Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறக்குதனை விரித்து நாம் பறப்பதெப்போ

சுதந்திரமாய் நாமெம்மை உணர்வதெப்போ

சிந்தனைச் சிறகை ஒடித்து வைத்து

அடக்குமுறைக்குள் எமைச் சிறைப்பிடித்து

அழகாய்ப் பூட்டி வைத்துவிட்டார் ஆண்கள்

 

பெண்கள் இன்றி பேரண்டமும் இல்லை

உலகில் மனிதப் பெருக்கமும் இல்லை

மகிழ்வு கொள்ளவும் எதுவுமே இல்லை

மானிட வாழ்வில் பெருமையும் இல்லை   

 

உணர்வுக் குவியலின் உன்னதமும் அவள்

உறவைப் பிணைத்திடும் ஊக்கியும் அவளே

உயிர் காத்திடும் மருந்தும் அவளே

உலக மாந்தரின் உயிர்ப்பும் அவளே   

 

உணர்வுகள் தந்து உறவுகள் காக்க

தன்னைக் கரைத்து தவறுகள் மறந்து

சொந்தம் காக்க சொற்கள் குறைத்து

பந்தம் போற்றப் பலதும் துறந்து

உதிரம் தந்துயிர் தந்திடுவாள்

 

பெற்றவர்க்காகப் பெருமை துறந்து

மற்றவர்க்காக மனதைப் புதைத்து

கற்றிருந்தாலும் கலைகள் மறந்து

பற்றியிருக்கும் பணிகள் நிறைந்து

பார்த்திருக்கும் கண்கள் நிறைக்க

பாரங்கள் பலவும் சுமந்திடுவாள்

 

குடும்பங் காக்கும் இயந்திரமாய் அவள்  

தன்னிகரில்லா பெண்ணின் தாய்மை

தயங்காது  உழைத்திடும் அவளின் மேன்மை

திடமாய்க் கொண்டிடும் அவளின் வாய்மை

தேசங்கள் எங்கிலும் தெரிந்த உண்மை

ஆயினும் அவள் இன்றும் ஆணின் அடிமை

 

கனவுகளும் கற்பனைகளும் காட்சிகளாய் விரிவது பெண்மனம்

காரணங்கள் தேடி அலைவதும் கட்டுடைத்துப்  போவதும்

கொண்டாடி மகிழ்வதும் கொதித்து எழுவதும் அவளே

கண்டங்கள் தாண்டிய கற்பனைகளில் விரிவதும்

காட்சிகள் கொண்டு கனவாய் இசைபவளும் அவளே

திண்ணிய மனதுடன் திடமாய் இருப்பவள்

மற்றவர்களுக்காய் மயங்கியே மானமிழந்தே வாழ்கின்றாள்

 

பத்து மாதங்கள் பத்திரமாய்ப் பிள்ளைகளைச் சுமந்திடுவாள்

பாசத்துடன் வேடமேற்றுப் போற்றியும் வளர்த்திடுவாள்

பருவம் கடந்தபின்னும் பிறந்த குழந்தையாய்ப் பார்த்திடுவாள்

பேரன் பேர்த்தி கண்ட பின்னும் பிள்ளைகள் நலனை புறம் தள்ளி

சும்மா இருந்து சுகம் காண என்றும் அவளால் முடிவதில்லை

 

 

கொடிய விலங்குகள் சூழ நின்றிட அச்சம் இன்றியே 

கூட்டத்தின் தலைவியாய் குடும்பம் காத்தாள் அன்று  

கட்டியே போட்ட குடும்ப அமைப்பில் அத்தனை பேரிடம்

குட்டுகள் வாங்கியே குனிந்த தன் தலையை

நிமிர்த்தவும் அஞ்சிக் குனிந்தே வாழ்கின்றாள் இன்றும்

 

பெண்ணுக்காய் அவளின்றி மேன்மை கொண்டிட

அத்தனை பேருக்கும் அவள் வேண்டும் எனினும்

பொத்திப் பொத்தியே வீட்டினுள் வளர்க்கும் பெற்றோர்  

ஆணவம் கொண்டு அவளை அடக்கிடும் அறிவற்ற கணவன்

ஆதிக்கம் கொண்டே அவளை ஏய்த்திடும் பிள்ளைகள்

ஆராதிப்பதாய்ப் பூட்டி வைக்கும் உறவுகள் இப்படி

உலகம் முழுதும் பெண்ணை அடக்கிட நடிப்பவர் அதிகம்

 

உன்னால் முடியும் உணர்ந்துகொள் எல்லாம் முடியும் எழுந்து நில்

பெண்ணே உன் பலம் தெரியவிடாது உறவுகள் உன்னைச் சூழந்திடும்

மண்ணில் உன்னை மேன்மை கொள்ள விடாது உன்னைக் காத்திடும்

மாயப் பிம்பம் பலதும் காட்டி மயக்கம் கொள்ள வைத்திடும்

தேடித் தேடிக் கதைகள் சொல்லி தெரியாதவளாய் ஆக்கிடும்

கூடிக் கூடிக் கதைத்தே உன்னைக் குற்றுயிராயும் ஆக்கிடும்

பேதை என்று பேடியர் கூடப் பிதற்றித்திரிய வைத்திடும்

காமம் கொண்ட கண்கள் பலதும் முன்னும் பின்னும் பார்த்திடும்

பொறாமை கொண்டு பொருமியபடியே மண்ணில் புதைக்கக் காத்திடும்

 

