Jump to content

நாட்டிலிருந்து த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாத‌மும், இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌மும் ஒழிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ற‌ ஜ‌னாதிப‌தியின் கருத்தை பாராட்டுகிறோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

625.500.560.350.160.300.053.800.900.160.90.jpg

 

நாட்டிலிருந்து த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாத‌மும், இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌மும்
 ஒழிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ற‌ ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் க‌ருத்தை உல‌மா க‌ட்சி பாராட்டுவ‌துட‌ன் இவ்விரு வாத‌த்துக்கும் கார‌ண‌மான‌ பௌத்த‌ தீவிர‌வாத‌த்தையும் நாட்டிலிருந்து ஒழிக்க‌ ஜ‌னாதிப‌தி அவ‌ர்க‌ள் ஈடுபாட்டுட‌ன் செய‌ல்ப‌ட‌ முன்வ‌ருவார் என்ற‌ ந‌ம்பிக்கை த‌ம‌க்குள்ள‌தாக‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.
 
அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,
 
இன்று ப‌ல‌ரும் இஸ்லாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் என்ற‌ சொல்லை ப‌ய‌ன்ப‌டுத்தும் நிலையில் கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி அவ‌ர்க‌ள் அச்சொல்லை பாவிக்காம‌ல் இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ம் ஜ‌னாதிப‌தி அவ‌ர்க‌ளின் ச‌ரியான‌ புரித‌லை காட்டுகிற‌து.
 
எம‌து இந்த‌ நாட்டுக்கு பாரிய‌ ஆப‌த்து என்ப‌து இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌த்தை விட‌ த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாத‌மும், பௌத்த‌ தீவிர‌வாத‌மும்தான். இம்மூன்றுமே ஒழித்துக்க‌ட்ட‌ப்ப‌ட‌ வேண்டும்.
 
த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் என்ப‌து நிலையான‌தொரு கொள்கையுட‌ன் திட்ட‌மிட்டு செய‌ல்ப‌டுகிற‌து.
 
பௌத்த‌ தீவிர‌வாத‌ம் என்ப‌து இந்த‌ நாட்டின் த‌மிழ், முஸ்லிம்க‌ளை ஒடுக்கி, அவ‌ர்க‌ளின் பிர‌தேச‌ங்க‌ளை கைப்ப‌ற்ற‌ வேண்டும் என்று திட்ட‌மிட்டு தீவிர‌வாத‌மாக‌ செய‌ற்ப‌டுகிற‌து.
 
இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ம் என்ப‌து எந்த‌வொரு திட்ட‌மும் இல்லாம‌ல் சோடாப்போத்த‌ல் போல் திடீர் உண‌ர்ச்சியை ம‌ட்டும் காட்டி வ‌ருகிற‌து.
 
இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌த்தை ஒழிப்ப‌து மிக‌ இல‌கு. முஸ்லிம்க‌ளை ஆத்திர‌ப்ப‌டுத்தாம‌ல், தின‌மும் புரியாணியும் , பிரைட் ரைசும், ப‌ள்ளிவாய‌லில் தொழுவ‌துமாய் நிம்ம‌தியாய் அவ‌ர்க‌ளை ஊர் சுற்றிவ‌ர‌ விட்டு விட்டால் போதும். இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ம் தானாய் ஒழிந்து போகும்.
 
 
இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ளை பொறுத்த‌வ‌ரை சோறும், ஊருக்கு காட்டும் வ‌கையில் ப‌ள்ளிவாய‌ல்க‌ள், வீடுக‌ள் க‌ட்டுவ‌தும், உல்லாச‌மாக‌ ஊர் சுற்றுவ‌து ம‌ட்டுமே சொர்க்க‌ம் என‌ நினைத்து வாழ்ப‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளை அப்ப‌டியே விட்டு விட்டால் இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ம் என்ற‌ ஒன்று ஒரு போதும் ந‌ம்நாட்டில் மீண்டும் உருவாகாது.
 
 
30 வ‌ருட‌ த‌மிழ் ப‌ய‌ங்கர‌வாத‌ம் இருந்த‌னால்த்தான் அதிலிருந்து பாதுகாப்பு பெற‌ முஸ்லிம் இளைஞ‌ர்க‌ள் அர‌ச‌ ஊர்காவ‌ல் ப‌டையில் சேர்ந்து ஆயுத‌ம் தூக்கின‌ர்.
 
