Jump to content

ஊர் வம்பும் கைபேசியும்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.0-02-05-cbd1d9980061c8cb1a79630838aac7a848eadade3004c700e4a767e5f48bc4ad_1c6da161f29868.jpg.e28a87345d1924d0576c3a6d4bb29c8e.jpg

 

ஊர் வம்பும், கைபேசியும்..!

*********************

அந்தக்காலம்..

நல்லதண்ணிக் கிணத்தில

நாலுபேர் கூடுமிடத்தில

பக்கத்து வீட்டு பழசுகள்-2

பவ்வியமாய் வந்தாலே

குலநடுங்கி போகுமாம்

குடும்பங்கள் எல்லாம்.

 

மூல வீட்டுப் பெட்ட

முளங்காலுக்கு மேல 

போடுது சட்ட

ஓல வீட்டுப் பொடியன்

ஒருத்தியோட  ஓடிட்டான்.

 

வேலைக்கு அவன் போக-வீட்ட

வேறொருவன் நிக்கிறான்

காலக் கொடுமையென

கதிராச்சி முடிக்க முன்ன..

 

குப்பத்தொட்டியில ஒரு

குழந்த கிடந்தது-அது

பக்கத்து வீட்டு 

பணக்காரச் சமாச்சாரம். 

 

எண்டு தொடங்கி

எல்லா வரலாறும்

சொண்ட நெளிச்சு

சொல்லி முடிக்குமாம்

மற்றது..

 

கடுகளவு உண்மையை

மடுவளவு பெரிதாக்கி

வதந்திய பரப்பிவிட்டு

வாயமூடு நமக்கேன்-ஊர் 

வம்பு என்று சொல்ல..

 

வந்த சனமெல்லாம்

வாயும் காதும் வைத்து

சொந்தங்களுக்குள்ளே

சொறிநாயாய் கடிபட்டு

வெட்டுக்குத்தில போய்-ஊரே

வெடிச்சு பிளந்து

உண்மை பொய் தெரியாமல்

ஓராயிரம் பிரச்சனைகள்.

 

கலியாணக்குளப்பமும்

கருமாரியும்-வதந்தி

கதை பேச்சால்  நடந்த

அந்தகாலம்.

இன்றும் வேறு வடிவில

வீட்டுக்குள்ள திரியுதாம்

எச்சரிக்கை..

கையில இருக்கிற

கை பேசியை நம்பிறதால்

பொய் வதந்தியெல்லாம்

பொட்டளமாய் கொட்டி

குடுப்பத்தை குலைத்து

கொடுமை நடக்கிறது.

 

கணவனுக்கு போண் வந்தால்

மனைவிக்கு தூக்கமில்லை

மனைவிக்கு மெசேச் வந்தால்

கணவனுக்கு வாழ்க்கையில்லை.

 

உள்ளத்து தூய்மையில்லா

உணர்வு எமக்கிருந்தால்

கள்ளப் போண் வருகுதென்று

கணவன் மனைவிக்கே

கை பேசி மூட்டி விட்டு-பல

கலவரங்கள் அது பார்க்கும்.

 

பிள்ளைகளை வழி நடத்த

முதலில்..

பெற்ரோரே முடிவெடுங்கள்

இல்லையேல்

ஒவ்வொரு மூலையாய்

உங்களைப் போல் 

பிள்ளைகளும்.

 

குரோதம் தவிர்த்து

குடும்பத்துக்குள்ளே

திறந்த மனதுடன்

திறப்பின்றிப்போணை

அனைவரும் பார்க்க

அனுமதித்தாலே

வதந்திகள் பயப்படும்

வாழ்வே ஒளி பெறும்.

 

அன்புடன்  -பசுவூர்க்கோபி-

07.03.2021

  • Like 17
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பசுவூர்க்கோபி said:

அந்தக்காலம்..

