக்கு பலியானவர்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்தது.

பொலிஸ் புலனாய்வாளர்கள் விரைவில், அப்போது, பாதுகாப்பு செயலாளர் ராஜபக்சரால் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும், 'திரிப்போலி' படைப்பிரிவில் 'ஸீரோ', எனும் பெயரில், ஒரு இராணுவ கொலைக் குழு இயங்கியதை கண்டறிந்தனர்.

ஆனால் புலனாய்வாளர்கள் ராஜபக்ஷவின் பங்கை அம்பலப்படுத்தியபோது, அவர்களின் விசாரணைகள் தடுமாற தொடங்கின. இலங்கை நீதித்துறையைப் பொறுத்தவரை, அவர் சட்டத்துக்கு மேலானவர்.

அவர் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவுகளை பிறப்பிக்க நீதிபதிகள், பல நூற்றாண்டுகள் நாட்டில் நீடித்த, நீதி பாரம்பரியங்களை, உடைத்து எறிந்தார்கள்.

இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள், கொல்லப்பட்டமை தொடர்பாக நீதிமன்றம் அவரிடம் கேள்வி கேட்க முயன்றபோது, ஒரு மேல் நீதிமன்ற நீதிபதி அந்த வழக்கினை விசாரிக்க தடை விதித்தார்.

மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, வேறு,  நீதிபதிகள் அந்த விசாரணைகள், முன்னோக்கி செல்வதைத் தடுக்க உத்தரவுகளை பிறப்பித்தனர்.

இதனாலேயே, நான் அமெரிக்க நீதிமன்றங்களுக்கு, நீதி தேடி போக முடிவு செய்தேன். அந்த வேளையில், ராஜபக்சே ஏற்கனவே ஜனாதிபதி பதவிக்கான  ஒரு புதிய தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருந்தார்.

அவரது முழக்கமாக இருந்தது: உளவுத்துறையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் அட்டூழியங்கள் குற்றம் சாட்டப்பட்ட உளவுத்துறை அதிகாரிகளை விடுவித்தல்.

எனது தந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவரை இலங்கையர்கள் ஜனாதிபதியாக 15 மாதங்களுக்கு முன்பு, தேர்ந்தெடுத்தபோது, நான் அதனை, திகிலுடன் பார்த்தேன்.

ஜனாதிபதியாக அவரது புதிய அந்தஸ்து அவருக்கு வழக்குகளில் இருந்து விடுவிக்கும் சட்டப்பூர்வ, சக்தியைக் கொடுத்தது.

ஜனாதிபதியாக, ராஜபக்ச, குற்றவாளிகள், தண்டனை பெறாதிருப்பதை உறுதிசெய்வதில்,  நேரத்தை வீணாக்கவில்லை.

அவரை சட்டத்திற்கு மேலாக வைத்திருந்த நீதிபதிகளை அவர் பதவி உயர்த்தினார். குழந்தைகளை கொன்றதற்காக போர்க்குற்றத்தில் தண்டனை பெற்ற ஒரு சிப்பாய்க்கு அவர் மன்னிப்பு வழங்கினார்.

இத்தகைய கொடுமைகளை விசாரித்த துப்பறிந்த, நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர். இலங்கையின் குற்றவியல் புலனாய்வுத் துறையை நடத்தி, பல விசாரணைகளில் முன்னேற்றங்களை வழிநடத்திய FBI பயிற்சி பெற்ற பொலிஸ் நிர்வாகி ஷானி அபேசேகர, போலியான குற்றச்சாட்டுக்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2020 மே மாதத்தில், ராஜபக்ஷ சிஐடியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தார் - எனது தந்தையின் கொலைக்கான ஆதாரங்களை மூடிமறைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு போலீஸ்காரரே அவர்.

இத்தகைய ஒருவரின் இலங்கை அரசிடம் இருந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் என்று  சர்வதேச சமூகம் தொடர்ந்து எதிர்பார்க்கிறது.

ராஜபக்சேவின் தேர்தல் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒவ்வொரு கதவையும் மூடியுள்ளது என்பதை பாதிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் சர்வதேச சமூகம் நன்கு அறிவார்கள்.

மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவையின், பொருளாதாரத் தடைகள், பயணத் தடைகள் மற்றும் ஒரு சுயாதீனமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை உட்பட, வலுவான சர்வதேச நடவடிக்கை இல்லாமல் -  இலங்கையர்கள் கடந்தகால மனித உரிமை மீறல்களை மீண்டும் மீண்டும் உள்ளாகும் பேர் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

தனது கொலையை முன்கூட்டியே உணர்ந்து கொண்டிருந்த, என் தந்தை, தனக்கே ஒரு இரங்கல் கட்டுரையினை எழுதி இருந்தார். அதில் "கருத்து சுதந்திரத்தை" கட்டுப்படுத்துவதற்கான, முதன்மை கருவியாக படுகொலைகள் நடக்க தொடங்கிவிட்டது என்று கூறி இருந்தார்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், எதேச்சதிகாரம் மிக்கவர்களால் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதை காண்கின்றோம். இது விசயத்தில், உலகம் ஒரு உறுதியான நிலைப்பாடினையும், கொலைகார எதேச்சதிகாரர்கள் தமது, அநியாயங்களுக்கு விலை கொடுப்பதை உறுதிசெய்யவும் வேண்டிய, நேரம் இது.

அதேவேளை இன்று, அணா பொலிட்கோவ்ஸ்காயா, ஜமால் கஷோகி மற்றும் என் தந்தை போன்ற ஹீரோக்களின் கொலையாளிகள், உலக அரங்கில், நாடுகளின் தலைவர்களுடன் தோள்பட்டை தேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, ஒரு பத்திரிகையாளரைக் கொல்வது வளர்ந்து வரும் எதேச்சதிகாரர்களுக்கான மற்றொரு சாதாரணமான சடங்கு என்று தெரிகிறது.

உபயம்: வாஷிங்டன் போஸ்ட்

யாழுக்காக எனது மொழிபெயர்ப்பு. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மொழி பெயர்ப்புக்கு,   நன்றி... நாதம்ஸ்.
இந்தக் கட்டுரையை.... வாசிக்க, எனக்கு இரண்டு நாள் எடுக்கும் ஐயா.
சுருக்கமாக என்ன எழுதியிருக்கு என்று சொன்னால், நல்லது ராசா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை அழிக்க லசந்தவின் மகள் முயற்சி! - அரசு குற்றச்சாட்டு.!

Screenshot-2021-03-06-10-45-02-875-com-a

சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு இலங்கை அரசு நீதியைத் தராமல் மறுத்து வருகின்றது என அவரது மகள் அகிம்ஸா விக்கிரமதுங்க வொஷிங்டன் போஸ்ட் இதழுக்கு எழுதியிருந்த கட்டுரையை அரசு கடுமையாக விமர்சித்துள்ளது.

இலங்கைத் தலைவர்கள் மீது பயணக் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதிப்பதற்காக சர்வதேச சமூகத்தை திரட்டி இலங்கையை அழித்து அதன் வீழ்ச்சியைப் பார்ப்பதற்கு அகிம்ஸா விக்கிரமதுங்கவும் மேலும் பலரும் முயற்சிக்கின்றனர் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இதேவேளை, புலம்பெயர் குழுக்கள் மற்றும் எதிரணி அரசியல்வாதிகள் உள்ளிட்ட சில தரப்பினர் அகிம்ஸா விக்கிரமதுங்கவை இயக்குகின்றனர் என்று அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை சவால்களை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் லசந்தவின் மகள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது துரதிஷ்டவசமானது.

குற்றவாளிகளை ஒருநாள் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி வழங்கும் முயற்சியில் அகிம்ஸா வெற்றி பெறுவதற்காக வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்" - என்றார்.

வொஷிங்டன் போஸ்ட் இதழுக்கு அகிம்ஸா விக்கிரமதுங்க எழுதியுள்ள கட்டுரையில்,

"2007 இல் பாதுகாப்புச் செயலாளராகக் கோட்டாபய ராஜபக்‌ச இருந்தபோது நடந்த ஆயுதக் கொள்வனவின்போது 10 மில்லியன் டொலர் ஊழல் நடந்திருப்பது பற்றி எனது தந்தை லசந்த விக்கிரமதுங்க வெளிப்படுத்தியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்‌ச அவரை அவதூறு குற்றச்சாட்டில் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் எனது தந்தையின் பதிப்பகம் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

குறித்த ஆயுத ஊழல் தொடர்பில் எனது தந்தையிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுவதற்கு சில வாரங்களே இருந்த நிலையில், 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி எனது தந்தை பணிக்குச் சென்று கொண்டிருக்கும்போது இராணுவப் புலனாய்வாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்‌சவையே அதற்கு நான் பொறுப்பாளியாக்குகின்றேன" - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ச ஜனாதிபதியாக வெற்றி பெற்று விட்டதால், தனது தந்தையின் படுகொலைக்கு நீதி கோரும் முயற்சிகள் வெற்றியளிக்காத நிலை நீடிக்கின்றது எனவும் அந்தக் கட்டுரையில் அகிம்ஸா தெரிவித்துள்ளார்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளும் சாட்சியங்களும் ராஐபக்‌ச அரசால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் அகிம்ஸா தனது நீண்ட கட்டுரையில் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://aruvi.com/article/tam/2021/03/06/23350/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பை நெளிய, வைத்துள்ள கடிதம்.

