Jump to content

கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிலோமினாவின் தந்தையாருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந்திரன் ஒரு சிறுவன் வீட்டை நோக்கி ஓடி வருவதை அவதானித்தான்! அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்...!

அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை! சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது!

அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா! வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார்! 

குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது!

இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை!

நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன்! பிலோமினா நிப்பா தானே எனச் சந்திரன் கேட்கவும், தந்தையார் ஓமோம்...நான் அவவிட்டைச் சொல்லி விடுகிறன் மகன் என்று கூறினார்!

அவரது கண்களில் ஏதாவது செய்தி இருக்கின்றதா என்று உற்றுப் பார்த்த போதும் ஒரு வெறுமை மட்டுமே....அதில் தெரிந்தது!

பின்னர் சைக்கிளை உழக்கும் போது கொஞ்சம் எதிர்க் காத்து வீசவே, சைக்கிளைத் தூக்கித் தோள்களில் வைத்த படி நடக்கலாமா என்று யோசித்தவன்...தான் இன்னும் சிறு பிள்ளையில்லை என்று நினைத்துச் சைக்கிளை உருட்டிய படியே நடக்கத் தொடங்கினான்!

செல்லும் வழியில் சில வீட்டுத் தோட்டங்கள் தெரிந்தன! பொதுவாகச் சின்ன வெங்காயமும், மிளகாய், கத்தரி, வெண்டி போன்ற சில மரக்கறி வகைகளும் நடப்பட்டிருந்தன! அதன் பின்னால் உள்ள உழைப்பின் அளவை அவன் ஓரளவுக்குத் தெரிந்திருந்தான்! வெறும் கல் படர்ந்த நிலத்தின் மீது கொஞ்சம் மண்ணை உயர்த்தி..அதன் மீது தான் நாற்றுக்களை நட்டிருப்பார்கள்! தரவை நிலங்களில் நிறையக் காய்ந்த எருக்கள் கிடைக்கும்! அதையும் மழையையும் மட்டும் நம்பியே அந்தத் தோட்டங்கள் இருந்தன! 

வீட்டுக்கு வந்த பின்னரும் பிலோமினாவைப் பற்றிய சிந்தனை அவனை விட்ட பாடில்லை!

இன்னும் நல்ல வெளிச்சம் இருந்ததால்...கால் போன திசையில் கொஞ்ச நேரம் நடக்கத் தொடங்கினான்! வீதிக்குக் கொஞ்சம் தார் காட்டியிருந்தார்கள்!

இப்போதெல்லாம் வீட்டு நாய்களைக் காணும் போது...உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது! அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்!

ஓரு இடத்தில் நிறைய ஆவரம் மரங்கள் சிறு..சிறு பற்றைகளாக இருந்தன! இவற்றின் காய்கள் சீயாக்காய் போல நீளமாக இருக்கும்! இவற்றைத் தலையில் வைத்துக் கழிகளில் குளித்ததும் நினைவுக்கு வந்தது! இப்போதும் அவ்வாறு குளிக்க வேண்டும் போல இருந்தது!

இப்போது அவனுக்கு ஒரு உண்மை...ஓடி  வெளித்தது!  எவ்வளவு நாட்கள் பிற தேசங்களில் வசித்தாலும்...இளமைக் கால நினைவுகள் ஒரு போதும் அழிந்து போவதில்லை! அதே சூழலுக்குள் திரும்பப் போகின்ற போது...அந்த நினைவுகள் அப்படியே திரும்பவும் வரும்! இப்போது பிற் காலத்தில் இங்கு வந்து வசிக்க வேண்டும் என்ற அடி மனத்து ஆசை மேலும் வீறு கொண்டெழுந்தது!

மறு நாள் காலையில் விடிந்தும் விடியாத வேளையிலேயே கண் விழித்தவன் இன்றைய நாளைப் பெரும் எதிர்பார்ப்புகளோடு வரவேற்றான்!

அவனுக்கே பிடித்தமான பிட்டும், கப்பல் வாழைப்பழமும், சம்பலும் பெரியவர் அவனுக்காகச் செய்து வைத்திருந்தார்! பின்னர் காலையின் வாசனையை முகர்ந்த படியே சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் புறப்படவும்....வெளியே யாரோ வருவது போல அரவம் கேட்கவே, பிலோமினாவும் அவளது குழந்தையைக் கையில் பிடித்த படியே நடந்து வந்து கொண்டிருந்தாள்!  அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெரியவரின் நினைவு திடீரென வந்ததும், அவளை வரவேற்பதற்காக வெளியே ஒடினான்!

அதற்குள் பெரியவர் முந்திக்கொண்டார்!  என்ன பிள்ளை இந்தப் பக்கம்?

பேச்சு நடை விபரீதமாகப் போய் விடக் கூடாது என்பதற்காக, இவ எனது நண்பனின் உறவினர்...என்னிடம் தான் வந்திருக்கிறா என்று கூறியவன் பிலோமினாவை அழைத்துக் கொண்டு விறாந்தையில் கிடந்த கதிரையில் உட்காரச் சொன்னான்!

அவனது கைகளில் தோன்றிய நடுக்கம்...வெளியே தெரிந்து விடுமோ என்று அவன் அஞ்சிய மாதிரித் தெரிந்தது! தான் எவ்வளவு கோழையாகிப் போனேன் என்று அவனுக்கே வெட்கமாக இருந்தது!

பெரியவரிடம் இவள் என்னோடு ஒரே பாடசாலையில் படித்தவள் என்றோ....எனக்கு மிகவும் நெருக்கமானவள் என்றோ அறிமுகப் படுத்தியிருக்கலாமே என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டான்!

ஒரு ராஜதந்திரப் பார்வை ஒன்றை அவள் மீது வீசிய படியே பெரியவர் அப்பால் நகர்ந்து போனார்!

