Jump to content

ஊருக்கு உபதேசம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிராமத்திலே சிறந்த  கல்விமான் இருந்தார். முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அவரை பேச அழைப்பது  வழக்கம் .இப்படியாக ஒரு நாள்  மாலை ஒரு கூட்ட்துக்கு அழைப்பு வந்தது அவரும் சென்று தனதுநேரம் வரும் போது  உரையாற்ற தொடங்கினார்.உரையின் இடையே  வாழ்க்கையிலே  உண்மை நேர்மையாக இருக்க வேண்டும் . பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது .  என் பல வாறு பேசினார்.  ஆகா என் கணவர்  நேர்மையானவர்.  தெரியாமல் அற்ப ஆசையில் பக்கத்து வீட்டு சேவலை பிடித்து அடைத்து   வைத்து விட்டார் என்று எண்ணி    இந்தக் கூட்ட்த்துக்கு அவர்மனைவியும்  இவருக்கு தெரியாமல்  என்ன நடக்கிறது என் விடுப்புபார்க்க போயிருந்தார். அவர் வீடு வருவதற்கு முன்பே  இவர் வந்து 

கூடைக்குள் ஒழித்து வைத்த பக்கத்து வீட்டு சேவலை  திறந்து   விட்டு  விடடார் ...சற்று இருள் தொடங்க இவர் வீட்டுக்கு வந்தார் . மனைவியை அழைத்து  வீட்டுக் வேலைக்கார பையனிடம் சொல்லி  அந்த சேவலை  உரித்து  சமைத்து வை  நான் குளித்துவிட்டு வருகிறேன் என்கிறார். 

 மனைவியோ  அலங்க மலங்க விழித்தார் . அடி பேதைப்பெண்ணே ஏன் திருட்டு முழி tட்டு முலை முழிக்கிறாய் ஏன் ஏசினார்.  அவள் அழுகையுடன் நடந்ததை சொன்னாள். கல்விமானுக்கு கோபம்.

குளிக்க சென்று  விடடார் .  பின் இரவு உணவுக்ககாக மேசையில் அமர்ந்தவருக்கு சுடச்சுட   கோழிக்கறி உணவு பரிமாறினார். சாப்பிட்டு ஏப்பம் விடட படி   "எங்கே இருந்து கோழிக்கறி வந்தது" என கேடடார் . அயல் வீட்டு காரர் தமது  ஊர் மேயும் கோழி அடிக்கடி  காணாமல் போகிறது. . இன்று  மாலையில் எங்கிருந்தோ  வந்து விட்ட்து மீண்டும் காணாமல் போக கூடாது என  எண்ணி  சமைத்து தாங்களும் உண்டு எங்களுக்கும் தந்தார்கள். என்றார். கோழிக் கறி  உண்ட களையுடன் உறங்க சென்று விடடார் . அடுத்த நாள் அவர் நல்ல மன நிலையில்  மனைவியிடம் ..".ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி பெண்ணே " என்றார். மனைவி மெல்ல சிரித்தார். அயல் வீட்டுக்கு  பையனை அனுப்பி காசு கொடுத்து  ஒரு கோழியை  சமைத்து தரும் படி கேடட ரகசியம்  மனைவிக்கு மட்டுமே தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.