ஆதலால் உன்னை திமிராய் நீ உணர்ந்து கொள் பெண்ணே

ஊனம் எதுவும் உன்னிடம் இல்லை உயிர்ப்புடன் நீ எழுந்திடு

எத்தனை பேரின் எள்ளல் கண்டும் ஏக்கம் துறந்து மீண்டிடு

உறவுகள் எல்லாம் உடன் வரமாட்டா உண்மை அதை உணர்ந்திடு

உயிர் வாழும் காலம் கொஞ்சம் உன்னை நீயும் அறிந்திடு

துணிவு கொண்டு துயர் கடந்து தூக்கம் கலைந்து எழுந்திடு

காலம் கடந்து எண்ணுவதெல்லாம் கானல் நீராய் ஆகிவிடும்

கவலை கொண்டே நீயும் இருந்தால் உன் கோலம் கூட மாறிவிடும்

கட்டிப்போட்ட கயிறுகள் அனைத்தும் நீயே அறுத்திட வேண்டுமடி

காலம் தானாய்க் கனிந்திடாது காத்திருப்பும் மீண்டிடாது   

 

காற்றாய் நீயும் மாறிவிடு கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகி

துயரங்கள் எல்லாம் தூசாய் மாற உன் நினைவுகள் மட்டும் போதாது

மனம் என்னும் மாயக் குதிரையின் மகுடியில் நீயும் மயங்காது

அறிவின் ஆழம் தனைக் கடைந்து துணிவின் தூரம் தொட்டுவிட

சிந்தனை என்னும் சிறகை விரித்து சிகரம் தொடும் தூரம் வரை

பெண்ணே நீயும் தலை நிமிர்ந்து தடைகள் தாண்டிப் பறந்துவிடு

 

 

  • Like 15
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவொரு உணர்ச்சிமிகு & ஆவேச கவிதை, பாராட்டுக்கள், நன்றி பகிர்வுக்கு,

யார் குனிந்து நிற்பது நாம் தான்😢, இதை தட்டி கேட்கவொரு ஆணினமில்லையா, கல்யாணமென்ற மாயையில் எம்மை வீழ்த்தி கட்டில் ஆட்சி புரிபது யார் யார் யார்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான ஆக்ரோஷமான வார்த்தைகள் . ஆனாலும் முன்பை விட சில அடக்குமுறைகள் விளங்க வைக்க பட்டு பல தடைகளை  விலக்கி இவற்றையெல்லாம் கடந்தும்  வாழ்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

ஆவதும் பெண்ணாலே

அழிவதும் பெண்ணாலே.

ராணித் தேனீக்கு உதவியாக ஆண் தேனீக்கள் இருப்பதுபோல மனிதரும் இருந்திருக்கலாம். 😀

 

8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிந்தனை என்னும் சிறகை விரித்து சிகரம் தொடும் தூரம் வரை

பெண்ணே நீயும் தலை நிமிர்ந்து தடைகள் தாண்டிப் பறந்துவிடு

கன காலத்திற்குப் பின்னர் கவிதாநிகழ்வு ஒன்றுக்குப் போன உணர்வு!

ஆசான் இப்படிச் சொல்லியிருக்கின்றார்!!

பெண்ணுக்கு எல்லாமே வேண்டும். ஆண் முரடனாகவும் இருக்கவேண்டும்; சொன்னபேச்சும் கேட்கவேண்டும். கல்வியும் வேண்டும்; செல்வமும் வேண்டும்; புகழும் வேண்டும். ஒன்று குறைந்தாலும் மனக்குறைதான்”

Link to comment
Share on other sites

Quote

 

மனம் என்னும் மாயக் குதிரையின் மகுடியில் நீயும் மயங்காது

அறிவின் ஆழம் தனைக் கடைந்து துணிவின் தூரம் தொட்டுவிட

சிந்தனை என்னும் சிறகை விரித்து சிகரம் தொடும் தூரம் வரை

பெண்ணே நீயும் தலை நிமிர்ந்து தடைகள் தாண்டிப் பறந்துவிடு

 

Swati Mohan - Wikipedia

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூவாக இருக்கும் வரை தான், அவள் ஒரு பெண்ணாக இருப்பாள்...!
புயலாக மாறும் போது, பெண்மை அவளிடமிருந்து விடை பெற்று விடும்...!

அர்த்த நாரீஸ்வரம்.....அது தான் முழு உலகத்துக்கும் நல்லது!

அது சரி....அமெரிக்க உப ஜனாதிபதி கமலா Harris அவர்களின் காரியாலயத்தில் ஒரு ஆண்  கூட இல்லையாமே? இது செருக்கு இல்லையா?

இது ஒரு ஆணின் காரியாலத்தில்,நடந்திருந்தால் அவர் என்ன பாடு படுத்தப் பட்டிருப்பார்?

இருந்தாலும்...ஆண்கள் மனது பெரிய மனது தான்...!

கவிதை....அழகு..!

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, உடையார் said:

என்னவொரு உணர்ச்சிமிகு & ஆவேச கவிதை, பாராட்டுக்கள், நன்றி பகிர்வுக்கு,

யார் குனிந்து நிற்பது நாம் தான்😢, இதை தட்டி கேட்கவொரு ஆணினமில்லையா, கல்யாணமென்ற மாயையில் எம்மை வீழ்த்தி கட்டில் ஆட்சி புரிபது யார் யார் யார்???

அத்தனைக்கும் ஆண்கள் வீக் என்றுதானே அர்த்தம் 😂

19 hours ago, ஈழப்பிரியன் said:

ஆவதும் பெண்ணாலே

அழிவதும் பெண்ணாலே.

அதற்கும் ஆண்தானே காரணம் அண்ணா. அதிக இடம் கொடுப்பது. கேட்கவேண்டிய நேரம் வாய் மூடி இருப்பது என்று.. ... 