2008ம் ஆண்டு ஜ‌னாதிப‌தி ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ த‌லைமையில் அவ‌ர‌து அர்ப்ப‌ணிப்புட‌ன் கிழ‌க்கு மாகாண‌ம் த‌மிழ் ப‌ய‌ங்க‌ரவாத‌த்திலிருந்து விடுத‌லை பெற்ற‌ போது முஸ்லிம் ச‌மூக‌மும் ஆயுத‌த்தை முற்றாக‌ கைவிட்ட‌து.
 
பின்ன‌ர் பிர‌பாக‌ர‌ன் ஒழிக்க‌ப்ப‌ட்ட‌ பின் பௌத்த‌ தீவிர‌வாத‌த்துக்கு புதிய‌ எதிரி தேவைப்ப‌ட்ட‌து. அந்த‌ புதிய‌ எதிரியாக‌ முஸ்லிம்க‌ளை காட்டின‌ர்.
அத்துடன் வெளிநாட்டில் இய‌ங்கி வ‌ந்த‌ த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்துக்கு முஸ்லிம்க‌ளையும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளையும் பிரிக்க‌ வேண்டும் என்ற‌ தேவையும் இருந்த‌து.
 
முஸ்லிம்க‌ளை சிங்க‌ள‌வ‌ர்க‌ளிட‌மிருந்து பிரித்தால் ம‌ட்டுமே வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைத்து இணைந்த‌ சுயாட்சியை அமைக்க‌ முஸ்லிம்க‌ள் உட‌ன்ப‌டுவ‌ர் என்ற‌ தேவை இருந்த‌து. இத‌னால் சில‌ பௌத்த‌ தேர‌ர்க‌ள் விலைக்கு வாங்க‌ப்ப‌ட்டு முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ தீவிர‌வாத‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ஆரம்பிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.
 
யுத்த‌ம் முடிந்த‌ பின் குற‌ட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்த‌ முஸ்லிம் ச‌மூக‌த்தை இந்த‌ வ‌கை தீவிர‌வாத‌ம் உலுக்கி விட்ட‌து. 2012 முத‌ல் பௌத்த‌ தீவிர‌வாத‌ம் முஸ்லிம்க‌ளை இம்சித்த‌து. அது த‌ம்புள்ள‌, அளுத்க‌ம‌ என‌ எதிரொலித்த‌து.
 
இத்த‌கைய‌ முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ பௌத்த‌ தீவிர‌வாத‌த்தை ஒழிக்க‌ வேண்டுமாயின் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வை தோற்க‌டித்தால் முடியும் என்ற‌ த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தின் செய்திக‌ளை முஸ்லிம் ச‌மூக‌ம் ஏற்றுக்கொள்ள‌ தொட‌ங்கிய‌து.
 
இறுதியில் ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வினால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ மைத்திரியை த‌ம‌து மீட்பாள‌ர் என‌ முஸ்லிம் ச‌மூக‌ம் ந‌ம்பிய‌து. ஆனால் பௌத்த‌ தீவிர‌வாதிக‌ளுக்கு அனுச‌ர‌ணை வ‌ழ‌ங்கிய‌தே இந்த‌ ர‌ணில்தான் என்ப‌தை ச‌மூக‌ம் அப்போது புரிய‌வில்லை.
 
மைத்திரி ஜ‌னாதிப‌தியாகி ர‌ணில் பிர‌த‌ம‌ர் ஆகிய‌தும் முஸ்லிம்க‌ளையும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளையும் பிரிக்கும் ச‌தி ஊட‌க‌ங்க‌ள், தாக்குத‌ல்க‌ள் மூல‌ம் முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌து. கொத்துக்குள் க‌ர்ப்ப‌த்த‌டை பிர‌ச்சார‌ம், அம்பாரை ப‌ள்ளி தொட‌க்க‌ம், திக‌ன‌, க‌ண்டி என‌ ந‌ல்லாட்சி அர‌சின் ஒத்துழைப்புட‌ன் தாக்குத‌ல் ந‌டை பெற்ற‌து.
 
