Jump to content

ஜெனீவா: உருளும் பகடைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா: உருளும் பகடைகள்

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

ஜெனீவாவில் நடப்பதை, மனித உரிமைகளுக்கானதோ, மக்களின் நன்மைக்கானதோ அல்ல என்பதை, இன்னும் விளங்காதவர்கள் இருக்கிறார்கள். 

ஐ.நாவும் அதன் மனித உரிமைகள் பேரவையும், உலக மக்களின் நன்மையை நோக்கமாகக் கொண்டது என்று, நம்பச் சொல்கிறவர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள். இன்னமும் ஐ.நாவைக் கைகாட்டும் தமிழ்த் தேசியவாதிகளைப் பார்க்க முடிகிறது. 

ஜெனீவாவை முன்னிறுத்தி, இலங்கையில் நடக்கின்ற விடயங்கள் எதுவுமே, மனித உரிமைகளுடன் நேரடித் தொடர்புடையவை அல்ல. மாறாக, அவை இலங்கை மீதான செல்வாக்கை நோக்காகக் கொண்டவை. ஜெனீவாவை மையங்கொண்டு உருளும் பகடைகள், தமிழ் மக்களின் மீதோ, இலங்கை ஜனநாயகத்தின் மீதோ அக்கறை கொண்டு உருட்டப்படுபவையல்ல!

இலங்கை பற்றிய மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதத்தில், நாடுகள் முன்வைத்த கருத்துகள் இதை வெளிப்படையாகவே எடுத்துக்காட்டுகின்றன. 

இலங்கையோடு நட்புறவாகப் போக விரும்புகிற நாடுகள், இலங்கையோடு சேர்ந்து பணியாற்றுகின்ற நாடுகள், இலங்கைக்கான வேண்டுகோளோடு தமது அறிக்கையை முடித்துக் கொண்டன. இதற்கு நல்லதோர் உதாரணம் அவுஸ்திரேலியா; இது இலங்கை அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேண விரும்புகிறது. இலங்கை அகதிகள் பிரச்சினை, அவுஸ்திரேலியாவுக்குப் பெரியது.எனவே, இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் நடக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு அறிக்கையிட்டால், அது அகதி அந்தஸ்துக் கோரியுள்ள பலருக்கும் வாய்ப்பாகும்.  இலங்கையுடன் நல்லுறவு, அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டோரை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது, இலங்கை தொடர்பான அவுஸ்திரேலிய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சம். இதற்கு வாய்ப்பாகவே, அவுஸ்திரேலியாவின் அறிக்கை உள்ளது.  

இதேபோன்ற அறிக்கையையே கனடாவும் வெளியிட்டது. ஏனைய ஐரோப்பிய நாடுகளும், இதேவகையில் அமைந்த அறிக்கைகளையே வெளியிட்டன. அவை மொத்தத்தில், இலங்கையைத் தொடர்ந்தும் பேரவையின் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கக் கோரின. ஆனால், அதற்கு மேல், வலுவான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளின் அறிக்கைகளில், இரண்டு முக்கியமானவை. முதலாவது, இலங்கையின் தேசியரீதியில் அமைந்த நல்லிணக்கப் பொறிமுறைக்கு, ஐ.நா உதவ வேண்டும் என்று நெதர்லாந்து கோரியது.

 இரண்டாவது, ஜேர்மனியின் அறிக்கையில், ‘கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தண்டிக்கப்படல் வேண்டும். ஆணையாளர் தனது அறிக்கையில், இதை சர்வதேச சட்டவரம்புக்குள்ளும் மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.  இதை ஜேர்மனி நடைமுறைப்படுத்துகிறது. முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினருக்கு எதிரான வழக்கு, ஜேர்மனியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

இதன் மறுமுனையில், ஆசிய, ஆபிரிக்க நாடுகள், இலங்கைக்குத் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்தன. இதில் சீனாவும் ஜப்பானும் முக்கியமானவை. அதேபோல, ரஷ்யாவும் முழுமையான ஆதரவைத் தெரிவித்தது.பாகிஸ்தான் தனது அறிக்கையில், ஜனாஸாக்கள் நல்லடக்கம் தொடர்பான விடயத்தைத் தவிர்த்தமையும் நோக்கற்பாலது. 

