Jump to content

நாட்டுக்குள் வ‌ரும் இஸ்லாமிய‌ புத்த‌க‌ங்க‌ள் பாதுகாப்பு அமைச்சின் அனும‌தியை பெற‌ வேண்டும் -உலமா கட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குள் வ‌ரும் இஸ்லாமிய‌ புத்த‌க‌ங்க‌ள் பாதுகாப்பு அமைச்சின் அனும‌தியை பெற‌ வேண்டும் -உலமா கட்சி

Monday, March 15, 2021 | 1:57:00 PM | 0 comments .

 

photo_211229.jpg
நாட்டின் தேசிய‌ பாதுகாப்பு க‌ருதி நாட்டுக்குள் வ‌ரும் இஸ்லாமிய‌ புத்த‌க‌ங்க‌ள் பாது காப்பு அமைச்சின் அனும‌தியை பெற‌ வேண்டும் என்ற‌ ச‌ட்ட‌த்தை உல‌மா க‌ட்சி வ‌ர‌வேற்றிருப்ப‌துட‌ன் இஸ்லாம், இஸ்லாம் அல்லாத‌ அனைத்து புத்த‌க‌ங்க‌ளுக்கும் பாதுகாப்பு த‌ர‌ப்பின் அனும‌தி பெற‌ப்ப‌டுவ‌தே நிலையான‌ தேசிய‌ பாதுகாப்புக்கு உக‌ந்த‌து என‌ தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து

நாட்டுக்குள் இஸ்லாமிய‌ புத்த‌க‌ங்க‌ள் கொண்டு வ‌ர‌ முடியாது என‌ பாதுகாப்பு அமைச்சு ச‌ட்ட‌ம் போட‌வில்லை. மாறாக‌ வ‌ருகின்ற‌ புத்த‌க‌ங்க‌ள் பாதுகாப்பு த‌ர‌ப்பின் அனும‌தி பெற‌ப்பட‌ வேண்டும் என்றே ச‌ட்ட‌ம் போட‌ப்ப‌ட்டுள்ள‌து.

இது உண்மையில் மிக‌வும் வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌ ச‌ட்ட‌மாகும். நான் அறிய‌ ச‌வூதி அரேபியாவில் 40 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ உள்ள‌து.

இஸ்லாமிய‌ புத்த‌க‌மோ எந்த‌ புத்த‌க‌மோ விற்ப‌னைக்கு என‌ அல்ல‌து மொத்த‌மாக‌ வ‌ருமாயின் அது பாதுகாப்பு த‌ர‌ப்புக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு சோதிக்க‌ப்ப‌ட்ட‌ பின்பே அனும‌திக்க‌ப்ப‌டும். இத‌ற்கென‌ த‌ம்மாம் போன்ற‌ பிர‌தான‌ நுழை வாயில்க‌ளில் அர‌பு மொழி அல்லாத‌ உதார‌ண‌மாக‌ த‌மிழ் மொழியில் வ‌ரும் புத்த‌க‌ங்க‌ளை ஆராய‌வென‌ இல‌ங்கையை சேர்ந்த‌ மௌல‌விமாரும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். அங்கு நீண்ட‌ கால‌ம் ப‌ணிபுரிந்த‌ புத்த‌ள‌த்தை சேர்ந்த‌ ந‌ண்ப‌ர் உவைஸ் மௌல‌வி அண்மையில் ம‌ர‌ண‌மானார்.

இல‌ங்கையில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ஈஸ்ட‌ர் தாக்குத‌லுக்கு இஸ்லாமிய‌ புத்த‌க‌ங்க‌ளே கார‌ண‌ம் என்ற‌ க‌ருத்து சிங்க‌ள‌ ம‌க்களிட‌ம் உள்ள‌து. இக்க‌ருத்து ஏற்ப‌டுவ‌த‌ற்கு கார‌ண‌ம் ந‌ம‌து முஸ்லிம்க‌ள் கொடுத்த‌ பிழையான‌ விள‌க்க‌ங்க‌ளாகும்.

ஸ‌ஹ்ரானின் தாக்குத‌லுக்கு பிர‌தான‌ கார‌ண‌ம் ர‌ணில், மைத்திரி, ச‌ஜித் ஆட்சியில் முஸ்லிம்க‌ள் மீது அர‌ச‌ அனுச‌ரணையுட‌ன் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லும் அந்த‌ அரசின் ஊழ‌லை ம‌றைக்க‌ தாக்குத‌லுக்கான‌ அந்த‌ அர‌சின் ஆத‌ர‌வுமாகும்.

இந்த‌ நிலையில் புத்த‌க‌ங்க‌ளால் தீவிர‌வாத‌ம் தூண்ட‌ப்ப‌டுகிற‌து என‌ அர‌ச‌ த‌ர‌ப்பு சிந்திப்ப‌தை நாம் குறை காண‌ முடியாது. கார‌ண‌ம் இந்த‌ நாட்டில் ஏற்ப‌ட்ட‌ த‌மிழ்த்தீவிர‌ போராட்ட‌ம், ஜேவிபி போராட்ட‌ம் என்ப‌ன‌ கால்மார்க்ஸ், லெனின், மாவோ சேதுங் போன்ற‌ இட‌துசாரி புர‌ட்சியாள‌ர்க‌ளின் எழுத்துக்க‌ளால்தான் அநேக‌ நாடுக‌ளில் புர‌ட்சிக‌ள் வெடித்த‌ன‌. இந்தியாவில் இன்ன‌மும் க‌ம்யூனிச‌வாதிக‌ளில் ஒரு பிரிவின‌ர் ஆயுத‌ம் தூக்கி போராடுகின்ற‌ன‌ர்.

ஆக‌வே ந‌ம‌து நாட்டு ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ தேசிய‌ பாதுகாப்பு முக்கிய‌த்துவ்ம் கொடுப்ப‌தால் நாட்டுக்குள் வ‌ரும் அனைத்து இஸ்லாமிய‌, இஸ்லாம் அல்லாத‌ அனைத்து புத்த‌க‌ங்க‌ளும் பாது காப்பு அமைச்சின் அனும‌தி பெற‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌தையும் உல‌மா க‌ட்சி கோரிக்கையாக‌ முன் வைக்கிற‌து.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காக்காதான் புலிகளுக்கு இந்த புத்தகங்கள்  வாங்கிக் கொடுத்தவரோ.... இந்த மாதிரி மறை கழ்ண் ட கேசுகளின் செய்திகள் தேவைதானா...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.