Jump to content

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார்  சீமான்..! | seeman introduces naam tamilar 234 candidates in single stage

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி அறிமுகம் செய்துள்ளது.

சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ. திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் அறிமுகம் செய்யப்பட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதற்காக 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவு செய்துள்ளார்.

பெண்களுக்கு ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் சரிசமமாகத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவரும் சீமான், இந்த தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

இதேவேளை, சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/234-வேட்பாளர்களையும்-ஒரே-மே/

ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த சீமான்... கடலூரில்  போட்டி ! | Naam tamilar 234 Candidates list - Tamil Oneindia

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply

பாஜகவிடம் பணத்தை வாங்கிவிட்டு, ஒரு தொகுதியிலும்  டெபாசிட் வாங்க முடியாது என்று தெரிந்தும் நிக்க வைத்து அழகு பார்க்கிற பாரு. எனக்கு அந்த டீல் பிடிச்சிருக்கு

Link to comment
Share on other sites

4 minutes ago, zuma said:

பாஜகவிடம் பணத்தை வாங்கிவிட்டு, ஒரு தொகுதியிலும்  டெபாசிட் வாங்க முடியாது என்று தெரிந்தும் நிக்க வைத்து அழகு பார்க்கிற பாரு. 

இதற்கு நீங்கள் சாட்சியா??

Link to comment
Share on other sites

5 minutes ago, nunavilan said:

இதற்கு நீங்கள் சாட்சியா??

உதற்கெல்லாம் சாட்சி வைத்துக் கொண்ட செய்வார்கள். சின்ன பையன் மாதிரி கதைக்கிறிங்கள்.

Link to comment
Share on other sites

Just now, zuma said:

உதற்கெல்லாம் சாட்சி வைத்துக் கொண்ட செய்வார்கள். சின்ன பையன் மாதிரி கதைக்கிறிங்கள்.

ஆதாரத்தோடு கதைத்து பழக வேண்டும். எழுந்தமானமாக கதைத்தே இங்கு சிலருக்கு பழகி விட்டது.

அதெப்படி எடப்பாடி பிஜேபியுடன் கை கோர்த்து வெளிப்படையாக நிற்கும் போது ஒரு பதிலும் இல்லை. ( தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க நினைத்து இருந்தால்) 

Link to comment
Share on other sites

5 minutes ago, nunavilan said:

ஆதாரத்தோடு கதைத்து பழக வேண்டும். எழுந்தமானமாக கதைத்தே இங்கு சிலருக்கு பழகி விட்டது.

என்ன மாதிரி ஆதாரங்கள் எதிர்பாக்கின்றிர்கள்?. வாங்கி கணக்கு statements, டீல் பேசப்பட்ட  காணொளி என்பவையா?

Link to comment
Share on other sites

ஆதாரம் ஆதாரமாக இருந்தால் சரி. எனக்கு தெரியும் எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை என. முயற்சியுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

நூறு தொகுதி ஜெயிக்கிறவன், முதல்வர் ஆவரவன் எல்லாம்  கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றார்கள்.  வார்டு மெம்பர் கூட வெல்ல முடியாத காட்சி எல்லா தொகுதியிலும்  வேட்பாளர்களை நிறுத்துகின்றார்கள் எனறால் காரணம் என்ன?. உது எல்லாம் உய்தறிவதற்கு rocket science அறிவு தேவையில்லை.

Link to comment
Share on other sites

8 minutes ago, zuma said:

நூறு தொகுதி ஜெயிக்கிறவன், முதல்வர் ஆவரவன் எல்லாம்  கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றார்கள்.  வார்டு மெம்பர் கூட வெல்ல முடியாத காட்சி எல்லா தொகுதியிலும்  வேட்பாளர்களை நிறுத்துகின்றார்கள் எனறால் காரணம் என்ன?. உது எல்லாம் உய்தறிவதற்கு rocket science அறிவு தேவையில்லை.

கள்ளரோடு கள்ளர் சேர்ந்து ஆட்சி அமைப்பது எல்லாத்துக்கும் ரொக்கட சயன்ஸ் தேவை இல்லை என்பது தெரியாதோ??

