Jump to content

சமூகமும் ஓட்டமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறு  வயதில் கனக்க  கதைகள் படித்திருப்போம்

கேட்டிருப்போம்

ஏன் கனக்க அனுபவங்களை  கதைகளாக நாமே  கண்டிருப்போம்

அவை  சொல்லப்படும் விதமும் எம்மை  வந்து சேர்ந்த  விதமும் மாறுபடுவது  போல

கதையை அல்லது அனுபவத்தை கிரகித்தலும் மாறுபடலாம் மாறுபட்டு விடக்கூடும்

ஆனால் கதையின் கருவும் அனுபவத்தின்  அனுகூலமும்  மாறுவதில்லை

அதேநேரம்  அதை நாம் கடந்து  செல்வதும்  கூட 

அல்லது  கண்டும் காணதுபோவதும் 

போவது  போல  பாசாங்கு  செய்வதும் கூட நடக்கும் நடந்திருக்கலாம்?

சின்ன சின்னக்கதைக்குள் 

திருக்குறளைப்போல பெரும் புதையலும் கருவும் பாடமும் புதைந்து  கிடக்கின்றன

அவரவரது அனுபவங்களுக்கேற்ப

ஒன்றிலிருந்து இன்னொன்றாக  மாறுபடுமே

அன்றைய சமூக கால நேர நிலைக்கேற்ப மாறுபடுமே  தவிர

புதிதாக  எதையும் கண்டு  பிடிப்பதில்லை என்பதைப்போன்றதே  கதையும் கருவும்  ஏன் இசையும்  கூட.

இதில் சில  விடயங்களை  நாம் தவிர்த்தே  செல்கின்றோம்

தவிர்க்கின்றோம் என்பதற்காக அவை  எம்மை  விட்டு வைப்பதில்லை

நாமுண்டு எம் வாழ்வுண்டு  என்று நாம் விலகிச்சென்றாலும் 

இந்த  சமூகமும் அதன் கட்டுமானங்களும்  எம்மை தங்களுக்குள்  இழுக்காமல்  விடுவதில்லை

பொருளாதாரம் சார்ந்த இன்றைய உலக  ஒழுங்கில்..... 

 

அப்படியொரு  கதையை சொல்ல  விளைகின்றேன்

(எல்லோரும்  தாண்டி  வந்த  பாதையாதலால்  சிலரை குத்தக்கூடும் பலரது  மனதை சாந்தப்படுத்தக்கூடும்)

 

ஆமையும் முயலும்

இந்த  சின்னக்கதைக்குள் எவ்வளவு  அர்த்தங்கள்??

ஆமை :

தளராத முயற்ச்சி

தன்னம்பிக்கை

அடுத்தவரைப்பார்த்து  தன்னை  மாற்றாமை

கல்லெறிகளின்  போது பொறுமை

எவருடனும்  போட்டி போடாத  தன்மை

 

முயல்:

ஆணவம்

அதீத நம்பிக்கை

சோம்பேறித்தனம்

வல்லவன் என்ற  மமதை

அகங்காரம்

தனக்கு கீழுள்ளோரை  மிதித்தல்

முக்கியமாக தமக்கு பிடிக்காதவரை பிரச்சினைகளுக்குள் தள்ளி விட்டு நகைத்தல்.....

தொடரும்....

Edited by விசுகு
  • Like 14
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் விசுகர்! நல்லது கெட்டதெல்லாம் நால்வருக்கும் தெரிய வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னதிரைகள் வந்தபின் எல்லாமே தொடரும் தொடரும் தொடரும்

விசுகு என்ன விதிவிலக்கா.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை வேகத்தில் எழுதாமல் முயல் வேகத்தில் எழுதுங்கோ😄 .....தொடருங்கள் விசு வாசிக்க ஆர்வமாக உள்ளோம்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

ஆமை வேகத்தில் எழுதாமல் முயல் வேகத்தில் எழுதுங்கோ😄 .....தொடருங்கள் விசு வாசிக்க ஆர்வமாக உள்ளோம்

ஆமா.. ஆமா.. ஆமை நல்ல விருப்பம்😀

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

சிறு வயதில் பஞ்சதந்திரக் கதைகளை விரும்பிப் படித்ததுண்டு. அதில் சொல்லப்பட்ட நீதிகளை விட கதை என்ற அம்சமே அப்போது என்னைக் கவர்ந்தது. 

இப்போது அவற்றை மீண்டும் படித்தால் இக்காலத்துக்கும் பொருத்தமான பல உள்ளார்ந்த அர்த்தங்கள் புலப்படும் என நினைப்பதுண்டு. 

கால ஓட்டத்தில் நாம் பெறும் அனுபவங்கள் நமது கண்ணோட்டத்தையும் தொடர்ச்சியாக மாற்றி பல புதிய விஷயங்களை நமக்குக் கற்பிக்கின்றன.

