Jump to content

ஈழப்பெண்ணை ஏமாற்றிய நடிகர் ஆர்யா: திடுக்கிடும் ஆதாரங்கள் அம்பலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்யா தன்னை காதலித்து ஏமாற்றி பணமோசடி செய்தார் என இலங்கை தமிழ்ப்பெண் பரபரப்பை கிளப்பிய நிலையில் அந்த புகாரை வாபஸ் வாங்கும்படி விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியாகியுள்ளது.

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் விட்ஜா. ஜேர்மனி குடியுரிமை பெற்ற இவர் அந்த நாட்டின் சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார்.

இவரை, பிரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 70,40,000 பெற்றதாக தெரிகிறது. பின்னர், திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக ஆர்யா மீது விட்ஜா இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஓன் லைன் வழியாக புகார் அளித்துள்ளார்.

arya_chat001.jpg

இந்த புகார் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தன் மீது கொடுக்கப்பட்ட புகாரை திரும்ப பெற வேண்டும் என ஆர்யா மிரட்டியதாக ஒரு சாட்டிங்கை பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் பங்கேற்ற சமயத்தில் ஆர்யாவிடம் செய்த சாட்டிங் ஹிஷ்டரிகளையும் ஈழப்பெண் வெளியிட்டுள்ளார்.

arya_chat002.jpg

அதில் பிரபல ஹீரோ நீ, என்னிடம் பிச்சை கேட்கிறாய், உங்கள் ஊழியர்கள் பிச்சைக்காரன் என நினைக்கிறார்களோ இல்லையோ, நான் நினைக்கிறேன் என அந்த பெண் கேள்வி எழுப்ப தனக்கு நிறைய கடன்கள் இருப்பதாகவும் அதற்காக தான் இந்த ஷோவில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஆர்யா.

அதே போல திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டு சாயிஷாவை திருமணம் செய்வது குறித்து கேட்ட போதும் அப்பா எடுத்த முடிவு என்று நழுவிய ஆர்யா, எனக்கு கடனுக்கு தேவையான மொத்த பணத்தையும் கொடுத்தால் சாயிஷா திருமணத்தை தான் உடனடியாக நிறுத்தி விடுவதாகவும் ஆசை வார்த்தைகளை ஆர்யா கூறியது தெரியவந்துள்ளது.

arya_chat003.jpg

https://www.ibctamilnadu.com/cinema/82/108631

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்ஜாவிற்கு.... விசர் போல கிடக்குது. 🧐

யாரும்.... சினிமா நடிகர்களிடம், பணத்தை கொடுப்பார்களா. 

பிள்ளைக்கு... வளர்ப்பு சரியில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

விட்ஜாவிற்கு.... விசர் போல கிடக்குது. 🧐

யாரும்.... சினிமா நடிகர்களிடம், பணத்தை கொடுப்பார்களா. 

பிள்ளைக்கு... வளர்ப்பு சரியில்லை.

இது கொஞ்சம் கஷ்டமான விடயம், விஜயை காதலித்து மணந்ததும் நம்ம ஊர்  பொண்ணுதான்

Link to comment
Share on other sites

முதலில் இப்படியான நாலாம்தர நிகழ்ச்சிக்கு செல்வதை எம்மவர்கள் தவிர்ப்பதே மேல். கலம்ஹாசனின் நிகழ்ச்சிக்கு சென்ற இரண்டு எம்மவர்கள் பற்றி வந்த செய்திகள் கூட நல்லதாக அமைந்திருக்கவில்லை.

திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கும் போட்டிகளுக்கும் போவது வேறு, கொசிப் தனமானதும், சுயம்வரம் போன்ற பெண்மையை இழிவுபடுத்துவதுமான நிகழ்ச்சிகளுக்கு செல்வது வேறு. முற்றிலும் வணிக ரீதியில் அமைந்த இப்படியான நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறத்தாழ 7.04 மில்லியன் இந்திய ரூபாய்கள், 70, 000 (எழுபதாயிரம்) பிரித்தானிய பவுண்கள் (pounds).

