Jump to content

ஆந்திர கிராமத்தில் ஆணின் பிறப்புறுப்பு வடிவில் சிவன் சிலை - அரிய தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • வி. சங்கர்
  • பிபிசி தெலுங்கு மொழி சேவைக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
கோயில்

மனிதர்களின் வழிபாட்டு முறைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே வந்திருக்கிறது. மனிதர்களின் வழிபாட்டு வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் மனிதர்கள் இயற்கை, கல், மனித உடல் உறுப்புகள் என பல வடிவிலும் இறைவனை வணங்கி இருக்கிறார்கள்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் யேர்பேடு மண்டலத்தில் அமைந்திருக்கும் குடிமல்லம் எனும் ஊர், அங்கு இருக்கும் சிவன் கோயிலுக்குப் புகழ் பெற்றது. இந்த பிரபலமான கோயில் இருக்கும் ஊர் திருப்பதி நகரத்துக்கு அருகில் தான் இருக்கிறது.

இந்தக் கோயில் ஆணின் பிறப்புறுப்பு போன்ற லிங்க வடிவில் இருப்பதாக அறியப்படுகிறது.

இந்த கோயில் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வழிபாடுகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தான் அனுமதிக்கப்படுகிறது.

இந்த கோயிலில் சில தனித்துவமான விஷயங்கள் இருக்கின்றன.

சிவனின் உருவம், லிங்கத்தின் முன் பக்கத்தில் ஒரு ஆட்டை கையில் வைத்திருப்பது போல இருக்கிறது. இப்படிப்பட்ட தத்ரூபமான சிலைகள் சைவ சமய பாரம்பரியத்தில் மிகவும் அரிதானது. இதே போன்ற அரிதான சிவன் சிலைகளை ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஹேமாவதி கிராமத்தில் பார்க்கலாம்.

ஆணின் பிறப்புறுப்பு வடிவில் சிவலிங்கம்

சிலை

குடிமல்லம் கிராமத்தில் இருக்கும் கோயிலில், ஆணின் பிறப்புறப்பு வடிவத்தில், 7 அடி உயரத்தில், தலையில் தலைப்பாகையும், இடுப்பில் வேட்டியும் கட்டி இருப்பது போல சிவனின் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்து புராணங்களில் யக்‌ஷன் என்றழைக்கப்படும் உயரம் குறைவான ஒருவரின் தோலில் நிற்பது போல இருக்கிறது அந்தச் சிலை.

சிலையில் இருக்கும் சிவனின் ஆடை முறை, ரிக் வேத காலத்துக்கு முற்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இந்த சிவன் சிலை, சிந்து சமவெளி நாகரிகத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது என இக்கோயிலின் முதன்மைச் செயல் அதிகாரி கே ராமச்சந்திர ரெட்டி கூறுகிறார்.

"முந்தைய நாகரிகத்தில் பெண்கள் தலைமை தாங்கி சமூகத்தை வழிநடத்திக் கொண்டிருந்த காலம் அது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அப்போது மக்கள் பெண்களின் பிறப்புரிப்பை (யோனியை) வழிபட்டார்கள். ஆண்களின் ஆதிக்கம் அதிகரித்த பின், ஆண்களின் பிறப்புறுப்பை வழிபடுவது நடைமுறைக்கு வந்தது" என்கிறார் ராமச்சந்திரா.

முந்தைய கால கோயில்

இந்த கோயிலை பரசுராமேஸ்வர சுவாமி கோயில் எனவும் கூறுகிறார்கள். இந்த கோயில் கிறிஸ்துவுக்குப் பின் இரண்டாவது அல்லது மூன்றாவது நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என இந்தியாவின் தொல்பொருள் துறை கூறுகிறது.

தெலுகு மொழியில் பள்ளம் என்றால் தாழ்வாக இருக்கும் பகுதி என்று பொருள். இந்த கோயில் தாழ்வான பகுதியில் அமைந்திருப்பதாலேயே இக்கோயில், நாளடைவில் குடிமல்லம் கோயில் எனப் பெயர் பெற்றுவிட்டது என `ராயலசீமா பிரசித்த ஆலயலு` என்கிற புத்தகத்தில் இ.எல்.என் சந்திரசேகர் ராவ் கூறுகிறார்.

ஸ்வர்னமுகி ஆற்றங்கரையில் அழகாக அமைந்திருக்கிறது இக்கோயில். நதியில் நீரின் அளவு குறைந்துவிட்டதால் காலப் போக்கில் நதி மற்றும் கோயிலுக்கு இடையிலான தொலைவு அதிகரித்துவிட்டது என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். ஆனால் மழைப் பொழிவு அதிகரித்தால் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து, கோவிலின் கருவறையில் இருக்கும் சிலையைத் தொடும் அளவுக்கு தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த 2004-ம் ஆண்டு மழை பொழிவின் போது அப்படி நடந்தது.

சிலை

இந்த குடிமல்லம் கோயில், ஆந்திர பிரதேசத்தை சதவாஹனர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தைச் சேர்ந்தது என இந்திய தொல்லியல் துறை கூறுகிறது. இருப்பினும் இந்த சிலை, மெளரியர் காலத்தில் நிறுவிய சிலைகளை ஒத்து இருப்பதாக ஈமணி சிவநாகி ரெட்டி என்கிற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். இவர் `குடிமல்லத்தின் வரலாறு` என்கிற பெயரில் ஒரு புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்.