13 hours ago, நிலாமதி said:

நியாயமான ஆக்ரோஷமான வார்த்தைகள் . ஆனாலும் முன்பை விட சில அடக்குமுறைகள் விளங்க வைக்க பட்டு பல தடைகளை  விலக்கி இவற்றையெல்லாம் கடந்தும்  வாழ்கிறார்கள் 

இருந்தாலும் இன்னும் கிராமங்களில் மட்டுமன்றி மேற்குலக நாடுகளில் கூடப் பெண்கள் பல அடக்குமுறைக்குள் தான் இருக்கின்றனர்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

ராணித் தேனீக்கு உதவியாக ஆண் தேனீக்கள் இருப்பதுபோல மனிதரும் இருந்திருக்கலாம். 😀

 

கன காலத்திற்குப் பின்னர் கவிதாநிகழ்வு ஒன்றுக்குப் போன உணர்வு!

ஆசான் இப்படிச் சொல்லியிருக்கின்றார்!!

பெண்ணுக்கு எல்லாமே வேண்டும். ஆண் முரடனாகவும் இருக்கவேண்டும்; சொன்னபேச்சும் கேட்கவேண்டும். கல்வியும் வேண்டும்; செல்வமும் வேண்டும்; புகழும் வேண்டும். ஒன்று குறைந்தாலும் மனக்குறைதான்”

வசிட்டரின் வாயால் வாழ்த்து. நன்றி 😀

பெண்கள் அப்படி ஆசைப்பட்டதனால்த்தான் ஆண்கள் இந்தளவாவது முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.

11 hours ago, nunavilan said:

Swati Mohan - Wikipedia

இலட்சத்தில் ஒருவரை வைத்து பெண்ணினத்தின் சுதந்திரத்தை வரையறுக்க முடியாது நுணா

10 hours ago, புங்கையூரன் said:

பூவாக இருக்கும் வரை தான், அவள் ஒரு பெண்ணாக இருப்பாள்...!
புயலாக மாறும் போது, பெண்மை அவளிடமிருந்து விடை பெற்று விடும்...!

அர்த்த நாரீஸ்வரம்.....அது தான் முழு உலகத்துக்கும் நல்லது!

அது சரி....அமெரிக்க உப ஜனாதிபதி கமலா Harris அவர்களின் காரியாலயத்தில் ஒரு ஆண்  கூட இல்லையாமே? இது செருக்கு இல்லையா?

இது ஒரு ஆணின் காரியாலத்தில்,நடந்திருந்தால் அவர் என்ன பாடு படுத்தப் பட்டிருப்பார்?

இருந்தாலும்...ஆண்கள் மனது பெரிய மனது தான்...!

கவிதை....அழகு..!

இதுதானே முதற் தடவை ஆண்கள் இல்லாத காரியாலயம் .. ............செருக்கும் இல்லை என்றால் பெண்ணை என்ன பாடு படுத்துவார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்கள் உடைய கவிதை சகோதரி.......!

நீங்கள் தாழ்வு மனப்பான்மையுடன் ஆண்களைப்  பிரித்துப் பார்க்கின்றீர்கள். ஆண்கள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை.நீங்கள் இவ்வளவு சுதந்திரமாக எழுதுவதற்கும் ஒரு ஆண்தானே துணையாக இருக்கின்றார் என்பதை மறுக்க முடியுமா. நாங்கள் ஒருபோதும் பெண்களை பிரித்துப் பார்ப்பதில்லை. நாங்களே விரும்பாவிடினும் அவர்கள் காலால் இட்ட வேலையை சிரமேற்கொண்டு செய்து முடிக்கின்றோம்.எங்களது உயிரையே அவர்களிடம் தந்து விட்டு அந்த பாவத்திற்காக ஆயுள் முழுதும் விலங்கில்லாத  அடிமையாய்  வாழ்ந்து சாகிறோம்.நாங்கள் ரொம்ப பாவம் தாயே, கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்........ !  😎

