Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1960களின் கடைசியில் யாழ் இந்துவில் இருந்து வெளியே தலைகாட்ட தொடங்கிய நேரம்.

                முதலாவது பாடம் முடிந்ததும் ஆசிரியர் வெளியேற ஓரிரு நண்பர்களும் நானும் அவர் பின்னாலேயே வெளியேறிவிடுவோம்.

               ஆரம்பத்தில் ஒரு பாடம் இரண்டு பாடமாக தொடங்கி நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது.

               பாடசாலைக்கு 2 வருடமாக வாகனத்திலேயே வந்து போனேன்.அப்போது மாதம் 10 ரூபா மட்டுமே.வீட்டிலிருந்து வாகனம் வந்துபோகும் பாதை மாத்திரமே தெரியும்.வேறு பாதை தெரியாது.

               ஒருநாள் படம் பார்க்க போகலாமா என்று நண்பர் கேட்டார்.அவர் மனோகரா திரையரங்குக்கு அருகாமையில் வசிப்பராகையால் யாழில் கூடுதலான இடங்கள் தெரியும்.

                சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.நானும் மற்ற நண்பனும் கோவில் மாடு போல தலையாட்டினோம்.

                  ஒரு நண்பனின் தலமையில் பின் தொடர்கிறோம்.பெருந் தெருக்களுக்கு போகாமல் சிறிய ஒழுங்கைகள் வழியாக 10.30 க்குத் தான் படம் தொடங்கும் 10.25 க்கு போனால் சரி என்றான்.நெஞ்சு திக்குதிக்கென்று இருந்தாலும் படம் பார்க்க போகிறோமே என்று சந்தோசமும் ஏதோ சாதனையுமாக இருந்தது.

                நாங்களும் உள்ளுக்கு போக முதலாவது மணியும் அடிக்கிறது.படம் தொடங்கிய பின் தான் ஒரு ஆங்கிலப் படத்துக்கு வந்திருக்கிறோமே என்று.முதன்முதலாக களவாக பார்த்த படம் ஜேமஸ் பாண்ட் நடித்த கோல் பிங்கர்(Gold Finger)

                 படம் முடிந்து பிற்பகல் முதல்பாடம் இடாப்பு கூப்பிட முதல் போக வேண்டுமே என்று ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்துவிட்டோம்.

                 அன்று வீட்டுக்குப் போனால் 65 சதம் கொடுக்க வேண்டுமே எப்படி கொடுப்பது?இரவுவரை ஒரு வழியும் தெரியவில்லை.

                 காலையில் குளித்து சாமி கும்பிடும் போது தான் ஒவ்வொரு சாமிப்படத்தின் முன்பும் சில்லரை காசுகள்.ஆகா இதைவிட்டால் வேறு வழியே கிடையாது.பொறுக்கி எடுத்து காற்சட்டை பொக்கற்றுக்குள் போட்டு கிலிங்கி சத்தம் கேக்காமல் ஒரு நுhலாலும் கட்டி கடன் கொடுத்தாயிற்று.

                    இது தான் பள்ளியிலும் வீட்டிலும் தொடங்கிய முதல் களவு.முதல் தவறு செய்வது தான் மிகவும் கஸ்டம்.அப்புறம் அதுவே பழக்கமாயிடும்.

                    பின்னர் வின்சர் ராஜா திரையரங்குகளில்  10.30 படம்.காசில்லை அல்லது புதுப்படம் வரவில்லை என்றால் எங்காவது சும்மா சுற்றுவது.

                    ஒருநாள் கஸ்தூரியார் வீதி வழியாக வின்சர் திரையரங்கு நோக்கி போகும் போது நிறைய நேரமிருக்கு என்று அதற்கு முதல் சந்தியில் இடதுபக்கமாக திரும்பி போனால் சிறிய வாசிகசாலை பெயர் அண்ணா அறிவகம்.

                    வாசிகசாலை சிறிதாக இருந்தாலும் நிறைய புத்தகங்கள் குறைந்த சனம்.புத்தகங்களுடன் இருந்தில் நேரம் போனதே தெரியவில்லை.படத்துக்கும் நேரம் போய்விட்டது.

                    இதுக்குப் பின் படம் இல்லாவிட்டால் அண்ணா அறிவகம் என்றாகிவிட்டது.நாளாந்தம் போகப் போக படத்துக்கு போகாவிட்டாலும் வாசிகசாலைக்கு போய்வந்தோம்.

