Jump to content

அதிகரித்த தொலைபேசிப் பாவனையும் மறைக்கப்பட்ட தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரித்த தொலைபேசிப் பாவனையும் மறைக்கப்பட்ட தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும்

 
1-152-696x399.jpg
 61 Views

இன்று எம் அனைவரின் மனங்களிலும் எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் நினைவிருக்கின்றனவா என்பது தெரியவில்லை ஆனால்,

“ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா ”

என்ற பாரதியின் பாடல் வரிகள் நிச்சயமாக நினைவில் இருக்கும். காலத்தால் மறைக்கப்பட்ட எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் இன்று ஒரு தொலைபேசிக்குள் அடங்கி விட்டது. காலை எழுந்ததில் இருந்து இரவு தூக்கத்தை கூட மறந்து தொலைபேசி விளையாட்டுக்களில் மூழ்கிப்போகின்றனர். விடுமுறை தினங்களிலும், மாலை நேரங்களில் தெரு ஓரங்களிலும் வீட்டு முற்றங்களிலும், திண்ணைகளிலும், நண்பர் வீடுகளிலும் பெரியவர்கள் சூழ்ந்திருந்து வேடிக்கை பார்க்க குதூகலமாக விளையாடிய விளையாட்டுக்கள் இன்று வெறும் நினைவுகளாக மட்டுமே ஒவ்வொருவர் மனங்களிலும் காணப்படுகின்றது. இது மட்டுமா திருவிழாக்கள், பண்டிகைகள், திருமண நிகழ்வுகள் என்பவற்றில் பெரியவர்கள் தமது வேலைகளில் ஒரு புறம் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், இன்னொரு புறம் சிறுவர்களின் விளையாட்டு என்பதும் கோலாகலமாக இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கும்.

இன்று விளையாடிய இடங்களும் வெறிச்சோடி விட்டன. கூடி இருந்து வேடிக்கை பார்க்கவும் யாரும் இல்லை. தெரு ஓரங்களில் விளையாடிய விளையாட்டுக்கள் இன்று தொலைபேசிக்குள் திரிபடைந்துவிட்டன. விளையாட்டினை கற்றுக்கொடுக்கும் முதியவர்களும்  முதியோர் இல்லங்களிற்கு அனுப்பப்பட்டுவிடுகின்றனர். இவ்வாறான  எம் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒரு சில கிராமப்புறங்களில் காணப்பட்டாலும் நகர்ப்புறங்களில் பாடப்புத்தகங்களில் காண்பதே அரிதாக மாறிவிட்டது.

குலைகுலையாய் முந்திரிக்கா, கிச்சுக் கிச்சு தாம்பாளம், ஒரு குடம் தண்ணீர் ஊத்தி, கண்ணாமூச்சி ரே ரே, பேணிப்பந்து, கீச்சு மாச்சு தம்பலம், உப்பு மூட்டை, எறி பந்து, எலியும் பூனையும், எட்டுக்கோடு, கிளிக்கோடு, தாயம், திருடன்-பொலிஸ், கோலி, கிட்டிப்புள், பல்லாங்குழி, சடுகுடு என நீண்டு கொண்டு செல்கின்றது எமது பாரம்பரிய விளையாட்டுக்கள்.

ஆலையிலே சோலையிலே

ஆலங்காடி சந்தையிலே

கிட்டிப் புள்ளும் பம்பரமும்

கிறுகியடிக்கப் பாலாறு…….

என பாடலை பாடிக்கொண்டு விளையாடுவதே ஒரு தனி அழகு. ஆனால் இன்றைய கால சிறுவர்கள் இவற்றின் பெயரைக்கூட கேள்விப்பட்டிருப்பார்களோ என்பது கேள்விக்குறி. இவற்றுக்கெல்லாம் காரணங்கள் பல இருப்பினும் அதிகரித்த தொலைபேசிப் பாவனையும் ஒரு முக்கிய காரணமாக காணப்படுகின்றது. தொலைபேசிப் பாவனை பல நன்மைகளை எமக்கு வழங்குகின்ற போதும், அதன் அதிகரித்த பாவனை என்பது எமது பாரம்பரிய விளையாட்டுக்களை பாதிக்கின்றன என்பதே உண்மை.