நல்லதண்ணிக் கிணத்தில

நாலுபேர் கூடுமிடத்தில

பக்கத்து வீட்டு பழசுகள்-2

பவ்வியமாய் வந்தாலே

குலநடுங்கி போகுமாம்

குடும்பங்கள் எல்லாம்.

 

கிணற்றடி மட்டுமல்ல வேலி எல்லைகளில் பெண்கள் ஒன்று கூடுவார்கள்.
சிலவேளை ஊரே பற்றி எரியும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

கிணற்றடி மட்டுமல்ல வேலி எல்லைகளில் பெண்கள் ஒன்று கூடுவார்கள்.
சிலவேளை ஊரே பற்றி எரியும்.

உண்மைதான் ஈழப்பிரியன் அவர்களே நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ மட்டும் நம்மவர்கள் ஊர் வம்பு சும்மாவா இருக்கிறது..சில வேளைகளில் தொடர்ந்து போண் வந்தாலே அன்றைய நாள் தொலைஞ்சிடும்.இது உண்மை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

கவிதைக்கு நன்றி , கோபி.

உங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பசுவூர்க்கோபி said:

அந்தக்காலம்..

நல்லதண்ணிக் கிணத்தில

நாலுபேர் கூடுமிடத்தில

பக்கத்து வீட்டு பழசுகள்-2

பவ்வியமாய் வந்தாலே

குலநடுங்கி போகுமாம்

குடும்பங்கள் எல்லாம்.

நல்லதண்ணி கிணத்தடியையும் கைத்தொலைபேசியையும் இணைச்சது மிக பிரமாதம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்று . கை கால் வைத்த வதந்திக்கு பரவும் வேகமும் அதிகம். தொலை பேசி தொல்லைபேசியாய் போச்சு 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ் கால நியத்தை கவிதை வடிவில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பசுவூர்க்கோபி, இந்த தொலை பேசியால் பல பதிப்புகள் இருந்தாலும் நன்மைகள் இருக்கு, பாவிக்கும் விதத்தை பொறுத்து, பிள்ளைகளுக்கும் பழக்க வேண்டும்

  • Like 1
Link to comment
Share on other sites

16 hours ago, பசுவூர்க்கோபி said:

கடுகளவு உண்மையை

மடுவளவு பெரிதாக்கி

வதந்திய பரப்பிவிட்டு

வாயமூடு நமக்கேன்-ஊர் 

வம்பு என்று சொல்ல..

தொழிநுட்பம் வளர வளர வதந்திகளும் அதற்கேற்றால் போல் கடுகதியில் உலகெங்கும் பரப்பப்படுகின்றன. 

முன்னைய காலங்களிலாவது அந்தந்த ஊர்களுக்குள்ளேயே வதந்திகள் உலாவும். ஆனால் தற்போது உலகமே கைப்பேசியினுள் அடங்கிய நிலையில் இவ்வாறான வதந்திகள் சர்வதேசம் எங்கும் சில நொடி நேரங்களிலேயே பரப்பப்படுகின்றன என்பது வேதனையான ஒன்று. 

கிணத்தடி, கிடுகுவேலிப் பழக்கங்கள் தொழிநுட்ப வளர்ச்சியால் மாறிவிடுமா என்ன!

விழிப்புணர்வு தரும் நல்லதோர் கவிதைக்கு நன்றி பசுவூர் கோபி.

 

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, யாயினி said:

இப்போ மட்டும் நம்மவர்கள் ஊர் வம்பு சும்மாவா இருக்கிறது..சில வேளைகளில் தொடர்ந்து போண் வந்தாலே அன்றைய நாள் தொலைஞ்சிடும்.இது உண்மை.

எனது கவிதைக்கேற்ற உங்கள் வார்த்தைகளும் அருமை யாயினி  நன்றிகள்

15 hours ago, குமாரசாமி said:

நல்லதண்ணி கிணத்தடியையும் கைத்தொலைபேசியையும் இணைச்சது மிக பிரமாதம்.