                    இதுவரை யாழ் பொதுசன நுhலகத்திற்குப் போனதில்லை.

                    ஆனாலும் அண்ணா அறிவகம் மாதிரி ஒரு வாசிகசாலையை இன்னமும் காணவில்லை.அனேகமாக சுவியருக்கு இந்த வாசிகசாலையும் இடங்களும் நன்கு தெரிந்திருக்கலாம்.

  • Like 19
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியனின்... மலரும் நினைவுகளை வாசித்து மகிழ்ச்சி அடைந்தோம்.

65 சதத்துக்கு... 👍🏼 007 ஜேம்ஸ் பொண்ட் படம், அருமையான காலம். 😁

கஸ்தூரியார் வீதிக்கும், பிரவுண் வீதிக்கும் இடையில் உள்ள பிள்ளையார்  கோவில் குளத்தின்  அருகில் உள்ள வாசிகசாலையை குறிப்பிடுகின்றீர்கள் என நினைகின்றேன். 

அரச மரத்தின் கீழ்... அழகான சூழலில் அமைந்துள்ள வாசிகசாலை அது. 

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியனின்... மலரும் நினைவுகளை வாசித்து மகிழ்ச்சி அடைந்தோம்.

65 சதத்துக்கு... 👍🏼 007 ஜேம்ஸ் பொண்ட் படம், அருமையான காலம். 😁

கஸ்தூரியார் வீதிக்கும், பிரவுண் வீதிக்கும் இடையில் உள்ள பிள்ளையார்  கோவில் குளத்தின்  அருகில் உள்ள வாசிகசாலையை குறிப்பிடுகின்றீர்கள் என நினைகின்றேன். 

அரச மரத்தின் கீழ்... அழகான சூழலில் அமைந்துள்ள வாசிகசாலை அது. 

ஆமாம் சிறி பக்கத்தில் ஒரு கோவில் இருந்தது.சிறிய வாசிகசாலை நிறைய புத்தகங்கள்.ஒரு காலத்தில் படம் அங்கு இங்கு சுற்றுவதை விட வாசிகசாலையே சரண்.
நீங்களும் உலா வந்திருக்கிறீர்களோ?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியனின்... மலரும் நினைவுகளை வாசித்து மகிழ்ச்சி அடைந்தோம்.

65 சதத்துக்கு... 👍🏼 007 ஜேம்ஸ் பொண்ட் படம், அருமையான காலம். 😁

கஸ்தூரியார் வீதிக்கும், பிரவுண் வீதிக்கும் இடையில் உள்ள பிள்ளையார்  கோவில் குளத்தின்  அருகில் உள்ள வாசிகசாலையை குறிப்பிடுகின்றீர்கள் என நினைகின்றேன். 

அரச மரத்தின் கீழ்... அழகான சூழலில் அமைந்துள்ள வாசிகசாலை அது. 

எல்லாருக்கும் விளங்கிற மாதிரி.....நீராவியடிப் பிள்ளையார் கோயில் எண்டு சொன்னால் என்னவாம்?

நாங்கள் எங்களுக்குள்ள கலரி எண்டு சொன்னால் கெளரவப் பிரச்சனை எண்டு சொல்லிக் காந்திக் கிளாஸ் என்று தான் எங்களுக்குள் அழைத்துக் கொள்வோம்!


ஈழப்பிரியன்...அனுபவங்களைக் கொஞ்சம் நீட்டினால் என்ன?😄

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆமாம் சிறி பக்கத்தில் ஒரு கோவில் இருந்தது.சிறிய வாசிகசாலை நிறைய புத்தகங்கள்.ஒரு காலத்தில் படம் அங்கு இங்கு சுற்றுவதை விட வாசிகசாலையே சரண்.
நீங்களும் உலா வந்திருக்கிறீர்களோ?

வாசிகசாலைக்கு.... உள்ளே போய் பார்க்கவில்லை ஈழப்பிரியன்.

சிறிய வகுப்பு படிக்கும் போது... அந்த ஒழுங்கையால்தான் பாடசாலைக்கு வருவோம்.