இந்தியா, தனது அறிக்கையில், இரண்டு அடிப்படைகளில் இலங்கையை ஆதரிக்கிறது. முதலாவது, இலங்கையின் ஒற்றுமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாத்தல்; இரண்டாவது, இலங்கைத் தமிழரது சமத்துவமும் நீதியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கைக்கான அபிலாஷைக்கு உதவுவது. 

அவ்வகையில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா கோரியது. அது, தனது அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுக்கான நீதி பற்றியோ, ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமை பற்றியோ பேசமால் கவனமாகத் தவிர்த்தது. இந்தியாவின் அறிக்கையானது, இலங்கைக்கு முழுமையான ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை என்ற நிலையையே காட்டுகிறது. ஒருவகையில் இலங்கைக்கு ஆதரவு; ஆனால், இலங்கை 13ஆவது திருத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தொனியே ஓங்கி ஒலித்தது. 

இதேவேளை, இந்திய ஊடகங்களுக்குப் பேட்டியளித்த இலங்கையின் வெளியுறவுச் செயலாளர், “இந்தியா, இலங்கையைக் கைவிடாது” எனத் தெரிவித்ததோடு, ஜெனீவாவில் செயல் வடிவிலான ஆதரவை இந்தியா, இலங்கைக்கு வழங்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் இந்தியாவால் இலங்கையைக் கைவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ‘அயலவர்களுக்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையாக, இதை எதிர்பார்ப்பதாகவும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் காலங்கடந்தவொன்று என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, சில விடயங்கள் நடைபெற்றுள்ளன. முதலாவது, இலங்கை, இந்தியாவுக்குத் தரமறுத்த கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்குப் பதிலாக, மேற்கு முனையத்தை வழங்கும் முடிவை இலங்கை அரசாங்கம் எடுத்துள்ளது. இது செவ்வாய்கிழமை (02) அமைச்சரவை அறிவிப்புகளில் வெளியானது. 

இதேவேளை, அமைச்சரவைக் குறிப்புகளில் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் இந்திய நிறுவனமாக, ‘அதானி’ குழுமத்தை இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிசெய்துள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் தவறானது என, இந்தியாவிலிருந்து வெளியாகும் The Wire இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, அவசரகதியில் மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கியதையிட்டு, உள்ளூரில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

இதேவேளை, சத்தமில்லாமல் இன்னொரு நிகழ்வும் செவ்வாய்கிழமை (02) நடந்தது. அது, ‘இலங்கை-இந்தியா-மாலைதீவு ஆகியவற்றை இணைத்த கரையோரப் பாதுகாப்புக் கூட்டுழைப்புக்கான செயலகம்’ (A Secretariat for Trilateral National Security Advisers (NSA) on Maritime Security Cooperation) கடற்படைத்தலைமையகத்தில் தொடக்கப்பட்டது.இவ்வாறு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று, கடந்த நவம்பர் மாதம், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் கோரியிருந்தார். இதை, இலங்கை தொடர்ச்சியாக இழுத்தடித்து வந்த நிலையில், திடீரென இது செயல்வடிவம் பெற்றுள்ளது. 

கடந்த செவ்வாய்கிழமை நடந்தேறிய இரண்டு நிகழ்வுகளும் தற்செயலானவை அல்ல. நீண்டகாலத் திட்டமிடலின் விளைவானவையும் அல்ல. ஜெனீவாவில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு, இலங்கை செய்துள்ள காரியங்கள். இந்தியா, தனது நலன்களைக் காக்க மீண்டுமொருமுறை ஈழத்தமிழர் உரிமை என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, தனது தேவைகளை நிறைவேற்றியுள்ளது. ஈழத்தமிழரின் மீது அக்கறை கொள்கிற இந்தியாவுக்கு, அங்கிருந்து இடம்பெயர்ந்து நூற்றாண்டுகாலமாய் அல்லலுறும் மலையகத் தமிழ் மக்கள் தெரிவதில்லை; அவர்தம் இன்னல்கள் தெரிவதில்லை. 