கொழும்பை மட்டுமல்ல, கொழும்புக்கு முட்டு கொடுக்கும் நம்மில் சிலரையும் நெளிய வைத்திருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது கடிதம், உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளதாக இலங்கையின் டெய்லி மிரர் பத்திரிகையை தெரிவிக்கிறது.

இதனை, அமெரிக்க காங்கிரசின், வெளியுறவுகளுக்கான குழு, புதிய அரசு, மனித உரிமை விடயங்களில், தனது உலகளாவிய தமைத்துவத்துவதை மீளுறுதிப்படுத்த வேண்டும் என்றும், இலங்கையில், நீதிக்கும், நியாயத்துக்குமான கோரிக்கைகளை ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. உலகளாவிய ரீதியில், பத்திரிகைகளும், ஆசிரிய பீடங்களும் இதனை மையமாக வைத்து, எழுதி வருவதாகவும், மனித உரிமை ஆர்வலர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

ஹார்வார்ட் பல்கலைக்கழக சட்டத்துறையும், பல தலைசிறந்த ஊடகவியலாளர்களும், இவரது கடிதம் குறித்து கருத்து பகிர்ந்து வருகிறார்கள்.

இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர், மங்கள சமரவீர, அகிம்சாவின், தைரியமான, நீதிக்கான போராட்டத்துக்கு, வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது, தந்தையின் கொலைக்கான நீதி தேடும்,அவரது முயற்சியில் எவ்வித தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

ஆனாலும், ஐநா, ஒரு முடியை கூட புடுங்க முடியாது என்று, தலையில் முடி இழந்து போயிருக்கும், வீரசேகர கொக்கரிக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

 மொழி பெயர்ப்புக்கு,   நன்றி... நாதம்ஸ்.
இந்தக் கட்டுரையை.... வாசிக்க, எனக்கு இரண்டு நாள் எடுக்கும் ஐயா.
சுருக்கமாக என்ன எழுதியிருக்கு என்று சொன்னால், நல்லது ராசா. 

சுருக்கமாக என்னத்தை சொல்லுறது, கமுக்கமாக சொல்கிறேனே...

உலகத்துக்கு, மாடு சொன்னா புரியாதாம், மணி கட்டின மாடு சொல்லவேணுமாம்.

சிங்களவர்கள் நெளிய அல்லது பதைபதைக்க காரணம் என்னெவெண்டால், முள்ளிவாய்க்கால் பத்தி கதைத்தால், அதுவா.... தமிழ் சிறியர் புலிகளிடம் காசை வாங்கிப்போட்டு புலுடா விடுகிறார் எண்டெல்லே சொல்லுவினம்....

ஆனால்... இது... சிங்கள ஊடகவியலாளர்..... அவரது மகள்.... கடதாசி போட்டு.... கிளிச்சு போட்டுது... 

உதுக்கு போய், புலிகள் காசு கொடுத்திட்டினம் எண்டு சொல்ல ஏலாது கண்டியளே...

ரத்தின சுருக்கமாக கோத்தாவின், வீரதீரங்களை எல்லாத்தையும் புட்டு, புட்டு வைச்சு, கேட்டுதே ஒரு கேள்வி....

என்ன போக்கணம் கேடில்லை உந்த மனிதர், விசாரித்து, நீதி வழங்குவார் எண்டு, உந்த உலகம் நம்புது?

  • இத்தகைய ஒருவரின் இலங்கை அரசிடம் இருந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் என்று  சர்வதேச சமூகம் தொடர்ந்து எதிர்பார்க்கிறது.

உண்மையில், கொழும்பு நெளியுதோ இல்லையோ, உலகத்தில, மனித உரிமைகள் எண்டு, பீத்திக் கொண்டு திரியிற கோஸ்ட்டிகள் நெளிய வைத்திருக்கிறது எண்டதுதான் உண்மை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.