Jump to content

யாழ். செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து படையினர் குவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மயானத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு..! கைது செய்யப்பட்ட ஆவா குழு  ரவுடியிடம் நடத்திய விசாரணை அடிப்படையிலாம்.. | Jaffna Breaking News 24x7

யாழ். செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து படையினர் குவிப்பு!

யாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து  மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்து காணப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலின் அடிப்படையில், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை குறித்த பகுதி சிறப்பு அதிரடிப்படையினரால் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, குறித்த பையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/யாழ்-செம்மணி-இந்து-மயானத/

Link to comment
Share on other sites

இந்து மயானங்களில் இறந்தவர்கள் எரிக்கப்படுவார்கள். யாரோ இறந்து எரிக்கப்பட்டபின் அவரது சாம்பலைக் காடாத்துவதற்குக் கொண்டுசெல்ல உறவினர்கள் பையில் கட்டி வைத்திருப்பார்கள்..... அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல் இன்று சிங்கள அரசும் அதன் படையும் யெனீவா நிலையை எண்ணி அரண்டுபோயுள்ளது.🤔 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.