Jump to content

தேம்ஸ் நதிக் கரையோரம்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேம்ஸ் நதிக் கரையோரம்- - - - - -
———————————-

அன்று ஒரு நாள் 
மனிதம் வலி சுமந்து தேடியபோது 
உலகம் இறந்து கிடந்தது.

தேம்ஸ் நதிக் கரையோரம் தீபம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது வலி சுமந்த ஈழத் தமிழனுக்காய். அன்று ஒரு நாள் அந்த ஐரிஷ் போராளி பொபி சாண்ட் (Bobby Sands) தன் இனத்துக்காய் தண்ணி அருந்தாமல் போனதையும் பார்த்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியமா எம் இனத்துக்காய் பேசும். இரும்பு மனிதர்களையும் அசைத்து பார்க்கும் உங்கள் வலி புரிகிறது. 

அவனது இரத்தத்தை...
அவளது கண்ணீரை...
பார்க்க கண்கள் இல்லை...
துடைக்க கைகள் இல்லை...
பேச வாயில்லை...
நினைக்க இதயமும் இல்லை...
இறந்துதான் போய்விட்டோம் 
எல்லோருமே 

என்று எம் உறவுக் கவிஞன் ஒருவன் எழுதியது போல் அன்று ஒரு நாள் மனிதம் வலி சுமந்து  அழுதபோது உலகம் இறந்து கிடந்ததல்லவா. தர்மத்தின் அச்சில் உலகம் சுற்றுவதில்லை. பொருளாதார நலனில் மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும் மனிதம் இல்லா உலகம் எல்லா இது. இழப்பதற்கு எதுகும் இல்லாத ஈழத் தமிழனிடம் இன்னும் ஒரு தாயை நாம் ஏன் இழக்க வேண்டும். சர்வதேசத்தை வெல்லும் காலம் வரும் வரை நாம் உழைக்க வேண்டும். நீதி வழங்காத எந்த நல்லிணக்கமும் சமாதானமும் சாத்தியம் இல்லை. Without justice there can be no peace or reconciliation. 

நாம் கடக்க வேண்டிய பாதை கடினமானது. சுதந்திரம் என்பது பூக்களின் மேல் நடப்பது போல் இல்லை. வேதனைகளையும் சோதனைகளையும் கடந்து தான் விடிவு தேட வேண்டும். அர்பணிப்புகளும் தியாகங்களும் ஒரு போதும் வீண்போகாது. கல்வியும் அறிவும் ஆற்றலும் கொண்ட ஈழத் தமிழ் பிள்ளைகள்  இன்று உலகப் பந்தில் முளைத்திருக்கிறார்கள். சிந்தனையும், தெளிவும், ஐக்கியமுமாய் நகர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எல்லாமே இன்று இருப்பது போல் நாளை இருப்பதில்லை மாற்றம் நிச்சயம் வந்தே ஆகும். நாம் போக வேண்டிய தூரம் நீண்டதாகவே இருக்கிறது  இருந்த போதிலும் இருள் ஒரு நாள் விலகி ஒளி தெரியும் காலம் வரும்.

பா.உதயன் ✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி....உதயன்!

நாளைய பொழுது விடியும் எனும் நம்பிக்கையினால் தானே...பறவைகள் பழங்களைக் கூடுகளில் சேர்த்து வைப்பதில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, uthayakumar said:

நாம் கடக்க வேண்டிய பாதை கடினமானது. சுதந்திரம் என்பது பூக்களின் மேல் நடப்பது போல் இல்லை. வேதனைகளையும் சோதனைகளையும் கடந்து தான் விடிவு தேட வேண்டும். அர்பணிப்புகளும் தியாகங்களும் ஒரு போதும் வீண்போகாது. கல்வியும் அறிவும் ஆற்றலும் கொண்ட ஈழத் தமிழ் பிள்ளைகள்  இன்று உலகப் பந்தில் முளைத்திருக்கிறார்கள். சிந்தனையும், தெளிவும், ஐக்கியமுமாய் நகர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எல்லாமே இன்று இருப்பது போல் நாளை இருப்பதில்லை மாற்றம் நிச்சயம் வந்தே ஆகும். நாம் போக வேண்டிய தூரம் நீண்டதாகவே இருக்கிறது  இருந்த போதிலும் இருள் ஒரு நாள் விலகி ஒளி தெரியும் காலம் வரும்.

 உதயகுமார்!  கவிதையுடன் கூடிய கதை பிரமாதம்.

போராடா விட்டால் இன்று வரை ஆபிரிக்காவும் விடுதலை அடைந்திருக்காது.
இந்தியாவும் சுதந்திரம் பெற்றிருக்காது.

ஓசியையிலை சுதந்திரம் பெற்ற ஸ்ரீலங்காவுக்கு அதன் அருமையே தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை... தரும் அழகிய வார்த்தைகள்....உதயகுமார். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான சிந்தனை உதயன்........தொடருங்கள்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 23:39, புங்கையூரன் said:

நாளைய பொழுது விடியும் எனும் நம்பிக்கையினால் தானே...பறவைகள் பழங்களைக் கூடுகளில் சேர்த்து வைப்பதில்லை!

 

On 13/3/2021 at 00:07, குமாரசாமி said:

ஓசியையிலை சுதந்திரம் பெற்ற ஸ்ரீலங்காவுக்கு அதன் அருமையே தெரியாது.

 

On 13/3/2021 at 00:18, தமிழ் சிறி said:

நம்பிக்கை... தரும் அழகிய வார்த்தைகள்....உதயகுமார். :)

 

20 hours ago, suvy said:

சிறப்பான சிந்தனை உதயன்........தொடருங்கள்.......!  👍

புங்கையூரான்,குமாரசாமி,தமிழ் சிறி,சுவே உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.