Jump to content

2031 இல் இலங்கையில் இரண்டாவது சிறுபான்மை இனமாக தமிழர்கள்: சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2031 இல் இலங்கையில் இரண்டாவது சிறுபான்மை இனமாக தமிழர்கள்: சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்

இலங்கையில் இதுவரை காலமும் முதலாவது சிறுபான்மை இனமாக இருந்த தமிழர்கள் 2031 ஆம் ஆண்டளவில் இரண்டாவது சிறுபான்மை இனமாக காணப்படுவார்கள் என சமூதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

11.03.2021 வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழர்களின் எதிர்காலம் ஒரு குடித் தொகையியல் நோக்கு எனும் நிகழ்வில் பிரதம வளவாளராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் சனத்தொகை பெருக்க வீதம் வருடா வருடம் குறைவடைந்தே செல்கிறது. யுத்தம், நலிவுற்ற பொருளாதாரம், புலம் பெயர்வு, காலம் பிந்திய திருமணம், குடும்ப கட்டமைப்பு சிதைவுகள், நாகரீகம், கருத்தடைகள், குடும்ப கட்டுப்பாடுகள், என பல்வேறு காரணிகளை கூறிக்கொண்டே போகலாம். இந்த காரணிகளால் தமிழர்களின் சனத் தொகை குறைவடைந்து செல்கின்றமையை நாம் கண்முன்னே காண்கின்றோம். வடக்கு கிழக்கில் தமிழ் பாடசாலைகளில் தரம் ஒன்றில் இணைந்துகொள்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைவடைந்து செல்கின்றமையை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இது எமது இனத்திற்கு ஆபத்தானது. ஆரம்பத்தில் யாழ் தேர்தல் தொகுதியில் 11 பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தார்கள் ஆனால் தற்போது 7 பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். தமிம் மக்களின் சனத் தொகை குறைவடைந்ததன் விளைவே இது எனத் தெரிவித்த அவர், தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் இது தொடர்பில் சிந்தித்து செயற்படுவதாக இல்லை எனவும், குறிப்பிட்டார்.

தமிழ்த் தலைமைகள் அரசியல் உரிமை பிரச்சினைக்கு கொடுக்கின்ற முக்கியத்துவைத்தை இப்படியாக ஒரு இனத்தின் ஆபத்தான பிரச்சினைகளுக்கு கொடுப்பதில்லை எனவும், தமிழ் மக்களின் சனத் தொகையானது இப்படியே சென்றால் வென்றெடுக்கும் உரிமைகளை அனுபவிக்க மக்கள் இருப்பார்களா என்ற கேள்வியே எழுகிறது என்றார்.

எனவே தமிழினத்தின் சனத்தொகை அதிகரிப்பை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, தவறின் 2028 இல் முதலாவது சிறுபான்மை இனம் என்ற நிலையில் இருந்து இரண்டாவது சிறுபான்மை இனமாக தமிழ் மக்கள் காணப்படுவார்கள். இது 2031 ஆம் ஆண்டின் சனத் தொகை மதிப்பீட்டில் புலப்படும் எனத் தெரிவித்த அவர், இலங்கையின் சனத்தொகை பெருக்க வீதத்தில் முஸ்லிம்கள், சிங்களவர்களுக்கு அடுத்தப்படியாகவே தமிழர்கள் காணப்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

https://www.meenagam.com/2031-இல்-இலங்கையில்-இரண்டாவத/

 

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

முதலாவது சிறுபான்மை இனம் என்ற நிலையில் இருந்து இரண்டாவது சிறுபான்மை இனமாக தமிழ் மக்கள் காணப்படுவார்கள்.

தமிழ் மக்கள் என்றுமே முதலாவது சிறுபான்மை இனம்தான். அது மாறாது.

ஆனால் முதலாவது சிறுபான்மை மதமாக முசுலீம்களும், இரண்டாவது சிறுபான்மை மதமாக இந்துக்களும், மூன்றாவது சிறுபான்மை மதமாக சைவர்களும், நான்காவது சிறுபான்மை மதமாக கிறித்துவர்களும் காணப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

தமிழ் மக்கள் என்றுமே முதலாவது சிறுபான்மை இனம்தான். அது மாறாது.

 

நீங்கள் முஸ்லிம்களை தனித்த ஒரு இனமாக கருதவில்லை என்று தெரிகின்றது பாஞ் ஐயா!

முஸ்லிம்கள் தமிழ் பேசினாலும் தங்களை தமிழராக கருதுவதில்லை. எனவே 2028 அளவில் அவர்கள் தமிழர்களை மேவி முதலாவது சிறுபான்மையினமாக வருவார்கள். 2031 சனத்தொகை கணக்கெடுப்பில் அது உத்தியோகபூர்வமாக தெரியவரும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யாழில் ஓடும் திரியைப் பாத்தால் அடுத்த வருடமே தமிழச்சனம் அங்கு இருக்காது.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப யாழில் ஓடும் திரியைப் பாத்தால் அடுத்த வருடமே தமிழச்சனம் அங்கு இருக்காது.😂

ஓம் போல 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.