உளமார்ந்த நன்றிகள்;

Link to comment
Share on other sites

விரலில் ஈரம், கைரேகை கொண்டு என்னால் போனை லொகின் பண்ண முடியுது இல்லை. திடீரென்று பாஸ்வேர்ட் டும் மறந்து போயிட்டு.

"என்ற போன் பாஸ்வேர்ட் என்ன" என்று நான் கேட்க

மனுசி, மகள், மகன் என்று மூன்று பேரும் என் போனின் பாஸ்வேர்ட் டினை சொல்கின்றார்கள். 

பசுவூர்கோபி, நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒளிவுமறைவு இன்று குடும்பத்தில் ஒருவரது போனை இன்னொருவர் பயன்படுத்தும் சூழல் இருக்குமாயின் குடும்பத்துக்குள் எந்தப் பிரச்சனையும் போனால் வராது. முக்கியமாக வளர்ந்த, பதின்ம வயது பிள்ளைகள் எனில், அவர்கள் 18 வயதை அடையும் வரைக்கும் அவர்களது கைபேசியின்  பாஸ்வேர்ட் டினை பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது.

கவிதைக்கு நன்றி
 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நிழலி said:

விரலில் ஈரம், கைரேகை கொண்டு என்னால் போனை லொகின் பண்ண முடியுது இல்லை. திடீரென்று பாஸ்வேர்ட் டும் மறந்து போயிட்டு.

"என்ற போன் பாஸ்வேர்ட் என்ன" என்று நான் கேட்க

மனுசி, மகள், மகன் என்று மூன்று பேரும் என் போனின் பாஸ்வேர்ட் டினை சொல்கின்றார்கள். 

பசுவூர்கோபி, நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒளிவுமறைவு இன்று குடும்பத்தில் ஒருவரது போனை இன்னொருவர் பயன்படுத்தும் சூழல் இருக்குமாயின் குடும்பத்துக்குள் எந்தப் பிரச்சனையும் போனால் வராது. முக்கியமாக வளர்ந்த, பதின்ம வயது பிள்ளைகள் எனில், அவர்கள் 18 வயதை அடையும் வரைக்கும் அவர்களது கைபேசியின்  பாஸ்வேர்ட் டினை பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது.

கவிதைக்கு நன்றி
 

எங்கள் வீட்டிலும் இதையே பின்பற்றுகிறோம் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிலாமதி said:

கவிதை நன்று . கை கால் வைத்த வதந்திக்கு பரவும் வேகமும் அதிகம். தொலை பேசி தொல்லைபேசியாய் போச்சு 

அன்பு வார்த்தைகள் நிறய எழுத தூண்டுகிறது உளமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கைத்தொலைபேசி இல்லாத காலத்திலும் நாம் வாழ்ந்தோம் என்று நினைக்க எனக்கே வியப்பாயுள்ளது. எப்படி ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டோம்? எப்படி பயணங்களை மேற்கொண்டோம்? எப்படி காரில் றைவிங் செய்தோம்? என்ன விடயத்தை எடுத்தாலும் எம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த தொல்லைபேசி எம்முடன் ஒன்றித்து விட்டது. ஆனாலும் அன்று ஊரில் கிணற்றடி குழாயடி இவற்றில் பரப்பப்படும் செய்கிகளை மறக்காமல் கவி வடித்த பசுவூர் கோபியின் கவிதை அருமை. 
நோயும் இதுதான் நோய்க்கு மருந்தும் இதுதான் என்பதுபோல் ஆகிவிட்டது இத்தொலைபேசி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

நிகழ் கால நியத்தை கவிதை வடிவில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பசுவூர்க்கோபி, இந்த தொலை பேசியால் பல பதிப்புகள் இருந்தாலும் நன்மைகள் இருக்கு, பாவிக்கும் விதத்தை பொறுத்து, பிள்ளைகளுக்கும் பழக்க வேண்டும்

நீங்கள் சொல்வது போல் கெட்டதை தவிர்த்து நல்லதை எடுக்க கற்ருக்கொண்டாலே வாழ்வு மேம்படும். உண்ணைமையே அன்பின் உடையாருக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 02:23, மல்லிகை வாசம் said:

தொழிநுட்பம் வளர வளர வதந்திகளும் அதற்கேற்றால் போல் கடுகதியில் உலகெங்கும் பரப்பப்படுகின்றன. 

