Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1960களின் கடைசியில் யாழ் இந்துவில் இருந்து வெளியே தலைகாட்ட தொடங்கிய நேரம்.

                முதலாவது பாடம் முடிந்ததும் ஆசிரியர் வெளியேற ஓரிரு நண்பர்களும் நானும் அவர் பின்னாலேயே வெளியேறிவிடுவோம்.

               ஆரம்பத்தில் ஒரு பாடம் இரண்டு பாடமாக தொடங்கி நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது.

               பாடசாலைக்கு 2 வருடமாக வாகனத்திலேயே வந்து போனேன்.அப்போது மாதம் 10 ரூபா மட்டுமே.வீட்டிலிருந்து வாகனம் வந்துபோகும் பாதை மாத்திரமே தெரியும்.வேறு பாதை தெரியாது.

               ஒருநாள் படம் பார்க்க போகலாமா என்று நண்பர் கேட்டார்.அவர் மனோகரா திரையரங்குக்கு அருகாமையில் வசிப்பராகையால் யாழில் கூடுதலான இடங்கள் தெரியும்.

                சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.நானும் மற்ற நண்பனும் கோவில் மாடு போல தலையாட்டினோம்.

                  ஒரு நண்பனின் தலமையில் பின் தொடர்கிறோம்.பெருந் தெருக்களுக்கு போகாமல் சிறிய ஒழுங்கைகள் வழியாக 10.30 க்குத் தான் படம் தொடங்கும் 10.25 க்கு போனால் சரி என்றான்.நெஞ்சு திக்குதிக்கென்று இருந்தாலும் படம் பார்க்க போகிறோமே என்று சந்தோசமும் ஏதோ சாதனையுமாக இருந்தது.

                நாங்களும் உள்ளுக்கு போக முதலாவது மணியும் அடிக்கிறது.படம் தொடங்கிய பின் தான் ஒரு ஆங்கிலப் படத்துக்கு வந்திருக்கிறோமே என்று.முதன்முதலாக களவாக பார்த்த படம் ஜேமஸ் பாண்ட் நடித்த கோல் பிங்கர்(Gold Finger)

                 படம் முடிந்து பிற்பகல் முதல்பாடம் இடாப்பு கூப்பிட முதல் போக வேண்டுமே என்று ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்துவிட்டோம்.

                 அன்று வீட்டுக்குப் போனால் 65 சதம் கொடுக்க வேண்டுமே எப்படி கொடுப்பது?இரவுவரை ஒரு வழியும் தெரியவில்லை.

                 காலையில் குளித்து சாமி கும்பிடும் போது தான் ஒவ்வொரு சாமிப்படத்தின் முன்பும் சில்லரை காசுகள்.ஆகா இதைவிட்டால் வேறு வழியே கிடையாது.பொறுக்கி எடுத்து காற்சட்டை பொக்கற்றுக்குள் போட்டு கிலிங்கி சத்தம் கேக்காமல் ஒரு நுhலாலும் கட்டி கடன் கொடுத்தாயிற்று.

                    இது தான் பள்ளியிலும் வீட்டிலும் தொடங்கிய முதல் களவு.முதல் தவறு செய்வது தான் மிகவும் கஸ்டம்.அப்புறம் அதுவே பழக்கமாயிடும்.

                    பின்னர் வின்சர் ராஜா திரையரங்குகளில்  10.30 படம்.காசில்லை அல்லது புதுப்படம் வரவில்லை என்றால் எங்காவது சும்மா சுற்றுவது.

                    ஒருநாள் கஸ்தூரியார் வீதி வழியாக வின்சர் திரையரங்கு நோக்கி போகும் போது நிறைய நேரமிருக்கு என்று அதற்கு முதல் சந்தியில் இடதுபக்கமாக திரும்பி போனால் சிறிய வாசிகசாலை பெயர் அண்ணா அறிவகம்.

                    வாசிகசாலை சிறிதாக இருந்தாலும் நிறைய புத்தகங்கள் குறைந்த சனம்.புத்தகங்களுடன் இருந்தில் நேரம் போனதே தெரியவில்லை.படத்துக்கும் நேரம் போய்விட்டது.

                    இதுக்குப் பின் படம் இல்லாவிட்டால் அண்ணா அறிவகம் என்றாகிவிட்டது.நாளாந்தம் போகப் போக படத்துக்கு போகாவிட்டாலும் வாசிகசாலைக்கு போய்வந்தோம்.