  • Like 2
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

Quote

இலட்சத்தில் ஒருவரை வைத்து பெண்ணினத்தின் சுதந்திரத்தை வரையறுக்க முடியாது நுணா

அடி எடுத்து தந்தால் அடியையொற்றி போக வேண்டும். stop complaining🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன?
புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள்.
புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அழித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள்.
புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள். புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள். இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். நன்றாக இருக்கும் வீட்டையும் அவள் சிதைத்துவிடுகிறாள்.
புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள். புத்தியில்லாதவள் ஆடம்பரத்திற்கு வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துவாள்.
புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை கையில் ஏந்தி நின்றாலும் உடைத்து விட மாட்டாள். புத்தியில்லாதவள் பொன் குடத்தையும் உடைத்து விடுவாள். நிதானம் இவர்களின் அடையாளம்.
புத்தியுள்ள பெண் பகைவரை சம்பாதிக்க விரும்ப மாட்டாள். 
புத்தியில்லாதவளுக்கோ அண்டை வீட்டுக் காரரும் எதிராளிகளே.
புத்தியுள்ள பெண் வீட்டாருக்கு ஆகாரம் அளிக்கிறாள், வேலைக்காரர்களுக்கு படி அளக்கிறாள். புத்தியில்லாத பெண் வேலைக்காரியாகவே வாழ்ந்து முடித்து விடுவாள்.
புத்தியுள்ள பெண் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அழகாக்கி அழகான குடும்பத்தை சமூகத்தில் முன் நிறுத்துகிறாள். புத்தியில்லாதவளுக்கு சுத்தம், தூய்மை அழகு பற்றிய அக்கறை இருப்பதில்லை.
புத்தியுள்ள பெண் தனக்கானதை எடுத்துக் கொள்கிறாள். புத்தியில்லாதவள் என் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என ஆதங்கப்படுகிறாள்.
புத்தியுள்ள பெண் திருமணம் என்னும் ஒரு நாள் கூத்திற்காக வேலையை இராஜினாமா செய்வதில்லை. புத்தியில்லாதவள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காரணத்திற்காகவே வேலையை விட்டு விட்டு ஆறு மாதம் கழித்து வேலை தேடி அழைகிறாள்.
புத்தியுள்ள பெண் உருவாக்குகிறாள். புத்தியில்லாதவள் அழித்து போடுகிறாள்.
புத்தியுள்ள பெண் தன் மக்களை கொண்டாடுகிறாள். புத்தியில்லாதவள் நீ எல்லாம் எங்கே உருப்பட போற? என்று தன் மக்களை சபித்துக் கொண்டே இருப்பாள்.
புத்தியுள்ள பெண் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினரின் தவறுகளை சுட்டி காட்ட மாட்டாள். புத்தியில்லாதவள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையை திட்டுவார், அசிங்கப்படுத்துவார்.
புத்தியுள்ள பெண் குடும்பத்தினரை சரி செய்வாள். புத்தியில்லாதவள் குடும்பம் தான் சமூகம் என்ற அறிவில்லாமல் இருப்பாள்.
புத்தியுள்ள பெண் குடும்பத்தினருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிப்பாள். புத்தியில்லாத பெண்ணுடன் இருப்பவர்களுக்கு இருட்டு கூட பயம் தான்.
புத்தியுள்ள பெண் சேகரிப்பாள், பாதுகாப்பாள், பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் தொலைப்பாள், உடைப்பாள் தூக்கி எறிவாள்.
சுறுசுறுப்பு புத்தியுள்ள பெண்ணின் மற்றொரு அடையாளம். புத்தியில்லாத பெண்ணின் வீட்டின் அடையாளம் சிலந்தி கூடுகளே.
புத்தியுள்ள பெண் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த வாழ்க்கை என நம்புகிறாள். புத்தியில்லாதவள் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறாள்.
புத்தியுள்ள பெண் உட்கார்ந்து வரவு செலவு கணக்கை கணக்கிடுகிறாள். புத்தியில்லாதவள் கணக்கிட்டு பார்க்கவும் சோம்பேறித்தனப்படுகிறாள்.
புத்தியுள்ள பெண் எல்லாருடனும் ஒரு சிறிய இடைவெளியை கடைபிடிக்கிறாள் தன்னை பாதுகாக்கிறாள். புத்தியில்லாதவள் எல்லாரையும் தன் முதல் வட்டத்திற்குள் வந்து செல்ல அனுமதிக்கிறாள்.
புத்தியுள்ள பெண் "நோ" சொல்ல தைரியம் கொண்டிருக்கிறாள். புத்தியில்லாத பெண் தன்னை கெட்டவளாக நினைத்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள்.
புத்தியில்லாதவள் குற்றப்படுத்திக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ளவளின் கண்களுக்கு தவறு செய்தல் மனித இயல்பு என்பது தெரியும்.
புத்தியில்லாதவள் என்றோ செய்த தவறை இன்றும் நினைவில் வைத்து காயப்படுத்துவாள். மனதை காயப்படுத்துவதில் இவளுக்கு ஒரு மகிழ்ச்சி. புத்தியுள்ள பெண் எப்பொழுதுமே பாராட்டுபவளாக தான் இருப்பாள்.
புத்தியுள்ளவள் தவறை கடிந்து கொள்வாள். புத்தியில்லாதவள் தவறுக்கு ஒத்துழைப்பு தருவாள்.
புத்தியுள்ள பெண் எதையும் இரட்டிப்பு ஆக்குவாள். புத்தியில்லாதவள் எதை செய்தாலும் நஷ்டம் தான் முடிவு.
புத்தியுள்ள பெண் குழந்தைகளையும் கனப்படுத்துவாள், உயர்வாக எண்ணுவாள். புத்தியில்லாதவளுக்கோ 80 வயது பெரியவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்களின் முதுமையை கொண்டாடாமல் உதாசினப்படுத்துவாள்.
புத்தியுள்ள பெண் மீதம் எடுக்க சமைப்பாள். புத்தியில்லாதவளோ மூன்றுக்கு பதில் ஏழு பேர் வந்து விட்டால் செய்வதறியாது திகைப்பாள்.
புத்தியுள்ள பெண் பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் எப்பொழுதும் அதை எங்கே வைத்தோம் இதை எங்கே வைத்தோம் என தேடிக் கொண்டே இருப்பாள். தேடுவதிலே பாதி நேரத்தை விரயம் செய்வாள்.
புத்தியுள்ள பெண் மனிதர்களின் மேன்மையை உணர்ந்தவள். புத்தியில்லாதவள் குடும்பத்தினரையும் அண்ட விடுவதில்லை…
புத்தியுள்ளவளின் முகம் எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்கும். புத்தியில்லாதவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு எரிச்சல் இருக்க தான் செய்கிறது… 
 
Edited by குமாரசாமி
  • Like 1
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதற்கும் ஆண்தானே காரணம் அண்ணா. அதிக இடம் கொடுப்பது. கேட்கவேண்டிய நேரம் வாய் மூடி இருப்பது என்று.. ... 

