Jump to content

யாழ்ப்பாணக் கள்ளும் கொழும்புச் சாராயமும் … எது திறம்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

கள்ளுக் குடித்தால் காசு எங்களிட்ட இருக்கும். சாராயம் குடித்தால் காசு வெளியில போயிடும்”

 
 

பொருளாதாரம் தெரிந்த உள்ளுர் அன்பரின் வாக்குமூலம் இது.

உண்மைதான் கள்ளுக்குக் கொடுக்கும் பணம் உள்ளுர் பொருளாதாரத்தை உயர்த்தும்.

சாராயத்துக்குக் கொடுக்கும் காசு பணத்தை வேறு ஒருவரது கைகளைச் சென்றடைய வைக்கும்.

கள்ளுத் தவறணைகளது மூடுவிழா பரவலாகவே நடைபெறுகின்றது.

இயற்கை அன்னை எமக்குத் தந்த உற்சாகபானம் கள்ளைக் குடிப்பதைவிட இரசாயன நீராக அற்கஹோல் சேர்க்கப்பட்டு வரும் மதுபானத்தை விரும்புவோர்தான் இன்று அதிகம்.

இன்றைய இளைய தலைமுறை கள்ளுக் குடிப்பதனை நாகரிகமாகக் கருதாமல் பியர், உட்பட்ட மதுபானங்களை அருந்துவதனையே விரும்புகின்றனர். அதிலும் ஒரு படி மேலே போய் அவற்றைப் படமாக எடுத்து வைபர்,வற்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.

ஒரு போத்தல் தென்னங்கள் 120 ரூபாவுக்கு விலைப்படுகின்றது. அதேவேளை 400 மில்லி லீற்றர் பியர் ரின் 400 ரூபாவரையில் விற்பனையாகின்றது. சாராயப் போத்தல்களின் விலைகள் 1000 ரூபா முதல் பத்துப் பதினையாயிரம் ரூபா வரையில் போகும்.

kallu.jpg

சாராய பார்களும் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ளமையால் கள் விற்பனை குறைவடைகின்றது.

அத்துடன் உயிராபத்தான கள்ளுச் சீவும் தொழிலைவிட்டு ஏராளமான குடும்பங்கள் விலகி உள்ளன. உயிராபத்து மட்டுமல்ல கள்ளுச் சீவுதல் சமூக அந்தஸ்து குறைந்த தொழிலென பார்க்கப்படுவதால் கைவிடுவோர் அதிகம்.

அது உண்மையும்க கூட.

அதேவேளையில் கள்ளுத் தவறணைகள் மூடப்படும் நிலைகள் கூடகள் விற்பனைத் தொழிலைப் பாதிக்கின்றது.

முன்னைய காலத்தில் ஆளரவமற்ற வெறும் காணியில் தவறணைஅமைத்திருப்பார்கள்.

வருடங்கள் செல்லச்செல்ல சனத்தொகை கூடக்கூட கள்ளுத் தவறணைக்குப் பக்கத்தில் குடிமனைகள் வர வர, தவறணை பக்கத்தில் இருப்பது கௌரவப் பிரச்சினையாக மாறிவிடும். அப்போது தவறணையை அகற்றுமாறு போராட்டங்கள் எடுப்பார்கள்.

6B85B98D-3B9E-4308-985C-5CE37A7B234D.jpe

தவறணை முதல் வந்ததா? குடிமனைகள் முதல் வந்ததா? என யாரும் கேட்கமாட்டார்கள்.

முன்னைய காலத்தில் கள்ளுத்தவறணை வளாகத்தில் ரேஸ்ட் கடையென ஒரு பெட்டிக்கடை இருக்கும். அங்கு ஆடு அல்லது மாட்டின் இரத்தவறை, மீன்பொரியல், இறால்பொரியல், தட்டைவடை, மரவள்ளிக் கிழங்கு அவியல், பொரியல், கடலை, பிலாக்கொட்டைப் பொரியல் போன்றவை விற்கப்படும்.

கள்ளுக் குடிப்பவர்கள் அவற்றை விரும்பி வாங்கி உண்பார்கள். இந்த ரேஸ்ற் கடை வியாபாரத்தை நம்பி ஒவ்வொரு ஊர்களிலும் நாலைந்து குடும்பங்கள் இருந்தார்கள்.

