Jump to content

ஈழத்தின் பாரம்பரிய தேங்காய் சட்னி இப்படித்தான் இருந்தது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சம்பல் இருந்தால் எந்த ஒரு சாப்பாடும் அதோடு சாப்பிட்டிடலாம்.
செய்முறைக்கு பாராட்டுக்கள்.
நான் இங்கேயும் குத்திறேன்.அங்கேயும் குத்திறேன்.
என்ன பெயர் தான் வித்தியாசமாக இருக்கும்.
உங்கள் காணொளிகளில் விளம்பரங்கள் வருவதில்லையே ஏன்?
அப்படி என்றால்$$$$$ வருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதியில் வசிக்கும் காலத்தில்....வாரத்தில் ஏழு நாட்களும்..காலையில் அல்லது இரவுச் சாப்பாட்டில், சம்பல் எதுவோ ஒரு வடிவத்தில் கட்டாயம் இருக்கும்! பகிர்வுக்கு நன்றி...!

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

சம்பல் இருந்தால் எந்த ஒரு சாப்பாடும் அதோடு சாப்பிட்டிடலாம்.
செய்முறைக்கு பாராட்டுக்கள்.
நான் இங்கேயும் குத்திறேன்.அங்கேயும் குத்திறேன்.
என்ன பெயர் தான் வித்தியாசமாக இருக்கும்.
உங்கள் காணொளிகளில் விளம்பரங்கள் வருவதில்லையே ஏன்?
அப்படி என்றால்$$$$$ வருமா?

உண்மைதான் ஈழப்பிரியன்.விளம்பரங்கள் வருவதற்கு குறைந்தது ஆயிரம் subscribers உம் 4000 view hours உம் இருக்க வேண்டும். நாமெல்லாம் அதற்கு தகுதியாக குறைந்தது 5 வருடங்கள் ஆவது ஆகும் . $$$$ நான்தான் அதை செலவிடுகிறேன் ஆனால் அப்படி எதுவும் வருவதற்கான அறிகுறி 5 வருடத்திற்கு இல்லை. 😄😄😄நன்றி ஈழப்பிரியன்

1 hour ago, புங்கையூரன் said:

விடுதியில் வசிக்கும் காலத்தில்....வாரத்தில் ஏழு நாட்களும்..காலையில் அல்லது இரவுச் சாப்பாட்டில், சம்பல் எதுவோ ஒரு வடிவத்தில் கட்டாயம் இருக்கும்! பகிர்வுக்கு நன்றி...!

உண்மைதான் .. உங்கள் கருத்திற்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கும் இணைப்பிற்கும் நன்றி.

ஊருக்கு ஊர் சம்பல்/பச்சடி செய்முறை வேறுபடும். இதுதான் இப்படித்தான் என்று யாரும் உரிமை கோரமுடியாத ஒரு தேங்காய் மகத்துவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் சம்பல்தான் பேமஸ் சட்னி இல்லை என நினைக்கிறன் இடிச்ச சம்பலுக்கு பிறகுதான் சட்னி  எல்லாம்

உங்கள் செய்முறைக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஈழத்தில் சம்பல்தான் பேமஸ் சட்னி இல்லை என நினைக்கிறன் இடிச்ச சம்பலுக்கு பிறகுதான் சட்னி  எல்லாம்

உங்கள் செய்முறைக்கும் வாழ்த்துக்கள் 

ராஜா இட்டலி என்றால் சட்னி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

ராஜா இட்டலி என்றால் சட்னி தான்.

எங்கள் ஊரில் இட்லிக்கும் சம்பல்தான் சாம்பாரும் இல்லை

பருப்புக்கறி 

(தற்போது இந்திய உணவு முறைகளும் , உறவுமுறைகளும் , கொண்டாட்டங்களும் உள்ளே வந்துள்ளது )  ஈழத்தை விட்டு நாம் எல்லா வழிகளிலும் தூரமே செல்கிறோம் .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அங்கும் இங்கும் குத்துறேன் பெயர்கள் வித்தியாசம் அவ்வளவு தான் நிகே.🤭😊

Link to comment
Share on other sites

On 9/3/2021 at 19:07, குமாரசாமி said:

செய்முறைக்கும் இணைப்பிற்கும் நன்றி.

ஊருக்கு ஊர் சம்பல்/பச்சடி செய்முறை வேறுபடும். இதுதான் இப்படித்தான் என்று யாரும் உரிமை கோரமுடியாத ஒரு தேங்காய் மகத்துவம்.

உண்மைதான் ஆனால் இலங்கையிலதான் சம்பலுக்கு கூட பெருஞ்சீரகம் சேர்ப்பார்கள். நன்றி sir 

On 10/3/2021 at 08:53, அன்புத்தம்பி said:

பகிர்ந்து கொண்டமைக்கு  மிக்க நன்றிகள்

நன்றி அன்புத்தம்பி

On 10/3/2021 at 08:56, தனிக்காட்டு ராஜா said:

ஈழத்தில் சம்பல்தான் பேமஸ் சட்னி இல்லை என நினைக்கிறன் இடிச்ச சம்பலுக்கு பிறகுதான் சட்னி  எல்லாம்

உங்கள் செய்முறைக்கும் வாழ்த்துக்கள் 

உண்மைதான் சம்பல் என்றாலே அது ஈழம்தான். கருத்து பகிர்வுக்கு நன்றி 

On 10/3/2021 at 09:32, ஈழப்பிரியன் said:

ராஜா இட்டலி என்றால் சட்னி தான்.

மீன் குழம்பும் நல்லாய்தான் இருக்கும்😀😀😀

On 10/3/2021 at 09:50, தனிக்காட்டு ராஜா said:

எங்கள் ஊரில் இட்லிக்கும் சம்பல்தான் சாம்பாரும் இல்லை

பருப்புக்கறி 

(தற்போது இந்திய உணவு முறைகளும் , உறவுமுறைகளும் , கொண்டாட்டங்களும் உள்ளே வந்துள்ளது )  ஈழத்தை விட்டு நாம் எல்லா வழிகளிலும் தூரமே செல்கிறோம் .
 

உங்கள். ஆதங்கம் புரிகிறது.எனக்கு தெரிந்து சாம்பார் இலங்கையில் இருந்தது ஆனால் அதன் விதம்தான் மாறுபட்டது.பல மரக்கறிகளை ஒன்றாய்போட்டு பூசனிக்காய் நிறைய போட்டு மைசூர் பருப்பில் செய்வார்கள். சாப்பிட்டுருப்பீர்கள் என்றுதான் நினைக்கிறேன்...கருத்துக்கு நன்றி 

Link to comment
Share on other sites

On 10/3/2021 at 11:28, யாயினி said:

நானும் அங்கும் இங்கும் குத்துறேன் பெயர்கள் வித்தியாசம் அவ்வளவு தான் நிகே.🤭😊

உண்மைதான்.ஆனால் இலங்கையில் சட்னிக்கு வெங்காயம் , பெருஞ்சீரகம் சேர்த்து தாழிப்பதால் அதன் வாசம் கொஞ்சம் மாறுபட்டதாய் இருக்கும். நன்றி யாயினி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.