இத‌ன் கார‌ண‌மாக‌ நாட்டில் இல்லாம‌ல் இருந்த‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌த்தை ஸ‌ஹ்ரான் என்ப‌வ‌ன் தூசி த‌ட்டி எழுப்பினான்.
 
ஒவ்வொரு ப‌ன்ச‌லையையும் தாக்குவோம், வெடி குண்டாய் மாறுவோம் என‌ விடியோ வெளியிட்டான்.
 
இத‌னை க‌ண்ட‌ ர‌ணில் அர‌சு ஆஹா தாம் தேடிய‌ ஒருவ‌ன் கிடைத்து விட்டான் என‌ க‌ண்டு அவ‌னை உசுப்பேற்றி, அவ‌னுக்கு அனைத்து ப‌ண‌ வ‌ச‌திக‌ளையும் செய்து கொடுத்து, க‌ண்டி, திக‌ன‌ கொடூர‌ தாக்குத‌லால் வெறுப்பேறியிருந்த‌ முஸ்லிம் இளைஞ‌ர்க‌ளுக்கு மூளைச்ச‌ல‌வை செய்வ‌த‌ற்குரிய‌ வ‌ச‌திக‌ளை செய்து கொடுத்து ஈஸ்ட‌ர் தாக்குத‌ல் வ‌ரை கொண்டு சென்று வ‌ங்கிக்கொள்ளை, நாட்டை பாதுகாக்க‌ முடியாமை போன்ற‌ த‌ம‌து ப‌ல‌வீன‌ங்க‌ளை ம‌றைத்துக்கொண்ட‌ன‌ர். ர‌ணிலின் அமைச்ச‌ர‌வையின் கொள்ளைக‌ளையும், அர‌ச‌ ப‌ல‌வீன‌த்தையும் ம‌க்க‌ள் ம‌ற‌ந்து ஈஸ்ட‌ர் ப‌ற்றியே பேச‌த்தொட‌ங்கிய‌மை அவ‌ர்க‌ளுக்கு மிக‌ப்பெரிய‌ வெற்றியாக‌ அமைந்த‌து.
 
பௌத்த‌ ப‌ன்ச‌லைக‌ள் மீது தாக்காம‌ல் கிறிஸ்த‌வ‌ ஆல‌ய‌ங்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்த‌ச்செய்த‌மை ஏன் என்ப‌த‌ற்கான‌ கார‌ண‌த்தை நிதான‌மாக‌ சிந்தித்தால் ப‌ல‌ உண்மைக‌ள் தெளிவாகும்.
ந‌ல்லாட்சி அர‌சு ப‌ற்றிய‌ இமேஜ் சிங்க‌ள‌ ம‌க்க‌ளிட‌ம் சிதைந்து போயிருந்த‌தால் பௌத்த‌ ஆல‌ய‌ங்க‌ளை தாக்கினால் இது மேலும் ர‌ணில் அர‌சுக்கு பாத‌க‌மாக‌ இருக்கும் என்ப‌தாலும், கிறிஸ்த‌வ‌ ஆல‌ய‌ங்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்துவ‌த‌ன் மூல‌ம் ம‌க்க‌ளை திசைதிருப்புத‌ல், ம‌ற்றும் அமெரிக்கா முத‌ல் ஐரோப்பிய‌ கிறிஸ்த‌வ‌ நாடுக‌ளில் இத்த‌கைய‌ தாக்குத‌லே அவ‌ர்க‌ளிட‌ம் இல‌ங்கையின் உள்நாட்டு அர‌சிய‌ல் ப‌ல‌வீன‌த்தை ம‌றைக்க‌ வைக்கும் என்றே இது திட்ட‌மிட‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌வே நிக‌ழ்வுக‌ள் ந‌ம‌க்கு காட்டுகின்ற‌ன‌.
 
இப்போது புதிய‌ அர‌சாங்க‌ம் அமைய‌ப்பெற்று நாடு நிம்ம‌தியாக‌ இருக்கிற‌து. ஆனாலும் அந்த‌ நிம்ம‌தியை குலைக்க‌ த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அனுச‌ர‌ணையால் ஆங்காங்கே பௌத்த‌ தீவிர‌வாத‌ம் செய‌ல்ப‌டுகிற‌து.
 