 

இப்படிப்பட்ட எண்ணம் மாற வேண்டும், சுயமாக பெண்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும், இப்பவும் ஆண்களில் தானே குறை கூறுகின்றீர்கள்😄

என்னிடம் கேட்கமல் என் கடனட்டையைப்பாவித்து மனைவி பிள்ளைகளுடன் உதவியுடன் ஒன் லைனில் சாமான் வாங்கி குவிக்க நொந்து போய் அந்த கடனை அடைக்கும் எனக்குதான் பெண் சுதந்திரத்தின் வலி தெரியும்  😢

 

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:
புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன?
புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள்.
புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அழித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள்.
புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள். புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள். இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். நன்றாக இருக்கும் வீட்டையும் அவள் சிதைத்துவிடுகிறாள்.
புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள். புத்தியில்லாதவள் ஆடம்பரத்திற்கு வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துவாள்.
புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை கையில் ஏந்தி நின்றாலும் உடைத்து விட மாட்டாள். புத்தியில்லாதவள் பொன் குடத்தையும் உடைத்து விடுவாள். நிதானம் இவர்களின் அடையாளம்.
புத்தியுள்ள பெண் பகைவரை சம்பாதிக்க விரும்ப மாட்டாள். 
புத்தியில்லாதவளுக்கோ அண்டை வீட்டுக் காரரும் எதிராளிகளே.
புத்தியுள்ள பெண் வீட்டாருக்கு ஆகாரம் அளிக்கிறாள், வேலைக்காரர்களுக்கு படி அளக்கிறாள். புத்தியில்லாத பெண் வேலைக்காரியாகவே வாழ்ந்து முடித்து விடுவாள்.
புத்தியுள்ள பெண் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அழகாக்கி அழகான குடும்பத்தை சமூகத்தில் முன் நிறுத்துகிறாள். புத்தியில்லாதவளுக்கு சுத்தம், தூய்மை அழகு பற்றிய அக்கறை இருப்பதில்லை.
புத்தியுள்ள பெண் தனக்கானதை எடுத்துக் கொள்கிறாள். புத்தியில்லாதவள் என் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என ஆதங்கப்படுகிறாள்.
புத்தியுள்ள பெண் திருமணம் என்னும் ஒரு நாள் கூத்திற்காக வேலையை இராஜினாமா செய்வதில்லை. புத்தியில்லாதவள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காரணத்திற்காகவே வேலையை விட்டு விட்டு ஆறு மாதம் கழித்து வேலை தேடி அழைகிறாள்.
புத்தியுள்ள பெண் உருவாக்குகிறாள். புத்தியில்லாதவள் அழித்து போடுகிறாள்.
புத்தியுள்ள பெண் தன் மக்களை கொண்டாடுகிறாள். புத்தியில்லாதவள் நீ எல்லாம் எங்கே உருப்பட போற? என்று தன் மக்களை சபித்துக் கொண்டே இருப்பாள்.
புத்தியுள்ள பெண் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினரின் தவறுகளை சுட்டி காட்ட மாட்டாள். புத்தியில்லாதவள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையை திட்டுவார், அசிங்கப்படுத்துவார்.
புத்தியுள்ள பெண் குடும்பத்தினரை சரி செய்வாள். புத்தியில்லாதவள் குடும்பம் தான் சமூகம் என்ற அறிவில்லாமல் இருப்பாள்.
புத்தியுள்ள பெண் குடும்பத்தினருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிப்பாள். புத்தியில்லாத பெண்ணுடன் இருப்பவர்களுக்கு இருட்டு கூட பயம் தான்.
புத்தியுள்ள பெண் சேகரிப்பாள், பாதுகாப்பாள், பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் தொலைப்பாள், உடைப்பாள் தூக்கி எறிவாள்.
சுறுசுறுப்பு புத்தியுள்ள பெண்ணின் மற்றொரு அடையாளம். புத்தியில்லாத பெண்ணின் வீட்டின் அடையாளம் சிலந்தி கூடுகளே.
புத்தியுள்ள பெண் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த வாழ்க்கை என நம்புகிறாள். புத்தியில்லாதவள் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறாள்.
புத்தியுள்ள பெண் உட்கார்ந்து வரவு செலவு கணக்கை கணக்கிடுகிறாள். புத்தியில்லாதவள் கணக்கிட்டு பார்க்கவும் சோம்பேறித்தனப்படுகிறாள்.
புத்தியுள்ள பெண் எல்லாருடனும் ஒரு சிறிய இடைவெளியை கடைபிடிக்கிறாள் தன்னை பாதுகாக்கிறாள். புத்தியில்லாதவள் எல்லாரையும் தன் முதல் வட்டத்திற்குள் வந்து செல்ல அனுமதிக்கிறாள்.
புத்தியுள்ள பெண் "நோ" சொல்ல தைரியம் கொண்டிருக்கிறாள். புத்தியில்லாத பெண் தன்னை கெட்டவளாக நினைத்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள்.
புத்தியில்லாதவள் குற்றப்படுத்திக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ளவளின் கண்களுக்கு தவறு செய்தல் மனித இயல்பு என்பது தெரியும்.
புத்தியில்லாதவள் என்றோ செய்த தவறை இன்றும் நினைவில் வைத்து காயப்படுத்துவாள். மனதை காயப்படுத்துவதில் இவளுக்கு ஒரு மகிழ்ச்சி. புத்தியுள்ள பெண் எப்பொழுதுமே பாராட்டுபவளாக தான் இருப்பாள்.
புத்தியுள்ளவள் தவறை கடிந்து கொள்வாள். புத்தியில்லாதவள் தவறுக்கு ஒத்துழைப்பு தருவாள்.
புத்தியுள்ள பெண் எதையும் இரட்டிப்பு ஆக்குவாள். புத்தியில்லாதவள் எதை செய்தாலும் நஷ்டம் தான் முடிவு.
புத்தியுள்ள பெண் குழந்தைகளையும் கனப்படுத்துவாள், உயர்வாக எண்ணுவாள். புத்தியில்லாதவளுக்கோ 80 வயது பெரியவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்களின் முதுமையை கொண்டாடாமல் உதாசினப்படுத்துவாள்.
புத்தியுள்ள பெண் மீதம் எடுக்க சமைப்பாள். புத்தியில்லாதவளோ மூன்றுக்கு பதில் ஏழு பேர் வந்து விட்டால் செய்வதறியாது திகைப்பாள்.
புத்தியுள்ள பெண் பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் எப்பொழுதும் அதை எங்கே வைத்தோம் இதை எங்கே வைத்தோம் என தேடிக் கொண்டே இருப்பாள். தேடுவதிலே பாதி நேரத்தை விரயம் செய்வாள்.
புத்தியுள்ள பெண் மனிதர்களின் மேன்மையை உணர்ந்தவள். புத்தியில்லாதவள் குடும்பத்தினரையும் அண்ட விடுவதில்லை…
புத்தியுள்ளவளின் முகம் எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்கும். புத்தியில்லாதவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு எரிச்சல் இருக்க தான் செய்கிறது… 
 