                    இதுவரை யாழ் பொதுசன நுhலகத்திற்குப் போனதில்லை.

                    ஆனாலும் அண்ணா அறிவகம் மாதிரி ஒரு வாசிகசாலையை இன்னமும் காணவில்லை.அனேகமாக சுவியருக்கு இந்த வாசிகசாலையும் இடங்களும் நன்கு தெரிந்திருக்கலாம்.

  • Like 19
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியனின்... மலரும் நினைவுகளை வாசித்து மகிழ்ச்சி அடைந்தோம்.

65 சதத்துக்கு... 👍🏼 007 ஜேம்ஸ் பொண்ட் படம், அருமையான காலம். 😁

கஸ்தூரியார் வீதிக்கும், பிரவுண் வீதிக்கும் இடையில் உள்ள பிள்ளையார்  கோவில் குளத்தின்  அருகில் உள்ள வாசிகசாலையை குறிப்பிடுகின்றீர்கள் என நினைகின்றேன். 

அரச மரத்தின் கீழ்... அழகான சூழலில் அமைந்துள்ள வாசிகசாலை அது. 

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியனின்... மலரும் நினைவுகளை வாசித்து மகிழ்ச்சி அடைந்தோம்.

65 சதத்துக்கு... 👍🏼 007 ஜேம்ஸ் பொண்ட் படம், அருமையான காலம். 😁

கஸ்தூரியார் வீதிக்கும், பிரவுண் வீதிக்கும் இடையில் உள்ள பிள்ளையார்  கோவில் குளத்தின்  அருகில் உள்ள வாசிகசாலையை குறிப்பிடுகின்றீர்கள் என நினைகின்றேன். 

அரச மரத்தின் கீழ்... அழகான சூழலில் அமைந்துள்ள வாசிகசாலை அது. 

ஆமாம் சிறி பக்கத்தில் ஒரு கோவில் இருந்தது.சிறிய வாசிகசாலை நிறைய புத்தகங்கள்.ஒரு காலத்தில் படம் அங்கு இங்கு சுற்றுவதை விட வாசிகசாலையே சரண்.
நீங்களும் உலா வந்திருக்கிறீர்களோ?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியனின்... மலரும் நினைவுகளை வாசித்து மகிழ்ச்சி அடைந்தோம்.

65 சதத்துக்கு... 👍🏼 007 ஜேம்ஸ் பொண்ட் படம், அருமையான காலம். 😁

கஸ்தூரியார் வீதிக்கும், பிரவுண் வீதிக்கும் இடையில் உள்ள பிள்ளையார்  கோவில் குளத்தின்  அருகில் உள்ள வாசிகசாலையை குறிப்பிடுகின்றீர்கள் என நினைகின்றேன். 

அரச மரத்தின் கீழ்... அழகான சூழலில் அமைந்துள்ள வாசிகசாலை அது. 

எல்லாருக்கும் விளங்கிற மாதிரி.....நீராவியடிப் பிள்ளையார் கோயில் எண்டு சொன்னால் என்னவாம்?

நாங்கள் எங்களுக்குள்ள கலரி எண்டு சொன்னால் கெளரவப் பிரச்சனை எண்டு சொல்லிக் காந்திக் கிளாஸ் என்று தான் எங்களுக்குள் அழைத்துக் கொள்வோம்!


ஈழப்பிரியன்...அனுபவங்களைக் கொஞ்சம் நீட்டினால் என்ன?😄

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆமாம் சிறி பக்கத்தில் ஒரு கோவில் இருந்தது.சிறிய வாசிகசாலை நிறைய புத்தகங்கள்.ஒரு காலத்தில் படம் அங்கு இங்கு சுற்றுவதை விட வாசிகசாலையே சரண்.
நீங்களும் உலா வந்திருக்கிறீர்களோ?

வாசிகசாலைக்கு.... உள்ளே போய் பார்க்கவில்லை ஈழப்பிரியன்.

சிறிய வகுப்பு படிக்கும் போது... அந்த ஒழுங்கையால்தான் பாடசாலைக்கு வருவோம்.