உணவு ஊட்டுவதற்காக நிலாவினைக் காட்டி சோறு ஊட்டிய காலம் கடந்து தொலைபேசியில் Bubble shooter, Talking cat, car racing என்பவற்றை காட்டி உணவு ஊட்டுகின்றனர். வீட்டில் பிள்ளைகளை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்புடைய முதியவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விட்டு இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கும் உறவினர்களுக்கு கூட தொலைபேசியில் உரையாடுகின்றனர் இன்றைய பெற்றோர்கள். வேலைக்குச் செல்லும் பெற்றோர்களும் வீட்டில் தொலைக்காட்சி பார்க்கும் பெற்றோர்களும் தமது பிள்ளைகளை சமாளிப்பதற்கு கையில் எடுக்கும் ஆயுதம் புத்தகங்களோ, தமது பிள்ளைகளின் அயல் வீட்டு நண்பர்களோ அல்ல. தொலைபேசிகளும் அவற்றில் இருக்கும் விளையாட்டுக்களுமே ஆகும்.

இவ்வாறு வளர்க்கப்படுகின்ற பிள்ளைகள் தமது சிறு வயது முதல் தொலைபேசிகளையே தமது உறவாக மாற்றிக்கொள்கின்றனர். பாடசாலை விடுமுறை தினங்களிலும், பண்டிகை நாட்களிலும் தமது உறவினர் வீடுகளுக்கு சென்று சக வயது நண்பர்களுடன் விளையாடுவதற்கு பதிலாக தமது பண்டிகை வாழ்த்துக்களை தொலைபேசியினூடாக அனுப்பிவிட்டு வீட்டில் இருந்து கொண்டே தொலைபேசிகளுடன் விளையாடுகின்றனர்.

எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் மகிழ்ச்சியையும் உரத்தையும் கொடுத்தன. நோய் நொடிகள் இன்றி ஒற்றுமையாக வாழ வழிகாட்டின. மனதில் நிம்மதி மற்றும் சந்தோசத்தை ஏற்படுத்தின. மன உளைச்சலும், மன அழுத்தமும் அவற்றில் காணப்படவில்லை. உடலையும், உள்ளத்தையும் புத்துணர்சியுடன் பாதுகாத்து வைத்திருந்தன. தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்கள் மூலம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும், கூடி வாழும் இயல்பை வளர்த்துக்கொள்ளவும், வெற்றி தோல்விகளை சமனாக நினைக்கவும், கூடி விளையாட வேண்டும் என்ற அழுத்தமான செய்திகளை நமது முன்னோர்கள் வகுத்து சென்றுள்ளனர்.

ஆனால் அதிகரித்த தொலைபேசிப் பாவனை இன்றைய சிறுவர்களின் மனதிற்குள் கூட நுழைந்து விட்டன. வீடியோ கேம், மரணத்தை ஏற்படுத்த கூடிய விளையாட்டுக்கள், விளையாட்டினால் தூண்டப்பட்டு தற்கொலை செய்துகொள்பவர்களும் உள்ளனர். பத்து வயதிலேயே தலை வலி, கண் பிரச்சினை, மன அழுத்தம், தூக்கமின்மை என்பவற்றை விலை கொடுத்து வாங்குகின்றனர்.

பெற்றவர்களிடம் திட்டு வாங்கி, அடி வாங்கி தனது நண்பர்களுடன் விளையாட சென்ற காலம் கடந்து பத்து வயதினிலேயே தனக்கு தொலைபேசி வேண்டும் என்று தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர் இன்றைய கால சிறுவர்கள். இன்று எத்தனை பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மண்ணில் விளையாட விடுகின்றனர், எத்தனை பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தெரு ஓரங்களில் விளையாட விட்டு அழகு பார்க்கின்றனர். இன்று வீடியோ கேம் விளையாடுவதை கௌரவமாக பார்க்கும் பெற்றோர்களுக்கு தெரியவில்லை அது எவ்வளவிற்கு ஆபத்தானது என்று.

 மாற்றம் பெற்று வருகின்ற தொழினுட்ப விருத்திக்கு ஏற்ப அழிவடைந்து கொண்டு செல்வது எமது பாரம்பரிய விளையாட்டுக்களும் தான்  எனவே எமது பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் உண்டு. பொழுபோக்கிற்காக தொலைபேசிகளை வழங்குவதற்கு பதிலாக ஒவ்வொரு பெற்றோர்களும் தமது சிறுவயதில் விளையாடிய விளையாட்டுக்களை தமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தாலே போதுமானது. அது முடியவில்லை எனில் எமது வீட்டில் இருக்கும் முதியவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்காமல் இருந்தாலே ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் எமது பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுக்க நாம் எடுக்கும் சிறு முயற்சியாக அமையும்.

வேலம்புராசன் .விதுஜா

சமூகவியல் துறை

யாழ். பல்கலைக்கழகம்

 

https://www.ilakku.org/?p=45041

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.