பெரியவர் போன பின் அவளது கரங்களை இறுகப் பற்றிய படியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தவனை....எப்படி இருக்கின்றீர்கள் என்ற அவளது குரல் இவ்வுலகத்துக்கு அவனை திரும்பவும் கொண்டு வந்தது! ஓம்...ஓம்...சுகத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்லை!

நான் உங்களை மறந்து போகேல்லை! ஆனாலும் வெளி நாடு சென்றதும் எதிர்பாராத எவ்வளவோ பிரச்சனைகள், படிப்பு...வேலை என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கேல்ல! தமிழனுக்கே உரித்தான தனித்துவமான பொறுப்புக்கள், எதையுமே நனைச்சுச் சுமக்க வைக்கும் எமது சமுதாய அமைப்பு எல்லாமே சேர்ந்து எனது வாழ்வைத் தின்று விட்டன! எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பார்த்த போது....காதோரத்தில் நரை முடி அரும்பிப் போயிருந்தது! அவன் சொல்லி முடிக்க, அவளும் சிரித்த படியே தனது புத்தம் புதிய நரை முடிகளைத் தடவிக் கொண்ட்டிருந்தாள்!

இதையெல்லாம் பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம்! எழுதிச் செல்லும் விதியின் கை, யாருக்காகவும் எழுதுவதை நிறுத்துவதில்லை! எப்படி உங்கள் குடும்பம் என்று அவள் விசாரித்த போது...அவனது மௌனமே அவளுக்கான பதிலாக அமைந்தது! அதன் பின்னர் அவளும் அந்தக் கேள்வியை மீண்டும் கேட்கவேயில்லை!

வானத்துச் சந்திரனைப் போலவே.....நீங்கள் என்னிடமிருந்து வெகு தூரம் போய் விட்டீர்கள்! நீங்கள் அண்மையில் இருந்திருந்தாலும் இந்த உலகம் எம்மிருவரையும் சேர்ந்து வாழ ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டாது! ஏன், இன்றும் கூட அது பெரிதாக மாறி விடவில்லை! நான் இந்த வீட்டின் படலையத் தாண்டி வந்த போது...அந்தப் பெரியவரின் முகத்தில் தோன்றிய கோடுகளை, நீங்களும் பார்த்தனீங்கள் தானே?  நீங்கள் வெளி நாடு போய், ஐந்து வருடங்கள் ஆனதும், எங்களுடன் படித்த பீற்றர் என்னைக் கட்டித் தரும்படி அப்பாவிடம் கேட்க, நானும் கழுத்தை நீட்டினேன்! பீற்றரும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு வள்ளம் வாங்கி வைத்திருந்தார்கள்!

பிடிக்கும் மீன்களை எல்லோருமே பங்கிட்டுக் கொள்வார்கள்! ஒரு  வருடத்துக்கு முன்பு வரை எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது!

ஒரு நாள் இந்திய இழுவைப்படகுகள் இவர்கள் போட்டிருந்த வலைகளை அப்படியே சேதப் படுத்தி விட்டுப் போய் விட்டன! இவர்களது வலைகள் மட்டுமல்ல, இன்னும் பலரது வலைகளுக்கும் அதே கதி தான்! இப்போதெல்லாம் இந்தியப் படகுகள் கரைக்கு அருகேயே வருகின்றன! நீங்கள் வந்து பார்த்தால் அவற்றின் எஞ்சின் சத்தத்தைக் கூடக் கரையிலிருந்தே நீங்கள் கேட்கலாம்!

சந்திரன் நீண்ட நேரம் யோசித்து விட்டு....என்னால் ஓரளவுக்கு உதவ முடியும்!  ஆனால் இதை நீங்கள் நிச்சயம் மறுக்கக் கூடாது என்றான்! இதைக்  கேட்டுத் திடுக்கிட்ட பிலோமினா, சந்திரன் நீங்கள் எந்தப் பிராயச்சித்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை! உங்கள் மீது எந்தத் தவறுகளும் இல்லையே என்று கூறினாள்!

இல்லை, எனது ஆத்ம திருப்திக்காக என்னால் முடிந்த ஒரு உதவியை உனக்காகச் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவே, அவளும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டாள்!

மறு நாள் வங்கிக்குச் சென்று பிலோமினா பெயரிலும், அவளது குழந்தையின் பெயரிலும், அவனது பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் திறந்து வலைகளுக்குத் தேவையான பணத்துடன் மேலதிகமாகக் கொஞ்சப் பணத்தை மேலதிகமாகவும் போட்டு, மாதம் ....மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அந்தக் கணக்குக்குத் திரும்பக் கட்டுமாறு கூறியவன்...அந்தக் கடன் கட்டி முடியும் வரை...அந்த வங்கிப் புத்தகம் தன்னிடமேயிருக்கும் என்றும் கூறிய படியே, அந்தக் குழந்தையின் தலையை வருடிய படியே விடை பெற்றான்!

சில நாட்களின் பின்னர்..அவனது வீட்டில் அவன் விடிகாலையில் நித்திரையால் கண் விழிக்கும் போது, அவனது மனைவி 'என்னப்பா...ராத்திரி முழுக்கப் பிலோ...பிலோ எண்டு பினாத்திக் கொண்டிருந்தீங்கள்,  தலைகணி விலகிப் போச்சோ என்று கேட்கவே,  ம்ம்...தலையே விலகிப் போச்சுது என்ற படி....அன்றைய நாளுக்கான கடமைகளில் மூழ்கத் தொடங்கினான்!

அடுத்த வருசம் இந்தப் பாஸ் புத்தகத்தை எப்படியாவது பிலோமினாவிடம் சேர்த்து விட வேண்டும்!

இனிமேல் அவன் ஊருக்குப் போக மாட்டான்!


முற்றும்....!

Edited by புங்கையூரன்
  • Like 19
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • புங்கையூரன் changed the title to கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, புங்கையூரன் said:

பிலோமினாவின் தந்தையாருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந்திரன் ஒரு சிறுவன் வீட்டை நோக்கி ஓடி வருவதை அவதானித்தான்! அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்...!

அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை! சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது!

அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா! வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார்! 

குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது!

இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை!

நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன்! பிலோமினா நிப்பா தானே எனச் சந்திரன் கேட்கவும், தந்தையார் ஓமோம்...நான் அவவிட்டைச் சொல்லி விடுகிறன் மகன் என்று கூறினார்!

அவரது கண்களில் ஏதாவது செய்தி இருக்கின்றதா என்று உற்றுப் பார்த்த போதும் ஒரு வெறுமை மட்டுமே....அதில் தெரிந்தது!

பின்னர் சைக்கிளை உழக்கும் போது கொஞ்சம் எதிர்க் காத்து வீசவே, சைக்கிளைத் தூக்கித் தோள்களில் வைத்த படி நடக்கலாமா என்று யோசித்தவன்...தான் இன்னும் சிறு பிள்ளையில்லை என்று நினைத்துச் சைக்கிளை உருட்டிய படியே நடக்கத் தொடங்கினான்!

செல்லும் வழியில் சில வீட்டுத் தோட்டங்கள் தெரிந்தன! பொதுவாகச் சின்ன வெங்காயமும், மிளகாய், கத்தரி, வெண்டி போன்ற சில மரக்கறி வகைகளும் நடப்பட்டிருந்தன! அதன் பின்னால் உள்ள உழைப்பின் அளவை அவன் ஓரளவுக்குத் தெரிந்திருந்தான்! வெறும் கல் படர்ந்த நிலத்தின் மீது கொஞ்சம் மண்ணை உயர்த்தி..அதன் மீது தான் நாற்றுக்களை நட்டிருப்பார்கள்! தரவை நிலங்களில் நிறையக் காய்ந்த எருக்கள் கிடைக்கும்! அதையும் மழையையும் மட்டும் நம்பியே அந்தத் தோட்டங்கள் இருந்தன! 

வீட்டுக்கு வந்த பின்னரும் பிலோமினாவைப் பற்றிய சிந்தனை அவனை விட்ட பாடில்லை!

இன்னும் நல்ல வெளிச்சம் இருந்ததால்...கால் போன திசையில் கொஞ்ச நேரம் நடக்கத் தொடங்கினான்! வீதிக்குக் கொஞ்சம் தார் காட்டியிருந்தார்கள்!

இப்போதெல்லாம் வீட்டு நாய்களைக் காணும் போது...உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது! அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்!

ஓரு இடத்தில் நிறைய ஆவரம் மரங்கள் சிறு..சிறு பற்றைகளாக இருந்தன! இவற்றின் காய்கள் சீயாக்காய் போல நீளமாக இருக்கும்! இவற்றைத் தலையில் வைத்துக் கழிகளில் குளித்ததும் நினைவுக்கு வந்தது! இப்போதும் அவ்வாறு குளிக்க வேண்டும் போல இருந்தது!

இப்போது அவனுக்கு ஒரு உண்மை...ஓடி  வெளித்தது!  எவ்வளவு நாட்கள் பிற தேசங்களில் வசித்தாலும்...இளமைக் கால நினைவுகள் ஒரு போதும் அழிந்து போவதில்லை! அதே சூழலுக்குள் திரும்பப் போகின்ற போது...அந்த நினைவுகள் அப்படியே திரும்பவும் வரும்! இப்போது பிற் காலத்தில் இங்கு வந்து வசிக்க வேண்டும் என்ற அடி மனத்து ஆசை மேலும் வீறு கொண்டெழுந்தது!

மறு நாள் காலையில் விடிந்தும் விடியாத வேளையிலேயே கண் விழித்தவன் இன்றைய நாளைப் பெரும் எதிர்பார்ப்புகளோடு வரவேற்றான்!

அவனுக்கே பிடித்தமான பிட்டும், கப்பல் வாழைப்பழமும், சம்பலும் பெரியவர் அவனுக்காகச் செய்து வைத்திருந்தார்! பின்னர் காலையின் வாசனையை முகர்ந்த படியே சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் புறப்படவும்....வெளியே யாரோ வருவது போல அரவம் கேட்கவே, பிலோமினாவும் அவளது குழந்தையைக் கையில் பிடித்த படியே நடந்து வந்து கொண்டிருந்தாள்!  அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெரியவரின் நினைவு திடீரென வந்ததும், அவளை வரவேற்பதற்காக வெளியே ஒடினான்!

அதற்குள் பெரியவர் முந்திக்கொண்டார்!  என்ன பிள்ளை இந்தப் பக்கம்?

பேச்சு நடை விபரீதமாகப் போய் விடக் கூடாது என்பதற்காக, இவ எனது நண்பனின் உறவினர்...என்னிடம் தான் வந்திருக்கிறா என்று கூறியவன் பிலோமினாவை அழைத்துக் கொண்டு விறாந்தையில் கிடந்த கதிரையில் உட்காரச் சொன்னான்!

அவனது கைகளில் தோன்றிய நடுக்கம்...வெளியே தெரிந்து விடுமோ என்று அவன் அஞ்சிய மாதிரித் தெரிந்தது! தான் எவ்வளவு கோழையாகிப் போனேன் என்று அவனுக்கே வெட்கமாக இருந்தது!

பெரியவரிடம் இவள் என்னோடு ஒரே பாடசாலையில் படித்தவள் என்றோ....எனக்கு மிகவும் நெருக்கமானவள் என்றோ அறிமுகப் படுத்தியிருக்கலாமே என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டான்!

ஒரு ராஜதந்திரப் பார்வை ஒன்றை அவள் மீது வீசிய படியே பெரியவர் அப்பால் நகர்ந்து போனார்!

பெரியவர் போன பின் அவளது கரங்களை இறுகப் பற்றிய படியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தவனை....எப்படி இருக்கின்றீர்கள் என்ற அவளது குரல் இவ்வுலகத்துக்கு அவனை திரும்பவும் கொண்டு வந்தது! ஓம்...ஓம்...சுகத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்லை!

