Jump to content

பெண்மை எனும் நல் மனையாள் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

  பெ ண்மை எனும் நல் மனையாள் .

 

 பெண் என்பவள் ,என் தாய்க்கு பிறகு , அவளுக்கு நிகராக, என்னையும்  எல்லா விதத்திலும்   கரிசனை கொள்ள வந்த தாரமானவள். 

என் மனைவி  , எனக்கானவள் . என்னை நம்பி வந்தவள். 

என்  உயிர் தாங்கி  பத்து மாதம் சுமந்து   வலி தாங்கி என் மகவை பெற்றவள் .  செல்வி என வாழ்ந்தவள். திருமதியானவள். தன்  பெயர் மாற்றி என் பெயர் தாங்கியவள். (ஒரு சில விதிவிலக்குண்டு ) 

 
 என் பசியாற்றுபவள்  என் வாரிசுகளுக்கு  அம்மா . என் மகனுக்கு/மகளுக்கு , அப்பா என அறிமுகம் செய்தவள்.தாலி எனும்  வேலி  தாங்கி எனக்காக வாழ்பவள்.  தன பசி மறந்து  நம் பசி போக்கியவள்.  உதிரத்தை பாலாக்கி உணவூட்டியவள். விலையில்லாதவள் .
 
 என் தாய்க்கு  மகளாக என்தந்தைக்கு மறு  மகளாக (மரு மகளாக ) என் மக்களுக்கு தாயாக  வாழ்ந்தவள் . ஆண்மைக்கு உயிர் கொடுத்தவள் 
 
தனக்கு நிகராக என்னையும் மக்களையும் நேசித்தவள் 
சபையிலே எனக்கு கெளரவம் தந்தவள் .   மக்கள் பேற்றின்  மூலம் உலகை உருவாக்கியவள் . என் குடும்ப நிர்வாகி , நல்ல வழி  காட்டி.  தாய்மையை போற்று வோம் .  சகல  பெண்களுக்கும்  இன்றைய  தினத்தில் சமர்ப்பணம். 
 
இப்படிக்கு  ஆண்மை (ஆண்மக்கள் )
  • Like 13
  • Thanks 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையாக அரவணைத்து
மனைவியாக  உடன் பயணித்து
சகோதரியாக அன்பு செய்து
மகளாக மடி தவழ்ந்து 
தோழியாக தோள் கொடுத்து
வாழும் பெண்மையை போற்றுவோம்
பகிர்வுக்கு நன்றிகள் நிலாமதி

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனை இறக்கை கட்டி பறக்கின்றது நிலாமதி அக்கா!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் தின வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றிகள் நிலாமதி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் தின வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றிகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னால் எல்லா நேரமும், எல்லா இடத்திலும் இருக்க இயலாது என்பதால் தான் பெண்ணை இறைவன் படைத்தான் என்று கூறுவார்கள்...!

வாழ்த்துக்கள்,நிலாக்கா...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பற்றிய சிறப்பான சிந்தனை, பாராட்டுக்கள் சகோதரி........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பகிர்விற்கு நன்றிகள் சகோதரி..👍

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.