Jump to content

என்ஜாய்... என்ஜாமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குக்கூ குக்கூ

தாத்தா தாத்தா கல வெட்டி

குக்கூ குக்கூ

பொந்துல யாரு மீன்கொத்தி

குக்கூ குக்கூ

தண்ணியில் ஓடும் தவளைக்கி

குக்கூ குக்கூ

கம்பளிப்பூச்சி தங்கச்சி

அல்லி மலர் கொடி அங்கதமே

ஒட்டார ஒட்டார சந்தனமே

முல்லை மலர் கொடி முத்தாரமே

எங்கு ஊரு எங்கு ஊரு குத்தாலமே

சுருக்கு பை யம்மா

வெத்தல மட்டை அம்மா

சொமந்த கை அம்மா

மத்தளம் கொட்டு யம்மா

தாயம்மா தாயம்மா

என்ன பண்ண மாயம்மா

வள்ளியம்மா பேராண்டி

சங்கதியை குறேன்டி

கண்ணாடியை காணம்டி

இந்தாரா பேராண்டி

அன்னக்கிளி அன்னக்கிளி

அடி ஆல மரக்கிளை வண்ண கிளி

நல்லபடி வாழச் சொல்லி

இந்த மண்ணை கொடுத்தானே பூர்வகுடி

கம்மாங்கர காணி எல்லாம்

பாடி திரிஞ்சானே ஆதிக்குடி

நாயி நரி பூனைக்கும் தான்

இந்த ஏரி குளம் கூட சொந்தமடி

என்ஜாய்... என்ஜாமி

வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்மாயி அம்பாரி

இந்தா இந்தா மும்மாரி


என்ஜாய்... என்ஜாமி

வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்மாயி அம்பாரி

இந்தா இந்தா மும்மாரி


குக்கூ குக்கூ

முட்டைய போடும் கோழிக்கு

குக்கூ குக்கூ

ஒப்பனை யாரு மயிலுக்கு

குக்கூ குக்கூ

பச்சைய பூசும் பாசிக்கு

குக்கூ குக்கூ

குச்சிய அடுக்குன கூட்டுக்கு

பாடுபட்ட மக்கா

வரப்பு மேட்டுக்காரா

வேர்வ தண்ணி சொக்கா

மினுக்கும் நாட்டுக்காரா

அகதி கருப்பட்டி

ஊதாங்குழு மண்ணு ச்சட்டி

ஆத்தோரம் கூடு கட்டி

ஆரம்பிச்ச நாகரீகம்

ஜன் ஜன ஜன க்கு ஜக்க மக்களே

உப்புச் சப்பு கொட்டு

முட்டைக்குள்ள சத்து கொட்டு

அட்டைக்கு ரத்தம் கொட்டு

கிட்டிபுள்ளு வெட்டு வெட்டு

நா அஞ்சு மரம் வளர்த்தேன்

அழகான தோட்டம் வச்சேன்

தோட்டம் செழிச்சாலும்

என் தொண்டை நனைய லையே

என் கடலே...கரையே...

வனமே... சனமே...

நெலமே... கொளமே...

எடமே... தடமே...


என்ஜாய்... என்ஜாமி

வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்மாயி அம்பாரி

இந்தா இந்தா மும்மாரி

என்ஜாய்... என்ஜாமி

வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்மாயி அம்பாரி

இந்தா இந்தா மும்மாரி


பாட்டன் பூட்டன் காத்த பூமி

ஆட்டம் போட்டுக் காட்டும் சாமி

ராட்டினம் தான் சுத்தி வந்தா

சேவ கூவிச்சி

அது போட்டு வச்ச எச்சம் தானே

காடா மாறிச்சு 

நம்ம நாடா மாறிச்சு

இந்த வீடா மாறிச்சு

என்ன கொற என்ன கொற

என் சீனி கரும்புக்கு என்ன கொற

என்ன கொற என்ன கொற

என் செல்ல பேராண்டி க்கு 

என்ன கொற

பந்தலிலே பாவக்கா

பந்தலிலே பாவக்கா

வெதக் கல்லு விட்டு இருக்கு

வெதக் கல்லு விட்டு இருக்கு

அப்பன் ஆத்தா விட்டது ங்க

அப்பன் ஆத்தா விட்டது ங்க

ஆ...ஆ...ஆ..