தெய்வமே ........!   🙏

Samantha Vijay GIF - Samantha Vijay Thalapathy - Discover & Share GIFs |  Samantha, Gif, Girly facts

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2021 at 08:37, suvy said:

நல்ல கருத்துக்கள் உடைய கவிதை சகோதரி.......!

நீங்கள் தாழ்வு மனப்பான்மையுடன் ஆண்களைப்  பிரித்துப் பார்க்கின்றீர்கள். ஆண்கள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை.நீங்கள் இவ்வளவு சுதந்திரமாக எழுதுவதற்கும் ஒரு ஆண்தானே துணையாக இருக்கின்றார் என்பதை மறுக்க முடியுமா. நாங்கள் ஒருபோதும் பெண்களை பிரித்துப் பார்ப்பதில்லை. நாங்களே விரும்பாவிடினும் அவர்கள் காலால் இட்ட வேலையை சிரமேற்கொண்டு செய்து முடிக்கின்றோம்.எங்களது உயிரையே அவர்களிடம் தந்து விட்டு அந்த பாவத்திற்காக ஆயுள் முழுதும் விலங்கில்லாத  அடிமையாய்  வாழ்ந்து சாகிறோம்.நாங்கள் ரொம்ப பாவம் தாயே, கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்........ !  😎

நல்ல ஆண்களைப் போற்றியும் ஒரு கவிதை எழுதிவிடுகிறேன் 😀

நன்றி அண்ணா கருத்துக்கு

On 16/3/2021 at 10:04, nunavilan said:

அடி எடுத்து தந்தால் அடியையொற்றி போக வேண்டும். stop complaining🤣

எல்லோரும் ஒரே வழியே எப்படிப் போவது? ஒவ்வொருவரின் இயல்புகள், தேவைகள் வே றுவேறானவையல்லவா 

எனக்கு Pfizer ஊசி போட்டதுக்குப் பிறகு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. அனைத்து  உறவுகளின் பதிவுக்கும் மூன்று நாட்கள் செல்ல வந்து கருத்தை எழுதுகிறேன். குறை நினைக்க வேண்டாம்.

 

முக்கியமாய் இதில் குமாரசாமி எழுதியதை பார்த்தே களை தொட்டுட்டுது.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு Pfizer ஊசி போட்டதுக்குப் பிறகு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. அனைத்து  உறவுகளின் பதிவுக்கும் மூன்று நாட்கள் செல்ல வந்து கருத்தை எழுதுகிறேன். குறை நினைக்க வேண்டாம்

ஓஹோ.. நீங்கள் குருதி உறைந்துவிடும் என்று பயந்த ஆட்கள்..! தடுப்பூசி சும்மா களைப்பை தருகிற மாதிரி இருக்கும். ஆனால் எல்லாம் இரண்டொரு நாளில் சரியாகிவிடும்.

ஐரோப்பிய யூனியனில் இருக்கும் சில நாடுகள்  ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா குருதி உறைவில் பிரச்சினை தரும் என்று சொன்னதும் சிலர் பயந்து அதனைப் போடாமல் no show ஆகியதால் எனக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட வாய்ப்பு கிடைத்தது!

போய்க் குத்திவிட்டு வந்தேன். அன்று ஏதும் செய்யவில்லை. 

அவர்கள் தந்த பிரசுரத்தில் இருந்ததில் side effects இல் ஒன்றிரண்டு அடுத்தநாள் வந்தது.

முதலில் உடல் சில்லென்று சில மணிநேரம் குளிர்ந்த மாதிரி இருந்தது. பின்னர் சாடையாக சூடாகவும் அடிச்சுப் போட்ட மாதிரியும் இருந்தது. ஊசி போட்ட இடத்தில் நோ இருந்தது. ஆனால் 24 மணி நேரத்திலேயே எல்லாம் நோமலாகிவிட்டது!😀

