Jump to content

அளவோடு ஆசைப்படு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அளவோடு ஆசைப்படு !


ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான்.

தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான்.

பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? என்று வேண்டினான். தெய்வமும் "அப்படியே ஆவாய்" என்றது. அவன் அரசனாகி விட்டான்.முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் தேரில் ஊர்வலம் போனான். அப்போது கடுமையான வெயிலடித்தது. அவன் வெயிலின் கொடுமையால் வெந்து புழுங்கினான்.

அவன் "தெய்வமே அரசனை விட சூரியனே அதிக சக்தி படைத்ததாகத் தெரிகிறது. எனவே நீ என்னை சூரியனாக்கி விடு" என்றான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் சூரியனாகி எல்லோரையும் சுட்டான்.அப்போது ஒரு மேகம் அவனுக்கும் பூமிக்கும் இடையில் வந்தது. அதனால் பூமியில் உள்ளவர்களைச் அவனால் சுட முடியவில்லை.

 
 "தெய்வமே மேகம் சூரியனின் கதிர்களையே தடுக்கக் கூடிய சக்தியுடையதாக இருக்கிறது. ஆகையால் என்னை மேகமாக்கி விடு" என்று வேண்டினான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் மேகமாகி சூரியக் கதிர்களைத் தடுத்தான்.பூமி மீது பெரு மழை பொழிந்தான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, வீடுகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன, வயல்களெல்லாம் அழிந்து விட்டன. ஆனால் ஒரு பாறை மட்டும் அசையாமல் நின்று கொண்டிருந்தது. அவன் வெள்ளத்தை உண்டாக்கி எவ்வளவோ முயன்று பார்த்தான் அந்தப் பாறையை அசைக்கவே முடியவில்லை
 
. "தெய்வமே மேகத்தை விடப் பாறையே சக்தி வாய்ந்தது எனவே என்னை பாறையாக்கி விடு" என்றான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் பாறையாகி விட்டான்.

கர்வத்தோடு அமர்ந்திருந்தான். அப்போது அங்கே ஒருவன் உளியும் சுத்தியலும் கொண்டு வந்து அந்தப் பாறையை உடைக்க தொடங்கினான். அவன் உளி பாறையைத் தகர்க்கத் தொடங்க்கியது. 
 
"தெய்வமே பாறையை விடக் கல்லுடைப்பவன் சக்தி மிகுந்தவன். என்னை கல்லுடைப்பவனாகவே ஆக்கி விடு.” என்றான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் மீண்டும் கல்லுடைப்பவனாக ஆகி விட்டான்.

கல்லுடைப்பவன் கல்லுடைப்பவனாகவே இருக்க வேண்டும். ஆசைப்படக் கூடாது என்பதல்ல இந்தக் கதையின் நீதி. ஆசைக்கு எல்லை இல்லை. ஆசைப்படுபவன் நிம்மதியாக இருக்க முடியாது என்பது தான்.

படிப்பினையான கதை ..வாசித்துபயன் அடை யுங்கள்.
 
 " ஆசையே  அலை போல நாமேலாம் அதன் மேலே".......



நினைவில் நின்றவை  ( படித்த ஞாபகம்) 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வமே எனக்கு சிங்கள ராணுவத்தை அழிக்கும் சக்தியை மட்டும் கொடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

தெய்வமே எனக்கு சிங்கள ராணுவத்தை அழிக்கும் சக்தியை மட்டும் கொடு.

இவருக்கு புளுக்கத்தில தலை கால் புரியேல்லை தெய்வமே கொஞ்சம் பொறு.  சிங்கள ராணுவம் என்பது வெறும் அம்புதான் அதனால் அவர்களை இயக்கம் அரசியல்வியாதிகளையும் அந்த வியாதிகளை உருவாக்கி உலாவ விட்டிருக்கும் காருண்யமற்ற பிக்குகளையும் அழிக்கிற சக்தி கொடு என்றுதான் கேட்க நினைக்கிறார்.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

இவருக்கு புளுக்கத்தில தலை கால் புரியேல்லை தெய்வமே கொஞ்சம் பொறு.  சிங்கள ராணுவம் என்பது வெறும் அம்புதான் அதனால் அவர்களை இயக்கம் அரசியல்வியாதிகளையும் அந்த வியாதிகளை உருவாக்கி உலாவ விட்டிருக்கும் காருண்யமற்ற பிக்குகளையும் அழிக்கிற சக்தி கொடு என்றுதான் கேட்க நினைக்கிறார்.....!  😂

ராணுவ வெற்றிகள் தான் பேச்சு வார்த்தை வரை போனது.

நான் நினைக்கும் ராணுவ வெற்றி எல்லைகளை நிர்மாணிக்கும் அரசுக்கும் அரசுக்குமான பேச்சு வரை போக வேண்டும்.

அதுக்கிடையில் நான் பிடித்த நாட்டில் தலைவரைத் தேடுகிறேன்.

நீங்களும் பரிந்துரைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  தான் எண்ணையை பூசிக்கொண்டு 

உருண்டு பிரண்டாலும்  ஒட்டுவது  தான் ஒட்டும்

இதுவும் அனுபவ  பாடம் தான்

நன்றி பாட்டி கதைக்கும்  நேரத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா அத்தனைக்கும் ஆசைப்படு என்று தான் சாமியார்களே சொல்லும்போது அளவோடு ஆசைப்படசொல்றீங்க!

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தன் சொல்கிறாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆசை உழைப்பிற்கும்/தகுதிக்கும் ஏற்ற மாதிரி இருக்கும். உரிமை விடயத்தில் கூட அளவிற்கு மிஞ்சி ஆசைப்பட்டதில்லை.உன்னைப்போல் நானும் அவ்வளவுதான்.....எனது மண்ணில் எனது வீட்டில் எனது வாழ்க்கையை நான் தீர்மானிக வேண்டும். அயலவன் அல்ல.

நிலாமதிக்கு நன்றி. நல்லதொரு கருத்தாளமும் சிந்தனையும் மிக்க ஒரு பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2021 at 08:02, ஏராளன் said:

நிலாமதி அக்கா அத்தனைக்கும் ஆசைப்படு என்று தான் சாமியார்களே சொல்லும்போது அளவோடு ஆசைப்படசொல்றீங்க!

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தன் சொல்கிறாரே.

கல்லுடைப்பவன் ஒன்றுக்குமேற்படட ஆசையை வளர்த்து கொள்கிறான். எதிலும் திருப்தி படாதவனாக இருக்கிறான். அதனால் தான் "அளவு " என்பது போதுமென்ற மனம் .உனக்கு ஏற்றதைக் கேள் பெற்றுக் கொள் . உன்னால் முடிந்ததை, உனக்கானதை    கேட்டு பெறு   அதற்காக உழை.   என்பதாகும். 

Link to comment
Share on other sites

நல்லதொரு பதிவு அக்கா. ஆழமான கருத்தை சொல்லும் பதிவு . வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.