Jump to content

மாத்தி யோசியுங்கள்.. சிறீதரன் அவர்களே.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தி யோசியுங்கள்.. சிறீதரன் அவர்களே.!

Screenshot-2021-03-06-10-58-26-605-org-m

கிழக்கு மாகாண சபையின் முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டுமென சிவஞானம் சிறீதரன் எம் பி சாணக்கியனைக் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்துக்கு முதன் முதல் தெரிவாகும் தமது உறுப்பினர்களுக்கு கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட நேரம் வழங்குவது மரபு. ஆனால் அந்தத் தார்மீகக் கடமையைச் செய்யவில்லை. அப்படியிருந்தும் சுழித்துக்கொண்டோடிய சாணக்கியன் இந்த வலையில் வீழ்ந்து விடுவாரென நாம் நம்பவில்லை.

இன்று கிழக்கில் மட்டுமல்ல நாடு முழுவதிலுமுள்ள தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஹீரோ சாணக்கியன்தான். பல அரசியல் வாதிகள், ஊடகவியலாளர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் விடயம் இது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாந்தியெடுக்கிறார்கள். உண்மையில் கட்சியின் நலன், எதிர்காலத்தில் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லவேண்டிய தேவை, இவையெல்லாவற்றையும் விட இனத்தின் நன்மையை கருதுபவராக இருந்தால் சிறீதரன் கட்சியின் செயலாளராக வரவேண்டும் என்றுதான் சாணக்கியனுக்கு சொல்லியிருப்பார்.

முதன் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக வந்த ஒருவரை தடுப்பிலிருந்து வந்த ஒரு முன்னாள் போராளி சந்தித்தார். அவரிடம் “சம்பந்தன் ஐயா போல ஆட்கள் இப்படியே தொடர்ந்து இழுபட்டுக்கொண்டிருக்காமல் அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும். இப்ப நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறன். இன்னும் ஒருநாடாளுமன்ற உறுப்பினரானதுக்கு பிறகு தேர்தலில் போட்டியிட மாட்டன். அடுத்தவர்கள் வர வழிவிடுவேன்” என்றார். இதனைக் கேட்ட அந்தப் போராளி புன்னகைத்துக்கொண்டார்.

ஒரு உரையாடலின் போது “பதவியை விடத் தயார்;தயார் என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமேயொழிய ஒரு நாளும் அதை விடக்கூடாது” என்று திரு.அமிர்தலிங்கம் தனக்கு அறிவுறுத்தியதாக குறிப்பிட்டார் .  ஏதோ தெரியவில்லை அந்த நேரம் பார்த்து இந்த விடயம் நினைவுக்கு வந்தது . இன்று கிழக்கில் கட்சியை யாரிடம் ஒப்படைத்திருக்கிறார் மாவை ? ஒரு கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு விருப்பு வாக்கில் இறுதி இடத்தைப் பெற்றுக்கொண்ட பொன். செல்வராஜாவிடம் 2013ல் தனது பாட்டனார் சி.மு இராசமாணிக்கத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட விருந்த நிதியத்தின் நிகழ்வுக்கு சம்பந்தன் ஐயாவை அழைத்திருந்தார் சாணக்கியன். சம்பந்தன் ஐயாவின் வருகை செல்வராஜாவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. தொலைபேசியில் சாணக்கியனைஅழைத்து 2020 வரை அரசியலுக்கு வரும் எண்ணம் வரக்கூடாது என எச்சரித்தார்.

இது சம்பந்தமாக மாவையை நேரில் சந்தித்துக் கூறினார் சாணக்கியன்.எப்போது தான் மாவை தனது ஆளுமையை நிரூபித்து காட்டியுள்ளார் ? வளவளா பதில்தான்.

இக் கால காலகட்டத்தில் தான் அருண் தம்பிமுத்து தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு சாணக்கியனை அழைத்தார். அவரும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்..அரசியலில் களமிறங்கினார்..அவ்வருடம் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வில் சாணக்கியன் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 24.இது நாள் வரை தமிழரின் விடுதலைப்போராட்டம் அரச பயங்கர வாதத்தின் விளைவுகள் பற்றியெல்லாம் எதுவுமே அவருக்குத் தெரியாது. துயிலுமில்லத்தில் கண்ட அபூர்வமான காட்சிகள் அவரை உலுப்பின. அந்த வித்தியாசமான உணர்வலைகள் பற்றி கனவிலும் அவர் அறிந்ததில்லை. தான் எங்கே நிற்கவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார்.

அருண் தம்பிமுத்துவின்  கட்சியிலிருந்து விலகினார்.அவரைப் பொறுத்தவரை அது ஒரு அரசியல் விபத்து. இத் தவறை ஒப்புக்கொள்ளும் தைரியம் அவருக்கு இருந்தது.