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2021 at 22:56, குமாரசாமி said:
புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன?
புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள்.
புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அழித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள்.
புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள். புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள். இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். நன்றாக இருக்கும் வீட்டையும் அவள் சிதைத்துவிடுகிறாள்.
புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள். புத்தியில்லாதவள் ஆடம்பரத்திற்கு வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துவாள்.
புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை கையில் ஏந்தி நின்றாலும் உடைத்து விட மாட்டாள். புத்தியில்லாதவள் பொன் குடத்தையும் உடைத்து விடுவாள். நிதானம் இவர்களின் அடையாளம்.
புத்தியுள்ள பெண் பகைவரை சம்பாதிக்க விரும்ப மாட்டாள். 
புத்தியில்லாதவளுக்கோ அண்டை வீட்டுக் காரரும் எதிராளிகளே.
புத்தியுள்ள பெண் வீட்டாருக்கு ஆகாரம் அளிக்கிறாள், வேலைக்காரர்களுக்கு படி அளக்கிறாள். புத்தியில்லாத பெண் வேலைக்காரியாகவே வாழ்ந்து முடித்து விடுவாள்.
புத்தியுள்ள பெண் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அழகாக்கி அழகான குடும்பத்தை சமூகத்தில் முன் நிறுத்துகிறாள். புத்தியில்லாதவளுக்கு சுத்தம், தூய்மை அழகு பற்றிய அக்கறை இருப்பதில்லை.
புத்தியுள்ள பெண் தனக்கானதை எடுத்துக் கொள்கிறாள். புத்தியில்லாதவள் என் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என ஆதங்கப்படுகிறாள்.
புத்தியுள்ள பெண் திருமணம் என்னும் ஒரு நாள் கூத்திற்காக வேலையை இராஜினாமா செய்வதில்லை. புத்தியில்லாதவள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காரணத்திற்காகவே வேலையை விட்டு விட்டு ஆறு மாதம் கழித்து வேலை தேடி அழைகிறாள்.
புத்தியுள்ள பெண் உருவாக்குகிறாள். புத்தியில்லாதவள் அழித்து போடுகிறாள்.
புத்தியுள்ள பெண் தன் மக்களை கொண்டாடுகிறாள். புத்தியில்லாதவள் நீ எல்லாம் எங்கே உருப்பட போற? என்று தன் மக்களை சபித்துக் கொண்டே இருப்பாள்.
புத்தியுள்ள பெண் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினரின் தவறுகளை சுட்டி காட்ட மாட்டாள். புத்தியில்லாதவள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையை திட்டுவார், அசிங்கப்படுத்துவார்.
புத்தியுள்ள பெண் குடும்பத்தினரை சரி செய்வாள். புத்தியில்லாதவள் குடும்பம் தான் சமூகம் என்ற அறிவில்லாமல் இருப்பாள்.
புத்தியுள்ள பெண் குடும்பத்தினருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிப்பாள். புத்தியில்லாத பெண்ணுடன் இருப்பவர்களுக்கு இருட்டு கூட பயம் தான்.
புத்தியுள்ள பெண் சேகரிப்பாள், பாதுகாப்பாள், பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் தொலைப்பாள், உடைப்பாள் தூக்கி எறிவாள்.
சுறுசுறுப்பு புத்தியுள்ள பெண்ணின் மற்றொரு அடையாளம். புத்தியில்லாத பெண்ணின் வீட்டின் அடையாளம் சிலந்தி கூடுகளே.
புத்தியுள்ள பெண் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த வாழ்க்கை என நம்புகிறாள். புத்தியில்லாதவள் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறாள்.
புத்தியுள்ள பெண் உட்கார்ந்து வரவு செலவு கணக்கை கணக்கிடுகிறாள். புத்தியில்லாதவள் கணக்கிட்டு பார்க்கவும் சோம்பேறித்தனப்படுகிறாள்.
புத்தியுள்ள பெண் எல்லாருடனும் ஒரு சிறிய இடைவெளியை கடைபிடிக்கிறாள் தன்னை பாதுகாக்கிறாள். புத்தியில்லாதவள் எல்லாரையும் தன் முதல் வட்டத்திற்குள் வந்து செல்ல அனுமதிக்கிறாள்.
புத்தியுள்ள பெண் "நோ" சொல்ல தைரியம் கொண்டிருக்கிறாள். புத்தியில்லாத பெண் தன்னை கெட்டவளாக நினைத்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள்.
புத்தியில்லாதவள் குற்றப்படுத்திக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ளவளின் கண்களுக்கு தவறு செய்தல் மனித இயல்பு என்பது தெரியும்.
புத்தியில்லாதவள் என்றோ செய்த தவறை இன்றும் நினைவில் வைத்து காயப்படுத்துவாள். மனதை காயப்படுத்துவதில் இவளுக்கு ஒரு மகிழ்ச்சி. புத்தியுள்ள பெண் எப்பொழுதுமே பாராட்டுபவளாக தான் இருப்பாள்.
புத்தியுள்ளவள் தவறை கடிந்து கொள்வாள். புத்தியில்லாதவள் தவறுக்கு ஒத்துழைப்பு தருவாள்.
புத்தியுள்ள பெண் எதையும் இரட்டிப்பு ஆக்குவாள். புத்தியில்லாதவள் எதை செய்தாலும் நஷ்டம் தான் முடிவு.
புத்தியுள்ள பெண் குழந்தைகளையும் கனப்படுத்துவாள், உயர்வாக எண்ணுவாள். புத்தியில்லாதவளுக்கோ 80 வயது பெரியவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்களின் முதுமையை கொண்டாடாமல் உதாசினப்படுத்துவாள்.
புத்தியுள்ள பெண் மீதம் எடுக்க சமைப்பாள். புத்தியில்லாதவளோ மூன்றுக்கு பதில் ஏழு பேர் வந்து விட்டால் செய்வதறியாது திகைப்பாள்.
புத்தியுள்ள பெண் பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் எப்பொழுதும் அதை எங்கே வைத்தோம் இதை எங்கே வைத்தோம் என தேடிக் கொண்டே இருப்பாள். தேடுவதிலே பாதி நேரத்தை விரயம் செய்வாள்.
புத்தியுள்ள பெண் மனிதர்களின் மேன்மையை உணர்ந்தவள். புத்தியில்லாதவள் குடும்பத்தினரையும் அண்ட விடுவதில்லை…
புத்தியுள்ளவளின் முகம் எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்கும். புத்தியில்லாதவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு எரிச்சல் இருக்க தான் செய்கிறது… 
 

உப்பிடிக்க சொல்லிச் சொல்லியே பெண்களை முட்டாள்களாக்கி தங்கள் காரியங்களைச் சாதிக்கும் ஆண்கள் புத்திசாலிகள் தான்.

