Jump to content

இங்கிலாந்துடனான டி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

இங்கிலாந்துடனான டி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டி-20 சர்வதேச கிரக்கெட் போட்டியில் 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்திய அணியானது, டி-20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Ew-4z1iVIAM6C49.jpg

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆவதும் இறுதியானதுமான டி- 20 ஓவர் போட்டி குஜராத், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 

லோகேஷ் ராகுல் இந்த ஆட்டத்தில் இடம் வழங்கப்படாததன் காரணத்தினால் ரோகித் சர்மாவுடன், அணித் தலைவர் விராட் கோலி தொடக்க வீராக களமிறங்கினார்.

இங்கிலாந்து பந்து வீச்சை நொறுக்கிய இவர்கள் வலுவான அஸ்திவாரத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 60 ஓட்டங்களை திரட்டி அசத்தியது. 

இங்கிலாந்து அணியினர் வீசிய பந்துகளை அசராமல் சிக்சருக்கு பறக்க விட்ட ரோகித் சர்மா நான்கு திசைகளிலும் பந்துகளை தெறிக்க விட்டார்.  விராட் கோலியும் ஏதுவான பந்துகளை விரட்ட துரத்தியடித்தார்.

Ew7q3UyUUAMpDBB.jpg

அதனால் அணியின் ஓட்ட எண்ணக்கை வேகமாக அதிரித்தது. 

இந் நிலையில் 9 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ரோகித் சர்மா மொத்தமாக 34 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ரோகித்- கோலி கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 94 ஓட்டங்களை சேகரித்தது.

அடுத்து களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் சந்தித்த முதல் ஓவரிலேயே அடில் ரஷித்தின் சுழலில் இரண்டு பிரமாதமான சிக்சர்களை தூக்கியடித்தார். 

அதன் பின்னர் அவரது சரவெடியால் அணியின் ஓட்ட வேகம் தொய்வின்றி நகர்ந்தது. இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 143 ஆக உயர்ந்த போது சூர்யகுமார் 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா வந்தார். 

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய  விராட் கோலி அரைசதத்தை எட்டினார். இந்த தொடரில் அவர் அடித்த 3 ஆவது அரைசதம் இதுவாகும்.

இறுதிக் கட்டத்தில் கோலியும், பாண்டியாவும் அதிரடி காட்டினர். இவர்களை கட்டுப்படுத்த வழிதெரியாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணறினர். 

இறுதியாக 20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களை குவித்து மலைக்க வைத்தது. 

கோலி 80 ஓட்டங்களுடனும் (52 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்ஸர்), பாண்டியா 39 ஓட்டங்களுடனும் (17 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்ஸர்) ஆட்டமிழக்காதிருந்தனர்..

இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜேசன் ரோஜயை டக்கவுட்டுடன் புவனேஷ்குமார் கிளீன் போல்டாக்கினார். 

இதன் பின்னர் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லரும், டேவிட் மலானும் இணைந்து பதிலடி கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை துரிதமாக உயர்த்தினர். 

அதனால் 9.2 ஓவர்களில் அந்த அணி 100 ஓட்டங்களை தாண்டியது. 

இவர்கள் ஆடிய விதம் இந்திய வீரர்களை மிரள வைத்தது. இந்த சூழலில் மீண்டும் புவனேஷ்வர்குமாரை பந்து வீச கோலி அழைத்தார். 

இது தான் ஆட்டத்தில் திருப்பு முனை என்று சொல்ல வேண்டும். ஸ்கோர் 130 ஓட்டங்களை எட்டிய போது (12.5 ஓவர்) அவரது பந்து வீச்சில் ஜோஸ் பட்லர் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர். பெயர்ஸ்டோ (7 ஓட்டம்), டேவிட் மலான் (68 ஓட்டம், 46 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்ஸர்), அணித் தலைவர் மோர்கன் (ஒரு ஓட்டம்) அடுத்தடுத்து வெளியேற ஆட்டம் இந்தியா பக்கம் முழுமையாக திரும்பியது.

Ew8II97VcAY_eOU.jpg

20 ஓவர்களில் இங்கிலாந்து அணியால் 8 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. 

இதன் மூலம் இ்ந்தியா 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்து, போட்டிகள் கொண்ட டி-20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

2 முன்னணி விக்கெட்டை வீழ்த்திய இந்திய புவனேஷ்வர்குமார் ஆட்டநாயகன் விருதையும், 5 ஆட்டத்தில் 3 அரைசதம் உள்பட 231 ஓட்டங்களை சேர்த்த இந்திய அணித் தலைவர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

https://www.virakesari.lk/article/102518

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலாவது மட்ச் தான் விறுவிறுப்பு.ஆனால் கடைசி மட்ச்சில் இந்தியாவின் விளையாட்டு அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வெல்லுதோ தோற்குதோ

நடராஜனை சேர்த்து விளையாடியது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தியா வெல்லுதோ தோற்குதோ

நடராஜனை சேர்த்து விளையாடியது சந்தோசம்.

இந்த வசனம் ஏதோ சிறு வயது ஞாபகங்களை கொன்டுவருகிறது.😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.