ஆக‌வே பௌத்த‌ தீவிர‌வாத‌த்தை கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வ‌ந்தால் ஓர‌ள‌வு த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை ஒழிக்க‌ முடியும். அத்துட‌ன் சோடாப்போத்த‌ல் இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌த்தையும் எழ‌ விடாம‌ல் த‌டுக்க‌ முடியும் என்ற‌ ஆலோச‌னையை எம‌து க‌ட்சி முன் வைக்கிற‌து.
 
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர்.

8.3.2021
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுக்க.... இஸ்லாமிய பயங்கரவாதம் தான், அச்சுறுத்தலாக இருக்கு என்று....

உலமா கட்சிக்கு தெரியாது போலை கிடக்கு. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியில் சொல்லப்பட்ட முக்கால் வாசி விடயம் எனக்கு விளங்கலை. சொல்ல வந்ததை பிரட்டி பிரட்டி போட்டல் எப்படி புரியும்.

Link to comment
Share on other sites

1 hour ago, vanangaamudi said:

இந்த செய்தியில் சொல்லப்பட்ட முக்கால் வாசி விடயம் எனக்கு விளங்கலை. சொல்ல வந்ததை பிரட்டி பிரட்டி போட்டல் எப்படி புரியும்.

முக்கால் வாசி விடயம் விளங்கியது. கால் வாசிதான் விளங்கவில்லை.😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இரண்டு பேரினதும் விளங்கிய பங்கைக்கூட்டினால் (.  3/4+1/4=1 )

முழுவதும் விளங்கியுள்ளது. ஆனால் சொன்னவருக்கு  எதுவும்  விளங்கவில்லை..😜😜😜😜😜

39 minutes ago, Paanch said:

முக்கால் வாசி விடயம் விளங்கியது. கால் வாசிதான் விளங்கவில்லை.😲

 

1 hour ago, vanangaamudi said:

இந்த செய்தியில் சொல்லப்பட்ட முக்கால் வாசி விடயம் எனக்கு விளங்கலை. சொல்ல வந்ததை பிரட்டி பிரட்டி போட்டல் எப்படி புரியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


என்னப்பா இது ஒரு முஸ்லீம் தரப்பு செய்தியை போட்டுட்டு முக்கால் முக்கால் என்று முனங்கினால் நாங்கள் எந்த அர்த்தத்தில் எடுப்பது. 🤔😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரட்டி பிரட்டி போட்டால் எப்படி புரியும்......

இது மட்டும் எனக்கு நல்லா விளங்குது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

உலகம் முழுக்க.... இஸ்லாமிய பயங்கரவாதம் தான், அச்சுறுத்தலாக இருக்கு என்று....

உலமா கட்சிக்கு தெரியாது போலை கிடக்கு. 😂

இது ஒரு கிணறுத்தவளை. கோதாவுக்கு ஐஸ் வைக்கிற தோதாவில் தமிழருக்கெதிராக கொம்பு சீவி, தன் இனத்தை சோற்றுப்பார்சலுக்கு விக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, satan said:

இது ஒரு கிணறுத்தவளை. கோதாவுக்கு ஐஸ் வைக்கிற தோதாவில் தமிழருக்கெதிராக கொம்பு சீவி, தன் இனத்தை சோற்றுப்பார்சலுக்கு விக்குது.

அதேதான்...ஒரேமாதிரிப்போட்டோ ஒன்றை வைத்துக் கொண்டு..தனக்கு தானே கதைசொல்லி எழுதிவிட்டு..

ஊடக சந்திப்பு நடத்தியதுபோல பிலிம் காட்டுறதுதான் வேலை...இதைவிடஎம்து இனத்தை வம்புக்கு இழுத்து சிங்களவருக்கு சாமரை வீசுவது...

Link to comment
Share on other sites

3 hours ago, satan said:

இது ஒரு கிணறுத்தவளை. கோதாவுக்கு ஐஸ் வைக்கிற தோதாவில் தமிழருக்கெதிராக கொம்பு சீவி, தன் இனத்தை சோற்றுப்பார்சலுக்கு விக்குது.

வித்தாலும் பரவாயில்லை. தமிழன் வந்தாரையும் வாழ வைப்பான், போன இடத்தையும் வாழ வைப்பான்.

ஆனால் இது வித்துவிட்டுப் பசிக்கிறது என்று வாங்கின கோத்தாவிடமே பிச்சையும் கேட்டு நிக்கிறதே.🤔 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.