Jump to content

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், லசந்தா மகள், அகிம்ஸா எழுதிய. கொழும்பை நெளிய, வைத்துள்ள கடிதம். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், லசந்தா மகள், அகிம்ஸா எழுதிய. கொழும்பை நெளிய, வைத்துள்ள கடிதம்.

2007ம் ஆண்டு, இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர்களில் ஒருவரான எனது தந்தை லசந்தா விக்ரமதுங்கே, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்சே அரசாங்க நிதியில் 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த ஆயுத ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தினார்.

 அவதூறு குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு, எனது தந்தை தலைமை ஆசிரியராக இருந்த, சண்டே லீடரின் அச்சகம், நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பலால் தாக்கப்பட்டது. ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டனர், பத்திரிகைகளுக்கு தீ வைக்கப்பட்டது.

ஜனவரி 8, 2009 அன்று, ஊழல் நிறைந்த ஆயுத ஒப்பந்தம் குறித்து எனது தந்தை சாட்சியமளிக்க சில வாரங்களுக்கு முன்பு, இராணுவ உளவுத்துறை அதிகாரிகள், வேலைக்குச் சென்றபோது அவரை பதுங்கியிருந்து, கொலை செய்தனர்,

எனது குடும்பத்தினரைக் பிரித்தெறிந்து, என் ஆத்மாவில் ஒரு பெரும் துவாரம் உண்டாக்கியதுடன்,அதன் மூலம் இலங்கை முழுவதும் இருந்த பத்திரிகையாளர்களைப் பயமுறுத்தினர்.

நான் ராஜபக்சேவையே இதுக்கு பின்னால் இருந்தார் என்று சொல்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸில், நீதிமன்றில், என் தந்தையின் கொலையில் பங்கு வகித்ததற்காக நான், அவர் மேல் வழக்குத் தொடுத்தபோது இதை நான் தெளிவுபடுத்தினேன்.

இலங்கை ஜனாதிபதியாக அவர் தேர்வு செய்யப்பட்ட, நவம்பர் 2019 தேர்தல் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அளவிட முடியாத வேதனையையும், இலங்கை சிவில் சமூகத்தின் ஒழுங்கமைப்புக்கு பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

என் தந்தையின் கொலை குறித்து பிபிசி நிருபர் ராஜபக்சரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் கேள்வியைத் தவிர்த்து, சிரித்தபடி கடந்து சென்றார்.

கடந்த வாரம், யு.என். மனித உரிமைத் தலைவர் மைக்கேல் பேச்லெட் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து பெரும் அதிர்வு தரும் அறிக்கையை முன்வைத்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் தொடர்ச்சியாக தோல்வியுற்றதற்கு இலங்கையை பொறுப்புக்கூற வைக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

அடுத்த வாரங்களில், யு.என். மனித உரிமைகள் கவுன்சில் சாத்தியமான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கும்.

நவம்பர் 2005 இல் மஹிந்த ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் தனது சகோதரர் கோட்டபயாவை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பில் வைத்தார்.

ஒன்றாக, அவர்கள் இலங்கையில் சில மோசமான அட்டூழியக் குற்றங்களை நடாத்தினர், மேலும் அவர்களுக்கு எதிராக பேசுவதற்கு துணிந்த எந்த பத்திரிகையாளரையும் திட்டமிட்டு குறிவைத்தனர்.

2015 இல் தனது சகோதரரின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து சுருக்கமாக பதவியை இழந்த போதிலும், குற்றம் சாட்டப்பட்ட இந்த போர்க்குற்றவாளி - கோட்டபய ராஜபக்ச, இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கையில்  ஆவணப்படுத்தப்பட்டபடி, 2009 இல் எனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த மறைப்பு நாடகம், மிகச்சிறப்பாக இருந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கை, மரணத்திற்கான காரணம் குறித்த மருத்துவமனையின் கண்டுபிடிப்புகளுக்கு முரணாக இருந்தது.

புலனாய்வாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். சான்றுகள் வேண்டுமென்றே குளறுபடிக்குள்ளாகின. போலி சான்றுகளும் உருவாக்கப்பட்டன.

கொலை தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் என்று இரண்டு அப்பாவி பொதுமக்கள் கைதாகி பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர், அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. மற்றொருவர் கைது செய்யப்பட்டு காவலில் இறந்தார்.

எனது தந்தை கொல்லப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 8, 2015 அன்று, இலங்கையர்கள் ராஜபக்ஷ ஆட்சிக்கு வாக்களித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர், இது முந்தைய ஆட்சியின் கீழ் பல கொடுமைகளுக்கு பலியானவர்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்தது.