அந்த வகையில் உங்களது இந்தத் திரி என்னை மிகவும் கவர்ந்தது விசுகு அண்ணா. உங்கள் கோணத்தில் இருந்து நீங்கள் பார்த்ததை படிக்க நானும் ஆவலாக உள்ளேன். தொடருங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமையும் முயலும்

இந்த  சின்னக்கதைக்குள் எவ்வளவு  அர்த்தங்கள்??

ஆமை :

தளராத முயற்ச்சி

தன்னம்பிக்கை

அடுத்தவரைப்பார்த்து  தன்னை  மாற்றாமை

கல்லெறிகளின்  போது பொறுமை

எவருடனும்  போட்டி போடாத  தன்மை

 

முயல்:

ஆணவம்

அதீத நம்பிக்கை

சோம்பேறித்தனம்

வல்லவன் என்ற  மமதை

அகங்காரம்

தனக்கு கீழுள்ளோரை  மிதித்தல்

முக்கியமாக தமக்கு பிடிக்காதவரை பிரச்சினைகளுக்குள் தள்ளி விட்டு நகைத்தல்.....

உண்மையில் இவை ஒவ்வொரு குணம்  தரம் குறித்தும்

அனுபவங்கள்  குறித்தும் ஆயிரக்கணக்கான  கதைகளை  தரமுடியும்

வந்தும் இருக்கின்றன

ஆனால் இந்த  ஆமையும் முயலும் கதையின் முடிவின் பின்....

அந்த  ஆமையும்  முயலும் மனிதர்களாக  இருந்தால்  ஏற்படும் விளைவுகள் சார்ந்து 

எல்லோருக்கும்  அனுபவங்கள்  இருக்கும்

 

தாமாக  சென்று வலிய போட்டிக்கிழுத்து  விட்டு

தமது மமதையால் சோம்பேறித்தனத்தால் தோற்றுவிட்டாலும்

தான் என்ற  மமதையும் ஒப்பீட்டளவில் தனக்கு  கீழ் உள்ள  ஒருவரிடம் தோற்றதை ஏற்கமுடியாமல்  அவர்கள்  படும்பாடு  இருக்கிறதே???

தமது தோல்வியை மூடிமறைக்க அல்லது மீண்டும் மீண்டும் போட்டிக்கிழுத்து அழிக்க

அல்லது  அந்த  ஆமையின் வெற்றியை கேலிக்குரியதாக்க அவர்கள் எதையும்  செய்வதை

ஏன் கொலைவரை செல்வதையும் பார்க்கலாம்

அதுவும்  தோற்குமிடத்து

நிரந்தர மதுவுக்கு  அடிமையாதல்

மனநோயாளியாகுதல்

தற்கொலை  செய்தல்  ...................

 

எனக்கு தனிப்பட்ட முறையிலும்

தொழில்  சார்ந்தும்

ஓரளவு பொதுவாழ்வில் இருந்தவன்  என்ற ரீதியிலும் வேறுபட்ட பல  அனுபவங்களுண்டு

இந்த  அனுபவங்களை  பகிரங்கப்படுத்துவதல்ல எனது  நோக்கம்

ஒருவராவது இந்த முயல்களின் சதியில்  சிக்காமல் இருந்தாலே போதும்?

நமது  வாழ்வை நாம்  தான் கட்டணும்

எவரது  வாழ்வையாவது வளர்ச்சியையாவது

ஓட்டங்களையாவது பார்த்து நாமும்  ஓடத்தொடங்கினால்???

வாழ்வே நாசமாகும்

ஆனால் எப்பொழுதும் பிசியாக இருப்பதாக  சொல்லப்படும் இன்றைய  உலகில்

இது  தான்  ஒவ்வொரு வீட்டிலும்  நடக்கிறது

மனைவியுடன்  பேச  நேரமில்லை

பிள்ளைகளுடன் கொஞ்ச ஒன்றாக  சாப்பிட 

பிள்ளைகளின்  குறை நிறைகளை உரையாட நேரமொதுக்க முடியவில்லை

எமது  விரலுக்கான  வீக்கத்துக்குள்  தான் எம்  வாழ்வை கட்டியமைத்திருக்கின்றோமா???

ஏன் இந்த  இயந்திர வாழ்வு??

இதன்  பலாபலன்கள்  என்ன???

நாம்  ஆமைகளா?

முயல்களா??

அல்லது  ஆமைகளாக  இருந்து  முயல்கள் ஆனவர்களா??

அல்லது  முயல்களாக  இருந்து அடி  வாங்கி ஆமையானவர்களா???

தொடரும்....

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

ஆமா.. ஆமா.. ஆமை நல்ல விருப்பம்😀

இவருக்கு எங்கை போனாலும் ஆமை நினைப்புத்தான். 😷

முயல் எல்லாம் நினைப்புக்கு வராது...:cool:

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.