நான் உங்களை மறந்து போகேல்லை! ஆனாலும் வெளி நாடு சென்றதும் எதிர்பாராத எவ்வளவோ பிரச்சனைகள், படிப்பு...வேலை என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கேல்ல! தமிழனுக்கே உரித்தான தனித்துவமான பொறுப்புக்கள், எதையுமே நனைச்சுச் சுமக்க வைக்கும் எமது சமுதாய அமைப்பு எல்லாமே சேர்ந்து எனது வாழ்வைத் தின்று விட்டன! எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பார்த்த போது....காதோரத்தில் நரை முடி அரும்பிப் போயிருந்தது! அவன் சொல்லி முடிக்க, அவளும் சிரித்த படியே தனது புத்தம் புதிய நரை முடிகளைத் தடவிக் கொண்ட்டிருந்தாள்!

இதையெல்லாம் பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம்! எழுதிச் செல்லும் விதியின் கை, யாருக்காகவும் எழுதுவதை நிறுத்துவதில்லை! எப்படி உங்கள் குடும்பம் என்று அவள் விசாரித்த போது...அவனது மௌனமே அவளுக்கான பதிலாக அமைந்தது! அதன் பின்னர் அவளும் அந்தக் கேள்வியை மீண்டும் கேட்கவேயில்லை!

வானத்துச் சந்திரனைப் போலவே.....நீங்கள் என்னிடமிருந்து வெகு தூரம் போய் விட்டீர்கள்! நீங்கள் அண்மையில் இருந்திருந்தாலும் இந்த உலகம் எம்மிருவரையும் சேர்ந்து வாழ ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டாது! ஏன், இன்றும் கூட அது பெரிதாக மாறி விடவில்லை! நான் இந்த வீட்டின் படலையத் தாண்டி வந்த போது...அந்தப் பெரியவரின் முகத்தில் தோன்றிய கோடுகளை, நீங்களும் பார்த்தனீங்கள் தானே?  நீங்கள் வெளி நாடு போய், ஐந்து வருடங்கள் ஆனதும், எங்களுடன் படித்த பீற்றர் என்னைக் கட்டித் தரும்படி அப்பாவிடம் கேட்க, நானும் கழுத்தை நீட்டினேன்! பீற்றரும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு வள்ளம் வாங்கி வைத்திருந்தார்கள்!

பிடிக்கும் மீன்களை எல்லோருமே பங்கிட்டுக் கொள்வார்கள்! ஒரு  வருடத்துக்கு முன்பு வரை எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது!

ஒரு நாள் இந்திய இழுவைப்படகுகள் இவர்கள் போட்டிருந்த வலைகளை அப்படியே சேதப் படுத்தி விட்டுப் போய் விட்டன! இவர்களது வலைகள் மட்டுமல்ல, இன்னும் பலரது வலைகளுக்கும் அதே கதி தான்! இப்போதெல்லாம் இந்தியப் படகுகள் கரைக்கு அருகேயே வருகின்றன! நீங்கள் வந்து பார்த்தால் அவற்றின் எஞ்சின் சத்தத்தைக் கூடக் கரையிலிருந்தே நீங்கள் கேட்கலாம்!

சந்திரன் நீண்ட நேரம் யோசித்து விட்டு....என்னால் ஓரளவுக்கு உதவ முடியும்!  ஆனால் இதை நீங்கள் நிச்சயம் மறுக்கக் கூடாது என்றான்! இதைக்  கேட்டுத் திடுக்கிட்ட பிலோமினா, சந்திரன் நீங்கள் எந்தப் பிராயச்சித்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை! உங்கள் மீது எந்தத் தவறுகளும் இல்லையே என்று கூறினாள்!

இல்லை, எனது ஆத்ம திருப்திக்காக என்னால் முடிந்த ஒரு உதவியை உனக்காகச் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவே, அவளும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டாள்!

மறு நாள் வங்கிக்குச் சென்று பிலோமினா பெயரிலும், அவளது குழந்தையின் பெயரிலும், அவனது பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் திறந்து வலைகளுக்குத் தேவையான பணத்துடன் மேலதிகமாகக் கொஞ்சப் பணத்தை மேலதிகமாகவும் போட்டு, மாதம் ....மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அந்தக் கணக்குக்குத் திரும்பக் கட்டுமாறு கூறியவன்...அந்தக் கடன் கட்டி முடியும் வரை...அந்த வங்கிப் புத்தகம் தன்னிடமேயிருக்கும் என்றும் கூறிய படியே, அந்தக் குழந்தையின் தலையை வருடிய படியே விடை பெற்றான்!

சில நாட்களின் பின்னர்..அவனது வீட்டில் அவன் விடிகாலையில் நித்திரையால் கண் விழிக்கும் போது, அவனது மனைவி 'என்னப்பா...ராத்திரி முழுக்கப் பிலோ...பிலோ எண்டு பினாத்திக் கொண்டிருந்தீங்கள்,  தலைகணி விலகிப் போச்சோ என்று கேட்கவே,  ம்ம்...தலையே விலகிப் போச்சுது என்ற படி....அன்றைய நாளுக்கான கடமைகளில் மூழ்கத் தொடங்கினான்!

அடுத்த வருசம் இந்தப் பாஸ் புத்தகத்தை எப்படியாவது பிலோமினாவிடம் சேர்த்து விட வேண்டும்!

இனிமேல் அவன் ஊருக்குப் போக மாட்டான்!


முற்றும்....!

எத்தனையோ சந்திப்புகள் பயணங்கள் பார்வைகள் தொடுகைகள்

நினைவுகள் என்றுமே சுகமானவை 

முடிந்தளவு பிராயச்சித்தம்

முடியாதது பல நெஞ்சுள் முள்ளாய்.

ஏதோ நாமே கடந்து வந்த பாதை போன்று??

