Jump to content

கோலியும் அனுஷ்காவும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
EC89726E-918E-495E-92F1-42F711CDF157.jpeg
 

 

இன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 ஆட்டத்தில் கோலி சிறப்பாக ஆடினார் (73 ஓட்டங்கள்). ஆனால் ஆட்டத்தை வென்ற பிறகு பரிசு வழங்கும் நிகழ்வில் அவர் தன் ஆட்டத்தின் சிறப்புக்கு யாருடைய உதவு, பங்களிப்பெல்லாம் இருந்தது எனும் போது அணியின் பயிற்சியாளர்களை குறிப்பிட்டு கூடவே “அனுஷ்காவும் என்னுடன் இருக்கிறார். அவர் என்னிடம் நிறைய பேசிக்கொண்டு இருக்கிறார். அதுவும் உதவியது.” எனச் சொன்னதை நான் ரசிக்கவில்லை. தொழில்முறை வெற்றிகளை தொழில்முறையில் மட்டும் பார்ப்பதே நல்லது, அதை அந்தரங்க வாழ்க்கையுடன் கலந்து தன் குடும்பமும் தன் பயிற்சியாளர்கள், அணியும் ஒன்றே என சமப்படுத்துவது ஒரு மோசமான போக்கு. பொதுவாக ஒரு வீரர் ஓய்வு பெறும் போது தனது பெற்றோர், நண்பர்கள், சிறுவயது பயிற்சியாளர்கள் ஆகியோரை பட்டியலிட்டு நன்றி சொல்வார்கள். சச்சின் ஓய்வு பெறும் போது அவ்வாறு உணர்ச்சிகரமான ஒரு நீண்ட நன்றி நவிலல் செய்தது நினைவிருக்கும். ஏனென்றால் அது ஒரு தனிமனிதனாகவும் அவர் தன் முடிந்து போன ஆட்டவாழ்வை திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பம். ஆனால் கோலி செய்வதோ முழுக்க unprofessionalஆன காரியம். 

 

இதை இப்போதல்ல நீண்ட காலமாகவே அவர் இதை செய்து வருகிறார் - இந்திய அணி அயல்நாட்டுக்கு பயணம் செல்லும் போது அதிகாரபூர்வ சந்திப்புகளில் தன் மனைவி கலந்து கொள்ள அனுமதிப்பது, வீரர்களுடன் வெளியே செல்லும் போது அனுஷ்காவை அழைத்து செல்வது என. இதனாலே அணி மோசமாக தோற்கும் போது ரசிகர்கள் அனுஷ்காவையும் சாடுகிறார்கள். “நான் சிறப்பாக ஆடுவதற்கு என் மனைவியின் அருகாமையே காரணம்” என ஒருவர் பேசும் போது அவர் மோசமாக ஆடும் போது ரசிகர்கள் அதற்கும் அதே மனைவியை தானே பழிகூறியாக வேண்டும்? தேர்வாளர்கள் அனுஷ்காவுக்கு தேநீர் விளம்புகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகளும் இதனாலே எழுகின்றன. எனக்குத் தெரிந்த உலகக் கிரிக்கெட்டில் எந்த வீரரும் இதை செய்வதில்லை, இந்திய கிரிக்கெட்டில் இதற்கு முன்பு செய்ததில்லை. 

 

ஒரு அணித்தலைவர் தான் சிறப்பாக ஆடியதற்கு தன் பயிற்சியாளர்களை பாராட்டி விட்டு அதே மூச்சில் மனைவியையும் குறிப்பிடும் போது இருவரும் தனக்கு ஒன்றே எனும் பொருள் வருகிறது. அதைக் கேட்டிருக்கும் பயிற்சியாளர்களுக்கு சுரணை உண்டென்றால் மூஞ்சியில் காறித் துப்புகிற உணர்வே ஏற்படும். காதல், குடும்ப ஆதரவு போன்ற தனிப்பட்ட காரணங்கள் ஒருவர் சிறப்பாக செயல்பட காரணமாகலாம். ஆனால் அதை வெளியே சொல்லி அதற்கு ஒரு அதிகாரபூர்வ மதிப்பை அளிக்காமல் இருப்பதே பொறுப்பான கௌரவமான ஒரு வீரர் செய்வது. கோலிக்கு நிச்சயமாக அப்பண்புகள் இல்லை.

http://thiruttusavi.blogspot.com/2021/03/blog-post_14.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி அடிச்சு விளையாடிச்சு இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவை எழுதியவர் ஒழுங்காக ஒரு தலைப்பை போடலாமே Virat Kohli அவர்கட்கு அறிவுரை வழங்க முன்னர்?

உலக முன்னணி துடுப்பாட்ட வீரரை பாடசாலை பையன் தரத்திற்கு இறக்கி இன்பம் காண்கிறார் எழுத்தாளர். 

பேச்சு சுதந்திரம், தனி மனித சுதந்திரம் ஒன்றும் Virat Kohli அவர்களுக்கு தேவை இல்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.