Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.0-02-05-c0b75323eb77501abe5bf2e007bb53ee87ae984b03b24f886f4ecce1b6fc0bb9_1c6da109647e14.jpg.30fc4ec58e83cdfe9ecd19c4d9e72239.jpg

 

அசரீரி..!

*******

மனிதா...

உலகம் உனக்கென யாரவர் சொன்னார்

உயிரினம் யாவையும் உந்தனின் படைப்பா

இயற்கையின் அழகை எப்படி அழிப்பாய்-உன்

இறப்புக்குள் மட்டுமா உலகத்தை படைத்தான்.

 

பிறப்புக்கு முன்னே எத்தனை கோடி-உன்

இறப்புக்கு பின்னாலும்  எத்தனை கோடி

வாழ வருகின்ற உயிரினமுண்டு-உன்

வாழ்க்கைக்கு மட்டுமா வையகமுண்டு.

 

உன்னையே நீயே வெறுக்கின்ற காலம்

உன்னால் தானே உருவானதிங்கு-நீயோ

விண்ணையும், மண்ணையும் விஞ்ஞானமென்று

அன்னையின் கண்ணையே அபகரித்தாயே.

 

ஒவ்வொரு உயிரினம் வாழ்வதற்க்கேற்ப

ஒவ்வொரு நிலமாக பிரித்துமே தந்தான்

ஒவ்வொரு நிலத்தையும் உன் நிலமாக்கி-மற்ற

உயிரினம் அனைத்தையும் அழிய நீ வைத்தாய்.

 

மனிதனாய் வாழவே உன்னை படைத்தான்

மனிதநேயமும் உன்னுக்குள் வைத்தான்

பொது நலம் தவிர்த்து நீ  சுயநலமானாய்-பூமி

பொறுமை இழந்துமே போராளியானாள்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

16,03.2021

  • Like 9
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அசரீரி"   

உங்களின்  "குரல் " சமுதாயத்தை நேசிக்கும் ஒருவரது குரல்.

பாராடட  படத்தக்கது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

"அசரீரி"   

உங்களின்  "குரல் " சமுதாயத்தை நேசிக்கும் ஒருவரது குரல்.

பாராடட  படத்தக்கது

உங்களின் வார்த்தைகள் என்னை மென் மேலும் உயரவைக்கும் உண்மை.

உளமார்ந்த நன்றிகள் நிலாமதி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டத் தக்க நல்ல கவிதை......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

"அசரீதி" பிடிச்சிருக்கு. பூமித்தாயின் கோபத்துக்கு ஆளாகி உள்ளோம் என்பது உண்மை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பசுவூர்க்கோபி said:

பொது நலம் தவிர்த்து நீ  சுயநலமானாய்-பூமி

பொறுமை இழந்துமே போராளியானாள்.

சுயநலத்தில்த் தான் பொதுநலம் இருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பசுவூர்க்கோபி said:

ஒவ்வொரு உயிரினம் வாழ்வதற்க்கேற்ப

ஒவ்வொரு நிலமாக பிரித்துமே தந்தான்

ஒவ்வொரு நிலத்தையும் உன் நிலமாக்கி-மற்ற

உயிரினம் அனைத்தையும் அழிய நீ வைத்தாய்.

இந்த வரிகளுடன் முழு உடன்பாடு எனக்கு உண்டு, கோபி...!

கடலிலை நீந்தப் போறவனைச் சுறா மீன் கடிச்சால்..அவன் சுறாவைக் குற்றம் சாட்டுகின்றான்!

சுறா எந்த ஐ.நா. சபையில் போய் முறையிடுவது?

அப்படி முறையிட்டாலும் சீனா வீட்டோ பண்ணாது என்பதற்கு என்ன  உத்தரவாதம்?😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையை போற்றும் கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்.👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

பாராட்டத் தக்க நல்ல கவிதை......!   👍

நன்றி சுவி அண்ணா

18 hours ago, nunavilan said:

"அசரீதி" பிடிச்சிருக்கு. பூமித்தாயின் கோபத்துக்கு ஆளாகி உள்ளோம் என்பது உண்மை.

நன்றிகள் நுனாவிலன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2021 at 22:36, ஈழப்பிரியன் said:

சுயநலத்தில்த் தான் பொதுநலம் இருக்கிறது.

நன்றிகள் ஐயா

On 17/3/2021 at 07:26, புங்கையூரன் said:

இந்த வரிகளுடன் முழு உடன்பாடு எனக்கு உண்டு, கோபி...!

கடலிலை நீந்தப் போறவனைச் சுறா மீன் கடிச்சால்..அவன் சுறாவைக் குற்றம் சாட்டுகின்றான்!

சுறா எந்த ஐ.நா. சபையில் போய் முறையிடுவது?

அப்படி முறையிட்டாலும் சீனா வீட்டோ பண்ணாது என்பதற்கு என்ன  உத்தரவாதம்?😄

அருமையாக சொன்னீர்கள் நன்றிகள் புங்கையூரன் அவர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படங்களுடன் நல்லதொரு கவிதை, நிஜத்தை கவிதை வடிவில் கொண்டு வந்துள்ளீர்கள்,

நன்றி பகிர்வுக்கு. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2021 at 08:19, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இயற்கையை போற்றும் கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்.👍

நன்றிகள் தோழர்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.