பொலிஸ் புலனாய்வாளர்கள் விரைவில், அப்போது, பாதுகாப்பு செயலாளர் ராஜபக்சரால் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும், 'திரிப்போலி' படைப்பிரிவில் 'ஸீரோ', எனும் பெயரில், ஒரு இராணுவ கொலைக் குழு இயங்கியதை கண்டறிந்தனர்.

ஆனால் புலனாய்வாளர்கள் ராஜபக்ஷவின் பங்கை அம்பலப்படுத்தியபோது, அவர்களின் விசாரணைகள் தடுமாற தொடங்கின. இலங்கை நீதித்துறையைப் பொறுத்தவரை, அவர் சட்டத்துக்கு மேலானவர்.

அவர் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவுகளை பிறப்பிக்க நீதிபதிகள், பல நூற்றாண்டுகள் நாட்டில் நீடித்த, நீதி பாரம்பரியங்களை, உடைத்து எறிந்தார்கள்.

இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள், கொல்லப்பட்டமை தொடர்பாக நீதிமன்றம் அவரிடம் கேள்வி கேட்க முயன்றபோது, ஒரு மேல் நீதிமன்ற நீதிபதி அந்த வழக்கினை விசாரிக்க தடை விதித்தார்.

மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, வேறு,  நீதிபதிகள் அந்த விசாரணைகள், முன்னோக்கி செல்வதைத் தடுக்க உத்தரவுகளை பிறப்பித்தனர்.

இதனாலேயே, நான் அமெரிக்க நீதிமன்றங்களுக்கு, நீதி தேடி போக முடிவு செய்தேன். அந்த வேளையில், ராஜபக்சே ஏற்கனவே ஜனாதிபதி பதவிக்கான  ஒரு புதிய தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருந்தார்.

அவரது முழக்கமாக இருந்தது: உளவுத்துறையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் அட்டூழியங்கள் குற்றம் சாட்டப்பட்ட உளவுத்துறை அதிகாரிகளை விடுவித்தல்.

எனது தந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவரை இலங்கையர்கள் ஜனாதிபதியாக 15 மாதங்களுக்கு முன்பு, தேர்ந்தெடுத்தபோது, நான் அதனை, திகிலுடன் பார்த்தேன்.

ஜனாதிபதியாக அவரது புதிய அந்தஸ்து அவருக்கு வழக்குகளில் இருந்து விடுவிக்கும் சட்டப்பூர்வ, சக்தியைக் கொடுத்தது.

ஜனாதிபதியாக, ராஜபக்ச, குற்றவாளிகள், தண்டனை பெறாதிருப்பதை உறுதிசெய்வதில்,  நேரத்தை வீணாக்கவில்லை.

அவரை சட்டத்திற்கு மேலாக வைத்திருந்த நீதிபதிகளை அவர் பதவி உயர்த்தினார். குழந்தைகளை கொன்றதற்காக போர்க்குற்றத்தில் தண்டனை பெற்ற ஒரு சிப்பாய்க்கு அவர் மன்னிப்பு வழங்கினார்.

இத்தகைய கொடுமைகளை விசாரித்த துப்பறிந்த, நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர். இலங்கையின் குற்றவியல் புலனாய்வுத் துறையை நடத்தி, பல விசாரணைகளில் முன்னேற்றங்களை வழிநடத்திய FBI பயிற்சி பெற்ற பொலிஸ் நிர்வாகி ஷானி அபேசேகர, போலியான குற்றச்சாட்டுக்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2020 மே மாதத்தில், ராஜபக்ஷ சிஐடியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தார் - எனது தந்தையின் கொலைக்கான ஆதாரங்களை மூடிமறைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு போலீஸ்காரரே அவர்.

இத்தகைய ஒருவரின் இலங்கை அரசிடம் இருந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் என்று  சர்வதேச சமூகம் தொடர்ந்து எதிர்பார்க்கிறது.

ராஜபக்சேவின் தேர்தல் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒவ்வொரு கதவையும் மூடியுள்ளது என்பதை பாதிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் சர்வதேச சமூகம் நன்கு அறிவார்கள்.

மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவையின், பொருளாதாரத் தடைகள், பயணத் தடைகள் மற்றும் ஒரு சுயாதீனமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை உட்பட, வலுவான சர்வதேச நடவடிக்கை இல்லாமல் -  இலங்கையர்கள் கடந்தகால மனித உரிமை மீறல்களை மீண்டும் மீண்டும் உள்ளாகும் பேர் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

தனது கொலையை முன்கூட்டியே உணர்ந்து கொண்டிருந்த, என் தந்தை, தனக்கே ஒரு இரங்கல் கட்டுரையினை எழுதி இருந்தார். அதில் "கருத்து சுதந்திரத்தை" கட்டுப்படுத்துவதற்கான, முதன்மை கருவியாக படுகொலைகள் நடக்க தொடங்கிவிட்டது என்று கூறி இருந்தார்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், எதேச்சதிகாரம் மிக்கவர்களால் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதை காண்கின்றோம். இது விசயத்தில், உலகம் ஒரு உறுதியான நிலைப்பாடினையும், கொலைகார எதேச்சதிகாரர்கள் தமது, அநியாயங்களுக்கு விலை கொடுப்பதை உறுதிசெய்யவும் வேண்டிய, நேரம் இது.

அதேவேளை இன்று, அணா பொலிட்கோவ்ஸ்காயா, ஜமால் கஷோகி மற்றும் என் தந்தை போன்ற ஹீரோக்களின் கொலையாளிகள், உலக அரங்கில், நாடுகளின் தலைவர்களுடன் தோள்பட்டை தேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, ஒரு பத்திரிகையாளரைக் கொல்வது வளர்ந்து வரும் எதேச்சதிகாரர்களுக்கான மற்றொரு சாதாரணமான சடங்கு என்று தெரிகிறது.

உபயம்: வாஷிங்டன் போஸ்ட்

யாழுக்காக எனது மொழிபெயர்ப்பு. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மொழி பெயர்ப்புக்கு,   நன்றி... நாதம்ஸ்.
இந்தக் கட்டுரையை.... வாசிக்க, எனக்கு இரண்டு நாள் எடுக்கும் ஐயா.
சுருக்கமாக என்ன எழுதியிருக்கு என்று சொன்னால், நல்லது ராசா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை அழிக்க லசந்தவின் மகள் முயற்சி! - அரசு குற்றச்சாட்டு.!

Screenshot-2021-03-06-10-45-02-875-com-a

சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு இலங்கை அரசு நீதியைத் தராமல் மறுத்து வருகின்றது என அவரது மகள் அகிம்ஸா விக்கிரமதுங்க வொஷிங்டன் போஸ்ட் இதழுக்கு எழுதியிருந்த கட்டுரையை அரசு கடுமையாக விமர்சித்துள்ளது.

இலங்கைத் தலைவர்கள் மீது பயணக் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதிப்பதற்காக சர்வதேச சமூகத்தை திரட்டி இலங்கையை அழித்து அதன் வீழ்ச்சியைப் பார்ப்பதற்கு அகிம்ஸா விக்கிரமதுங்கவும் மேலும் பலரும் முயற்சிக்கின்றனர் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இதேவேளை, புலம்பெயர் குழுக்கள் மற்றும் எதிரணி அரசியல்வாதிகள் உள்ளிட்ட சில தரப்பினர் அகிம்ஸா விக்கிரமதுங்கவை இயக்குகின்றனர் என்று அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை சவால்களை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் லசந்தவின் மகள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது துரதிஷ்டவசமானது.

குற்றவாளிகளை ஒருநாள் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி வழங்கும் முயற்சியில் அகிம்ஸா வெற்றி பெறுவதற்காக வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்" - என்றார்.

வொஷிங்டன் போஸ்ட் இதழுக்கு அகிம்ஸா விக்கிரமதுங்க எழுதியுள்ள கட்டுரையில்,

"2007 இல் பாதுகாப்புச் செயலாளராகக் கோட்டாபய ராஜபக்‌ச இருந்தபோது நடந்த ஆயுதக் கொள்வனவின்போது 10 மில்லியன் டொலர் ஊழல் நடந்திருப்பது பற்றி எனது தந்தை லசந்த விக்கிரமதுங்க வெளிப்படுத்தியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்‌ச அவரை அவதூறு குற்றச்சாட்டில் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் எனது தந்தையின் பதிப்பகம் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

குறித்த ஆயுத ஊழல் தொடர்பில் எனது தந்தையிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுவதற்கு சில வாரங்களே இருந்த நிலையில், 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி எனது தந்தை பணிக்குச் சென்று கொண்டிருக்கும்போது இராணுவப் புலனாய்வாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்‌சவையே அதற்கு நான் பொறுப்பாளியாக்குகின்றேன" - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ச ஜனாதிபதியாக வெற்றி பெற்று விட்டதால், தனது தந்தையின் படுகொலைக்கு நீதி கோரும் முயற்சிகள் வெற்றியளிக்காத நிலை நீடிக்கின்றது எனவும் அந்தக் கட்டுரையில் அகிம்ஸா தெரிவித்துள்ளார்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளும் சாட்சியங்களும் ராஐபக்‌ச அரசால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் அகிம்ஸா தனது நீண்ட கட்டுரையில் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://aruvi.com/article/tam/2021/03/06/23350/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பை நெளிய, வைத்துள்ள கடிதம்.