என்ஜாய்... என்ஜாமி

வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்மாயி அம்பாரி

இந்தா இந்தா மும்மாரி


என்ஜாய்... என்ஜாமி

வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்மாயி அம்பாரி

இந்தா இந்தா மும்மாரி


என்ஜாய்... என்ஜாமி

வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்மாயி அம்பாரி

இந்தா இந்தா மும்மாரி


என்ஜாய்... என்ஜாமி

வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்மாயி அம்பாரி

இந்தா இந்தா மும்மாரி


என் கடலே...கரையே...

வனமே... சனமே...

நெலமே... கொளமே...

எடமே... தடமே...

குக்கூ குக்கூ....

200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து இலங்கை தேயிலைத் தோட்டம் உருவாக்க பிரிட்டிஷ் காரர்களால் பலவந்தமாக கூலி தொழிலுக்கு கொண்டுவரப்பட்ட மலையக மக்கள் பற்றியும், இரண்டு மூன்று தலைமுறை வாழ்ந்த அம்மக்களை எப்படி அரசியல் அனாதைகள் ஆக்கி நாடு அற்றவர்களாக இலங்கையிலிருந்து  விரட்டி விடப்பட்ட எம் மக்கள் பற்றிய பாடல் தான் இது.

பாடல் வெளியிடப்பட்ட சுமார் ஒரு வாரத்துக்குள் 29 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி வைரலாகி வரும் பாடல்.

பாடல் பாடியும், பாடலை எழுத உதவியவருமான அறிவு (அறிவரசு காலைநேசன்) இலங்கையில் இருந்து நாடற்றவராக முத்திரை பதிக்கப்பட்டு அவர்களின் நிலத்தில் இருந்து பெயர்க்கப்பட்டு இந்தியாவுக்கே நாடு கடத்தப்பட்ட  மலையக வம்சாவளியான வள்ளியம்மா பாட்டியின் பேரன்.

பாடலை பாடிய பாடகி (Dhee) தீக்க்ஷிதா வெங்கடேசன் இவரும் கூட இலங்கை பின்புலத்தை கொண்டவர். 
மாஜா   இசை வெளியீட்டு நிறுவனம் - கனடா வாழ் ஈழத்து தமிழர் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம். இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் ஆதரவோடு இயங்கும் நிறுவனம்.
 
இந்த பாடலுக்கு இசை, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஈழத்து பெண்ணை மணந்து பாடகி   தீக்க்ஷிதா அவர்களின் அப்பாவாகவும் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி சசிவர்ணம்........அழகான இசையுடன் கூடிய பாடல்........!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Sasi_varnam said:

இந்த பாடலுக்கு இசை, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஈழத்து பெண்ணை மணந்து பாடகி   தீக்க்ஷிதா அவர்களின் அப்பாவாகவும் இருக்கிறார்.

தகவலுக்கும் இணைப்புக்கும் நன்றி சசி.

Link to comment
Share on other sites

என்ஜாய்... என்ஜாமி பாடல் ஆசிரியர் அறிவு  தம்பிகளையும், சங்கிகளையும் வைத்து செஞ்ச பாடல்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, arjun said:

தீக்சிதா எனது சங்கீத ஆசிரியரின் பூட்டி😉 

நல்வரவு அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, arjun said:

தீக்சிதா எனது சங்கீத ஆசிரியரின் பூட்டி😉 

ஹாய்.....  அர்ஜுன்.. வணக்கம்ஸ்.... 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொந்துல, யாரு... மீன்கொத்தி...

தண்ணியில் ஓடும்,  தவளைக்கி...

கம்பளிப்பூச்சி, தங்கச்சி... 💓 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, arjun said:

தீக்சிதா எனது சங்கீத ஆசிரியரின் பூட்டி😉 

என்னது உங்களுக்கு சங்கீதமும் தெரியுமா?  
ஆரோகண அவரோகணத்திலை இரண்டை இழுத்து விடுறது?😁

மீண்டும் கண்டதில் சந்தோசம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, arjun said:

தீக்சிதா எனது சங்கீத ஆசிரியரின் பூட்டி😉 

கடைசியா சிங்கத்தை என்ஜோய் எஞ்சாமி கொண்டு வந்து இறக்கி இருக்கு சந்தோசம். 👍:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, arjun said:

