Jump to content

உலகின் வலிமையான இராணுவமாக சீனா: அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் வலிமையான இராணுவமாக சீனா: அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா!

உலகின் வலிமையான இராணுவமாக சீனா: அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா!

உலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது.

குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ரஷ்யா மூன்றாவது இடத்திலும் இராணுவ வலிமையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா நான்காம் இடத்திலும் பிரான்ஸ் ஐந்தாமிடத்திலும் பிரித்தானியான ஒன்பதாம் இடத்திலும் உள்ளன.

இராணுவத்துக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு, படை வீரர்களின் எண்ணிக்கை, முப்படைகளின் படைக்கலன்களின் தொகை, அணு வளங்கள், நவீன கருவிகள், படை வீரர்களின் சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் இராணுவ வலிமைக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளதாக ஆய்வு செய்துள்ள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளள்ளது.

குறித்த ஆய்வுகளின் குறியீட்டில் 100 புள்ளிகளில் 82 புள்ளிகளைப் பெற்றுள்ள சீனா உலகின் வலிமையான இராணுவ சக்தியைக் கொண்டுள்ளதாக மிலிட்ரி டைரக்ட் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

China-Military.jpg

இதேவேளை, மிகப்பெரிய இராணுவ வல்லமையைக் கொண்டுள்ளதாக கருதப்படும் அமெரிக்காவுக்கு 74 புள்ளிகளே கிடைத்துள்ளன. அத்துடன், ரஷ்யாவுக்கு 69 புள்ளிகளிலும், இந்தியாவுக்கு 61 புள்ளிகளும் பிரான்ஸிற்கு 58 புள்ளிகளும் கிடைத்துள்ளன. அத்துடன், ஒன்பதாவது இடத்திலுள்ள இங்கிலாந்துக்கு 43 புள்ளிகள் கிடைத்துள்ளன.

இதேவேளை, இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் அமெரிக்க முதலாவது இடத்தில் உள்ளதுடன் அந்நாடு, ஆண்டுக்கு 732 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.

அத்துடன், 261 பில்லியன் டொலருடன் சீனா இரண்டாவது இடத்திலும், 71 பில்லியன் டொலருடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இதேவேளை, ஒரு மோதல் ஏற்படுமானால், சீனா கடல் மூலமாகவும், அமெரிக்கா விமானம் மூலமாகவும், ரஷ்யா தரை மூலமாகவும் வெல்லும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்கான 14 ஆயிரத்து 141 போர் வானூர்திகளையும் ரஷ்யா நான்காயிரத்து 682 வானூர்திகளையும் சீனா மூவாயிரத்து 587 வானூர்திகளையும் கொண்டுள்ளன.

மேலும், ரஷ்யா 54 ஆயிரத்து 866 போருக்கான வாகனங்களையும் அமெரிக்கா 50 ஆயிரத்து 326 வாகனங்களையும் சீனா 41 ஆயிரத்து 641 வாகனங்களையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, கடலில் சீனா 406 போர்க் கப்பல்களையும் ரஷ்யா 278 போர்க் கப்பல்களையும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியன 202 போர்க் கப்பல்களையும் கொண்டுள்ளதாக குறித்த இணையத்தள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1203628

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இராணுவத்துக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு, படை வீரர்களின் எண்ணிக்கை, முப்படைகளின் படைக்கலன்களின் தொகை, அணு வளங்கள், நவீன கருவிகள், படை வீரர்களின் சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் இராணுவ வலிமைக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளதாக ஆய்வு செய்துள்ள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளள்ளது.

கணீப்பீட்டில் உள்ள கணீப்பீடு முறை துல்லியம் இல்லாதது.

இவை பலவற்றில் சீனா தனித்தனியாக முன்னணி வகித்தாலும், யுத்தம் என்பது இவற்றை களத்தின் பூகோள பரிமாண அடிப்படையில் விண்வெளியையும் சேர்த்து  ஒருங்கிணைத்து உகந்த முறையில் செயற்படுவது. மற்றும் அதற்கான அனுபவம். 

இந்த யுத்தக் கோட்பாட்டை (networked warfare) பரிசோதனை  நிலையில் தற்போது கொண்டுள்ள ஒரேயொரு வல்லரசு US.