அத்தோடு ஆதாரம் இல்லாமல் கதைப்பது தான் சின்ன பிள்ளைதனம். இதற்கும் ரொக்கட் சயன்ஸ் தேவை இல்லை.😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் ஸ்டாலினைக் கொளத்தூர் தொகுதியை விட்டிட்டு வாய்மையின் மறுவடிவம் செந்தமிழன் சீமான் அண்ணன் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் நின்று மோதிப்பார்க்கச் சொல்லுங்க. அப்ப தெரியும் அண்ணனின் பலம். தோல்வி பயத்தில் கடைசிவரை ஸ்டாலின் ஒத்துக்கொள்ளவே மாட்டார். 😹

Link to comment
Share on other sites

12 minutes ago, வாலி said:

முடிந்தால் ஸ்டாலினைக் கொளத்தூர் தொகுதியை விட்டிட்டு வாய்மையின் மறுவடிவம் செந்தமிழன் சீமான் அண்ணன் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் நின்று மோதிப்பார்க்கச் சொல்லுங்க. அப்ப தெரியும் அண்ணனின் பலம். தோல்வி பயத்தில் கடைசிவரை ஸ்டாலின் ஒத்துக்கொள்ளவே மாட்டார். 😹

ஸ்டாலினை எதிர்த்து தான் போட்டி போடுவேன்என்று கைய மேல தூக்கி முறுக்கி சொல்லிட்டு திரிஞ்ச சீமானுக்கு ... இப்ப என்ன ஆச்சி?? 😂😂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, zuma said:

உதற்கெல்லாம் சாட்சி வைத்துக் கொண்ட செய்வார்கள். சின்ன பையன் மாதிரி கதைக்கிறிங்கள்.

சாட்சிகள் ஆதாரங்கள் இல்லாமல் பழி போடுவது எல்லோராலும் முடியும். இனிவரும் காலங்களில் ஆதாரத்தோடு கருத்தெழுத பழகுங்கள். ஒரு காலத்தில் இப்படித்தான் ஆதாரமில்லாமல் பழி சுமத்தி பழி சுமத்தி இன்று ஈழத்தமிழினத்தை நடுத்தெருவில் விட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

10 minutes ago, குமாரசாமி said:

சாட்சிகள் ஆதாரங்கள் இல்லாமல் பழி போடுவது எல்லோராலும் முடியும். இனிவரும் காலங்களில் ஆதாரத்தோடு கருத்தெழுத பழகுங்கள். ஒரு காலத்தில் இப்படித்தான் ஆதாரமில்லாமல் பழி சுமத்தி பழி சுமத்தி இன்று ஈழத்தமிழினத்தை நடுத்தெருவில் விட்டுள்ளார்கள்.

சுமந்திரன், கருணாநிதி பெட்டி வாங்கின கதைகள் எல்லாம் சொல்லிப்போட்டு, இப்ப இப்படி சொல்லுகின்றிர்களே?. உதைத்தான் சொல்லுகின்றது  தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. 

Link to comment
Share on other sites

29 minutes ago, வாலி said:

முடிந்தால் ஸ்டாலினைக் கொளத்தூர் தொகுதியை விட்டிட்டு வாய்மையின் மறுவடிவம் செந்தமிழன் சீமான் அண்ணன் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் நின்று மோதிப்பார்க்கச் சொல்லுங்க. அப்ப தெரியும் அண்ணனின் பலம். தோல்வி பயத்தில் கடைசிவரை ஸ்டாலின் ஒத்துக்கொள்ளவே மாட்டார். 😹

எந்த அரசியல்வாதி வாய்மையின் வடிவம்.  பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, zuma said:

சுமந்திரன், கருணாநிதி பெட்டி வாங்கின கதைகள் எல்லாம் சொல்லிப்போட்டு, இப்ப இப்படி சொல்லுகின்றிர்களே?. உதைத்தான் சொல்லுகின்றது  தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. 

நான் இன்று வரைக்கும்  ஆதாரம் இல்லாவிட்டால் எந்த திரியாயினும் மூக்கை நுழைப்பதில்லை. சுமந்திரன் பற்றிய திரியில் அவரின் அரசியல் நடவடிக்கை சம்பந்தமாக மட்டும் கருத்துக்கள் எழுதியுள்ளேன். பெட்டி வாங்கியது பண பரிமாற்றங்கள் பற்றி இது வரைக்கும் நான் எழுதியதில்லை. மற்றையது கருணாநிதி சம்பத்தப்பட்ட விடயங்கள் ஊரறிந்த விடயம். அதற்குள் வருவீர்களானால் நீங்கள் தான்நாறுவீர்கள்.