நன்றி அண்ணா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்துபோன காதலை பேனையால் கிறுக்குவதுகூட "பூமியை யந்திரக்கலப்பையால் உழுவது" போன்ற வலி மிகுந்தது.......பகிர்வுக்கு நன்றி புங்கை......!   👏

Link to comment
Share on other sites

துணிச்சல் புங்கையூருக்கு வந்திட்டுது.  முடிவு மட்டும் தயக்கமாக முடிச்சிட்டியள். ஒரு கதையின் பலராலும் ஏற்கக்கூடிய முடிவை தந்திட்டீங்கள். ஞாபகங்கள் தொடரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, shanthy said:

துணிச்சல் புங்கையூருக்கு வந்திட்டுது.  முடிவு மட்டும் தயக்கமாக முடிச்சிட்டியள். ஒரு கதையின் பலராலும் ஏற்கக்கூடிய முடிவை தந்திட்டீங்கள். ஞாபகங்கள் தொடரட்டும்.

உண்மை தான்.

சில விடயங்களை அப்படியே சொல்லிவிட முடியாது 

ஏனெனில் காலம் பலவற்றை மாற்றி விட்டிருக்கும்.

இப்போது சொல்வது சிக்கலாக வரலாம்

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை  அருமை அழகாக முடித்துவிட்டீர்களே இந்திய படகுகளின் உண்மைத்தன்மைகளும் உள்ளுக்குள் வந்து போனதும் சிறப்பு

வாழ்த்துக்கள் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையண்ணாவே இந்தப் பகுதி முடிக்கும் போது மேலதிகமா  குளம்பி முடிச்சுட்டார்..புங்கையண்ணா நேரம் கிடைக்கும் போது மேலும் ஆக்கங்களை கொண்டு வர வேண்டும் என்பது எனது விருப்பம்.. பகிர்வுக்கு நன்றி👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

இப்போதெல்லாம் வீட்டு நாய்களைக் காணும் போது...உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது! அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்!

சில நாய்கள் வடைசிவரை துரத்தும்.சரி இந்த நாய் போகுதென்றால் அடுத்த நாய் துரத்தும்.
நாய்க் கோஸ்டிகளுடன் ரொம்ப கஸ்டம்.

5 hours ago, புங்கையூரன் said:

அவரது கண்களில் ஏதாவது செய்தி இருக்கின்றதா என்று உற்றுப் பார்த்த போதும் ஒரு வெறுமை மட்டுமே....அதில் தெரிந்தது!

ஊரில யாரையும் சமாளிக்கலாம்.பெரிசுகளை சமாளிக்க முடியாது.

5 hours ago, புங்கையூரன் said:

மறு நாள் வங்கிக்குச் சென்று பிலோமினா பெயரிலும், அவளது குழந்தையின் பெயரிலும், அவனது பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் திறந்து வலைகளுக்குத் தேவையான பணத்துடன் மேலதிகமாகக் கொஞ்சப் பணத்தை மேலதிகமாகவும் போட்டு, மாதம் ....மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அந்தக் கணக்குக்குத் திரும்பக் கட்டுமாறு கூறியவன்...அந்தக் கடன் கட்டி முடியும் வரை...அந்த வங்கிப் புத்தகம் தன்னிடமேயிருக்கும் என்றும் கூறிய படியே, அந்தக் குழந்தையின் தலையை வருடிய படியே விடை பெற்றான்!

அச்சொட்டாக எழுதுறபடியால் எனக்கென்னவோ புங்கையரின் சொந்தக் கதையாகவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடைவெளிகள் எப்போதும் பிரிவையே தருகின்றன . ஆனால்  பிரிவு  இதயங்களுக்கு அல்ல .அழகாக கோர்த்து கதை சொல்லிய விதம் அருமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புங்கையர்! கதையும் எழுத்து நடையும் மிக பிரமாதம்.👍🏽

யாழ் களத்துக்கு கொடுத்த ஒரு கொடுப்பினை புங்கையரும் சுவியரும் தான்.
இவர்கள் இரண்டு பேரும் கதை எழுதினால் வாசிச்சுக்கொண்டே இருக்கலாம். ஊரோடு சேர்ந்து பயணம் செய்யலாம். கோப தாபங்கள் வராது. மனதுக்கு இதமாக இருக்கும்.
இவர்கள் இரண்டு பேரையும் சென்னைக்கு அனுப்பி  தொலைக்காட்சி சீரியல்களுக்கு கதை வசனம் எழுத சொல்ல வேணும். :)

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதைதான் புங்கை. உங்களை அப்பிடியே பார்த்தமாதிரி இருக்கு கதையில் 😂

Link to comment
Share on other sites

முழுமையாக வாசித்து முடித்தேன். அருமையான எழுத்து நடை. இந்தளவுக்கு எழுதும் திறமை இருந்தும் குடத்துள் விளக்காக ஏன் இருக்கின்றீர்கள் என்றுதான் புரியவில்லை.

இலங்கை அரசின் அழிவுகள் கொடுக்கும் பொருளாதார சுமைகளில் இருந்து சக மக்களை மீட்கவும் புலம்பெயர் தமிழர் ஒருவர் தான் இப்பவும் தேவையாக இருக்கின்றார் என்றால் தொப்புள் கொடி உறவு என்று சொல்லிவிட்டு கொள்ளை அடிப்பது மட்டுமன்றி வேண்டும் என்றே வலைகளையும் படகுகளையும் நாசப்படுத்தும் தமிழக மீனவர்களின் அட்டூழியங்கள் கொடுக்கும் பொருளாதாரச் சுமையையில் இருந்தும் அதே புலம்பெயர் தமிழன் தான் மீட்க வேண்டி இருக்கு. கரையில் நின்றாலே இந்திய படகுகளின் சத்தங்களை கேட்க கூடியதாக இருக்கின்றதெனில் அவர்கள் தெரியாமல் எல்லை கடக்கவில்லை; நன்கு தெரிந்து கொண்டே எல்லை மீறுகின்றார்கள்.