தந்தை செல்வாவுடன் பழகிய கிழக்கு மாகாணத் தமிழ் இளைஞர் பேரவைக் காரரும் பின்னாளில் ஆயுதப் போராட்டத்தில் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் வரை பயணித்தவருமான பாசி அல்லது யோகன் பாதர் எனப்படும் பாலிப்போடி சின்னத்துரையை தனது இல்லத்துக்கு வரவழைத்து கலந்துரையாடினார் சம்பந்தன் ஐயா. உடனே மாவையும் இன்னுமொரு முக்கிய புள்ளியும் புலிகள் அரசியலுக்குள் கொண்டு வரப்பட வேண்டியவர்கள் அல்ல ;

அவர்களை வைக்கவேண்டிய இடத்தில்தான் வைக்கவேண்டும் எனத் தமது பலத்த ஆட்சேபனையை த் தெரிவித்தனர்.(ஆனால் மாவீரர் குடும்பத்தினர், முன்னாள் போராளிகளின் வாக்குகள் மட்டும் வேண்டும்) தமிழ் இளைஞர் அரசியலில் தன்னை விட யாருக்கும் வரலாறு இருக்கக் கூடாது என்பது மாவையின் நிலைப்பாடு. எப்படி அவர் பாலிப்போடி சின்னத்துரையை ஏற்றுக்கொள்வார்? புதிய சுதந்திரனும் மாவையையே சுற்றிச் சுற்றி வரலாறு எழுதியது.

இந் நிலையில் யோகன் பாதரும் சாணக்கியனும் சந்தித்துக் கொண்டனர். சாணக்கியனுக்கு முழுமையான ஆதரவளிக்க முடிவெடுத்தார் யோகன் பாதர். சாணக்கியனுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கியமை தொடர்பாக பொன்.செல்வராஜா அதிருப்தி வெளியிட்டார். அருண் தம்பிமுத்துவுடன் சிலகாலம் இணைந்து செயற்பட்டவர்என்று குற்றஞ்சாட்டினார்.இதற்கு நீங்கள் எல்லாம் முன்பு எங்கேயிருந்தீர்கள்? என்று கேட்கப்பட்டதும் பதில் சொல்ல முடியவில்லை .

பொன்.செல்வராஜாவினால் .(1977 தேர்தலில் கணேசலிங்கம் போட்டியிட்போதே செல்வராஜாவின் உடலில் தேசியக் காற்றுப்பட்டது. கணேசலிங்கம் வெற்றி பெற்ற பின் அவரது கோவை தூக்குபவராகத் திரிந்தார். அதற்கு முன் இவர் தம்பிராஜாவின் ஆதரவாளர். 1970 தேர்தலில் ஐ.தே. கட்சியில் போட்டியிட்டு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியவர் தம்பிராஜா ) இந் நிலையில் சாணக்கியன் சிங்களத்தியின் மகன் என்ற கதையை தமிழரசுக் கட்சியினரே அவிழ்த்து விட்டனர். எல்லோருடைய சதியையும் தாண்டி 33332 விருப்பு வாக்குகளை பெற்றார் சாணக்கியன். அரசுத் தரப்பில் பிள்ளையானை,வியாழேந்திரனை வெல்ல வைப்பதற்காக சாத்தியமான சகல விடயங்களும் மேற்கொள்ளப்பட்டன.

தேர்தலின் பின்னர் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் உள் வீட்டுக் குழப்பங்களையடுத்து செயலர் ராஜினாமா செய்யவேண்டியேற்பட்டது. இந் நிலையில் புதிய செயலாளராக கட்சியின் நீண்ட நாள் உறுப்பினரான பாலிப்போடி சின்னத்துரையை தெரிவு செய்வதே நல்லது என மாவைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. பிள்ளையான்,கருணாவை எதிர்கொள்வதற்கு சின்னத்துரையே பொருத்தமானவர் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது சின்னப்பிள்ளைத்தனமாக மாவை ஒரு கேள்வி கேட்டார்.

“அது சரி இவர்கள் போன்றோரெல்லாம் இருக்கும் போது பிள்ளையான் எப்படி இவ்வளவு வாக்குகள்( 54108) பெற்றார்” என்று. முதலில் தனது நிலையை அவர் உணரவில்லை. 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் உள்ள தான் இருக்க  அங்கஜன் எப்படி 36895 வாக்குகளை பெற்றார் என்று யோசித்திருந்தால் இவ்வாறான கேள்வியெழுந்திருக்காது.

உண்மையில் புலிகளை மட்டுமல்ல புலிகள் சார்பானோரும் நிர்வாகப் பதவியில் அமர்வதை அவரால் சகிக்க முடியாது. மக்கள் பிரதிநிதியாக இவர் தெரிவாகும் முன்னரே 1970 களில் யாழ். மாநகர உறுப்பினராக விளங்கியவர் சொலமன் சூ சிறில். (இராஜா விஸ்வநாதன் மேயராக இருக்கும்போதே).இன்றுள்ள மாநகர சபை உறுப்பினர்களில் இவரே சீனியர். இரு முறை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது.