நாங்கள்,  😁 சாமத்தியப் பட்டாப் பிறகு...‼️ சைக்கிள் வாங்கித் தந்த பின்,

இந்து மகளிர் கல்லூரி இருக்கும், அரசடி வீதியை பாடசாலைக்கு வரும் வழியாக பாவிக்க தொடங்கி விட்டோம். 😂

16 minutes ago, புங்கையூரன் said:

எல்லாருக்கும் விளங்கிற மாதிரி.....நீராவியடிப் பிள்ளையார் கோயில் எண்டு சொன்னால் என்னவாம்?

நாங்கள் எங்களுக்குள்ள கலரி எண்டு சொன்னால் கெளரவப் பிரச்சனை எண்டு சொல்லிக் காந்திக் கிளாஸ் என்று தான் எங்களுக்குள் அழைத்துக் கொள்வோம்!


ஈழப்பிரியன்...அனுபவங்களைக் கொஞ்சம் நீட்டினால் என்ன?😄

புங்கை.... இப்ப இங்கை, விடிய மூண்டு மணி.

நித்திரை தூக்கத்திலை... நீராவியடி பிள்ளையார், உடனே  நினைவிலை வர மாட்டன் எண்டுட்டார். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்களும் நம்மாளுதான், நன்றி பழைய நினைகவுகளை பகிர்ந்த திற்கு.

பள்ளியை கட் பண்ணி சுத்தவதில் தனி சுகம், அதுவும் ஒரு நண்பன் கிடைத்துவிட்டால் சொல்லி வேலையில்லை,

6ம் வகுப்பில் நானும் எனது நண்பனும் ஆறு மாத த்துக்கு மேல் பள்ளி பஸ் தரிப்பிடத்தில் இறக்கி திரும்ப வீடு வரை நடைதான், வரும் வழியில் ஒரே சுற்றலும் & பம்பலும் தான்.

யாரோ கண் வைக்க எங்கள் சொந்த காரா அண்ணாவிடம் அகப்பட்டு வீட்டில் நடந்த பூசையை மறக்க முடியாது😢, அதன்பின் பலத்த கறுப்பு பூனைகளின் பாதுகாப்பில் தான் பள்ளி செல்வது 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக "செங்கை ஆழியான்" அவர்களின் வீட்டோடு சேர்ந்த வாசிகசாலை. நான் அங்கு நிரந்தர உறுப்பினர். அங்கிருந்துதான் ஏராளமான புத்தகங்கள் எடுத்து வாசித்தனான். எனது வீட்டுக்கு அருகில்தான் அது இருந்தது. அவரது மனைவியும் இந்து மகளிர் பாடசாலையில் ஆசிரியை என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னால் லிங்கம் அரவை மில் இருந்தது. அதனால் அடிக்கடி அரிசி, தூள் அரைக்க போகும்போது அந்த நூலகத்துக்கு போய் அதுவே வழக்கமாகி விட்டது...... முன்பு புதுப்படம் 65 சதம். பழைய படம் 35 சதம். கூட ஒரு 10 சதம் இருந்தால் நல்ல தேநீருடன் ஒரு வடை,சுசியும்,பகோடா,போண்டா எதோ ஒன்று வாங்கி சாப்பிட முடியும்....... நல்லதொரு நினைவு மீட்டல் பிரியன்......!  😁

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

நீங்கள் சொல்வது நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக "செங்கை ஆழியான்" அவர்களின் வீட்டோடு சேர்ந்த வாசிகசாலை. நான் அங்கு நிரந்தர உறுப்பினர். அங்கிருந்துதான் ஏராளமான புத்தகங்கள் எடுத்து வாசித்தனான். எனது வீட்டுக்கு அருகில்தான் அது இருந்தது. அவரது மனைவியும் இந்து மகளிர் பாடசாலையில் ஆசிரியை என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னால் லிங்கம் அரவை மில் இருந்தது. அதனால் அடிக்கடி அரிசி, தூள் அரைக்க போகும்போது அந்த நூலகத்துக்கு போய் அதுவே வழக்கமாகி விட்டது...... முன்பு புதுப்படம் 65 சதம். பழைய படம் 35 சதம். கூட ஒரு 10 சதம் இருந்தால் நல்ல தேநீருடன் ஒரு வடை,சுசியும்,பகோடா,போண்டா எதோ ஒன்று வாங்கி சாப்பிட முடியும்....... நல்லதொரு நினைவு மீட்டல் பிரியன்......!  😁

ஒரு ரூபாய் இருந்தால் மொக்கங் மன்னிக்கவும், ஹமீதியா கபேயில எட்டுப் புட்டும் (நாற்பது சதம்), ஒரு குறுமாவும் ( அறுபது சதம்) சாப்பிடலாம்!

