Jump to content

பண்டாரவன்னியன் அரசாண்ட மண்ணில் லெப். கேணல் சுடரன்பன் அவதரித்தான்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரவன்னியன் அரசாண்ட மண்ணில் லெப். கேணல் சுடரன்பன் அவதரித்தான்!

breaking

முல்லை நிலமும், மருத நிலமும் ஒருங்கே அடி கொளிரும் மாவீரன் பண்டாரவன்னியன் அரசாண்ட மண்ணில் லெப். கேணல் சுடரன்பன் (ஆனந்தன்) அவதரித்தான். முல்லைத்தீவு பாண்டியன் குளம் பிரதேசத்தில் கரும்புள்ளியான் எனும் கிராமத்தில் சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளுக்கு எட்டாவது மகனாக பிறந்தான்

கிருசாகரன் ஆரம்பக்கல்வியை பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை யாழ்/ தெல்லிப்பழை மகாஜன கல்லூரியிலும் கல்விக்களம் கண்டான். கல்வி கற்கும் காலங்களில் இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளை கண்ணெதிரே கண்டு வருந்தினான். 15 வயதினில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது தென்பகுதியிலிருந்து இந்திய வாழ் மலையகத் தமிழ்மக்களை சிங்களவர்கள் அடித்து துரத்திய போது , அத் தமிழர்கள் வன்னிப்பகுதிகளில் வந்து தஞ்சமடைந்தார்கள். அவ்வேளை அந்த மக்கள் பட்ட துயரங்கள் , வறுமைகள் இவன் மனதை வெகுவாக பாதித்தது. கல்வி கற்கும் காலங்களில் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கையால் மாணவர்கள் கல்வி வெகுவாக பாதித்தது. கல்வி பொது சாதாரண தர பரீட்சை ( O/L) எழுதுவதற்கு சிரமப்பட்டு எழுதியுள்ளான். கல்வி பொது உயர் தர வகுப்பு ( A/L) வகுப்பு படிக்கும் போது பல இடையூறுகள் ஏற்பட்டன.

இவனது கிராம மக்களும் ,நண்பர்களும் இவனை “ அப்பன்” என்று செல்லப் பெயர் கொண்டு அழைப்பார்கள் . இவனும் அனைவரிடத்திலும் அன்பு காட்டுவான். பணிவுடனும் தன்னடக்கத்துடனும் பேசுவான் . யார் எவர் என்று பார்க்காமல் உதவி புரிவான்.

 

1988,1989 காலப்பகுதியில் இந்திய இராணுவம் அமைதிப்படை எனும் பெயரில் எம் தாய் நிலத்தில் போராளிகள் மீது போரை திணித்து , சிங்கள இராணுவம் எதையெல்லாம் செய்ததோ அதனை இந்திய இராணுவ அமைதிபடையும் செய்தது. இக் காலத்தில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன், தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் உண்ணா நோன்பு இருந்து தன்னை உயிரை மெழுகாய் உருக்கினார். மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், மக்கள் மத்தியில் பெருங் கொந்தளிப்பு காட்டுத்தீ போல் பரவியது.

இந்திய இராணுவம் வெளியேறிய பின் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மரபு வழிப்போருக்கு தயாரான போது இளைஞர்களும் யுவதிகளும் விடுதலைப்புலிகள் பாசறை நோக்கி புறப்பட்டார்கள். போராடினால் தான் எம்மக்களுக்கான வாழ்வு என தீர்மானித்தார்கள்.

1991ஆம் ஆண்டு கிருசாகரன்/ அப்பன் தனது கிராமத்திலிருந்து உறவினர், நண்பர்கள் ஐந்து பேர் முல்லைத்தீவு, கற்சிலைமடு விடுதலைப்புலிகள் செயலகத்தில் போராளிகளாக இணைந்தார்கள்.நட்டான் கண்டல் சந்திரன் முதலாவது அணியில் பயிற்சி பெற்று போராளி ஆனந்தன் எனும் நாமத்துடன் முல்லை மாவட்ட போராளியாக களத்தில் இருந்தான்.

1991ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்களால் முதன்முதல் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி உருவாக்கப்பட்டது. சாள்ஸ் அன்ரனி தாக்குதல் அணிக்கு மாற்றப்பட்ட ஆனந்தன் 50 கலிபர் (விமான எதிர்ப்பு) துப்பாக்கி பயிற்சி பெற்று 50 கலிபர் அணியின் தலைவராக செயற்பட்டு, வன்னி மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல் களத்தில் தடம் பதித்தார்.