இவ்வளவு  தொகையை, அதாவது  எவ்வாறு கொடுத்தார் அந்த பெண்?

ஆனால், அந்த பெண் ஒரு விதத்தில் நிம்மதி அடையவேண்டும் அரியாவுடன் திருமணம் முடிந்து, கைவிடப்பப்பட்ட நிலைக்கு  வரவில்லை என.

தொகை பெரிதாயினும், பெண்ணுக்கு வயது இருப்பதனால் ஓரளவு உழைப்பின் மூலம் நிவர்த்தி செய்வதற்கு நேரம் இருக்கிறது.

ஆனால், ஆரியா சட்ட வழிகளில் துரத்துப்படவேண்டும். 

முதலாவதாக, அந்த பெண் ஜேர்மன் நீதி மன்றத்தில் தாக்கு செய்து ஓர் இஅடைக்கல தீர்ப்பை பெற்று, ஆரியாவின் இந்தியில் உள்ள சொத்துக்களை விற்க கூடியது முடக்கும் படி இந்திய சட்ட மன்றத்தை கேட்பதற்கு வழி  இருக்கிறது.

ஆரிய நினைத்து இருக்கிறார் சுலபமாக ஏமாற்றி விடலாம் என்று.

அனால், கிந்திய பல வழிகளில், பணம் மற்றும் கடன் விவகாரங்களில், சர்வதேச தரத்துக்கு சட்டம் மற்றும் நீதி துறையை உயர்த்த வேண்டும் என்று, ஏனெனில் சர்வதேச வர்த்தகத்துக்கு, சந்தைக்குக்கு, உள் சந்தை பலதேசிய கொம்பனிகளு துறக்க வேண்டும் என்று, சுருக்கமாக  market economy ஐ திறப்பதற்கும், வளர்ப்பதற்கும், பல சட்டங்களை சர்வதேச ஒத்துழைப்புக்கு ஏற்றவாறு மாற்றியும், தரம் உயர்த்தியும் விட்டது.

இது ஆர்யாவுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.  இதுவே ஆர்யாவுக்கு வழக்கு அவரது வீட்டை தேடி வரும், ஜேர்மன்  சட்டமன்றம் கொடுத்த தீர்ப்புடன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது, ஆர்யா இப்போதும் இதைப்பற்றி  அந்த பெண்ணுடன் தொடர்படுவது, அதுவும் ஆர்யாவின்  தொடர்பாடலின் சுவடுகளை பகிரங்கமாக பெறக்கூடிய சமூக வலைதளத்தில், ஆர்யா வசமாக சட்டத்தின் வலைக்குள் மாட்டிக் கொண்டார்.

அந்த அவரது பெண்  ஜேர்மன் வக்கீல் தான் இப்படி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபலமாகுவதற்கு சிலரால் சோடிக்கப்படுவதும் வழமை ஆனால்  இத்தனை பெறுமதியான பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்பாரா என கேள்வியும் எழுகிறது 

சிலவேளைகளில் நம்பவேண்டியும் இருக்கு சீமானுக்கு  அள்ளி வழங்கும் கூட்டமும் இருக்குதானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

பிரபலமாகுவதற்கு சிலரால் சோடிக்கப்படுவதும் வழமை ஆனால்  இத்தனை பெறுமதியான பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்பாரா என கேள்வியும் எழுகிறது 

சிலவேளைகளில் நம்பவேண்டியும் இருக்கு சீமானுக்கு  அள்ளி வழங்கும் கூட்டமும் இருக்குதானே 

😁

யாரு, உங்கடை ஆக்களோ?

சீமான் கட்சி, வலைத்தளம் பார்க்கிறதில்லையோ? கொடுக்கிற ஆக்கள் எல்லாம், பெரும்பாலும்  தமிழ் நாட்டினுள் தான்....

****

இங்கே யாரோ சுத்துகினம்!

இவ்வளவு பணத்தை, யாரும் சிம்பிளா அனுப்ப முடியாது. அனேகமா அந்த பெண் பொய் சொல்லுது அல்லது, யாரோ, ஆர்யா பெயரில் சுத்தி இருக்கினம்.