ஆணம் இலவசம்! இடைகிடை மொக்கனைக் கூப்பிட்டு அலுப்படிச்சால்...அவரது மூளை தாங்காது! வெளியால வரேக்குள்ள...அண்ணை எவ்வளவு?

தம்பி...ஒரு ரூபாய்..!😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.....அந்த ஆணமும் றோஸ்சும் என்ன சுவை..... நினைக்கும்போது இப்பவும் நாவில் நிக்குது.....!  👍

Link to comment
Share on other sites

மலரும் நினைவுகள் எப்பவுமே அருமையாக இருக்கும். ஈழப்பிரியன் அண்ணாவின் நினைவுகளும் அப்படியே

அது சரி ஜேம்ஸ் பொன்ட் படம் என்றால் வயது வந்தவர்களுக்குரிய படமாக இருந்திருக்குமே?
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

எல்லாருக்கும் விளங்கிற மாதிரி.....நீராவியடிப் பிள்ளையார் கோயில் எண்டு சொன்னால் என்னவாம்?

 

4 hours ago, suvy said:

நீங்கள் சொல்வது நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக "செங்கை ஆழியான்" அவர்களின் வீட்டோடு சேர்ந்த வாசிகசாலை.

இருவரும் என்னை பிழையான வாசிகசாலைக்கு கூட்டி செல்கிறீர்கள்.பள்ளிக்கு பேரூந்தில் வர தொடங்கிய காலத்தில் இருந்து (யாழ்-கோப்பாய் ரூட்) ஆனைப்பந்தியில் இறங்கி நாலவர்வீதி பிரவுண்வீதி நீராவியடிப் பிள்ளையார் கோவிலடி ஊடாகவே நடந்து பள்ளிக்குப் போவோம்.

நான் சொன்ன வாசிகசாலை கன்னாதிட்டி பக்கமாக உள்ள வாசிகசாலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நான் கூட தோழர் ஏதோ அலுவல் காரணமா சென்னையில் உள்ள தீம்கா ஒபீஸ் உள்ள போயிட்டார் ..என உள்ள வந்தனன்..

மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் தோழர்..👍

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

ஒரு ரூபாய் இருந்தால் மொக்கங் மன்னிக்கவும், ஹமீதியா கபேயில எட்டுப் புட்டும் (நாற்பது சதம்), ஒரு குறுமாவும் ( அறுபது சதம்) சாப்பிடலாம்!

ஆணம் இலவசம்! இடைகிடை மொக்கனைக் கூப்பிட்டு அலுப்படிச்சால்...அவரது மூளை தாங்காது! வெளியால வரேக்குள்ள...அண்ணை எவ்வளவு?

தம்பி...ஒரு ரூபாய்..!😄

மதியநேர சாப்பாட்டு பொதியுடன் பிளவுஸ் வரை போய் றோஸ் வாங்கி(10 சதம்)சாப்பிட்டிருக்கிறேன்.இன்றுவரை எப்படி ஒரு றோஸ் சாப்பிட்டதில்லை.

4 hours ago, புங்கையூரன் said:

ஒரு ரூபாய் இருந்தால் மொக்கங் மன்னிக்கவும், ஹமீதியா கபேயில எட்டுப் புட்டும் (நாற்பது சதம்), ஒரு குறுமாவும் ( அறுபது சதம்) சாப்பிடலாம்!

ஆணம் இலவசம்! இடைகிடை மொக்கனைக் கூப்பிட்டு அலுப்படிச்சால்...அவரது மூளை தாங்காது! வெளியால வரேக்குள்ள...அண்ணை எவ்வளவு?

தம்பி...ஒரு ரூபாய்..!😄

மொக்னிடம் அடிக்கடி சாப்பிட்டிருக்கிறேன்.
புட்டும் ரசமும் சாப்பிட்டாலே தனிசுவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

அட நீங்களும் நம்மாளுதான், நன்றி பழைய நினைகவுகளை பகிர்ந்த திற்கு.