முடிவை இன்னும் கொஞ்சம் நீட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். வேகமாக முடித்து விட்டீர்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2021 at 20:43, விசுகு said:

எத்தனையோ சந்திப்புகள் பயணங்கள் பார்வைகள் தொடுகைகள்

நினைவுகள் என்றுமே சுகமானவை 

முடிந்தளவு பிராயச்சித்தம்

முடியாதது பல நெஞ்சுள் முள்ளாய்.

ஏதோ நாமே கடந்து வந்த பாதை போன்று??

நன்றி அண்ணா

ஒரு கதையை அல்லது ஒரு கவிதையை எழுதிச் செல்லும் போது, இடைக்கிடை ஆராவது வந்து ஏதாவது ஒரு கருத்தை அது நல்லதோ அல்லது கெட்டதோ எதுவாக இருந்தாலும் சொல்லிச் செல்லும்போது அது எழுதுபவனுக்கு ஒரு உந்து சக்தியை அழிப்பதுண்டு!

அந்த விதத்தில் உங்கள் கருத்துக்களின் பெறுமதி அளவிட முடியாதது! நீங்கள் குறிப்ப்பிபிட்டது போலவே, நினைவு மீட்டல்கள் மிகவும் இனிமையானவை! அவற்றுள் சில பொத்திப் பாதுகாக்கப் பட வேண்டியவை! சில ஓரளவுக்குப் பகிர்ந்து கொள்ளத் தக்கவை! இன்னும் சில கல்லறை வரைக்கும் காவிச் செல்ல வேண்டியவை! நன்றி....விசுகர்..!

On 21/3/2021 at 20:57, suvy said:

கடந்துபோன காதலை பேனையால் கிறுக்குவதுகூட "பூமியை யந்திரக்கலப்பையால் உழுவது" போன்ற வலி மிகுந்தது.......பகிர்வுக்கு நன்றி புங்கை......!   👏

உண்மை தான், சுவியர்!

எங்கேயிருந்து இந்த உவமானங்களை எடுக்கிறீர்களோ தெரியாது! அந்த வலி எப்படியிருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்த்தேன்!

நன்றி சுவியர்...!

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

காதலைபோல அதன் நினைவுகளும் அழகானவை. பகிர்வுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2021 at 23:41, shanthy said:

துணிச்சல் புங்கையூருக்கு வந்திட்டுது.  முடிவு மட்டும் தயக்கமாக முடிச்சிட்டியள். ஒரு கதையின் பலராலும் ஏற்கக்கூடிய முடிவை தந்திட்டீங்கள். ஞாபகங்கள் தொடரட்டும்.

வணக்கம், சாந்தி...!

துணிச்சல் புங்கையூருக்கு வந்திட்டுது என்பதை விடவும்...காலம் துணிச்சலைக் கொடுத்து விட்டது என்பதே அதிகம் பொருத்தமாக இருக்கும்!

மூன்று நாட்களுக்குத் தலயை உடைத்துக் கொண்ட பின் முடிவு ஒரு மாதிரி மனதில் தோன்றி விட்டது!

ஞாபகங்கள் தொடரும்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பு... நீங்கள் கதையை நகர்த்திய விதம் தொடர்ந்து வாசிக்க வேண்டும் போன்று ஆர்வத்தை தூண்டியது.... நான் வாசித்த ஒழுங்கு பகுதி 2 பகுதி 4 பகுதி 1 பகுதி 3 திரும்ப பகுதி 4
என் என்று மட்டும் கேட்க வேண்டாம் lol   
தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2021 at 09:37, புங்கையூரன் said:

ஒரு கதையை அல்லது ஒரு கவிதையை எழுதிச் செல்லும் போது, இடைக்கிடை ஆராவது வந்து ஏதாவது ஒரு கருத்தை அது நல்லதோ அல்லது கெட்டதோ எதுவாக இருந்தாலும் சொல்லிச் செல்லும்போது அது எழுதுபவனுக்கு ஒரு உந்து சக்தியை அழிப்பதுண்டு!

அந்த விதத்தில் உங்கள் கருத்துக்களின் பெறுமதி அளவிட முடியாதது! நீங்கள் குறிப்ப்பிபிட்டது போலவே, நினைவு மீட்டல்கள் மிகவும் இனிமையானவை! அவற்றுள் சில பொத்திப் பாதுகாக்கப் பட வேண்டியவை! சில ஓரளவுக்குப் பகிர்ந்து கொள்ளத் தக்கவை! இன்னும் சில கல்லறை வரைக்கும் காவிச் செல்ல வேண்டியவை! நன்றி....விசுகர்..!

உங்கள் கதை

அது நடந்த இடம்

அங்கு எம்மவரின் எல்லைகள் 

அதை தாண்டமுடியாத எம் வளர்ப்பு

அத்தனையும் அந்த ஊரவனாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது?

ஆனாலும் உங்களை தூண்டி விடமுடியாதபடி அனுபவங்களும் வயசும் தடுத்தன. 

ஒரு முறை எனது 3வது மகன் பிறந்திருந்தபோது என்னை விரும்பிய ஒருவர் எனது வீட்டுக்கு வந்திருந்தார். இந்த கதை கொஞ்சம் எனது மனைவிக்கும் தெரியும் என்பதால் அவர் எம்மை தனியே பேச வழி விட்டார்.

மகனை காட்டமாட்டீர்களா எனக்கேட்டபோது அடுத்த அறைக்குள் தொட்டிலில் படுத்திருந்த அவனைக் காட்டினேன்.

தொட்டிலில் வைத்திருந்த என் கைமீது அவர் கை வைத்தார். நான் திரும்பி பார்த்தபோது அவர் என்னையும் மகனையும் மாறி மாறி பார்த்தார். அவரது கண்கள் கலங்கி இருந்தன.

அந்த கண்கள் ஆயிரம் கதைகளையும் விரக்தி களையும் சொல்லின.

இன்றுவரை அந்த கலங்கிய கண்களை மீண்டும் பார்க்கும் சக்தி எனக்கில்லை.