தீக்சிதா எனது சங்கீத ஆசிரியரின் பூட்டி😉 

உங்களைக் கண்டது மிகவும் சந்தோசம் arjun .........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, arjun said:

தீக்சிதா எனது சங்கீத ஆசிரியரின் பூட்டி😉 

வருகைக்கு நன்றி 👋.இப்படியே இருந்தால் சந்தோஷம் அண்ணா.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைக் கண்டது மிகவும் சந்தோசம்

Link to comment
Share on other sites

யாழுக்கு திரும்பி செல்வோம்  என்று பல முறை நினத்ததுண்டு ,எனக்கு ஏற்பட்ட மனதாங்கலை  விட நேரத்தை மீண்டும் போய் அதிக நேரம் யாழில் செலவழித்து விடுவேன் என்ற பயம் தான் யாழுக்கு திரும்பாமல் என்னை தடுத்தது .சில உறவுகள் திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நேற்று ஒருவர் திரும்ப திரும்ப கேட்க சில மாதங்களின் யாழை திறந்து பார்த்தேன் .பல மாற்றங்கள் பார்க்க ஏதோ எனது பழைய வீட்டிற்கு சென்ற உணர்வு .

சசி, இந்த பாடலை வேறு இணைத்திருந்தார் .நான் சங்கீதம் படிக்கவில்லை ஆனால் நாலாம் வகுப்பில் சங்கீதம் ஒரு பாடம். அந்த ஆசிரியையின் பூட்டி தான் இந்த பாடகி.எனது அம்மாவும் அதே பாடசாலையில் ஆசிரியராக இருந்தததால் குடும்ப சிநேகிதம் மாதிரி.டீச்சரின் பிள்ளைகள் தொடர்பில் இருக்கின்றார்கள்.  டிச்சரின் மகள் பவானி ,பவானியின் மகள் மீனாட்சி ,மீனாட்சியின் மகள் தான் இவர் .இவர்கள் எவருடனும்  தொடர்பில் இல்லை .

உறவுகளுக்கு நன்றி .நேரம் கிடைக்கும் போது இடைக்கிடை வந்து கிறுக்குகின்றேன் ,முடிந்தால் இந்த இடைவெளியில் முகப்புத்தகத்தில் கிறுக்கியவற்றை இணைத்துவிடுகின்றேன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, arjun said:

உறவுகளுக்கு நன்றி .நேரம் கிடைக்கும் போது இடைக்கிடை வந்து கிறுக்குகின்றேன் ,முடிந்தால் இந்த இடைவெளியில் முகப்புத்தகத்தில் கிறுக்கியவற்றை இணைத்துவிடுகின்றேன் .

நீண்ட காலத்தின் பின் கண்டது மகிழ்ச்சி.
தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2021 at 19:24, arjun said:

யாழுக்கு திரும்பி செல்வோம்  என்று பல முறை நினத்ததுண்டு ,எனக்கு ஏற்பட்ட மனதாங்கலை  விட நேரத்தை மீண்டும் போய் அதிக நேரம் யாழில் செலவழித்து விடுவேன் என்ற பயம் தான் யாழுக்கு திரும்பாமல் என்னை தடுத்தது .சில உறவுகள் திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நேற்று ஒருவர் திரும்ப திரும்ப கேட்க சில மாதங்களின் யாழை திறந்து பார்த்தேன் .பல மாற்றங்கள் பார்க்க ஏதோ எனது பழைய வீட்டிற்கு சென்ற உணர்வு .

சசி, இந்த பாடலை வேறு இணைத்திருந்தார் .நான் சங்கீதம் படிக்கவில்லை ஆனால் நாலாம் வகுப்பில் சங்கீதம் ஒரு பாடம். அந்த ஆசிரியையின் பூட்டி தான் இந்த பாடகி.எனது அம்மாவும் அதே பாடசாலையில் ஆசிரியராக இருந்தததால் குடும்ப சிநேகிதம் மாதிரி.டீச்சரின் பிள்ளைகள் தொடர்பில் இருக்கின்றார்கள்.  டிச்சரின் மகள் பவானி ,பவானியின் மகள் மீனாட்சி ,மீனாட்சியின் மகள் தான் இவர் .இவர்கள் எவருடனும்  தொடர்பில் இல்லை .

