Jump to content

முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்- ஹக்கீம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்- ஹக்கீம்

முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

HAKEEM-300x213-1.jpg

உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம் எதிர்கால அரசியலில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் இந்த பயங்கரமான அதிர்ச்சியை அவர்கள் மறக்கமாட்டார்கள் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் கிட்டத்தட்ட முழு முஸ்லீம் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என குறிப்பிட்டுள்ள ரவூப்ஹக்கீம் அவர்களை முஸ்லீம் மக்கள் மன்னிக்க முடியாத அளவிற்கு அரசாங்கம் சமூகத்தை மிகமோசமாக களங்கப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அந்த தீர்மானம் மிகவும் கடுமையான சொற்களுடன் கூடிய உள்ளடக்கத்தை கொண்டுள்ளது அரசாங்கம் தனது உடல்களை அடக்கம் செய்யும் கொள்கையை மாத்திரம் கைவிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசாங்கம் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவே உடல்களை தகனம் செய்யும் கொள்கையை கைவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காகவே அரசாங்கம் அவ்வாறு செய்யப்பட்டது என்பது வெளிப்படையான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுபான்மையினத்தவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த அரசாங்கத்தின் அணுகுமுறையை இது வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம் எந்த வித விஞ்ஞானரீதியிலான ஆதாரங்களும் இல்லாமல் அவர்கள் தொடர்ந்தும் உடல்களை தகனம் செய்வதை வற்புறுத்தி வந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

 

https://thinakkural.lk/article/113835

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை முஸ்லீம் நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டியது!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்- ஹக்கீம்

முந்தநாள் வந்திட்டு போன இன்ரான் கானுக்கு இந்த விசயம் தெரியுமோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறுவீதம் சிங்களவர்களின் வாக்கு பலத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசுக்கு , உங்களின் மன்னிப்பு மண்ணாங்கட்டியெல்லாம் பற்றி கவலையும் இல்லை அதை அவங்கள் கணக்கெடுக்க போறதும் என்பதுகூட  புரியாமல் ஐயா முழு நீள நகைச்சுவை பண்ணுகிறார்.

முஸ்லீம் நாடுகள் இலங்கை அரசை மிரட்டும் என்ற கனவில் இலங்கை முஸ்லீம்கள் வாழ்கின்றனர், அரசாங்கங்கள் முதலில் அரசாங்கங்களுடன் தான் சேரும் அதுக்கப்புறம்தான் சமயம் இனம் எல்லாம் பார்க்கும்.

இஸ்லாமிய போதனை நிலையங்களை இழுத்துமூடி வெளிநாட்டு மத போதகர்களை எல்லாம் நாட்டுக்கு வெளியில சிங்களவன் அனுப்பினபோது பேசாத இஸ்லாமியநாடுகள் இனிமே இவர்களுக்காக குரல் கொடுக்குமாக்கும்?

வாழ்ந்தால் ஒன்று நண்பனாக வாழவேண்டும் , இல்லையென்றால் எதிரியாக வாழவேண்டும்.

தமிழர்களை சிங்களவன் எதிரியா நினைச்சான், தமிழர்களும் அவர்களை எதிரியாக நினைத்தார்கள், வாழ்வா சாவா ஒரு கை பார்க்கலாமென்று நின்றார்கள், வென்றாலும் தோற்றாலும் நேரில் மோதியவர்களுக்கென்று ஒரு மரியாதை எப்பவுமே இருக்கும்.

இரண்டுக்கும் இடையில் நிண்டு எடை கூடிய பக்கம் மட்டுமே சாய்ந்து வாழ்ந்து சந்தர்ப்பவாத சிங்கியடிச்சால் இப்படித்தான் புலம்பிக்கொண்டிருக்கவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, valavan said:

நூறுவீதம் சிங்களவர்களின் வாக்கு பலத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசுக்கு , உங்களின் மன்னிப்பு மண்ணாங்கட்டியெல்லாம் பற்றி கவலையும் இல்லை அதை அவங்கள் கணக்கெடுக்க போறதும் என்பதுகூட  புரியாமல் ஐயா முழு நீள நகைச்சுவை பண்ணுகிறார்.

முஸ்லீம் நாடுகள் இலங்கை அரசை மிரட்டும் என்ற கனவில் இலங்கை முஸ்லீம்கள் வாழ்கின்றனர், அரசாங்கங்கள் முதலில் அரசாங்கங்களுடன் தான் சேரும் அதுக்கப்புறம்தான் சமயம் இனம் எல்லாம் பார்க்கும்.

இஸ்லாமிய போதனை நிலையங்களை இழுத்துமூடி வெளிநாட்டு மத போதகர்களை எல்லாம் நாட்டுக்கு வெளியில சிங்களவன் அனுப்பினபோது பேசாத இஸ்லாமியநாடுகள் இனிமே இவர்களுக்காக குரல் கொடுக்குமாக்கும்?

வாழ்ந்தால் ஒன்று நண்பனாக வாழவேண்டும் , இல்லையென்றால் எதிரியாக வாழவேண்டும்.

தமிழர்களை சிங்களவன் எதிரியா நினைச்சான், தமிழர்களும் அவர்களை எதிரியாக நினைத்தார்கள், வாழ்வா சாவா ஒரு கை பார்க்கலாமென்று நின்றார்கள், வென்றாலும் தோற்றாலும் நேரில் மோதியவர்களுக்கென்று ஒரு மரியாதை எப்பவுமே இருக்கும்.

இரண்டுக்கும் இடையில் நிண்டு எடை கூடிய பக்கம் மட்டுமே சாய்ந்து வாழ்ந்து சந்தர்ப்பவாத சிங்கியடிச்சால் இப்படித்தான் புலம்பிக்கொண்டிருக்கவேணும்.

 

அதே....

ஐயாவுக்கு  இப்பவும் தாங்க தான் உலகை கைகளில் பிடித்து  வைத்திருக்கின்றோம் என்ற  நினைப்பு

போய்

அண்ணன் யார்  தம்பியார் பகைவன்  யார்  என்று  அறிய முயலுங்கள்?

Link to comment
Share on other sites

ஹக்கீம் நானாவிண்ட  கதை, எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லையென்ற மாதிரி இருக்குது. 
அண்மையில் கூட இந்த சர்வாதிகார அரசாங்கத்துடன்  இணைந்து,  20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டதுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, இப்ப இப்படி கதை விடுகின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க பக்கத்தில் ஒருவரும் ஓடியோடி தனியா சந்திச்ச விஷயமெல்லாம்  சந்திக்கு வந்ததால், நானும் உங்களில் ஒருவன் என்று வேஷம் போட்டுகொண்டு, எல்லா கூட்டத்துக்கும் சமூகமளித்து  அறிக்கை விடுவதால் தன்னை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்று நினைப்பு. ஒடிக்கழைத்த தீக்கோழி மணலுக்கை தலையைபுதைப்பது போல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.