Jump to content

தேர்தலை ரகளையாக காட்டிய சினிமாக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை ரகளையாக காட்டிய சினிமாக்கள்!

spacer.png

தமிழகமே பரபரக்கும் தேர்தல் களத்தில் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் இறங்கியிருக்கின்றன. தமிழக தேர்தல் கலாச்சாரத்தை ரகளையோடு காட்சிப் படுத்திய முக்கிய சில படங்களும் இருக்கின்றன. அப்படி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தத் தேர்தல் சினிமாக்களை ஒரு ரிவைண்ட் செய்துவிடலாம்.

அமைதிப்படை

spacer.png

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பொலிட்டிகல் நையாண்டி சினிமா அமைதிப்படை. மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் 1994ல் வெளியானது. தேங்காய் பொறுக்கும் அமாவாசை கையில் ஆட்சி அதிகாரம் வந்தால் ? இதுவே ஒன்லைன். முன்னாள் எம்.எல்.ஏ. மணிவண்னன் மூலமாக அம்மாவாசை எப்படி நாகராஜ சோழன் எம்.எல்.ஏ-வாக மாறுகிறார், அதன்பிறகு நடக்கும் அரசியலை நக்கலாக திரைக்கதையாக்கியிருப்பார் மணிவண்ணன். காட்சிக்கு காட்சி அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் வெளுத்து வாங்கியிருக்கும் அமைதிப்படை. தேர்தல் முடிவு அறிவிக்கும் நேரம், சத்யராஜ் நாற்காலியில் அமரும் காட்சியே ஒட்டுமொத்த படத்துக்குமான ஒற்றை சாம்பிள்.

முதல்வன்

spacer.png

‘ஒரு நாள் நீ முதல்வரா இருந்துப் பாரு, அப்போ தெரியும்? ’ என ஒரு பேச்சுக்கு ரகுவரன் கேட்க, நிஜமாகவே ஒரு நாள் முதல்வராகிவிடுவார் அர்ஜூன். கமர்ஷியலாக செம ஹிட். அரசியல் தலைவர்களின் நேர்காணல்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய படம் முதல்வன். தொலைக்காட்சி கேமிரா மேன் அரசியலுக்கு வந்தால்? தேர்தலில் நின்றால் எப்படியிருக்கும் என பேசியிருக்கும் படம்.

ஆயுத எழுத்து

spacer.png

மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த், த்ரிஷா, மீரா ஜாஸ்மீன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஆயுத எழுத்து. புதுமையான திரைக்கதையுடன் மூன்று கதைகளைச் சொல்லியிருப்பார்கள். மூன்று கதைகளும் மைக்கேலின் (சூர்யா) பொலிட்டிகலில் வந்து சேரும். அரசியலுக்குள் இளம் தலைமுறை வந்தால் எப்படியிருக்கும் என்பதை மையமாகக் கொண்டு படம் உருவாகியிருக்கும். சூர்யாவின் தேர்தல் பிரச்சாரம், வில்லனான மாதவனை சமாளிக்கும் இடம், அரசியல் வாதியாக பாரதிராஜா என கமர்ஷியலாக படம் உருவாகியிருக்கும்.

கோ

spacer.png

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான படம் கோ. தின அஞ்சல் பத்திரிகையாளரில் துவங்கி தீவிரவாதி வரை கதை செல்லும். இது பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர். அஜ்மல் அரசியல் கட்சியைத் துவங்கி, ஆட்சி அதிகாரத்துக்கு வர என்னவெல்லாம் செய்கிறார், அதே ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தீவிரவாதிகளுக்கு உதவுவார். இவற்றையெல்லாம் ஹீரோ ஜீவா எப்படி தடுத்து நிறுத்துகிறார் என கதை நகரும். கே.வி.ஆனந்த் படங்களிலேயே கமர்ஷியல் ஹிட் கொடுத்தப் படங்களில் இதுவும் ஒன்று.

கொடி

spacer.png

தனுஷ், த்ரிஷா நடிப்பில் 2016 தீபாவளிக்கு வெளியான படம் கொடி. அரசியல்வாதியாக வேண்டுமென லட்சியத்துடன் வளர்கிறார்கள் தனுஷூம், த்ரிஷாவும். தனுஷின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத த்ரிஷா, தனுஷைக் கொன்று விடுகிறார். அதனால், தம்பி தனுஷ் அரசியலுக்குள் வருகிறார். அண்ணனைக் கொன்றவர்களை கண்டுபிடிப்பதாக கதை நகரும். கொடி படத்திலும் அரசியல் தேர்தல் களத்தை அழகாகக் காட்டியிருப்பார்கள்.

சர்க்கார்

spacer.png

ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் சர்க்கார். ஜனநாயகத்தைக் கேள்விக் குறியாக்கும் தேர்தல் முறையீடுகளைப் பேசியிருக்கும் படமிது. கார்ப்பரேட் கிரிமினலான விஜய் ஓட்டுப் போட சென்னை வருகிறார். ஆனால், அவரின் ஓட்டை கள்ள ஓட்டுப் போட்டுவிடுகிறார்கள். ஈகோ பற்றிக் கொள்ள அரசியலுக்குள் இறங்குகிறார். அரசியல்வாதிகளுடனான நீயா நானா போட்டி தான் சர்க்கார்.

நோட்டா

spacer.png

விஜய்தேவரகொண்டா தமிழில் அறிமுகமான படம் ‘நோட்டா’. தமிழக முதல்வரான தந்தை நாசர் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்ததால், அரசியலே தெரியாத மகனை முதல்வராக்குகிறார். எதிர்கட்சிகள் சாதகமாக இதைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு கொலையும் நடந்துவிடுகிறது. அரசியலில் கற்றுத் தேர்ந்து, விஜய்தேவரகொண்டா ஸ்கோர் செய்தாரா என்பதே மீதிக் கதை. முதல் நாள் பார்ட்டி பாய், அடுத்த நாளே முதல்வர் எனும் ஒன்லைன் தான் படத்தின் சுவாரஸ்யத்துக்கு காரணம். ரிசார்ட் டீலீங், கறுப்புப் பணம், தற்காலிக முதல்வர் கூத்துகள் மற்றும் ஆஸ்பத்திரி சி.சி.டி.வி என நடப்பு அரசியலைப் படம் பேசியிருக்கும்.

என்.ஜி.கே. 

spacer.png

செல்வராகவனின் அரசியல் படமே என்.ஜி.கே. சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. அரசியலில் சாதிக்க நினைக்கும் நாயகனுக்கு திரும்பும் இடமெல்லாம் சிக்கல். அரசியல்வாதி ஒருவரிடம் எடுபிடியாகச் செல்கிறார் நாயகன் சூர்யா. அதன்பிறகு, பெரிய அரசியல்வாதியாக மாற சூர்யா செய்த வேலைகளே படம். செல்வராகவன் ஸ்டைலில் ஒரு பொலிட்டிகல் படம். இதற்குள் நடப்பு அரசியலையும் இறக்கிவிட்டிருப்பார். ஆனால், படம் பெரிதாக ஒர்க் அவுட் ஆகாவில்லை.
 

 

https://minnambalam.com/entertainment/2021/03/18/25/election-movies

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.