Jump to content

"தமிழி" எழுத்தை ஆர்வத்துடன் கற்கும் கரூர் பள்ளி மாணவ, மாணவிகள் - அசத்தும் முதல்வர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழி" எழுத்தை ஆர்வத்துடன் கற்கும் கரூர் பள்ளி மாணவ, மாணவிகள் - அசத்தும் முதல்வர்

4 மணி நேரங்களுக்கு முன்னர்
தமிழி

தமிழ் மொழியின் ஆதி எழுத்து வடிவமான தமிழியை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் கற்று வந்த நிலையில், கரூரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவர்கள் தமிழியை எழுதப் படிக்க கற்றுள்ளனர். தொடர்ந்து தமிழியை கற்றுக் கொடுப்பதை ஓர் இயக்கமாக தொடங்கி இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தமிழியை எழுதப் படிக்க கற்றுக் கொடுத்து வருகிறார் பள்ளி முதல்வர் ஒருவர்.

கரூரில் உள்ள தனியார் பள்ளியின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன். திருவள்ளுவர் மாணவர் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் தொடங்கிய சிறிய முயற்சியின் விளைவாக இன்று தமிழி பள்ளி மாணவர்களிடம் எளிமையாக பரவியுள்ளது.

"தமிழியை ஓர் ஆர்வத்தில் கற்றுக் கொண்டேன். கல்வெட்டுகளில் உள்ள தமிழ் மொழியின் ஆதி எழுத்து வடிவம் தமிழி எனப்படுகிறது. தமிழியை கற்றுக் கொண்டதால், கல்வெட்டுகளையும் படிக்க முடிந்தது. இதை இளைய தலைமுறை மாணவர்கள் கற்றுக் கொண்டால். தமிழின் தொன்மையையும், தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை கல்வெட்டுகள் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என்பதற்காக நான் முதல்வராக உள்ள பள்ளியில் ஆசிரியர்களுக்கு தமிழியை கற்றுக் கொடுத்தேன் அவர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தோம். இப்படித்தான் ஆரம்பமானது. இன்று நான் முதல்வராக உள்ள பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளில் 9 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழியை எழுத, படிக்க கற்றுள்ளனர்" என்றார்.

தனது பள்ளியில் மட்டுமல்லாது, கரூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளி, தனியார் கல்லூரி, சேலம், நாமக்கல், மதுரை துறையூர் என கரூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இவரது தமிழி பயிற்சி தொடர்கிறது.

 
தமிழி

ராமசுப்பிரமணியன் முதன்மை முதல்வராக உள்ள பள்ளியில் தமிழி கற்றுக் கொண்ட மாணவ, மாணவர்கள் ஒன்றிணைந்து திருக்குறளை தமிழியில் எழுதியுள்ளனர். அதுமட்டுமல்லாது, ஒரு சாதனை முயற்சியாக 4,500 மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பத்துபாட்டு, எட்டுத் தொகை, நாலடியார், நான்மணிக்கடிகை என 36 சங்க இலக்கிய நூல்களை தமிழியில் எழுதியுள்ளனர்.

தமிழியில் எழுதிய சங்க இலக்கிய நூல்களை செம்மைப்படுத்தி, நூல் வடிவில் பிரசுரிக்க முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

தமிழி

"எட்டாம் வகுப்பு படிக்கும்போது வாரத்துக்கு ஒரு வகுப்பு என தமிழி கற்றுக் கொண்டோம் கடந்த ஆண்டு சாதனை முயற்சியாக 4 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து தமிழ் இலக்கியங்களை தமிழியில் எழுதிபோது, நான் புறநானுறு பாடல்களை தமிழியில் எழுதினேன்" என்றார் ஒன்பதாம் வகுப்பு மாணவர் தரணீஸ்.

அபிநயா என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி கூறுகையில், "தமிழியை 3 வார காலத்தில் கற்றுக் கொண்டேன். நமது முன்னோர்களின் எழுத்து வடிவத்தை கற்றுக் கொள்வது பெருமையாக உள்ளது. எனது வீட்டருகே உள்ள 6-ஆம் வகுப்பு படிக்கும் தோழிக்கு தமிழி கற்றுக் கொடுத்தேன்" கூறினார்.

தமிழி

தமிழி, தமிழகத்தை பொறுத்தவரை குறியீடுகளுக்கு அடுத்த வரி வடிவம் தமிழ் பிராமி எழுத்து வடிவமாகும். இதை பண்டை தமிழ் எழுத்துக்கள் எனவும், தமிழி எனவும் தமிழராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கீழடி அகழாய்விலும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

2 வாரங்களில் தமிழி கற்கலாம்

முறையான எளிமையான பயிற்சி எடுத்துக் கொண்டால், இரு வாரங்களில் தமிழியை கற்றுக் கொள்ளலாம் என தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

https://www.bbc.com/tamil/india-56364748

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முதல்வரைக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும்........சிறப்பான செயல்......  👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.