முன்னைய காலங்களிலாவது அந்தந்த ஊர்களுக்குள்ளேயே வதந்திகள் உலாவும். ஆனால் தற்போது உலகமே கைப்பேசியினுள் அடங்கிய நிலையில் இவ்வாறான வதந்திகள் சர்வதேசம் எங்கும் சில நொடி நேரங்களிலேயே பரப்பப்படுகின்றன என்பது வேதனையான ஒன்று. 

கிணத்தடி, கிடுகுவேலிப் பழக்கங்கள் தொழிநுட்ப வளர்ச்சியால் மாறிவிடுமா என்ன!

விழிப்புணர்வு தரும் நல்லதோர் கவிதைக்கு நன்றி பசுவூர் கோபி.

 

 

 

 

 

அன்புடன் நன்றிகள் மல்லிகை வாசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 14:15, நிழலி said:

விரலில் ஈரம், கைரேகை கொண்டு என்னால் போனை லொகின் பண்ண முடியுது இல்லை. திடீரென்று பாஸ்வேர்ட் டும் மறந்து போயிட்டு.

"என்ற போன் பாஸ்வேர்ட் என்ன" என்று நான் கேட்க

மனுசி, மகள், மகன் என்று மூன்று பேரும் என் போனின் பாஸ்வேர்ட் டினை சொல்கின்றார்கள். 

பசுவூர்கோபி, நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒளிவுமறைவு இன்று குடும்பத்தில் ஒருவரது போனை இன்னொருவர் பயன்படுத்தும் சூழல் இருக்குமாயின் குடும்பத்துக்குள் எந்தப் பிரச்சனையும் போனால் வராது. முக்கியமாக வளர்ந்த, பதின்ம வயது பிள்ளைகள் எனில், அவர்கள் 18 வயதை அடையும் வரைக்கும் அவர்களது கைபேசியின்  பாஸ்வேர்ட் டினை பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது.

கவிதைக்கு நன்றி
 

உண்மையை அழகாக தந்தீர்கள் நிழலி உளமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் படித்தேன் நல்ல கவிதை கோபி.பாராட்டுக்கள்......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 14:58, நந்தன் said:

எங்கள் வீட்டிலும் இதையே பின்பற்றுகிறோம் 

நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 16:30, Kavallur Kanmani said:

இந்த கைத்தொலைபேசி இல்லாத காலத்திலும் நாம் வாழ்ந்தோம் என்று நினைக்க எனக்கே வியப்பாயுள்ளது. எப்படி ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டோம்? எப்படி பயணங்களை மேற்கொண்டோம்? எப்படி காரில் றைவிங் செய்தோம்? என்ன விடயத்தை எடுத்தாலும் எம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த தொல்லைபேசி எம்முடன் ஒன்றித்து விட்டது. ஆனாலும் அன்று ஊரில் கிணற்றடி குழாயடி இவற்றில் பரப்பப்படும் செய்கிகளை மறக்காமல் கவி வடித்த பசுவூர் கோபியின் கவிதை அருமை. 
நோயும் இதுதான் நோய்க்கு மருந்தும் இதுதான் என்பதுபோல் ஆகிவிட்டது இத்தொலைபேசி.

எனது கவிதையை உள்ளடக்கி சொல்லப்பட்ட வார்தைதைகள் அருமை அக்கா நன்றிகள்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.