நாங்கள்,  😁 சாமத்தியப் பட்டாப் பிறகு...‼️ சைக்கிள் வாங்கித் தந்த பின்,

இந்து மகளிர் கல்லூரி இருக்கும், அரசடி வீதியை பாடசாலைக்கு வரும் வழியாக பாவிக்க தொடங்கி விட்டோம். 😂

16 minutes ago, புங்கையூரன் said:

எல்லாருக்கும் விளங்கிற மாதிரி.....நீராவியடிப் பிள்ளையார் கோயில் எண்டு சொன்னால் என்னவாம்?

நாங்கள் எங்களுக்குள்ள கலரி எண்டு சொன்னால் கெளரவப் பிரச்சனை எண்டு சொல்லிக் காந்திக் கிளாஸ் என்று தான் எங்களுக்குள் அழைத்துக் கொள்வோம்!


ஈழப்பிரியன்...அனுபவங்களைக் கொஞ்சம் நீட்டினால் என்ன?😄

புங்கை.... இப்ப இங்கை, விடிய மூண்டு மணி.

நித்திரை தூக்கத்திலை... நீராவியடி பிள்ளையார், உடனே  நினைவிலை வர மாட்டன் எண்டுட்டார். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்களும் நம்மாளுதான், நன்றி பழைய நினைகவுகளை பகிர்ந்த திற்கு.

பள்ளியை கட் பண்ணி சுத்தவதில் தனி சுகம், அதுவும் ஒரு நண்பன் கிடைத்துவிட்டால் சொல்லி வேலையில்லை,

6ம் வகுப்பில் நானும் எனது நண்பனும் ஆறு மாத த்துக்கு மேல் பள்ளி பஸ் தரிப்பிடத்தில் இறக்கி திரும்ப வீடு வரை நடைதான், வரும் வழியில் ஒரே சுற்றலும் & பம்பலும் தான்.

யாரோ கண் வைக்க எங்கள் சொந்த காரா அண்ணாவிடம் அகப்பட்டு வீட்டில் நடந்த பூசையை மறக்க முடியாது😢, அதன்பின் பலத்த கறுப்பு பூனைகளின் பாதுகாப்பில் தான் பள்ளி செல்வது 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக "செங்கை ஆழியான்" அவர்களின் வீட்டோடு சேர்ந்த வாசிகசாலை. நான் அங்கு நிரந்தர உறுப்பினர். அங்கிருந்துதான் ஏராளமான புத்தகங்கள் எடுத்து வாசித்தனான். எனது வீட்டுக்கு அருகில்தான் அது இருந்தது. அவரது மனைவியும் இந்து மகளிர் பாடசாலையில் ஆசிரியை என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னால் லிங்கம் அரவை மில் இருந்தது. அதனால் அடிக்கடி அரிசி, தூள் அரைக்க போகும்போது அந்த நூலகத்துக்கு போய் அதுவே வழக்கமாகி விட்டது...... முன்பு புதுப்படம் 65 சதம். பழைய படம் 35 சதம். கூட ஒரு 10 சதம் இருந்தால் நல்ல தேநீருடன் ஒரு வடை,சுசியும்,பகோடா,போண்டா எதோ ஒன்று வாங்கி சாப்பிட முடியும்....... நல்லதொரு நினைவு மீட்டல் பிரியன்......!  😁

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

நீங்கள் சொல்வது நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக "செங்கை ஆழியான்" அவர்களின் வீட்டோடு சேர்ந்த வாசிகசாலை. நான் அங்கு நிரந்தர உறுப்பினர். அங்கிருந்துதான் ஏராளமான புத்தகங்கள் எடுத்து வாசித்தனான். எனது வீட்டுக்கு அருகில்தான் அது இருந்தது. அவரது மனைவியும் இந்து மகளிர் பாடசாலையில் ஆசிரியை என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னால் லிங்கம் அரவை மில் இருந்தது. அதனால் அடிக்கடி அரிசி, தூள் அரைக்க போகும்போது அந்த நூலகத்துக்கு போய் அதுவே வழக்கமாகி விட்டது...... முன்பு புதுப்படம் 65 சதம். பழைய படம் 35 சதம். கூட ஒரு 10 சதம் இருந்தால் நல்ல தேநீருடன் ஒரு வடை,சுசியும்,பகோடா,போண்டா எதோ ஒன்று வாங்கி சாப்பிட முடியும்....... நல்லதொரு நினைவு மீட்டல் பிரியன்......!  😁

ஒரு ரூபாய் இருந்தால் மொக்கங் மன்னிக்கவும், ஹமீதியா கபேயில எட்டுப் புட்டும் (நாற்பது சதம்), ஒரு குறுமாவும் ( அறுபது சதம்) சாப்பிடலாம்!