பள்ளியை கட் பண்ணி சுத்தவதில் தனி சுகம், அதுவும் ஒரு நண்பன் கிடைத்துவிட்டால் சொல்லி வேலையில்லை,

6ம் வகுப்பில் நானும் எனது நண்பனும் ஆறு மாத த்துக்கு மேல் பள்ளி பஸ் தரிப்பிடத்தில் இறக்கி திரும்ப வீடு வரை நடைதான், வரும் வழியில் ஒரே சுற்றலும் & பம்பலும் தான்.

யாரோ கண் வைக்க எங்கள் சொந்த காரா அண்ணாவிடம் அகப்பட்டு வீட்டில் நடந்த பூசையை மறக்க முடியாது😢, அதன்பின் பலத்த கறுப்பு பூனைகளின் பாதுகாப்பில் தான் பள்ளி செல்வது 🤣

ஊரில ஒரு பிரச்சனை சின்னன் சிறிசுகள் ஏதாவது குழப்படி என்றால் அப்பா அம்மா வீட்டுக்காரருக்கு மட்டுமல்ல ஊரவனுக்கே பதில் சொல்ல வேண்டும்.
தெருவீதிகளில் வைத்து சாத்தியும் விட்டுடுவாங்கள்.

1 hour ago, நிழலி said:

அது சரி ஜேம்ஸ் பொன்ட் படம் என்றால் வயது வந்தவர்களுக்குரிய படமாக இருந்திருக்குமே?

இது தவறான எண்ணம்.
ஜேம்ஸ் பாண்ட் படங்கள் அப்படியான படங்கள் இல்லை.

12 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அட நான் கூட தோழர் ஏதோ அலுவல் காரணமா சென்னையில் உள்ள தீம்கா ஒபீஸ் உள்ள போயிட்டார் ..என உள்ள வந்தனன்..

மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் தோழர்..👍

உலகத்தில் பல இடங்களுக்குப் போயிருந்தும் இதுவரை இந்தியா போகவில்லை.
சுகமாக இருந்தால் மனைவியை கோவில்குளம் என்று அழைத்துப் போக விருப்பம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதிலிருந்து அது கன்னாதிட்டி சந்தி.(நகைக்கடைகள் அதிகம் இருக்கும்). அதில் இடது பக்கம் போனால் ஒரு அம்மன் கோவிலும் அதன் வீதியில் ஒரு மோட்டர் சைக்கிள் கராஜ்சும் (அப்பாமணியின் கராஜ், மகன்மார் நடத்தினவை) இருக்கு அதன் அருகில் என்று நினைக்கிறேன்.நான் அங்கு போனதில்லை......!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, suvy said:

நீங்கள் சொல்வதிலிருந்து அது கன்னாதிட்டி சந்தி.(நகைக்கடைகள் அதிகம் இருக்கும்). அதில் இடது பக்கம் போனால் ஒரு அம்மன் கோவிலும் அதன் வீதியில் ஒரு மோட்டர் சைக்கிள் கராஜ்சும் (அப்பாமணியின் கராஜ், மகன்மார் நடத்தினவை) இருக்கு அதன் அருகில் என்று நினைக்கிறேன்.நான் அங்கு போனதில்லை......!

ஆமாம் சுவி பள்ளியில் இருந்து யாழ் நோக்கி போகும் போது நகைக்கடைகள் தொடங்குமிடத்தில் இடதுபக்கமாக 100-200 மீற்றர் போனால் இடதுகை பக்கமாக வாசிகசாலை வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா அறிவாலயம் நல்லதொரு நினைவூட்டல்.

நான் தான் இப்பிடியெண்டு பாத்தால் என்னோடை வந்து சேர்ந்ததுகள் என்னை விட மோசமாய் கிடக்கு....:379:

பள்ளிக்கூடத்தை கட் அடிச்சு தியேட்டர் ,கடைச்சாப்பாடு,வீட்டிலை காசு களவெடுப்பு......இன்னும் இரண்டு விசயங்கள் வெளியிலை வரவேணுமே???????? :thinking_face: :406:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அட நான் கூட தோழர் ஏதோ அலுவல் காரணமா சென்னையில் உள்ள தீம்கா ஒபீஸ் உள்ள போயிட்டார் ..என உள்ள வந்தனன்..

யோவ் புரட்சியர்! உது ஆகலும் ஓவர் யா...😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நான் தான் இப்பிடியெண்டு பாத்தால் என்னோடை வந்து சேர்ந்ததுகள் என்னை விட மோசமாய் கிடக்கு..