நன்றி அண்ணா பழைய ஞாபகங்களை மீண்டும் மீண்டும்???

அவை சுவையான சுமைகளாகவே இருக்கட்டும். 

  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்" யாழ் அகவை 21 ல் .

சம்பவம் :  சிவன் கோயிலில் துர்க்கை அம்மனின் முன்னால்  தூணுடன் சாய்ந்து இருக்கிறேன்.அம்பாளையே பார்க்கிறேன்.உள்ளம் உலைக்களத்தில் இரும்புபோல் நெக்குருகிறது. தாயே எதோ என்னை நல்லா வைத்திருக்கிறாய்.என்னைவிட எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும். மனம் பிரார்திக்கின்றது. வெளியே வருகின்றேன் யாரோ என்னை தொடர்ந்து பார்ப்பதுபோல் முதுகில் ஒரு குறுகுறுப்பு.சுற்று முற்றும் பார்க்கிறேன் யாரும் இல்லை. சற்றுநேரத்தில் என் அருகாக ஒரு பெண் விரைந்து சென்று சற்று தூரத்தில் நின்ற எனது மனைவியுடன் கதைத்து கொண்டு இருந்து விட்டு (அவர்கள் இருவரும் ஒரே வகுப்புத் தோழிகள்) மின்னல் போல் சென்று மறைந்து விடுகிறாள்.

  அது ஒரு மறக்க நினைத்தாலும் முடியாத பெயர். அன்றாடம் எமது வாழ்வில் நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும் பெயர்களில் ஒன்று. உதாரணமாக தேவி, கமலா, விஜயா,பத்மா போன்றது.இது வீட்டுக்குள்ளேயே படங்களில்,நாடகங்களில், கதைகளில் வந்து போகும். சுமார் நாற்பது வருடங்கள் தொடர்பே இல்லை.முன்பு இங்கே அப்பப்ப வருவது வழக்கம். இது தற்செயலா.அதுவும் இன்று காலைதான் இந்த கோயிலுக்கு வர முடிவெடுத்தோம்.அவர்களும் எங்காவது வெளிநாட்டில் இருக்கலாம் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். ஒரு மூன்று நிமிடம்தான் இருக்கும் சுனாமி போல வந்து அடிச்சுட்டு போயிட்டாள். வந்தது அவளா அம்பாளா.

                மனைவி வந்து என்னிடம் கேட்கிறாள். இப்ப யார் வந்து என்னோடு கதைத்து விட்டு போனது தெரியுமோ என்று. நான் ஒன்றும் சொல்லவில்லை. (சிவன்  கோயிலுக்குள் பொய் சொல்ல கூடாது. சுந்தரர் பொய் சொல்லி கண் கெட்டது நினைவு வர நான் மௌனமாக இருந்திட்டன்). நன்றியுடன் அம்மனை பார்த்து வணங்கி விட்டு  கதைத்து கொண்டு வெளியில் வருகிறோம். அவள் தொடர்ந்து அவதான் என்று பெயரை சொல்கிறாள்.மகனுக்கும் கொஞ்சம் சொல்கிறாள். நானும்  அப்படியா நான் பார்க்கவே இல்லை.....! 

 

இது அன்று எழுதியிருந்தேன் ......இதுக்கு மேல் எழுதவும் முடிவதில்லை."வைடூரியத்தின் நடுவே ஓடும் சுவர்ணரேகைபோல்" சிதையிலும் அழியாத நினைவுகள்........!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

"திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்" யாழ் அகவை 21 ல் .

சம்பவம் :  சிவன் கோயிலில் துர்க்கை அம்மனின் முன்னால்  தூணுடன் சாய்ந்து இருக்கிறேன்.அம்பாளையே பார்க்கிறேன்.உள்ளம் உலைக்களத்தில் இரும்புபோல் நெக்குருகிறது. தாயே எதோ என்னை நல்லா வைத்திருக்கிறாய்.என்னைவிட எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும். மனம் பிரார்திக்கின்றது. வெளியே வருகின்றேன் யாரோ என்னை தொடர்ந்து பார்ப்பதுபோல் முதுகில் ஒரு குறுகுறுப்பு.சுற்று முற்றும் பார்க்கிறேன் யாரும் இல்லை. சற்றுநேரத்தில் என் அருகாக ஒரு பெண் விரைந்து சென்று சற்று தூரத்தில் நின்ற எனது மனைவியுடன் கதைத்து கொண்டு இருந்து விட்டு (அவர்கள் இருவரும் ஒரே வகுப்புத் தோழிகள்) மின்னல் போல் சென்று மறைந்து விடுகிறாள்.

  அது ஒரு மறக்க நினைத்தாலும் முடியாத பெயர். அன்றாடம் எமது வாழ்வில் நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும் பெயர்களில் ஒன்று. உதாரணமாக தேவி, கமலா, விஜயா,பத்மா போன்றது.இது வீட்டுக்குள்ளேயே படங்களில்,நாடகங்களில், கதைகளில் வந்து போகும். சுமார் நாற்பது வருடங்கள் தொடர்பே இல்லை.முன்பு இங்கே அப்பப்ப வருவது வழக்கம். இது தற்செயலா.அதுவும் இன்று காலைதான் இந்த கோயிலுக்கு வர முடிவெடுத்தோம்.அவர்களும் எங்காவது வெளிநாட்டில் இருக்கலாம் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். ஒரு மூன்று நிமிடம்தான் இருக்கும் சுனாமி போல வந்து அடிச்சுட்டு போயிட்டாள். வந்தது அவளா அம்பாளா.

                மனைவி வந்து என்னிடம் கேட்கிறாள். இப்ப யார் வந்து என்னோடு கதைத்து விட்டு போனது தெரியுமோ என்று. நான் ஒன்றும் சொல்லவில்லை. (சிவன்  கோயிலுக்குள் பொய் சொல்ல கூடாது. சுந்தரர் பொய் சொல்லி கண் கெட்டது நினைவு வர நான் மௌனமாக இருந்திட்டன்). நன்றியுடன் அம்மனை பார்த்து வணங்கி விட்டு  கதைத்து கொண்டு வெளியில் வருகிறோம். அவள் தொடர்ந்து அவதான் என்று பெயரை சொல்கிறாள்.மகனுக்கும் கொஞ்சம் சொல்கிறாள். நானும்  அப்படியா நான் பார்க்கவே இல்லை.....! 