ஆணம் இலவசம்! இடைகிடை மொக்கனைக் கூப்பிட்டு அலுப்படிச்சால்...அவரது மூளை தாங்காது! வெளியால வரேக்குள்ள...அண்ணை எவ்வளவு?

தம்பி...ஒரு ரூபாய்..!😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.....அந்த ஆணமும் றோஸ்சும் என்ன சுவை..... நினைக்கும்போது இப்பவும் நாவில் நிக்குது.....!  👍

Link to comment
Share on other sites

மலரும் நினைவுகள் எப்பவுமே அருமையாக இருக்கும். ஈழப்பிரியன் அண்ணாவின் நினைவுகளும் அப்படியே

அது சரி ஜேம்ஸ் பொன்ட் படம் என்றால் வயது வந்தவர்களுக்குரிய படமாக இருந்திருக்குமே?
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

எல்லாருக்கும் விளங்கிற மாதிரி.....நீராவியடிப் பிள்ளையார் கோயில் எண்டு சொன்னால் என்னவாம்?

 

4 hours ago, suvy said:

நீங்கள் சொல்வது நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக "செங்கை ஆழியான்" அவர்களின் வீட்டோடு சேர்ந்த வாசிகசாலை.

இருவரும் என்னை பிழையான வாசிகசாலைக்கு கூட்டி செல்கிறீர்கள்.பள்ளிக்கு பேரூந்தில் வர தொடங்கிய காலத்தில் இருந்து (யாழ்-கோப்பாய் ரூட்) ஆனைப்பந்தியில் இறங்கி நாலவர்வீதி பிரவுண்வீதி நீராவியடிப் பிள்ளையார் கோவிலடி ஊடாகவே நடந்து பள்ளிக்குப் போவோம்.

நான் சொன்ன வாசிகசாலை கன்னாதிட்டி பக்கமாக உள்ள வாசிகசாலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நான் கூட தோழர் ஏதோ அலுவல் காரணமா சென்னையில் உள்ள தீம்கா ஒபீஸ் உள்ள போயிட்டார் ..என உள்ள வந்தனன்..

மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் தோழர்..👍

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

ஒரு ரூபாய் இருந்தால் மொக்கங் மன்னிக்கவும், ஹமீதியா கபேயில எட்டுப் புட்டும் (நாற்பது சதம்), ஒரு குறுமாவும் ( அறுபது சதம்) சாப்பிடலாம்!

ஆணம் இலவசம்! இடைகிடை மொக்கனைக் கூப்பிட்டு அலுப்படிச்சால்...அவரது மூளை தாங்காது! வெளியால வரேக்குள்ள...அண்ணை எவ்வளவு?

தம்பி...ஒரு ரூபாய்..!😄

மதியநேர சாப்பாட்டு பொதியுடன் பிளவுஸ் வரை போய் றோஸ் வாங்கி(10 சதம்)சாப்பிட்டிருக்கிறேன்.இன்றுவரை எப்படி ஒரு றோஸ் சாப்பிட்டதில்லை.

4 hours ago, புங்கையூரன் said:

ஒரு ரூபாய் இருந்தால் மொக்கங் மன்னிக்கவும், ஹமீதியா கபேயில எட்டுப் புட்டும் (நாற்பது சதம்), ஒரு குறுமாவும் ( அறுபது சதம்) சாப்பிடலாம்!

ஆணம் இலவசம்! இடைகிடை மொக்கனைக் கூப்பிட்டு அலுப்படிச்சால்...அவரது மூளை தாங்காது! வெளியால வரேக்குள்ள...அண்ணை எவ்வளவு?

தம்பி...ஒரு ரூபாய்..!😄

மொக்னிடம் அடிக்கடி சாப்பிட்டிருக்கிறேன்.
புட்டும் ரசமும் சாப்பிட்டாலே தனிசுவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

அட நீங்களும் நம்மாளுதான், நன்றி பழைய நினைகவுகளை பகிர்ந்த திற்கு.

பள்ளியை கட் பண்ணி சுத்தவதில் தனி சுகம், அதுவும் ஒரு நண்பன் கிடைத்துவிட்டால் சொல்லி வேலையில்லை,

6ம் வகுப்பில் நானும் எனது நண்பனும் ஆறு மாத த்துக்கு மேல் பள்ளி பஸ் தரிப்பிடத்தில் இறக்கி திரும்ப வீடு வரை நடைதான், வரும் வழியில் ஒரே சுற்றலும் & பம்பலும் தான்.