இந்த மாதிரி, சான்றுகள் வரக்கூடிய மாதிரி யாரும் சிக்க மாட்டார்கள்.

ஐஸ்வர்யா ராய் படத்தினை அமெரிக்கர் ஒருவருக்கு அனுப்பி கிறங்க வைத்து, $125,000 பணத்தை பிடுங்கி, அவர் பம்பாய் விமான நிலையத்துக்கு, கலியாண மாப்பிள்ளையாக வந்து, பொம்பிளை அழைப்புக்கு வரவில்லை என்று, information desk போய், பெயரை சொல்லி, தான் காத்திருப்பதாக அறிவிக்கும் படி சொல்ல, அவரது பதட்டத்தினை பார்த்து, விசாரிக்க, படத்தினை காட்ட, அப்போதுதான் அவர், உலக அழகி, நடிகை என்று தெரிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

😁

யாரு, உங்கடை ஆக்களோ?

சீமான் கட்சி, வலைத்தளம் பார்க்கிறதில்லையோ? கொடுக்கிற ஆக்கள் எல்லாம், பெரும்பாலும்  தமிழ் நாட்டினுள் தான்....

எங்கட  ஆட் கள் ஏன் இவங்களுக்கு கொடுப்பான் அதுக்கு வேற வேலை பண்ணிரமாட்டம் இங்குள்ள சனத்துக்கு  

சில முகநூல் பார்ப்பேன் நம்மவர்கள் அவர்கள் இடும் பதிவை வைத்து தான் சொன்னன்  அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் திடுக்கிட என்ன இருக்கிறது.. 🤥

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

பிரபலமாகுவதற்கு சிலரால் சோடிக்கப்படுவதும் வழமை ஆனால்  இத்தனை பெறுமதியான பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்பாரா என கேள்வியும் எழுகிறது 

சிலவேளைகளில் நம்பவேண்டியும் இருக்கு சீமானுக்கு  அள்ளி வழங்கும் கூட்டமும் இருக்குதானே 

பிச்சைக்காறனின் வாந்தி போன்று எதிலும் சீமான் எதற்கும் சீமான் எதற்குள்ளும் சீமான். .... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

இதில் திடுக்கிட என்ன இருக்கிறது.. 🤥

பிச்சைக்காறனின் வாந்தி போன்று எதிலும் சீமான் எதற்கும் சீமான் எதற்குள்ளும் சீமான். .... 😂

ஈழத்தையும் , தலைவரையும் வைத்து செய்ததை போலவா ?? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஈழத்தையும் , தலைவரையும் வைத்து செய்ததை போலவா ?? 😁

நீங்கள் ஈழம் என்று வட மாகாணத்தையும் தலைவர் என்று பிரபாகரனையும் (வட மாகாணத்தாருக்கு மட்டும்) குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

சரியா / தவறா... 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இதில் திடுக்கிட என்ன இருக்கிறது.. 🤥

பிச்சைக்காறனின் வாந்தி போன்று எதிலும் சீமான் எதற்கும் சீமான் எதற்குள்ளும் சீமான். .... 😂

சீமான் என்றவுடன் பலருக்கு உதறல் எடுக்கின்றது. இன்னும் பெரும்பான்மைக்கும் வரவில்லை. ஆட்சிக்கும் வரவில்லை. 

ஆட்சிக்கு வந்தால்.......?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ஆரம்ப காலத்தை நினைத்து பார்க்கிறேன் சந்தியடியில்  இருப்பவர்கள் ஆரம்ப காலத்தில் டெலோவுக்குத்தான் சப்போர்ட் புலியை  திட்டுவார்கள் ஒருகட்டத்தில் புலிகளின் நடவடிக்கையால் கவரப்பட்டு புலிகளுக்கு ஆதரவாய் மாறினார்கள் டெலோவில் இருந்தவர்களும் புலிகளுக்கு வேலை செய்ய தொடங்கினார்கள் .