உறவுகளுக்கு நன்றி .நேரம் கிடைக்கும் போது இடைக்கிடை வந்து கிறுக்குகின்றேன் ,முடிந்தால் இந்த இடைவெளியில் முகப்புத்தகத்தில் கிறுக்கியவற்றை இணைத்துவிடுகின்றேன் .

 

அர்ஜுன் அண்ணரை மனசில் வைத்து அறிவு / தீ  ஸ்டைலில் சில RAP வரிகள்..😉 🙏

டீச்சரின் மகள் பவானி
பவானியின் மகள் மீனாட்சி 
ஏய் என்னடி மீனாச்சி 
நீ சொன்னது என்னாச்சு  
என்ன விட்டு புட்ட 
ஒண்ண கட்டிக்கிட்ட
ரெண்ட பெத்துகிட்ட
இப்ப குறு-வட்டை 
நீ வெளியிட்ட ...
நான் 5 சுரம் படிச்சேன் 
அழகாக சாதகஞ் சொன்னேன் 
தொண்டை கரைஞ்சாலும் 
என் சண்ட முடியலேயே 

என் கடையே ..
என் வடையே...
என் குடையே 
என் விடையே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2021 at 23:24, arjun said:

உறவுகளுக்கு நன்றி .நேரம் கிடைக்கும் போது இடைக்கிடை வந்து கிறுக்குகின்றேன் ,முடிந்தால் இந்த இடைவெளியில் முகப்புத்தகத்தில் கிறுக்கியவற்றை இணைத்துவிடுகின்றேன் .

மீண்டும் கண்டதில்  பெருமகிழ்ச்சி உங்களின் நித்திரை வரா இரவுகளின் தீவிர வாசகன் அதை இங்கு இணைத்தால் இன்னும் சந்தோசம் .

9 hours ago, Sasi_varnam said:

அர்ஜுன் அண்ணரை மனசில் வைத்து அறிவு / தீ  ஸ்டைலில் சில RAP வரிகள்..😉 🙏

டீச்சரின் மகள் பவானி
பவானியின் மகள் மீனாட்சி 
ஏய் என்னடி மீனாச்சி 
நீ சொன்னது என்னாச்சு  
என்ன விட்டு புட்ட 
ஒண்ண கட்டிக்கிட்ட
ரெண்ட பெத்துகிட்ட
இப்ப குறு-வட்டை 
நீ வெளியிட்ட ...
நான் 5 சுரம் படிச்சேன் 
அழகாக சாதகஞ் சொன்னேன் 
தொண்டை கரைஞ்சாலும் 
என் சண்ட முடியலேயே 

என் கடையே ..
என் வடையே...
என் குடையே 
என் விடையே....

நன்றி சசி வர்ணம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

மீண்டும் கண்டதில்  பெருமகிழ்ச்சி உங்களின் நித்திரை வரா இரவுகளின் தீவிர வாசகன் அதை இங்கு

நானும் நித்திரை வரா இரவுகளின் ரசிகன்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Sasi_varnam said:

அர்ஜுன் அண்ணரை மனசில் வைத்து அறிவு / தீ  ஸ்டைலில் சில RAP வரிகள்..😉 🙏

டீச்சரின் மகள் பவானி
பவானியின் மகள் மீனாட்சி 
ஏய் என்னடி மீனாச்சி 
நீ சொன்னது என்னாச்சு  
என்ன விட்டு புட்ட 
ஒண்ண கட்டிக்கிட்ட
ரெண்ட பெத்துகிட்ட
இப்ப குறு-வட்டை 
நீ வெளியிட்ட ...
நான் 5 சுரம் படிச்சேன் 
அழகாக சாதகஞ் சொன்னேன் 
தொண்டை கரைஞ்சாலும் 
என் சண்ட முடியலேயே 

என் கடையே ..
என் வடையே...
என் குடையே 
என் விடையே....

சூப்பர் சசி வர்ணம்......!   👏

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

 

பெட்டை நல்ல வடிவு, எமோசனும் அப்படியே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

பெட்டை நல்ல வடிவு, எமோசனும் அப்படியே

எந்த பெட்டைய சொன்ன நீங்கள் ??😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

பெட்டை நல்ல வடிவு, எமோசனும் அப்படியே

என் பார்வையில்😁 அப்படியொன்றும் தெரியல 

Link to comment
Share on other sites

5 hours ago, நிழலி said:

பெட்டை நல்ல வடிவு, எமோசனும் அப்படியே

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.