இதேபோலவே, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் Yousef Al Othaimeen, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் உயர்மட்டக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில், “முஸ்லிம்களின் உடல்களை  அடக்கம் செய்வதற்கு உள்ள உரிமையை மதிப்பதற்கும் உத்தரவாதம் செய்வதற்குமான நடவடிக்கைகளை, இலங்கை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். பின்னர், வர்த்தமானி அறிவிப்பு வெளியானது. ஆனால், பிரச்சினைக்கான நியாயமான தீர்வு எட்டப்படவில்லை. மாறாக, ஜெனீவாவில் ஆதரவைப் பெறுவதற்கான வேலைகளே நடக்கின்றன. மேற்குலக நாடுகளின் அறிக்கைகளும் இலங்கையின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பானதேயன்றி, இலங்கை மக்களின் ஜனநாயக உரிமையோ நீதியோ தொடர்பானவையல்ல. 

இது ஒருபுறமிருக்க, ஜெனீவா தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகரவும் புலம்பெயர் விடுதலைப்புலி ஆதரவாளர்களும், எதிரெதிர்த் திசைகளில் நின்றபடி, ஓரே குரலில் பேசுகிறார்கள். இக்குரல்கள் மக்களுக்கான குரல்கள் அல்ல; நீதிக்கான குரல்கள் அல்ல. அவை தமது நலன்சார், குறுந்தேசியவாத நலன்சார் குரல்கள்; அவர்களது இருப்புக்கான குரல்களாகும்.

விடுதலைப் புலிகளின் கொடிகளுடனும் படங்களுடனும் நடக்கின்ற பேரணிகள்,  கோசங்கள், தொலைத்தழித்த காலத்தின் அந்தகாரத்தில் நிற்றுழலும் அபத்தங்களின் குரல்கள். இக்குரல்கள், தமிழ் மக்களை விடுதலைப்புலிகளுடன் சமப்படுத்துவதன் மூலம், இலங்கை அரசாங்கத்துக்கு உதவுகின்றன. இலங்கையில் நீதிக்கும் ஜனநாயகத்துக்குமான கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்து மடைமாற்றுகின்றன. முன்சொன்னதுபோல, சிங்களத் தேசியவாதமும் தமிழ்த் தேசியமும் எதிரெதிர்த் திசையில் நின்று, ஒன்றையே செய்கின்றன. 

இலங்கையின் இன்றைய உடனடியான பிரச்சினை ஜனநாயகம் பற்றியது; நீதி பற்றியது; அடிப்படை உரிமைகள் பற்றியது. இவை, இலங்கையர் அனைவருக்கும் பொதுவானவை. அதைத் தக்கவைப்பதே, இன்று இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரதான சவால். 

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எட்டப்பட்டுள்ள தீர்வு, இன்று எவ்வாறு சிறுபான்மையினரை எதிர்த்திசைகளில் ‘கொம்புசீவி’ விடுகிறது என்பதை, நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நடப்பவை எதுவும், மக்கள் நல நோக்கிலானவை அல்ல.

 இந்தியாவையோ வேறெவரையோ நம்பியிருப்பதன் ஆபத்துகளை, இவ்வார நிகழ்வுகள் மீண்டுமொருமுறை நிரூபணப்படுத்தியுள்ளன. ஆனால், வரைபில் திருத்தம் வரும்; அதில் வெற்றி வரும்; எமக்கு விடிவு வரும் என்ற கதைகள் இன்னமும் எம்மத்தியில் உலாவுகின்றன. அதை அழுத்தமாக நம்புகிறவர்களும் நம்பச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். இதில் அதிசயப்பட எதுவுமில்லை. ‘தீபாவளிக்குத் தீர்வுவரும்’ என்பதை நம்பியவர்கள் தானே நாங்கள்!        
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜெனீவா-உருளும்-பகடைகள்/91-267477

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.