யாரோ கண் வைக்க எங்கள் சொந்த காரா அண்ணாவிடம் அகப்பட்டு வீட்டில் நடந்த பூசையை மறக்க முடியாது😢, அதன்பின் பலத்த கறுப்பு பூனைகளின் பாதுகாப்பில் தான் பள்ளி செல்வது 🤣

ஊரில ஒரு பிரச்சனை சின்னன் சிறிசுகள் ஏதாவது குழப்படி என்றால் அப்பா அம்மா வீட்டுக்காரருக்கு மட்டுமல்ல ஊரவனுக்கே பதில் சொல்ல வேண்டும்.
தெருவீதிகளில் வைத்து சாத்தியும் விட்டுடுவாங்கள்.

1 hour ago, நிழலி said:

அது சரி ஜேம்ஸ் பொன்ட் படம் என்றால் வயது வந்தவர்களுக்குரிய படமாக இருந்திருக்குமே?

இது தவறான எண்ணம்.
ஜேம்ஸ் பாண்ட் படங்கள் அப்படியான படங்கள் இல்லை.

12 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அட நான் கூட தோழர் ஏதோ அலுவல் காரணமா சென்னையில் உள்ள தீம்கா ஒபீஸ் உள்ள போயிட்டார் ..என உள்ள வந்தனன்..

மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் தோழர்..👍

உலகத்தில் பல இடங்களுக்குப் போயிருந்தும் இதுவரை இந்தியா போகவில்லை.
சுகமாக இருந்தால் மனைவியை கோவில்குளம் என்று அழைத்துப் போக விருப்பம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதிலிருந்து அது கன்னாதிட்டி சந்தி.(நகைக்கடைகள் அதிகம் இருக்கும்). அதில் இடது பக்கம் போனால் ஒரு அம்மன் கோவிலும் அதன் வீதியில் ஒரு மோட்டர் சைக்கிள் கராஜ்சும் (அப்பாமணியின் கராஜ், மகன்மார் நடத்தினவை) இருக்கு அதன் அருகில் என்று நினைக்கிறேன்.நான் அங்கு போனதில்லை......!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, suvy said:

நீங்கள் சொல்வதிலிருந்து அது கன்னாதிட்டி சந்தி.(நகைக்கடைகள் அதிகம் இருக்கும்). அதில் இடது பக்கம் போனால் ஒரு அம்மன் கோவிலும் அதன் வீதியில் ஒரு மோட்டர் சைக்கிள் கராஜ்சும் (அப்பாமணியின் கராஜ், மகன்மார் நடத்தினவை) இருக்கு அதன் அருகில் என்று நினைக்கிறேன்.நான் அங்கு போனதில்லை......!

ஆமாம் சுவி பள்ளியில் இருந்து யாழ் நோக்கி போகும் போது நகைக்கடைகள் தொடங்குமிடத்தில் இடதுபக்கமாக 100-200 மீற்றர் போனால் இடதுகை பக்கமாக வாசிகசாலை வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா அறிவாலயம் நல்லதொரு நினைவூட்டல்.

நான் தான் இப்பிடியெண்டு பாத்தால் என்னோடை வந்து சேர்ந்ததுகள் என்னை விட மோசமாய் கிடக்கு....:379:

பள்ளிக்கூடத்தை கட் அடிச்சு தியேட்டர் ,கடைச்சாப்பாடு,வீட்டிலை காசு களவெடுப்பு......இன்னும் இரண்டு விசயங்கள் வெளியிலை வரவேணுமே???????? :thinking_face: :406:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அட நான் கூட தோழர் ஏதோ அலுவல் காரணமா சென்னையில் உள்ள தீம்கா ஒபீஸ் உள்ள போயிட்டார் ..என உள்ள வந்தனன்..

யோவ் புரட்சியர்! உது ஆகலும் ஓவர் யா...😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நான் தான் இப்பிடியெண்டு பாத்தால் என்னோடை வந்து சேர்ந்ததுகள் என்னை விட மோசமாய் கிடக்கு..

வீட்டுக்கு வீடு வாசல்படி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2021 at 08:57, ஈழப்பிரியன் said:

சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.

