Jump to content

எடப்பாடி பழனிச்சாமியுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு தயார் – ஸ்டாலின்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்- திமுகவின் அடுத்தகட்ட பிரசாரம் தொடங்கியது || MK  Stalin begin Ungal Thogudhiyil Stalin campaign in tiruvannamalai

எடப்பாடி பழனிச்சாமியுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு தயார் – ஸ்டாலின்

தமிழக முதலமைச்சருடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தான் தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் ஊடகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் தென்னிந்திய சிறப்பு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு மீது குற்றச்சாட்டு தெரிவித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடன் விவாதிக்கத் தயாரா? என சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், இந்தியா டுடே தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் ராகுல் கன்வால் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், மத்திய அரசின் தயவோடு ஆட்சியை தக்கவைத்த அதிமுகவின் மூலம் தமிழகத்தில் காலூன்ற முயலும் பாஜகவின் எண்ணம் ஈடேறாது என கூறினார்.

விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கும் என உறுதி கூறிய அவர், உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கிற்கான உச்சநீதிமன்ற தடையை விலக்கி கொண்டால், முதலமைச்சருடன் எங்கு வேண்டுமானாலும் தான் விவாதத்திற்கு வர தயார் என அறிவித்தார்.

http://athavannews.com/எடப்பாடி-பழனிச்சாமியுடன/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினுடன் நேருக்கு நேரில்  கீழ்பாக்கம் பயித்தியம் கூட வெண்டு விடும் தெலுங்கில் எழுதிவைத்து கொண்டு தமிழில் ஒழுங்கா பேசவராத ஆள் இவ்வளவு உதார் காட்டக்கூடாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

ஸ்டாலினுடன் நேருக்கு நேரில்  கீழ்பாக்கம் பயித்தியம் கூட வெண்டு விடும் தெலுங்கில் எழுதிவைத்து கொண்டு தமிழில் ஒழுங்கா பேசவராத ஆள் இவ்வளவு உதார் காட்டக்கூடாது .

நீங்க‌ள் இதை காமெடியா எழுதினாலும் இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌ பெருமாள் அண்ணா 

ஆக‌ ஆக‌ இதை சொல்ல‌ வேண்டாம் என்று ஸ்டாலினுக்கு யாரோ பாட‌ம் எடுத்திட்டின‌ம் போல‌ ?

ப‌ழ‌னிச்சாமி இவ‌ரை விட‌ துணிவாய் தூய‌ த‌மிழில் அழ‌காய் பேச‌க் கூடிய‌வ‌ர் துண்ட‌றிக்கை பார்க்காம‌ அழ‌காய் பேச‌க் கூடிய‌வ‌ர் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

நீங்க‌ள் இதை காமெடியா எழுதினாலும் இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌ பெருமாள் அண்ணா 

ஆக‌ ஆக‌ இதை சொல்ல‌ வேண்டாம் என்று ஸ்டாலினுக்கு யாரோ பாட‌ம் எடுத்திட்டின‌ம் போல‌ ?

ப‌ழ‌னிச்சாமி இவ‌ரை விட‌ துணிவாய் தூய‌ த‌மிழில் அழ‌காய் பேச‌க் கூடிய‌வ‌ர் துண்ட‌றிக்கை பார்க்காம‌ அழ‌காய் பேச‌க் கூடிய‌வ‌ர் 🙏

என்னதான் வெற்றி என்று சொன்னாலும் வைகோவின் ராசி யின் சரித்திரம் அனைவருக்கும் தெரியும் இம்முறை தமிழீழ கோரிக்கை எடுத்துவிட்டினம் அதுக்கு பதிலா இலங்கை அகதிகளுக்கு அது செய்வம்  இது செய்வம் என்று உளறி இருக்கிறார் நாளை வெற்றி பெற்ற பின் மத்திய அரசு விரும்பவில்லை என்று ஒரு சாட்டுடன் கையை விட்டு விடுவார். அப்ப ஏன் புனுகு பூசுகிறார் என்றால் இணையவழிகளில் எழும் எதிர்ப்புகளை குறைக்கவே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்- திமுகவின் அடுத்தகட்ட பிரசாரம் தொடங்கியது || MK  Stalin begin Ungal Thogudhiyil Stalin campaign in tiruvannamalai