On 17/3/2021 at 20:30, கிருபன் said:

ஓஹோ.. நீங்கள் குருதி உறைந்துவிடும் என்று பயந்த ஆட்கள்..! தடுப்பூசி சும்மா களைப்பை தருகிற மாதிரி இருக்கும். ஆனால் எல்லாம் இரண்டொரு நாளில் சரியாகிவிடும்.

ஐரோப்பிய யூனியனில் இருக்கும் சில நாடுகள்  ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா குருதி உறைவில் பிரச்சினை தரும் என்று சொன்னதும் சிலர் பயந்து அதனைப் போடாமல் no show ஆகியதால் எனக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட வாய்ப்பு கிடைத்தது!

போய்க் குத்திவிட்டு வந்தேன். அன்று ஏதும் செய்யவில்லை. 

அவர்கள் தந்த பிரசுரத்தில் இருந்ததில் side effects இல் ஒன்றிரண்டு அடுத்தநாள் வந்தது.

முதலில் உடல் சில்லென்று சில மணிநேரம் குளிர்ந்த மாதிரி இருந்தது. பின்னர் சாடையாக சூடாகவும் அடிச்சுப் போட்ட மாதிரியும் இருந்தது. ஊசி போட்ட இடத்தில் நோ இருந்தது. ஆனால் 24 மணி நேரத்திலேயே எல்லாம் நோமலாகிவிட்டது!😀

எனக்கு மூன்று நாட்கள் குளிர் காய்ச்சலும் நான்காம் நாள் முதன் முதல் என் நினைவு தெரிந்து சூடான காய்ச்சலும் வந்து ஐந்தாம் நாள்த்தான் ஓக்கேயானது. கோவிட் தொற்று ஏற்பட்ட போது கூட  அத்தனை கடினமாக உணரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு மூன்று நாட்கள் குளிர் காய்ச்சலும் நான்காம் நாள் முதன் முதல் என் நினைவு தெரிந்து சூடான காய்ச்சலும் வந்து ஐந்தாம் நாள்த்தான் ஓக்கேயானது. கோவிட் தொற்று ஏற்பட்ட போது கூட  அத்தனை கடினமாக உணரவில்லை.

என்ன இது புதுக்கதையாய் கிடக்கு!!!!!  உங்களுக்கு எப்ப கொரோனா வந்தது? சொல்லவேயில்லை? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உப்பிடிக்க சொல்லிச் சொல்லியே பெண்களை முட்டாள்களாக்கி தங்கள் காரியங்களைச் சாதிக்கும் ஆண்கள் புத்திசாலிகள் தான்.

பெண்கள் கிட்டத்தட்ட அரசியல்வாதிகள் மாதிரி.😀
எதை ஆயுதமாக எடுத்தால் வெற்றிநடை போடலாம் என்பதை தெரிந்து வைத்து அவ்வப்போது மேடையேற்றுவார்கள்.😂
சாதி அரசியல்,இனவாத அரசியல்,மதவாத அரசியல்,நிறவாத அரசியல் என அரசியல்வாதிகள் ஒரு டையரி வைத்திருப்பார்கள். அது போல் மாண்புமிகு மதிப்புக்குரிய பெண்களும் பெண்ணடிமை எனும் ஒரு சொல்லை வைத்து காலத்தை ஓட்டுவார்கள்.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

என்ன இது புதுக்கதையாய் கிடக்கு!!!!!  உங்களுக்கு எப்ப கொரோனா வந்தது? சொல்லவேயில்லை? :cool:

இரண்டு மாதானக்கள் ஆகுது। அது பற்றியும் ஒரு வீடியோ போடுறன் 😀

4 minutes ago, குமாரசாமி said:

பெண்கள் கிட்டத்தட்ட அரசியல்வாதிகள் மாதிரி.😀
எதை ஆயுதமாக எடுத்தால் வெற்றிநடை போடலாம் என்பதை தெரிந்து வைத்து அவ்வப்போது மேடையேற்றுவார்கள்.😂
சாதி அரசியல்,இனவாத அரசியல்,மதவாத அரசியல்,நிறவாத அரசியல் என அரசியல்வாதிகள் ஒரு டையரி வைத்திருப்பார்கள். அது போல் மாண்புமிகு மதிப்புக்குரிய பெண்களும் பெண்ணடிமை எனும் ஒரு சொல்லை வைத்து காலத்தை ஓட்டுவார்கள்.😷

நான் பெண்ணியவாதி அல்ல அல்ல 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இரண்டு மாதானக்கள் ஆகுது। அது பற்றியும் ஒரு வீடியோ போடுறன் 😀

 அந்த அனுபவத்தை கெதியிலை சொல்லுங்கோ......
பலருக்கு பிரயோசனமாய் இருக்கும்.

 இந்த காலகட்டத்திலை பலருக்கு பிரயோசனமாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டாச்சு குமாரசாமி 😀

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.