வீட்டுக்கு வீடு வாசல்படி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2021 at 08:57, ஈழப்பிரியன் said:

சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.

இப்படியான உதவிகள் நண்பர்கள் தான் செய்வார்கள் அதுதான் நண்பேன்டா என்று சொல்லுயினம் போல

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இப்படியான உதவிகள் நண்பர்கள் தான் செய்வார்கள் அதுதான் நண்பேன்டா என்று சொல்லுயினம் போல

உயிரும் கொடுப்பான் தோழன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதிவு இவ்வ்ளவு நாடகளாக என் கண்ணில் படவில்லை .தாமதத்துக்கு மன்னிக்கவும். இளமைக் கால நினைவுகளை அசைபோடுவது மீண்டும் பள்ளிக்குப்போவது போல .தொடர்ந்தும் உங்கள்  நினைவுகளை அசை போடுங்கள். 
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிலாமதி said:

இப்பதிவு இவ்வ்ளவு நாடகளாக என் கண்ணில் படவில்லை .தாமதத்துக்கு மன்னிக்கவும். இளமைக் கால நினைவுகளை அசைபோடுவது மீண்டும் பள்ளிக்குப்போவது போல .தொடர்ந்தும் உங்கள்  நினைவுகளை அசை போடுங்கள். 
 

யாழ் இந்துக் கல்லூரி ஆண்கள் கல்லூரி என்றபடியால் உங்கள் கண்களில் படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2021 at 22:47, குமாரசாமி said:

இன்னும் இரண்டு விசயங்கள் வெளியிலை வரவேணுமே???????? :thinking_face: :406:

கொக்குவில்  பல்தொழில்நுட்ப்பக்கல்லுரிக்கு. எதிர் பக்கத்தில் 150-200  மீற்றர். தள்ளி  பிலாவில் தண்ணீர்  குடிதது விட்டு  வீட்டைபோகும்போது ,வீட்டில்  மணம் தெரியாமால் இருப்பதாற்க்காக. வழியிலுள்ள பூவரசமிலையை நன்றாக சப்பி துப்பியதை எழுத மறந்து போனார். எனவே ஈழப்பிரியனுக்காக நான் பதிந்துள்ளேன்.

மற்றதுயென்ன? நண்பனுக்காக கடிதம் கொடுக்க மாதக்கணக்கில் சந்தர்ப்பம் கடைக்காமால் , நண்பனே சந்தேகம் கொண்டு ..அட ..அட..காயை இவன மடக்கப் பார்க்கிறனே என்று  நல்ல நட்பை இழந்திருப்பார்...😎

Just now, Kandiah57 said:

கொக்குவில்  பல்தொழில்நுட்ப்பக்கல்லுரிக்கு. எதிர் பக்கத்தில் 150-200  மீற்றர். தள்ளி  பிலாவில் தண்ணீர்  குடிதது விட்டு  வீட்டைபோகும்போது ,வீட்டில்  மணம் தெரியாமால் இருப்பதாற்க்காக. வழியிலுள்ள பூவரசமிலையை நன்றாக சப்பி துப்பியதை எழுத மறந்து போனார். எனவே ஈழப்பிரியனுக்காக நான் பதிந்துள்ளேன்.

மற்றதுயென்ன? நண்பனுக்காக கடிதம் கொடுக்க மாதக்கணக்கில் சந்தர்ப்பம் கடைக்காமால் , நண்பனே சந்தேகம் கொண்டு ..அட ..அட..காயை இவன மடக்கப் பார்க்கிறனே என்று  நல்ல நட்பை இழந்திருப்பார்...😎

கிடைக்காமால்

  • Haha 3
Link to comment
Share on other sites

ஈழப்பிரியன் உங்கள் இளமைகால நினைவுகள் அருமை.  சிறப்பாக அதை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். நீராவியடி அதை சுற்றி வர இருக்கும் இடங்கள் யாழ் இந்துக்கல்லூரியின் சுற்றாடல் எனது பாடசாலை நினைவுகளையும் மீட்டிப்பார்க்க வைத்துவிட்டது. தமிழ்சிறியின் அனுபவம் எமக்கும் உண்டு என்றாலும் அவரை போல போகும் பாதையை மாற்ற வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படவில்லை. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.