ஆர்னோல்ட்டை மேயர் வேட்பாளராக அறிவித்தால் எதிர்த்தே வாக்களிப்போம் என்று EPDP தெளிவாக அறிவித்து விட்டது. எண்ணத் தெரியாத ஒருவரா தமிழரசுக் கட்சித் தலைவர் ? இல்லை நன்றாகவே தெரியும். எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு சகுனப் பிழை ஏற்பட வேண்டும் என்று எண்ணித்தான் சொலமன் சூ சிறிலை மேயர் வேட்பாளராக அறிவிக்காமல் விட்டார். எப்படியோ புலிகள் சர்பானோரை மேயர் பதவியில் அமர விடாமல் செய்தாயிற்று என்று பூரணமனத் திருத்தியுடன் அன்று தூக்கத்துக்குச் சென்றிருப்பார்.

மணிவண்ணனை மேயராக்கும் எண்ணம் அவருக்கு இருந்திருக்காது என்றும் சொல்ல முடியாது.இந் நிலையில் தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிக் காரரான பாலிப்போடி சின்னத்துரையை செயலாளராக்க எப்படி சம்மதிப்பார் மாவை ?
இந் நிலையில் கட்சியை இளைஞர் மத்தியில் கொண்டுசெல்லவும், மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பாதைக்கு வழிவகுக்கவும் சுயநலமின்றிச் சிந்திப்பவராக இருந்தால் சாணக்கியனைக் கட்சி செயலாளராக்க வேண்டும் என்று அடுத்த செயற் குழுக் கூட்டத் திலோ பொதுச் சபையிலோ வலியுறுத்த முனைவாரா சிறீதரன் ? பாலிப்போடி சின்னத்துரையைத்தான் மாவையால் நிராகரிக்க முடியுமே தவிர சாணக்கியன் விடயத்தில் அவரால் எதுவும் கூறமுடியாது.

தார்மீக ரீதியில் செயலர் பதவி மட்டக்களப்புக்குத்தான். இதனை கட்சித் துணைத் தலைவரான சி. வி.கே சிவஞானம் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

கட்சிச் செயலர் பதவியில் இன்னொருவரும் கண் வைத்துள்ளார்.”பயங்கரவாதத்தை அழித்த இந்த அரசாங்கத்துக்கு விசர் நாய்களைக் கொல்வது என்பது கஸ்ரமான செயலல்ல “யூன் மாதம் 9ம் திகதி 2011 ஆண்டு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆற்றிய உரை இது.

நாடாளுமன்ற உரைகளைத் தொகுத்து வெளியிடும் அரசின் ஹன்சாட்டில் பக்கம் 1336 இல் இவ் விடயம் காணப்படுகிறது.விலங்குகள் நலச் சட்டம் மீதான விவாதத்திலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறுவதை வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் ரசிக்கலாம் மாவை. இது அரியநேந்திரனுக்கான சிறப்புத் தகுதியெனவும் கருதலாம்.ஆனால் இதனை சிறீதரன் ஏற்க மாட்டார் என்றே நாம் நம்புகின்றோம்.

இதே வேளை கட்சிரீதியாக துணிச்சலுடன் செயலாற்றும் தகுதி சாணக்கியனுக்கு உண்டுதான். ஆனால் தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு அவருக்கு எதுவுமே தெரியாது. தலைவர் போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அவருடன் கூட இருந்த சிலர் இன்றும் பார்வையாளர்களாக அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் .

போராட்டம் ஆரம்பித்த காலத்தில் சாணக்கியன் பிறந்திருக்க வில்லை இத்தனை வருடத்தில் சந்தித்த வேதனைகள், வலிகள் அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. இந்தியா தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சியும் ,ஆயுதமும் புகலிடமும் வழங்கியது. பின்னர் ஸ்ரீலங்கா சார்பில் தமிழர் மீது போர் தொடுத்தது. இந்தியாவை இந்த மண்ணிலிருந்து விரட்ட என்னென்ன செய்யவேண்டுமோ அதனைப் புலிகள் செய்தனர். எனவே வரலாறு எந்தக் கட்டத்திலும் எப்படியும் மாறலாம்; இதற்கு ஆண்டுக்கணக்கில்லை என்ற விடயங்களை ஸ்ரீதரனும் யோகன் பாதரும் சாணக்கியனுக்கு விளக்க வேண்டும் . முற் கற்பிதங்கள் தேவையில்லை

எனவே கட்சிச் செயலாளராக சாணக்கியனை நியமிக்கவேண்டும் என ஏனையவர்களை வலியுறுத்தும் பணியை அவர் விரைந்து மேற் கொள்ளவேண்டும். முதல்வர் வேட்பாளர்கள் யார் என்ற சர்சைகளை நிறுத்துமாறு சம்பந்தன் ஐயாவும் சொல்லிவிட்டார். எனவே கட்சியின் நலன் கருதி சாணக்கியனை செயலாளராக்க முனைவார் சிறீதரன் என நம்புகிறோம்.

அவதானி

https://thamilkural.net/thesathinkural/views/127857/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.