நிற்க சீமானின் வாதம் எப்போதோ ஒரு நாள் வெல்லும் அப்போது பார்ப்போம் இவர்களை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிரபலமாகுவதற்கு சிலரால் சோடிக்கப்படுவதும் வழமை ஆனால்  இத்தனை பெறுமதியான பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்பாரா என கேள்வியும் எழுகிறது 

சிலவேளைகளில் நம்பவேண்டியும் இருக்கு சீமானுக்கு  அள்ளி வழங்கும் கூட்டமும் இருக்குதானே 

பிள்ளையானுக்கு உங்க கொம்மானுக்கு புலம்பெயர் நாடுகளில் உண்டியல் இரகசியமாக இருக்கு.....அதையெல்லாம்  மறந்தும் வெளியில் சொல்ல மாட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பெண் என்று ஒரு அடைமொழிக்கான தேவை என்ன? ஒரு கூத்தாடியுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது லாபம், நட்டம் இரண்டு பின்விளைவுகளும் உள்ளது என்பது ஆரம்பத்திலேயே புரியத்தானே வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

ஈழப்பெண் என்று ஒரு அடைமொழிக்கான தேவை என்ன? ஒரு கூத்தாடியுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது லாபம், நட்டம் இரண்டு பின்விளைவுகளும் உள்ளது என்பது ஆரம்பத்திலேயே புரியத்தானே வேண்டும். 

முந்தி ஊரிலை சொல்லுவினம் எல்லோ, லண்டன் மார்க் குண்டன் வெடி எண்டு.... பிறகு லங்கா புவத்...

அப்பப்ப, நம்ம கொழும்பான் விடுவார்... உதுகளை நம்புறியளே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

நீங்கள் ஈழம் என்று வட மாகாணத்தையும் தலைவர் என்று பிரபாகரனையும் (வட மாகாணத்தாருக்கு மட்டும்) குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

சரியா / தவறா... 🤥

இல்லையே

ஈழமென்பது ஒட்டு மொத்த இலங்கையே இலங்கைக்கு இன்னொரு பெயரும்  ஈழம் அதில் தமிழீழம் என்பது வடகிழக்கை சேர்த்து சொல்லப்பட்டது 

போர் நடந்தது  வடக்கில்தானே கிழக்கில் இல்லை அப்படித்தானே  உங்கள் கருத்து  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பிள்ளையானுக்கு உங்க கொம்மானுக்கு புலம்பெயர் நாடுகளில் உண்டியல் இரகசியமாக இருக்கு.....அதையெல்லாம்  மறந்தும் வெளியில் சொல்ல மாட்டீர்கள்.

இருக்கலாம் பிள்ளையானின் வேட் கை புத்தகம் கனடாவிலோ எங்கேயோ வெளியிட்டதையும் அதில் கலந்து கொண்ட நம்ம ஆட் களையும் பார்த்தேன்  அவர்கள்  ஏன் ஆதரவை வழங்குறார்கள் என நீங்கள் சிந்திக்க வேண்டும் ஆரம்பத்தில் நூற்றுக்கு நூறு வீதம் வெறுப்பாக இருந்த மக்கள் உள்நாடு, வெளிநாடு இன்று மாறக்காரணம் என்ன என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள முயல வேண்டும் . என்னைப்போல பேயை விட பிசாசு பரவாயில்லை என நினைக்கிறார்களோ தெரியல . 

ஆனால் நானும் கட்சிக்கு ஆதரவு மக்களின் அபிவிருத்தி பணிகளுக்கும்  ஆதரவு வழங்கிக்கொண்டுதான் இருப்பேன் ஆனால் அவர்களுக்கு எனது தனிப்பட்ட ஆதரவு கிடையாது  ஒரு காலமும் இதை நீங்கள் புரிந்து கொள்ள போவதுமில்லை  ஆனால் கர்ணா , பிள்ளையானின் ஆட் கள் என முத்திரை மட்டுமே உங்களால் குத்த முடியும்:grin::grin:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லையே

ஈழமென்பது ஒட்டு மொத்த இலங்கையே இலங்கைக்கு இன்னொரு பெயரும்  ஈழம் அதில் தமிழீழம் என்பது வடகிழக்கை சேர்த்து சொல்லப்பட்டது 

நன்று நன்று.

😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.