எடப்பாடி பழனிச்சாமியுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு தயார் – ஸ்டாலின்

கருணாநிதியின்ரை பொடியனுக்கு தேவையில்லாத வேலை. ஒழுங்காய் தமிழே வராது. இதுக்குள்ளை........? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக தேர்தல் அறிக்கை 2021: `வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை`

3 மணி நேரங்களுக்கு முன்னர்

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMY

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை இன்று அறிவித்துள்ளது அதிமுக. ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் அதில் அடங்கும்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய வாக்குறுதிகள்:

அனைவருக்கும் வீடு

குலவிளக்கு திட்டம்,

பேருந்தில் மகளிருக்கு சலுகை

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்

விலையில்லா ஆறு கேஸ் சிலிண்டர்

அனைவருக்கும் சூரிய சக்தி சமையல் சிலிண்டர்

கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜி 

வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி

விலையில்லா அரசு கேபிள்

தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம்

எழுவர் விடுதலை

தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை

காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு

நம்மாழ்வர் பெயரில் வேளாண் ஆராய்ச்சி மையம்

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

100 நாட்கள் வேலை 150 நாட்களாக உயர்வு

மதுமான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்

சிஏஏ-ஐ கைவிட வலியுறுத்தல்

கல்வியை மாநில பட்டியலில் சேர்த்தல்

அம்மா வாஷிங் மெஷின் திட்டம்

மாணவர் கல்விக் கடன் தள்ளுபடி

கச்சத்தீவு மீட்பு நடவடிக்கை

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை

மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும் 

அனைத்து மினி ஐடி பார்க்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 2500ஆக உயர்த்தப்படும்

நூல்விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

கைத்தறிக்கு GST வரி விலக்கு

பெண்களுக்கான அரசு வேலை வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் பாஜக, த.மா.க போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

மூலம்: BBC தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதிமுக தேர்தல் அறிக்கை 2021: `வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை`

3 மணி நேரங்களுக்கு முன்னர்

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMY

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை இன்று அறிவித்துள்ளது அதிமுக. ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் அதில் அடங்கும்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய வாக்குறுதிகள்:

அனைவருக்கும் வீடு

குலவிளக்கு திட்டம்,

பேருந்தில் மகளிருக்கு சலுகை

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்

விலையில்லா ஆறு கேஸ் சிலிண்டர்

அனைவருக்கும் சூரிய சக்தி சமையல் சிலிண்டர்

கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜி 

வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி

விலையில்லா அரசு கேபிள்

தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம்

எழுவர் விடுதலை

தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை

காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு

நம்மாழ்வர் பெயரில் வேளாண் ஆராய்ச்சி மையம்

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

100 நாட்கள் வேலை 150 நாட்களாக உயர்வு

மதுமான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்

சிஏஏ-ஐ கைவிட வலியுறுத்தல்

கல்வியை மாநில பட்டியலில் சேர்த்தல்

அம்மா வாஷிங் மெஷின் திட்டம்

மாணவர் கல்விக் கடன் தள்ளுபடி

கச்சத்தீவு மீட்பு நடவடிக்கை

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை

மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும் 

அனைத்து மினி ஐடி பார்க்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 2500ஆக உயர்த்தப்படும்

நூல்விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

கைத்தறிக்கு GST வரி விலக்கு

பெண்களுக்கான அரசு வேலை வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் பாஜக, த.மா.க போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

மூலம்: BBC தமிழ்

வைகோ வின் ராசி வேலை செய்ய தொடங்கி விட்டது .😁

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

அதிமுக தேர்தல் அறிக்கை 2021:

அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள 30 வாக்குறுதிகளையும் இதில் எந்த எடப்பாடி கொடுத்திருப்பார்...🤔🤔 

See the source image

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.