அவர்கள் சிறப்பான வருமானத்தைப் பெற்றுச் சிறந்த வாழ்க்கைத்தரத்தை அனுபவித்தார்கள்.

எனது சிறுவயதில் அதாவது 1970களின் இறுதியில் 50 சதம் காசு கொண்டுபோய் அதில் 25 சதத்திற்கு இரத்தவறை வாங்கி உண்பேன்.

மிகுதி 25 சதத்திற்கு சென்ற் பற்றிக்ஸ் கல்லூரிச் சந்தியிலுள்ள பரிபூரணம் கடையில் சின்னச்சைக்கிளை ஒரு மணித்தியாலத்திற்கு வாடகைக்கு எடுத்து ஓடுவேன்.

இந்த ரேஸ்ற் கடைகளில் விற்கப்பட்ட சிற்றுண்டிகள் இயற்கையில் கிடைத்த உணவுப் பொருள்களாகும். போசாக்கானவை. பிற்காலத்தில் இந்த ரேஸ்ற் பெட்டிக்கடை அமைப்பு முற்றாகவே அழிந்து போய்விட்டது எனலாம்.

1990களின் முற்பகுதியில்  விடுதலைப்புலிகளின்ஆதிக்கத்தின் கீழ் வடபிரதேசம் இருந்தபோது தென்பகுதியிலிருந்து மதுபானம் எடுத்துவருவதை முற்றாகவே தடை செய்தார்கள்.

அந்தக் காலப்பகுதியில் கள் இறக்கும் சீவல் தொழிலாளர்கள் உயர் வருமானம் பெற்று நல்லதொரு வாழ்க்கைத் தரத்தில் இருந்தார்கள்.

அக் காலத்தில் விகார் எனும் பெயரில் பனஞ்சாராயமும் உற்பத்தி செய்யப்பட்டது.

இயற்கையான சாராயம் என்றால் அதுபனம் சாராயம்தான். வடமராட்சி திக்கத்தில் வடிக்கும் பனஞ்சாராயத்திற்குச் சிங்கள மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை எமது மக்கள் கொடுப்பதாகக் காணவில்லை.

உண்மையில் திக்கம் வடிசாலைச் சாராயம்தான் உயர்ந்தது.

ஏனையவை யாவும் இரசாயனங்களால் உருவாக்கப்பட்ட செயற்கை மதுபானங்கள்தான்.

திராட்சைப் பழத்திலிருந்து வைன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் ஒரு குறித்த வீதத்திற்கு அற்கஹோல் சேர்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உரும்பிராய் கிராமத்தின் ஒரு பகுதியில் சாராயத்தை திறம்படக் காய்ச்சும் கைத்தொழில் ஒருகாலத்தில் இருந்தது.

மக்கள் எழுத்தாளர் கே.டானியலின் கதைகளில் ”உரும்பிராயான் ஒரு போத்தல் எடுத்து வைத்தான்” என்ற வசனம் வரும்.

அந்த மக்களிடம் இருந்த சாராயம் காய்ச்சும் திறன் சரியான ஒரு கைத்தொழிலாக வளர்த்து எடுக்கப்பட்டிருக்காதமை துரதிஸ்டம்தான்.

அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் பற்றாக்குறைவரும்போது நிதியீட்டம் செய்வதற்கு சிகெரட் சாராயம் என்பவற்றுக்கான விலையைக் கூட்டும்.

குடிகாரன் தள்ளாடினால்தான் பொருளாதாரம் தள்ளாடாது. குடிகாரன் நிதானமாக இருந்தால் பொருளாதாரம் தள்ளாடும் என்பது நாட்டின் பொது விதியாகிவிட்டது.

புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வகை வகையான சாராயப் போத்தல்கள் வருடா வருடம் ஆடி, ஆவணி மாதங்களில் தாயகத்திற்குவரும்.

”நாங்கள் என்ன லோக்கல் கள்ளுச்சாராயமோ குடிக்கிறது. பொறின் சரக்கெல்லோ குடிக்கிறம் ” எண்டொரு பீத்தல் பெருமையும்கள் உற்பத்திக்கு வில்லத்தனமாக நிற்கிறது.

எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ள வேண்டுமென்ற அரசாங்கங்களின் கொள்கைகள் காரணமாக உள்நாட்டவரின் திறமை மதிக்கப்படவில்லை.

இது வரலாற்றின் துயரமாகவே முடிந்தது.

https://vampan.net/27309/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.