"அச்சிலையின் பின் புறத்தில் ஆணின் பிறப்புறுப்பும், முன் புறத்தில் யக்‌ஷனின் தோலில், இரண்டு கைகளில் விலங்குகளோடு ருத்ரன் நிற்பது போல சிலை அமைந்திருக்கிறது. மெளரியர் காலத்தில் கட்டப்பட்டதற்கான குறியீடுகள் இருக்கின்றன. இக்கோயிலின் அடித்தளம் சதவாஹன காலத்தைச் சேர்ந்தது போலத் தெரிகிறது. இந்தச் சிலை சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கிறது. எனவே இது ஒரு பழங்கால கோயில்" என சிவநாகி கூறுகிறார்.

தீவிர ஆராய்ச்சி

1911-ம் ஆண்டு கோபிநாத் ராவ் இந்த கோயிலில் சர்வேக்களை நடத்தியதாக ஆதாரங்கள் கூறுகின்றன. இந்திய தொல்லியல் துறையும் பல ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகளை இங்கு நடத்தி இருக்கிறது.

1908-ம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்து அரசு அறிவிக்கையில், இந்த கோயில் தொடர்பான விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பல்லவர்கள், யாதவ தேவராயலு, கங்கா பல்லவா, பனா, சோழர்கள் என பல்வெறு காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இந்த கோயிலின் சந்நிதிகளில் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சிலை

உஜ்ஹைனியில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பு நாணயத்தில், குடிமல்லத்தில் இருக்கும் சிவன் சிலையை பிரதிபலிக்கும் உருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே போல மதுராவில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்தில் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிற்பம், குடிமல்லம் சிவன் சிலையை பிரதிபலிப்பதாக இருக்கிறது என இங்குவா கார்த்திகேய ஷர்மா கூறியுள்ளார். இவர் முற்கால சைவக் கலைகள் மற்றும் கட்டடக் கலையைக் குறித்து `Development Of Early Saiva Art And Architecture` என ஒரு புத்தகதை எழுதி இருக்கிறார்.

இந்த கோயிலின் வரலாறு குறித்து பல பத்திரிகைகளில் அகழ்வாய்வாளர் மற்றும் வரலாற்று ஆசிரியர் நந்தா குமாரசாமி மற்றும் ஜிதேந்திரநாத் பேனர்ஜி விவாதித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த கல்வெட்டுகளை வைத்துப் பார்க்கும் போது, தற்போது இருக்கும் கோயில் 12-ம் நூற்றாண்டில் விக்கிரம சோழனால் மறுகட்டுமானம் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கிறார்கள் அகழ்வாய்வாளர்கள். கடந்த 1954-ம் ஆண்டில் இருந்து இந்த கோயிலை இந்திய தொல்லியல் துறை தான் பதுகாத்து வருகிறது. இந்த கோயிலில் வழிபாடுகளை நடத்த சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

வழிபாட்டுக்கு கட்டுபாட்டுடன் அனுமதி

சிலை

இந்தக் கோயில் இந்திய தொல்லியல் துறையின் கீழ் இயங்குவதால், வழிபாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சில சிலைகள் மற்றும் அதிக மதிப்புடைய பொருட்கள் கோயிலில் இருந்து திருடு போனதாக உள்ளூர் வாசி ரவி என்பவர் பிபிசியிடம் கூறினார்.

அதிகாரிகளின் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து தான் இந்த கோயிலில் மக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டார்கள். அதன் பிறகு தான் கோயில் விவகாரங்களை அறநிலையத் துறை கவனித்து வருகிறது.

சிலை

எப்போது எல்லாம் இங்கு சடங்குகளை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறதோ, அப்போது எல்லாம் சந்திரகிரி கோட்டையில் வைக்கப்பட்டிருக்கும் இதே போன்ற சிலையை வழிபடுகிறார்கள் மக்கள்.

மேம்பாட்டுக்கான முயற்சிகள்

சிலை

திருப்பதிக்கு அருகில் குடிமல்லம் அமைந்திருப்பதால், இந்த கோயில் போதிய கவனத்தைப் பெறவில்லை என சிலர் கூறுகிறார்கள்.

"போதுமான வசதிகள் இல்லாதது, போதுமான விளம்பரங்கள் இல்லாதது தான் இந்த நிலைக்குக் காரணம்" என்கிறார் கோயிலின் செயல் அதிகாரி கே ராமச்சந்திர ரெட்டி.

தற்போது இக்கோயிலைச் சுற்றி இருக்கும் கட்டமைப்பு வசதிகளைச் சரி செய்வதில் தாங்கள் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் அம்பிகா சோனி மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கோயிலைச் சுற்றி சில மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் எதுவுமே செயல்படுத்தப்படவில்லை என உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

ஆந்திர கிராமத்தில் ஆணின் பிறப்புறுப்பு வடிவில் சிவன் சிலை - அரிய தகவல்கள் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.