அப்படி பார்த்தல், பிரித்தானிய முதல் 3க்குள் வந்து விடும்.  அடுத்த நிலையில் பிரான்ஸ், ரஷ்யா இருக்கும். 

சீன மிகவும் பின்தளப்படும், கிந்தியவும் ஏறத்தாழ சீனா  நிலையே. 

உ.ம்.டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில், US சாதாரண வேவு விமானங்களை கொண்டு, சீனாவின் நீர்மூழ்கிகள் பயணிக்கும் பாதை, இயங்கு ஒழுங்கு முறை அட்டவணை, மறைவிடம்  போன்றவற்றை வரைபுபடுத்தி பகிரங்கமாக பிரசுரித்தது. சீன இதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அத்துடன் தென்சீன கடலில் மற்ற நாடுகளை சீன தனது பலம் கொண்டு நெருக்குவதை குறைத்து, முன்பு கலந்துரையாடப்பட்ட தென்சீன கடல்  இணக்கப்பாட்டை தூசி தட்டி, பேசி தீர்ப்போம் என்று அறிவித்தது.   
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

கணீப்பீட்டில் உள்ள கணீப்பீடு முறை துல்லியம் இல்லாதது.

இவை பலவற்றில் சீனா தனித்தனியாக முன்னணி வகித்தாலும், யுத்தம் என்பது இவற்றை களத்தின் பூகோள பரிமாண அடிப்படையில் விண்வெளியையும் சேர்த்து  ஒருங்கிணைத்து உகந்த முறையில் செயற்படுவது. மற்றும் அதற்கான அனுபவம். 

இந்த யுத்தக் கோட்பாட்டை (networked warfare) பரிசோதனை  நிலையில் தற்போது கொண்டுள்ள ஒரேயொரு வல்லரசு US.

அப்படி பார்த்தல், பிரித்தானிய முதல் 3க்குள் வந்து விடும்.  அடுத்த நிலையில் பிரான்ஸ், ரஷ்யா இருக்கும். 

சீன மிகவும் பின்தளப்படும், கிந்தியவும் ஏறத்தாழ சீனா  நிலையே. 

உ.ம்.டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில், US சாதாரண வேவு விமானங்களை கொண்டு, சீனாவின் நீர்மூழ்கிகள் பயணிக்கும் பாதை, இயங்கு ஒழுங்கு முறை அட்டவணை, மறைவிடம்  போன்றவற்றை வரைபுபடுத்தி பகிரங்கமாக பிரசுரித்தது. சீன இதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அத்துடன் தென்சீன கடலில் மற்ற நாடுகளை சீன தனது பலம் கொண்டு நெருக்குவதை குறைத்து, முன்பு கலந்துரையாடப்பட்ட தென்சீன கடல்  இணக்கப்பாட்டை தூசி தட்டி, பேசி தீர்ப்போம் என்று அறிவித்தது.   
  

இன்றய காலத்தில், தொழில் நுட்பமே,ராணுவவியலில் முக்கியமானது.

அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரசியா போன்ற நாடுகள், யுத்த தளபாடங்களை உருவாக்கினாலும், அடுத்த தலைமுறை தொழில் நுட்ப கருவிகள் தாம் பாவிக்கும் நிலைக்கு வந்ததும், பழைய தொழில் நுட்பத்தினை வியாபாரம் செய்யும்.

இந்த பழைய தொழில் நுட்பங்களை வாங்கும், சீனா, இந்தியா போன்றவை, அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து, அதே போல தாமும் செய்யும். மலிவாக செய்வதால், மூன்றாம் உலக நாடுகளுக்கு விக்கும்.

ஆகா, நாமும் மேற்கிணை, தொழில் நுட்பத்தில் பிடித்து விட்டோமே என்று நினைக்க, மேலை நாடுகள் எங்கேயோ போயிருப்பார்கள். ஒரு போதுமே, புதிய தொழில் நுட்பங்களை விற்கவோ, அதனை செய்யும் நிறுவனங்கள், விற்க அனுமதிப்பதோ இல்லை. அந்த நிபந்தனையிலேயே, அரசு அவர்களை இயங்க அனுமதிக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.