1993ஆம் ஆண்டு நிதித்துறைக்கு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் போராளிகள் அனுப்பப்பட்டார்கள். வன்னி சாள்ஸ்அன்ரனி சிறப்புபடையணியிலிருந்து அனுப்பிய போராளிகளில் ஆனந்தனும் ஒருவர். நிதித்துறைக்கு போனவுடன் நிதித்துறைப் பொறுப்பாளர், பிரிகேடியர் தமிழேந்தி அவர்களால் ஆனந்தனுக்கு சுடரன்பன் என பெயர் மாற்றப்பட்டது. கணக்கியல் கல்வி கற்று கணக்காய்வுப் பணியினை சிறப்பாக பணியாற்றினார் . 1995 ஆண்டு புலிப்பாச்சல் தாக்குதல் நடவடிக்கையின் போது நிதித்துறை படையணி களம் கண்டது. அச்சமரில் சுடரன்பன் வலது கையில் விழுப்புண் அடைந்தார். அதன் பின்னர் இடப் பெயர்வுகளின் விளைவாக 1996 காலப்பகுதியில் கிளிநொச்சிப் பகுதியில் களக்காப்புப் பணி மேற்கொண்டு அக்காலப்பகுதியில் முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்கி அழிப்பு நடவடிக்கையின் போது பின் தளப் பணியினை மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை ,கிளிநொச்சி இராணுவ முகாம் தாக்கி அழிப்பு சமர், ஓயாத அலைகள் தாக்குதல் 1,2 தாக்குதல்களில் பின் தளப்பணிகளையும் மேற்கொண்டார் . ஆனையிறவு படைத்தள தாக்கியழிப்புச் சமரிலும் பின்தள வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார்.

 

 

2PxKJ4DopzgZnvrRiAX6.jpg

2006 மீண்டும் போர் ஆரம்பமாகிய பின்னர் நிதித்துறைப் படையணிபோராளிகளும் கள முனையில் களம் கண்டனர். நிர்வாகத்தில் உள்ள போராளிகளும் சுழற்சி முறையில் களமுனையில் பணியாற்றினர். சுடரன்பனும் அப்பணியில் ஈடுபட்டாலும் கணக்காய்வுப் பணியினையும் எந்த இடையூறும் இன்றி மேற்கொண்டார் .

2008,2009 காலப்பகுதிகளில் போர்ச்சூழலில் நிர்வாக்கட்டமைப்புக்களை நகர்த்துவதில் பல இடையூறுகள் , நெருக்கடிகள் இருந்தும் திறம்பட திட்டமிட்டு செயலாற்றினார்.

தேவிபுரம் , சோழன் அரிசி ஆலைக்கு அம்பகாமம் பகுதியிலிருந்து இலங்கை இராணுவம் ஏவிய எறிகணைத் தாக்குதலின் போது பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். சுடரன்பன் நூலிலையில் உயிர் தப்பினார். அத்துடன் ஆச்சி கோட்டப்பகுதியில் பின்னகர்வு பணியின் போது சுதந்திரப்பகுதியிலிருந்து இலங்கை இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் நூலிலையில் உயிர் தப்பினார். குயிலன் என்ற போராளி சிறு விழுப்புண் அடைந்தார்.

தேவிபுரம் ஊடாக இரணைப்பாலைக்கு இராணுவம் முன்னேறிக் கொண்டிருந்த போது நிதித்துறைப் படையணி ஆண்,மகளிர் அணி சமர் புரிந்த வண்ணம் இருந்தது. அப்போது படையணிக்கு பொறுப்பாக இருந்த அகச்சுடர் என்ற போராளி விழுப்புண் அடைய சுடரன்பனை பொறுப்பாக நியமித்தார் நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழ்குமரன் அவர்கள். அணியினை வழிநடாத்திய சுடரன்பன் அவர்கள் 13.03.2009 இலங்கை இராணுவத்தின் எதிர் சமரின் போது விழுப்புண் அடைந்து 14.03.2009 அன்று லெப்.கேணல் சுடரன்பன் ஆக வீரச்சாவு அடைந்தார்.

லெப்.கேணல் சுடரன்பன் / ஆனந்தன் அவர்கள் 2000ஆம் ஆண்டு சோதியாபடையணியைச் சேர்ந்த போராளி வைஸ்ணவி  (இராசையா மல்லிகாதேவி) என்பவரை திருமணம் செய்து இரு பெண் பிள்ளைகளுக்கு (துளசிகா,சங்கவி) தந்தையுமாவார்.

 

https://www.thaarakam.com/news/19814663-3e8a-451a-b405-fbd4778aef0f

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.