இப்படியான உதவிகள் நண்பர்கள் தான் செய்வார்கள் அதுதான் நண்பேன்டா என்று சொல்லுயினம் போல

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இப்படியான உதவிகள் நண்பர்கள் தான் செய்வார்கள் அதுதான் நண்பேன்டா என்று சொல்லுயினம் போல

உயிரும் கொடுப்பான் தோழன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதிவு இவ்வ்ளவு நாடகளாக என் கண்ணில் படவில்லை .தாமதத்துக்கு மன்னிக்கவும். இளமைக் கால நினைவுகளை அசைபோடுவது மீண்டும் பள்ளிக்குப்போவது போல .தொடர்ந்தும் உங்கள்  நினைவுகளை அசை போடுங்கள். 
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிலாமதி said:

இப்பதிவு இவ்வ்ளவு நாடகளாக என் கண்ணில் படவில்லை .தாமதத்துக்கு மன்னிக்கவும். இளமைக் கால நினைவுகளை அசைபோடுவது மீண்டும் பள்ளிக்குப்போவது போல .தொடர்ந்தும் உங்கள்  நினைவுகளை அசை போடுங்கள். 
 

யாழ் இந்துக் கல்லூரி ஆண்கள் கல்லூரி என்றபடியால் உங்கள் கண்களில் படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2021 at 22:47, குமாரசாமி said:

இன்னும் இரண்டு விசயங்கள் வெளியிலை வரவேணுமே???????? :thinking_face: :406:

கொக்குவில்  பல்தொழில்நுட்ப்பக்கல்லுரிக்கு. எதிர் பக்கத்தில் 150-200  மீற்றர். தள்ளி  பிலாவில் தண்ணீர்  குடிதது விட்டு  வீட்டைபோகும்போது ,வீட்டில்  மணம் தெரியாமால் இருப்பதாற்க்காக. வழியிலுள்ள பூவரசமிலையை நன்றாக சப்பி துப்பியதை எழுத மறந்து போனார். எனவே ஈழப்பிரியனுக்காக நான் பதிந்துள்ளேன்.

மற்றதுயென்ன? நண்பனுக்காக கடிதம் கொடுக்க மாதக்கணக்கில் சந்தர்ப்பம் கடைக்காமால் , நண்பனே சந்தேகம் கொண்டு ..அட ..அட..காயை இவன மடக்கப் பார்க்கிறனே என்று  நல்ல நட்பை இழந்திருப்பார்...😎

Just now, Kandiah57 said:

கொக்குவில்  பல்தொழில்நுட்ப்பக்கல்லுரிக்கு. எதிர் பக்கத்தில் 150-200  மீற்றர். தள்ளி  பிலாவில் தண்ணீர்  குடிதது விட்டு  வீட்டைபோகும்போது ,வீட்டில்  மணம் தெரியாமால் இருப்பதாற்க்காக. வழியிலுள்ள பூவரசமிலையை நன்றாக சப்பி துப்பியதை எழுத மறந்து போனார். எனவே ஈழப்பிரியனுக்காக நான் பதிந்துள்ளேன்.

மற்றதுயென்ன? நண்பனுக்காக கடிதம் கொடுக்க மாதக்கணக்கில் சந்தர்ப்பம் கடைக்காமால் , நண்பனே சந்தேகம் கொண்டு ..அட ..அட..காயை இவன மடக்கப் பார்க்கிறனே என்று  நல்ல நட்பை இழந்திருப்பார்...😎

கிடைக்காமால்

  • Haha 3
Link to comment
Share on other sites

ஈழப்பிரியன் உங்கள் இளமைகால நினைவுகள் அருமை.  சிறப்பாக அதை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். நீராவியடி அதை சுற்றி வர இருக்கும் இடங்கள் யாழ் இந்துக்கல்லூரியின் சுற்றாடல் எனது பாடசாலை நினைவுகளையும் மீட்டிப்பார்க்க வைத்துவிட்டது. தமிழ்சிறியின் அனுபவம் எமக்கும் உண்டு என்றாலும் அவரை போல போகும் பாதையை மாற்ற வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படவில்லை. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
    • இவ‌ர் சொல்வ‌தை கேலுங்கோ.......................... உத்திர‌பிர‌தேஸ்சில் 24  கோடி ம‌க்க‌ளுக்கு மேல் வ‌சிக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌வீத‌ம் / புரிய‌ல‌.....................
    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.