Link to comment
Share on other sites

26 minutes ago, zuma said:

ஸ்டாலினை எதிர்த்து தான் போட்டி போடுவேன்என்று கைய மேல தூக்கி முறுக்கி சொல்லிட்டு திரிஞ்ச சீமானுக்கு ... இப்ப என்ன ஆச்சி?? 😂😂

 

 

ஏதோ தமிழ்நாட்டை  விட்டு ஓடி விட்டார் சீமான் என்பது போல் இப்படி ஒரு புளகாங்கிதாம்.😜

Link to comment
Share on other sites

6 minutes ago, nunavilan said:

எந்த அரசியல்வாதி வாய்மையின் வடிவம்.  பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.

யாருமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

எந்த அரசியல்வாதி வாய்மையின் வடிவம்.  பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.

தானைத்தலைவன் தன்னிகரில்லா தலைவன் மானத்தமிழன் அடங்காத்தமிழன் வீரத்தமிழன்  தமிழின தலைவன் தமிழீழ தலைநகர் தலைவன் மாண்புமிகு அதி உத்தம இரா சம்பந்தன்.😜

Link to comment
Share on other sites

11 minutes ago, குமாரசாமி said:

நான் இன்று வரைக்கும்  ஆதாரம் இல்லாவிட்டால் எந்த திரியாயினும் மூக்கை நுழைப்பதில்லை. சுமந்திரன் பற்றிய திரியில் அவரின் அரசியல் நடவடிக்கை சம்பந்தமாக மட்டும் கருத்துக்கள் எழுதியுள்ளேன். பெட்டி வாங்கியது பண பரிமாற்றங்கள் பற்றி இது வரைக்கும் நான் எழுதியதில்லை. மற்றையது கருணாநிதி சம்பத்தப்பட்ட விடயங்கள் ஊரறிந்த விடயம். அதற்குள் வருவீர்களானால் நீங்கள் தான்நாறுவீர்கள்.

அப்ப நீங்கள் கள்ள மெளனம் சாதித்து விட்டு, இப்ப மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றிர்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

அப்ப நீங்கள் கள்ள மெளனம் சாதித்து விட்டு, இப்ப மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றிர்கள்.
 

உங்களுக்கு இருக்கும் எனக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் போல் மற்றவர்களுக்கும் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

234 தொகுதிகளுக்கு ஆட்பிடிக்கவே இயலாத கட்சின்னு திராவிடக் கட்சிகள் பழித்துத் திரிந்த போதும்.. ஆணுக்குப் பெண் சமனாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய நாம் தமிழரின் துணிச்சல் பாராட்டத்தக்கதே. 

மேலும்.. சீமானின் முன்னைய ஊடக சந்திப்புக்களின் போதான அறிவிப்பு... தி மு க கும்பலிடத்தில் ஏற்படுத்திய பதட்டம்.. நல்ல நாடிபிடிப்பு. நாம் தமிழர் சரியான திசையில் நோக்கி தமிழகத்தில் தமிழர்களுக்கு அவசியமான திசையில்.. பயணிக்கிறது. 

Link to comment
Share on other sites

 

6 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு இருக்கும் எனக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் போல் மற்றவர்களுக்கும் உண்டு. 

வாழ்க உங்கள் கருத்து (சு)தந்திரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

234தொகுதியில் துணிந்து நிப்ப‌வ‌ர்க‌ளுக்கு கூட‌ அதிக‌ம் வேர்க்க‌ வில்லை , ப‌த‌ட்ட‌த்தில் எழுதுற‌வ‌ருக்கு தான் அதிக‌ம் வேர்க்குது தாத்தா ?

க‌ட்சியை மெது மெது வ‌ள‌க்க‌ அதுக‌ள் ப‌ட்ட‌ க‌ஸ்ர‌ங்க‌ள் சிந்தின‌ வேர்வைக‌ள் அதிக‌ம் ?

க‌ட‌ந்து செல்லுங்க‌ள் குரைப்ப‌வ‌ர்க‌ள் குரைக்க‌ட்டும் ?


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.