 

இது அன்று எழுதியிருந்தேன் ......இதுக்கு மேல் எழுதவும் முடிவதில்லை."வைடூரியத்தின் நடுவே ஓடும் சுவர்ணரேகைபோல்" சிதையிலும் அழியாத நினைவுகள்........!

பகிர்வுக்கு மிக்க நன்றி, சுவியர்!

இந்த வரிகள் இன்னும் அப்படியே நினைவிலிருக்கின்றன! ஒருத்தியின் அழகில் மயங்கி வருகின்ற 'ரத்ன வாசா' காதல்கள் ஒரு வகை!

ஒருவரது செயல்களாலோ அல்லது அவர்களது கருணை மனதால் கவரப்படுவதாலோ உண்டாகும் காதல் இன்னொரு வகை!

அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்...அருகினில்  வந்த முனிவனும் நோக்கினான் போன்ற காதல்கள் நமக்கு வரச் சாத்தியமேயில்லை! ஒரு வில்லை ஒடிக்கும் வலிமை மட்டும் அல்ல...அந்த வில்லை நினைத்துப் பார்க்கும் வலிமை கூட இல்லை! 

எனவே சில காதல்கள் மறக்க முடியாதவை தான்...!

"வைடூரியத்தின் நடுவே ஓடும் சுவர்ணரேகைபோல்"

உங்கள் உவமானங்களுக்காகவே, நீங்கள் நிறைய எழுத வேண்டும் என்பது எனது ஆவல்...!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2021 at 01:00, பசுவூர்க்கோபி said:

அருமை  அருமை அழகாக முடித்துவிட்டீர்களே இந்திய படகுகளின் உண்மைத்தன்மைகளும் உள்ளுக்குள் வந்து போனதும் சிறப்பு

வாழ்த்துக்கள் அண்ணா

பசுவூர்க் கோபி... மிக்க நன்றி....!

உங்கள் கவிதைகளை அடிக்கடி காண ஆசை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பாக முடித்துள்ளீர்கள், உங்களின் திறமையை மீண்டும் நிருபீத்துள்ளீர்கள் இக்கதை மூலம், அடிக்கடி எங்களுடன் உங்கள் ஞாபகங்களை பகிருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2021 at 01:19, யாயினி said:

புங்கையண்ணாவே இந்தப் பகுதி முடிக்கும் போது மேலதிகமா  குளம்பி முடிச்சுட்டார்..புங்கையண்ணா நேரம் கிடைக்கும் போது மேலும் ஆக்கங்களை கொண்டு வர வேண்டும் என்பது எனது விருப்பம்.. பகிர்வுக்கு நன்றி👋

வணக்கம், யாயினி...!

நான் முடிவை எழுதும் போது கொஞ்சம் குளம்பியது...எப்படி உங்களுக்குத் தெரிந்தது என்று இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்!

கருத்துக்கு மிக்க நன்றி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2021 at 01:39, ஈழப்பிரியன் said:

சில நாய்கள் வடைசிவரை துரத்தும்.சரி இந்த நாய் போகுதென்றால் அடுத்த நாய் துரத்தும்.
நாய்க் கோஸ்டிகளுடன் ரொம்ப கஸ்டம்.

ஊரில யாரையும் சமாளிக்கலாம்.பெரிசுகளை சமாளிக்க முடியாது.

அச்சொட்டாக எழுதுறபடியால் எனக்கென்னவோ புங்கையரின் சொந்தக் கதையாகவே தெரிகிறது.

உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கா, ஈழப்பிரியன்!

நாங்கள் கஸ்தூரியார் வீதியால, இரவில மதில் பாய்ஞ்சு படம் பாத்திட்டு வாற நேரம்...அவ்வளவு நாய்களும் எங்களைப் பத்திரமாய்க் கூட்டிக் கொண்டு வந்து ஹொஸ்டலிலை விடுவினம்! பிரச்சனை என்னவெண்டால்....மாணவ மேற்பார்வையாளரையும்  எழுப்பி விட்டிருவினம்!

நாங்கள் மதில் பாய...அவர் நாங்கள் கீழே விழுந்து விடாத படி...பத்திரமாய் இறக்கி விடுவார்!

நாங்கள் சும்மா ஆக்களா? அவரின்ர தம்பிக்கும் ரிக்கற் எடுத்துக் கொடுத்து. எங்களோட கொண்டு போற ஆக்களெல்லோ!😀

 

பெரிசுகளைச் சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்..!

 

புங்கையிரின் சொந்தக் கதை....ஒரு சோகக் கதை...! யாழின் இருபத்தி நாலாவது பிறந்த நாளுக்கு அவிட்டு விட யோசிக்கிறன்...!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2021 at 20:05, புங்கையூரன் said:

அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்!

அருமையான கதை ....ஓவ்வொரு வசனமும் ஊர் ஞாபகத்தை நினைவுபடுத்தி  செல்கின்றது ..எழுத்து நடை பிரமாதமாக இருக்கின்றது என நான் சொல்ல எனக்கு தகுதியில்லை...அருமை அருமை...
சைக்கிள் ஓடும் பொழுது நாய் குரைத்தால் கால்களை தூக்கி நாம் செய்யும் சேட்டை ,,,,ஆஹா ஆஹா....
தொடருங்கள்....இன்னுமொரு ஊர் ஞாபத்தை

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கப் புள்ளிகள்  வழங்கிய அனைத்து உறவுகளுக்கும், கருத்துப் பதிந்து ஊக்கபடுத்திய சொந்தங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளும்.....வாழ்த்துக்களும்...!

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.