கொழும்பை மட்டுமல்ல, கொழும்புக்கு முட்டு கொடுக்கும் நம்மில் சிலரையும் நெளிய வைத்திருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது கடிதம், உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளதாக இலங்கையின் டெய்லி மிரர் பத்திரிகையை தெரிவிக்கிறது.

இதனை, அமெரிக்க காங்கிரசின், வெளியுறவுகளுக்கான குழு, புதிய அரசு, மனித உரிமை விடயங்களில், தனது உலகளாவிய தமைத்துவத்துவதை மீளுறுதிப்படுத்த வேண்டும் என்றும், இலங்கையில், நீதிக்கும், நியாயத்துக்குமான கோரிக்கைகளை ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. உலகளாவிய ரீதியில், பத்திரிகைகளும், ஆசிரிய பீடங்களும் இதனை மையமாக வைத்து, எழுதி வருவதாகவும், மனித உரிமை ஆர்வலர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

ஹார்வார்ட் பல்கலைக்கழக சட்டத்துறையும், பல தலைசிறந்த ஊடகவியலாளர்களும், இவரது கடிதம் குறித்து கருத்து பகிர்ந்து வருகிறார்கள்.

இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர், மங்கள சமரவீர, அகிம்சாவின், தைரியமான, நீதிக்கான போராட்டத்துக்கு, வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது, தந்தையின் கொலைக்கான நீதி தேடும்,அவரது முயற்சியில் எவ்வித தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

ஆனாலும், ஐநா, ஒரு முடியை கூட புடுங்க முடியாது என்று, தலையில் முடி இழந்து போயிருக்கும், வீரசேகர கொக்கரிக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

 மொழி பெயர்ப்புக்கு,   நன்றி... நாதம்ஸ்.
இந்தக் கட்டுரையை.... வாசிக்க, எனக்கு இரண்டு நாள் எடுக்கும் ஐயா.
சுருக்கமாக என்ன எழுதியிருக்கு என்று சொன்னால், நல்லது ராசா. 

சுருக்கமாக என்னத்தை சொல்லுறது, கமுக்கமாக சொல்கிறேனே...

உலகத்துக்கு, மாடு சொன்னா புரியாதாம், மணி கட்டின மாடு சொல்லவேணுமாம்.

சிங்களவர்கள் நெளிய அல்லது பதைபதைக்க காரணம் என்னெவெண்டால், முள்ளிவாய்க்கால் பத்தி கதைத்தால், அதுவா.... தமிழ் சிறியர் புலிகளிடம் காசை வாங்கிப்போட்டு புலுடா விடுகிறார் எண்டெல்லே சொல்லுவினம்....

ஆனால்... இது... சிங்கள ஊடகவியலாளர்..... அவரது மகள்.... கடதாசி போட்டு.... கிளிச்சு போட்டுது... 

உதுக்கு போய், புலிகள் காசு கொடுத்திட்டினம் எண்டு சொல்ல ஏலாது கண்டியளே...

ரத்தின சுருக்கமாக கோத்தாவின், வீரதீரங்களை எல்லாத்தையும் புட்டு, புட்டு வைச்சு, கேட்டுதே ஒரு கேள்வி....

என்ன போக்கணம் கேடில்லை உந்த மனிதர், விசாரித்து, நீதி வழங்குவார் எண்டு, உந்த உலகம் நம்புது?

  • இத்தகைய ஒருவரின் இலங்கை அரசிடம் இருந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் என்று  சர்வதேச சமூகம் தொடர்ந்து எதிர்பார்க்கிறது.

உண்மையில், கொழும்பு நெளியுதோ இல்லையோ, உலகத்தில, மனித உரிமைகள் எண்டு, பீத்திக் கொண்டு திரியிற கோஸ்ட்டிகள் நெளிய வைத்திருக்கிறது எண்டதுதான் உண்மை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.